Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேராதனை பல்கலை தமிழ் மாணவர்கள் மீது சிங்கள மாணவர்கள் தாக்குதல்:குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

Featured Replies

 

பேராதனை பல்கலை தமிழ் மாணவர்கள் மீது சிங்கள மாணவர்கள் தாக்குதல். 

12 மாணவர்கள் வைத்தியசாலையில். இரு மாணவர்களுக்கு பலத்த காயங்கள்.

பேராதனை இணைந்த சுகாதார விஞ்ஞான பீட 1ம் வருட தமிழ் மாணவர்கள் குறிஞ்சிக் குமரன் ஆலய வழிபாடுகளை முடித்துக் கொண்டு தமது விடுதிக்கு திரும்பிச் செல்லும் பாதையில் வைத்து வழி மறித்த 2ம் வருட சிங்கள  மாணவர்கள் பொல்லுகள் மற்றும் தலைக் கவசங்களினால் தமிழ்  மாணவர்களை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். 

இவ் தாக்குதலில் காயமுற்ற மற்றும் பாதிப்புக்குள்ளான மாணவர்கள் உடனடியாக ( 22.08.2016 திங்கள்) மாலை 7 மணியளவில் சக மாணவிகளின் உதவியுடன் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அனுமதிக்கப்பட்டுள்ள 12 மாணவர்களில் 2 மாணவர்களுக்கு பலத்த இரத்த காயங்கள் உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/135156/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

இது தான் நல்லாட்சியில் நடக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

எப்படியாவது ஒரு கலவரத்தை உருவாக்கி இல்லாமற்போன தமது பதவியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவே தெரிகிறது. அதற்கு, முன்போல் கொழும்பில் ஆரம்பித்தால் ஆபத்து சிங்களவனுக்கே. ஆகவே யாழ்ப்பாணத்தில், பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்து, தமிழ்மாணவர்களே கலவரத்திற்கு காரணம் காட்ட முயன்றிருக்கிறார்கள். அது பலிக்காமற் போகவே இன்னொரு முயர்ச்சி. இது தொடருமென நம்பலாம். மைத்திரியர் பயம் காட்ட, சிக்கித் தவிக்கப்போவது என்னவோ தமிழ் இளைஞர்களும்,  அவர்களது கல்வியுந்தான். வலிந்து  ஒரு கலவரத்தை தமிழ் இளைஞர்கள் மேல் திணிக்கப்போகிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் இருந்தபோது மட்டுமே கலவரங்களும்

இது போன்ற தமிழர்மீதான பயங்கரங்களும் இல்லாதிருந்தன

சர்வதேசம் இதை உணருமா???

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

புலிகள் இருந்தபோது மட்டுமே கலவரங்களும்

இது போன்ற தமிழர்மீதான பயங்கரங்களும் இல்லாதிருந்தன

சர்வதேசம் இதை உணருமா???

புலிகள் இருந்தபோது சிறீலங்காவிற்குள் சீனா வந்துவிடுமோ என்ற பயம் சர்வதேசத்திற்கு இருந்தது. தற்போது அந்தப் பயம் குறைவடைந்திருப்பதால் சர்வதேசம் எதையும் உணராது.

  • கருத்துக்கள உறவுகள்

கடைசி கண்டிய மன்னன் தமிழ் வம்சாவழி. கண்டி தமிழர்களுக்குச் சொந்தமானது. அங்கு தமிழ் மாணவர்கள் வந்து படிக்க வசிக்க எல்லா உரிமையும் உள்ளது. அதனை யாரும் தடுக்க முடியாது..

இப்படின்னு வடக்கு மாகாண ஆளுனராக உள்ள நரி.. அறிக்கை விடுமா இப்ப. 

மகிந்த வெளில தெரிந்த ஓநாய். ரணில்.. மைத்திரி.. சந்திரிக்கா.. நரிகள். நல்லாட்சி என்று எம் சட்டாம்பிகள் ஒநாய்களிடம் இருந்து தமிழ் மக்களாகிய வெள்ளாடுகளை நரிகளிடம் வெறும் அர்ப சொற்ப பதவி சுகங்களுக்காக அர்ப்பணித்துள்ளன. 

அங்கு இதுதான் நடக்கும். சர்வதேசத்திற்கு இப்ப இது பிரச்சனையே அல்ல. சர்வதேசத்திற்கு பிராந்திய வியாபாரம் தம் விருப்பப்படி நடந்தால் சரி. எவன் செத்தால் என்ன.. எவன் அடிமைப்பட்டால் என்ன. tw_angry::rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பேராதனை பல்கலையில் 2 மாணவ குழுக்களுக்கு இடையிலான, முரண்பாடுகளின் எதிரொலியா தாக்குதல்

 

4 தமிழ் மாணவர்களும், ஒரு முஸ்லிம் மாணவரும் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதி:

இலங்கையில் பேராதனை பல்கலைக்கழகத்தில் இரு மாணவ குழுக்களுக்கிடையிலான முரண்பாடுகளின் எதிரொலியாக காயமடைந்த தமிழ் மற்றும் முஸ்லிம் மாணவர்கள் 5 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


நேற்று (திங்கள் கிழமை) இரவு நடைப்பெற்ற இந்த சம்பவத்தில், சுகாதார விஞ்ஞான ( மருத்துவ ) பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


அதே பீடத்தில், கல்வி பயிலும் இரண்டாம் வருட சிங்கள மாணவர்கள், இந்த தாக்குதலை நடத்தியதாக தாக்கப்பட்ட மாணவர்கள் தரப்பில் கூறப்படுகின்றது.


அண்மையில் முதலாம் ஆண்டில் அனுமதி பெற்ற மாணவர்களுக்கான சந்திப்பொன்று, இரு நாட்களுக்கு முன்னதாக இரண்டாம் ஆண்டு மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை முதலாம் ஆண்டு மாணவர்களில் ஒரு சாரார் புறக்கணித்திருந்தனர்.


இதன் காரணமாக, இரு தரப்பினருக்குமிடையில் நிலவிய முரண்பாடுகளின் பின்னனியிலே இந்த தாக்குதல் இடம் பெற்றிருக்கலாம் என கூறப்படுகின்றது.


பல்கலைக்கழகத்திற்கு அருகாமையிலுள்ள குறிஞ்சி குமரன் ஆலயத்திற்கு சென்று தாங்கள் விடுதிக்கு திரும்பிக் கொண்டிருந்த வேளையில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தாக்குதலுக்குள்ளான மாணவர்கள் தெரிவித்தனர்.


தடிகள் மற்றும் ஹெல்மட் போன்றவற்றை பயன்படுத்தி இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.


10-க்கும் மேற்பட்ட தமிழ் - முஸ்லிம் மாணவர்கள் தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படுகின்ற போதிலும் 4 தமிழ் மாணவர்களும், ஒரு முஸ்லிம் மாணவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக உள்ளுர் செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக சிங்கள மாணவர்கள் தரப்பு கருத்துக்களை பெற தொடர்புகள் கிடைக்கவில்லை.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/135156/language/ta-IN/article.aspx

பேராதனை மோதல் சம்பவம் விசாரணை ஆரம்பம்

 

பேராதனை பல்கலைக்கழக மாணவர் குழுக்களிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பில், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

 

சம்பவம் தொடர்பில் குறித்த மாணவர்களின் வாக்குமூலத்தை பதிவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக, பொலிஸார் கூறியுள்ளனர். 

 

நேற்று இரவு பேராதனை பல்கலைக்கழகத்தின் இணைந்த சுகாதார விஞ்ஞான கற்கைபீட மாணவக் குழுக்கள் இடையே மோதல் ஏற்பட்டது. 

 

இதனையடுத்து காயமடைந்த ஐந்து மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

 

அண்மையில் இடம்பெற்ற கூட்டமொன்றுக்கு மாணவர்கள் குழுவொன்று வருகை தராமையை முன்னிறுத்தி ஏற்பட்ட கருத்து முரண்பாடே இந்த மோதலுக்கு காரணம் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 

 

இதேவேளை, இந்த மோதலில் இனவாதம் இருப்பதாக கூறப்படும் கருத்துக்களில் உண்மை இல்லை என, அப் பல்கலைக்கழக மாணவ சங்கம் குறிப்பிட்டுள்ளது.

http://www.onlineuthayan.com/news/16628

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் பல்கலைக்கழகத்திலை எங்கடை பொடியள் அடிபடேக்கை ஸ்ரீலங்காவிலை கலை/கலாச்சாரம் சமனாய் இருக்கோணும் எண்டு வாதாடின சமதர்மவாதிகளை காணேல்லை.:cool:

  • கருத்துக்கள உறவுகள்

மார்கழியில் தமிழர்களுக்கு தீர்வு வர நல்ல சகுனமாக இதை எடுக்கலாம்.

  • தொடங்கியவர்

சிங்கள மாணவர்கள் கொடூர தாக்குதல்! பேராதனைப் பல்கலை தமிழ் - முஸ்லிம் மாணவர்கள் அச்சத்தில்!

சிங்கள மாணவர்கள் கொடூர தாக்குதல்! பேராதனைப் பல்கலை தமிழ் - முஸ்லிம் மாணவர்கள் அச்சத்தில்!

"பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முதலாம் வருட தமிழ் - முஸ்லிம் மாணவர்கள் மீது இரண்டாம் வருட சிங்கள மாணவர்கள் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை இரவு கொடூரத் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளைத் தொடர்வதில் அச்சமான நிலைமை காணப்படுகின்றது'' என்று தமிழ் - முஸ்லிம் மாணவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், மாணவர்களின் பாதுகாப்புக்கு தான் பொறுப்பாக இருப்பேன் என்றும், இந்தப் பிரச்சினை தொடர்பில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பேன் என்றும் தமிழ் முஸ்லிம் மாணவர்களிடம் பேராதனைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் உபுல் திஸநாயக்க நேற்று நடத்திய அவசர சந்திப்பில் உறுதியளித்துள்ளார்.

வழமையான கல்வி நடவடிக்கைகளைத் தொடருமாறும் தமிழ் முஸ்லிம் மாணவர்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முதலாம் வருட தமிழ் முஸ்லிம் மாணவர்கள் மீது, இரண்டாம் வருட சிங்கள மாணவர்கள் நடத்திய மூர்க்கமான தாக்குதலில் காயமடைந்த 12 தமிழ் முஸ்லிம் மாணவர்கள் பேராதனை வைத்தியசாலையில் நேற்றுமுன்தினம் இரவு சேர்க்கப்பட்டனர். காயமடைந்தவர்களில், யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களும் உள்ளடங்குகின்றனர். "கைகளை உயர்த்துமாறு பணித்துவிட்டு, தலைக்கவசங்களாலும் தடிகளாலும், தமிழ் மாணவிகள் முன்பாக எங்களைச் சிங்கள மாணவர்கள் கொடூரமாகத் தாக்கினர்'' என்று தாக்குதலில் காயமடைந்த மாணவர் ஒருவர் தெரிவித்தார். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் இணைந்த சுகாதார விஞ்ஞானபீட முதலாம் வருட மாணவர்களே தாக்குதலுக்கு உள்ளாகினர்.

இணைந்த சுகாதார விஞ்ஞானபீடத்தின் நிறுவுனர் நாள் நேற்றுமுன்தினமாகும். இதனை முன்னிட்டு பேராதனையில் உள்ள குறிஞ்சிக்குமரன் ஆலயத்துக்கும், பள்ளிவாசலுக்கும் சென்றுவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்த தமிழ், முஸ்லிம் மாணவர்கள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. "மாலை 6 மணியளவில், திடீரென மோட்டார் சைக்கிள்களில் சிங்கள மாணவர்கள் 20 பேர் வந்தனர். அவர்கள் இரண்டாம் வருட இணைந்த சுகாதார விஞ்ஞானபீடத்தின் மாணவர்கள். எங்களை கைகளை உயர்த்திக்கொண்டு நிற்குமாறு பணித்தனர். பின்னர் தாங்கள் அணிந்திருந்த தலைக்கவசங்களால் எங்களைத் திடீரென தாக்கத் தொடங்கினர். தடிகளாலும் எம்மை அடித்தனர். எங்களுக்கு மொழிபெயர்ப்புச் செய்யும் மாணவனை தனியாக அழைத்துச் சென்று கடுமையாகத் தாக்கினர்'' என்று காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட மாணவன் ஒருவர் தெரிவித்தார்.

மிதிலாசன் (பருத்தித்துறை), பிரியதர்சன் (கிளிநொச்சி), நவீர் (பொத்துவில்), குரூஸ் (மன்னார்) ஆகிய நான்கு பேரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையின் விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய 8 மாணவர்களும் வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்றனர். துணைவேந்தர் அவசர சந்திப்பு பேராதனைப் பல்கலைக்கழக இணைந்த சுகாதார விஞ்ஞானபீட முதலாம் வருட தமிழ் முஸ்லிம் மாணவர்கள் மீது சிங்கள மாணவர்கள் மேற்கொண்ட தாக்குதல் தொடர்பில் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் உபுல் திஸாநாயக்க தலைமையில் நேற்று அவசர சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பில் பல்கலைக்கழகத்தின் அனைத்துப்பீட தமிழ் முஸ்லிம் மாணவர்கள், இணைந்த சுகாதார விஞ்ஞானபீட விரிவுரையாளர்கள், பல்கலைக்கழகப் பாதுகாப்புக்குப் பொறுப்பானவர்கள் மற்றும் பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்ச் சங்க உறுப்பினர்கள பங்கேற்றிருந்தனர்.

தமிழ் - முஸ்லிம் மாணவர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் தீர்மானமொன்றை எடுக்கவுள்ளதாகவும், மாணவர்களின் பாதுகாப்புக்கு தான் பொறுப்பாக இருப்பேன் என்றும் துணைவேந்தர் இந்தச் சந்திப்பின்போது உறுதியளித்துள்ளார். இந்தப் பிரச்சினை தொடர்பில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பேன் எனக் குறிப்பிட்ட துணைவேந்தர், வழமையான கல்வி நடவடிக்கைகளைத் தொடருமாறும் மாணவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். எவ்வாறாயினும் சிங்கள மாணவர்களின் திட்டமிட்ட கொடூர தாக்குதலினால் பல்கலைக்கழகத்தில் கல்வி நடவடிக்கைகளைத் தொடர்வதில் தொடர்ந்தும் அச்சமான நிலைமை காணப்படுகின்றது என்று தமிழ், முஸ்லிம் மாணவர்கள் துணைவேந்தரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர். விசாரணை ஆரம்பம் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் முஸ்லிம் மாணவர்கள் தாக்கப்பட்டனர் எனக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இது தொடர்பில் குறித்த மாணவர்களின் வாக்குமூலத்தைப் பதிவுசெய்யபொலிஸார்நடவடிக்கை எடுத்துள்ளனர். அண்மையில் இடம்பெற்ற கூட்டமொன்றுக்கு மாணவர்கள் குழுவொன்று சமுகமளிக்காமை காரணமாக இந்த மோதல் ஏற்பட்டுள்ளது என்று ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது எனவும், இந்த மோதலில் இனவாதம் இருப்பதாகக் கூறப்படுவதில் உண்மை இல்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, இந்த ஆண்டு ஆரம்பத்தில் இதே பீடத்தின் இரண்டாம் வருட தமிழ் மாணவர்களுக்கும், சிங்கள மாணவர்களுக்கும் இடையில் மோதல் இடம்பெற்றிருந்தது. இதில் இரண்டு தமிழ் மாணவர்கள் காயமடைந்திருந்தனர். இது தொடர்பில் பேராதனைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. இதன் பின்னர், இரு தரப்பு மாணவர்களுக்கு இடையேயும் பேச்சு நடைபெற்று இனிமேல் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது என்று சிங்கள மாணவர்களால் உறுதிமொழி வழங்கப்பட்ட பின்னர், சிங்கள மாணவர்களுக்கு எதிராக தமிழ் மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு மீளப்பெறப்பட்டது. 

Read more: http://malarum.com/article/tam/2016/08/23/15316/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் சிங்களவருக்கு ஏதிராக ஏதாவது செய்தால் அது இனவாதம்....!

சிங்களவர் தமிழர்களுக்கு ஏதிராக ஏதாவது செய்தால் அது இனவாதம் இல்லை என்று பொலிசார் கூறுவதில் உண்மையுள்ளது. ஏனெனில் அது இன அழிப்பு என்பது அவர்களுக்குத் தெரியும்.....! 

  • கருத்துக்கள உறவுகள்

பிரிஞ்சு போக வேண்டிய தம்பதிகள் மத்தியில்.. அடுத்த வீட்டுக்காரங்களின் நலனுக்காக.. நல்லிணக்கம் என்று ஒரு பசப்பை திணித்தால்.. இது தான் நிகழும். எனியாவது சிந்திக்கட்டும். 

தமிழ் மக்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டு.. நல்லிணக்கம் நல்லாட்சி உச்சரிப்பவர்கள் தான் இந்த விளைவுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும். :rolleyes:tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்

அட சும்மாயிருங்கப்பா....
அவிங்களும் அவிங்கட வாலுகளும் பியூஸ் போய் கிடக்கினம் ..இதுக்குள்ள வாண்டடா இழுத்து விட்டு கும்முகிறீர்கள்...
கொஞ்சம் பொறுங்கோ..... சும் இது இனவாதமா அல்லது இனத்துவேசமா என்று Law பாயிண்ட்ஸ் எடுக்கிறதில பிசி 
எடுத்து முடிந்தவுடன் கனடா ,அவுஸ் இங்கிலாந்து என்று சுற்றுலா வந்து பாயின்ட்சை எடுத்து விடுவார் ....வாலுகளும் இவரது லெவலே வேற என்று சிலிர்த்து போய்  தங்களுக்கு தாங்களே பாராட்டு பத்திரம் குடுத்து கொள்ளுவினம். அங்க சும்மா சுத்தி சுழலடிச்ச சும்  இங்கே வந்த வழமை போல அப்படியே சுருண்டு படுத்திடுவார்...உந்த தமிழ் மாணவர்களுக்கு வேற வேலை இல்லை யார் குறிஞ்சி குமரினிட்டை போக சொன்னது ..பக்கத்திலிருக்கும் விகாரைக்கு போய் அங்கிருந்த பிக்கியிடம் தர்மஉபதேசம் பெற்றிருந்தால் நல்லிணக்கம் வந்திருக்கும்..கொஞ்சம் பொறுங்கோ வாத்திகள்  வரிசையாக வந்து நல்லிணக்க வகுப்புகள் எடுப்பினம் இடைக்கிடைய சிங்களமும் சொல்லித்தருவினம் 

Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, அக்னியஷ்த்ரா said:

அட சும்மாயிருங்கப்பா....
அவிங்களும் அவிங்கட வாலுகளும் பியூஸ் போய் கிடக்கினம் ..இதுக்குள்ள வாண்டடா இழுத்து விட்டு கும்முகிறீர்கள்...
கொஞ்சம் பொறுங்கோ..... சும் இது இனவாதமா அல்லது இனத்துவேசமா என்று Law பாயிண்ட்ஸ் எடுக்கிறதில பிசி 
எடுத்து முடிந்தவுடன் கனடா ,அவுஸ் இங்கிலாந்து என்று சுற்றுலா வந்து பாயின்ட்சை எடுத்து விடுவார் ....வாலுகளும் இவரது லெவலே வேற என்று சிலிர்த்து போய்  தங்களுக்கு தாங்களே பாராட்டு பத்திரம் குடுத்து கொள்ளுவினம். அங்க சும்மா சுத்தி சுழலடிச்ச சும்  இங்கே வந்த வழமை போல அப்படியே சுருண்டு படுத்திடுவார்...உந்த தமிழ் மாணவர்களுக்கு வேற வேலை இல்லை யார் குறிஞ்சி குமரினிட்டை போக சொன்னது ..பக்கத்திலிருக்கும் விகாரைக்கு போய் அங்கிருந்த பிக்கியிடம் தர்மஉபதேசம் பெற்றிருந்தால் நல்லிணக்கம் வந்திருக்கும்..கொஞ்சம் பொறுங்கோ வாத்திகள்  வரிசையாக வந்து நல்லிணக்க வகுப்புகள் எடுப்பினம் இடைக்கிடைய சிங்களமும் சொல்லித்தருவினம் 

இது மாற்றுக்கருத்தாளர்களின் அடுத்த கட்ட நகர்வு

உண்மைகளை வெளியில் கொண்டு வரும் தங்களுக்கு நன்றிகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, அக்னியஷ்த்ரா said:

சும் இது இனவாதமா அல்லது இனத்துவேசமா என்று Law பாயிண்ட்ஸ் எடுக்கிறதில பிசி 
எடுத்து முடிந்தவுடன் கனடா ,அவுஸ் இங்கிலாந்து என்று சுற்றுலா வந்து பாயின்ட்சை எடுத்து விடுவார் ....வாலுகளும் இவரது லெவலே வேற என்று சிலிர்த்து போய்  தங்களுக்கு தாங்களே பாராட்டு பத்திரம் குடுத்து கொள்ளுவினம். அங்க சும்மா சுத்தி சுழலடிச்ச சும்  இங்கே வந்த வழமை போல அப்படியே சுருண்டு படுத்திடுவார்...

இனி வரும்  காலங்கள்  புலம்பெயர் தேசம் பாராட்டுக்கள் தெரிவிக்கும் காலமல்ல.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.