Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பொங்குதமிழை எப்படி தடுக்கலாம்! சம்பந்தன் ஆலோசனை!! (உள்ளே நடந்தது என்ன?)

Featured Replies

R__sampanthan-720x480-720x480.jpg

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக்கூட்டம் கொழும்பில் நடைபெற்றது.

கூட்டத்தில் கலந்து கொண்ட கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மிகுந்த பதட்டத்துடன் காணப்பட்டார்.

கூட்டத்தின் தொடக்கத்தில் உரையாற்றிய சம்பந்தன் இப்போது யாழ்ப்பாணத்தில் என்ன பிரச்சினை இருக்கிறது?

எதற்காக மக்கள் போராட்டத்திற்கு திட்டமிடுகிறார்கள்?

என்ற கேள்வியை பாராளுமன்ற உறுப்பினர்களை நோக்கி கேட்டதற்கு சுமந்திரனும் மாவை சேனாதிராசாவும் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் இந்த பேரணியை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் கூறினர்.

அதில் தொடர்ந்து கருத்து தெரிவித்த சுமந்திரன் அது என்ன பொங்குதமிழ் மீண்டும் புலிகளுக்கு உயிர் கொடுக்கும் இந்த திட்டத்தை ஒருபோதும் எற்றுக்கொள்ளக் கூடாது என்றும்,தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்கள் இந்த பேரணிக்கு ஆதரவு வழங்கக் கூடாது என்றும் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து சிவசக்தி ஆனந்தன் சுமந்திரனின் கருத்தை எதிர்த்து அப்படி மக்கள் போராட்டத்தை தடை செய்யக்கூடாது என்றும் தற்போது சிங்கள பேரினவாதத்தால் முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்பாடுகளே இவ்வாறான மக்கள் போராட்டங்களிற்கு காரணம் என்றும் தெரவித்தார் .

இதன் போது குறுக்கிட்ட சம்பந்தன் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் எப்படி அதைச் செய்ய முடியும் என்று கேள்வியெழுப்பியதுடன் இன்னும் இரண்டு மாதங்களில் ஒரு தீர்வுத்திட்டம் வரப்போகிறது இந்த நேரத்தில் இதனை செய்யவிடக்கூடாது.

என்றார் இதற்குப் பதிலளித்த சிவசக்தி ஆனந்தன் யாழ்ப்பாணத்தில் நடத்த விடக்கூடாது என்று கூறும் நீங்கள் ஏன் நேற்று முன்தினம் கிளிநொச்சியில் மக்கள் போராட்டத்தை ஏற்பாடு செய்தீர்கள்? அது அரசாங்கத்தை ஆத்திரப்படுத்தாதா? என்றார் உடனே குறுக்கிட்ட சிறிதரன் அந்தப்போராட்டத்தை நாங்கள் நடத்தவில்லை அது பொது அமைப்புக்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் என்றார்.

அப்போது சுமந்திரன் நையாண்டியாக சிறிதரனைப்பாரத்து எப்போது உங்களுடைய பெயரை மாற்றினீர்கள் என்று சபையில் உள்ளோரை சிரிக்கச்செய்ய உசாரடைந்த சம்பந்தன் இப்ப உங்களையெல்லாம் இங்க சிரிக்க வரச்சொல்லேல இந்த போராட்டத்தை எப்படி தடுக்கலாம் என்று எனக்குச் சொல்லுங்கள்.

அரசாங்கத்திற்கு என்னால் பதில் சொல்ல முடியாமல் உள்ளது என்றார். உடனே சுமந்திரன் நாளை(25.08.2016) கூட்டமைப்பின் தலைவர்களை அழைத்து இதற்கான அவசர ஒன்று கூடல் ஒன்றை நடத்தி அதனூடாக போராட்டத்தை உடனே நிறுத்துவதற்கு ஆலோசனை வழங்குமாறு சம்பந்தனுக்கு அறிவுரை கூறினார்.

இதையடுத்து நாளை கூட்டமைப்பின் தலைவர்கள் சந்திக்கும் கூட்டத்திற்கு கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

http://thuliyam.com/?p=38913

ஆகா! ஆகாகா!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Athavan CH said:

இதன் போது குறுக்கிட்ட சம்பந்தன் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் எப்படி அதைச் செய்ய முடியும் என்று கேள்வியெழுப்பியதுடன் இன்னும் இரண்டு மாதங்களில் ஒரு தீர்வுத்திட்டம் வரப்போகிறது

டேய் சுப்பா குப்பா கேட்டியே செய்தி! இன்னும் இரண்டு மாதத்திலை அது வரப்போகுதாம்.:cool:

  • கருத்துக்கள உறவுகள்

மக்களால் நிராகரிக்கப் பட்டவர்கள் போராட்டம்  நடத்தக் கூடாது என்று தடுக்க..... இந்தச் சம்பந்தன்.யார்?
அடுத்த தேர்தலுக்கு.... சம்பந்தன், வீட்டுக்குப் போவது மட்டும், நிச்சயம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்றா ராமா ஆட்றா ....
ஆட்றா ராமா ஆட்றா ...
ரெண்டு மாசத்தில தீவு வரப்போகுதாம் ச்சீ ..சாரி தீர்வு வரப்போகுதாம் 
ஆட்றா ராமா ஆட்றா .....

(பாவம் ராமாக்கு தெரியாது வாலுகளுக்கே இதிலே நம்பிக்கையில்லை என்று)

3 minutes ago, அக்னியஷ்த்ரா said:

ஆட்றா ராமா ஆட்றா ....
ஆட்றா ராமா ஆட்றா ...
ரெண்டு மாசத்தில தீவு வரப்போகுதாம் ச்சீ ..சாரி தீர்வு வரப்போகுதாம் 
ஆட்றா ராமா ஆட்றா .....

(பாவம் ராமாக்கு தெரியாது வாலுகளுக்கே இதிலே நம்பிக்கையில்லை என்று)

:grin:
காலங்கள் மாறும் கோலங்கள் மாறும்
பேதை மனிதனே கடமையை இன்றே
செய்வதில் தானே ஆனந்தம்

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஜீவன் சிவா said:

:grin:
காலங்கள் மாறும் கோலங்கள் மாறும்
பேதை மனிதனே கடமையை இன்றே
செய்வதில் தானே ஆனந்தம்

உள் குத்தா தெரியுதே:rolleyes:tw_blush:

7 minutes ago, ஜீவன் சிவா said:

காலங்கள் மாறும் கோலங்கள் மாறும்
பேதை மனிதனே கடமையை இன்றே
செய்வதில் தானே ஆனந்தம்

 

4 minutes ago, முனிவர் ஜீ said:

உள் குத்தா தெரியுதே:rolleyes:tw_blush:

சத்தியமா இதை நான் எழுதவில்லை. வைரமுத்து நல்ல கவிஞரா இருந்த காலத்தில எழுதினது. 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் பொங்க  வேண்டிய தேவை வரும் போது

பொங்கி  வருவது தான் பொங்கு தமிழ்

அது கசக்கிறது என்றால் தமிழர் அடிமையாக இருக்கணும்

பொங்கவே கூடாது என்று எதிர் பார்ப்பவர்களாக இருப்பர்

அவர்கள் தமிழரின் மனங்களோடு பயணிக்கமுடியாது

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் சம் சும் மாவை கும்பலுக்கு அலேர்ஜீனா விடயம். சிங்கள எஜமானர்களிடம் போதிய அளவு எலும்பு பொறுக்க உதவாதே. :rolleyes:tw_angry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, Athavan CH said:

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக்கூட்டம் கொழும்பில் நடைபெற்றது.

கூட்டத்தில் கலந்து கொண்ட கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மிகுந்த பதட்டத்துடன் காணப்பட்டார்.

கூட்டத்தின் தொடக்கத்தில் உரையாற்றிய சம்பந்தன் இப்போது யாழ்ப்பாணத்தில் என்ன பிரச்சினை இருக்கிறது?

எதற்காக மக்கள் போராட்டத்திற்கு திட்டமிடுகிறார்கள்?

என்ற கேள்வியை பாராளுமன்ற உறுப்பினர்களை நோக்கி கேட்டதற்கு சுமந்திரனும் மாவை சேனாதிராசாவும் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் இந்த பேரணியை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் கூறினர்.

அதில் தொடர்ந்து கருத்து தெரிவித்த சுமந்திரன் அது என்ன பொங்குதமிழ் மீண்டும் புலிகளுக்கு உயிர் கொடுக்கும் இந்த திட்டத்தை ஒருபோதும் எற்றுக்கொள்ளக் கூடாது என்றும்,தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்கள் இந்த பேரணிக்கு ஆதரவு வழங்கக் கூடாது என்றும் குறிப்பிட்டார்.

 

4 hours ago, Athavan CH said:

இதன் போது குறுக்கிட்ட சம்பந்தன் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் எப்படி அதைச் செய்ய முடியும் என்று கேள்வியெழுப்பியதுடன் இன்னும் இரண்டு மாதங்களில் ஒரு தீர்வுத்திட்டம் வரப்போகிறது இந்த நேரத்தில் இதனை செய்யவிடக்கூடாது.

யார் இந்த மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள்?

மக்களால் ஆதரிக்கப்பட்டவர்கள் இதுவரை செய்தது என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

போங்கய்யா உங்கள் அரசியலும் நீங்களும்:unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.