Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சியில் டிரக்டர் சாரதியை சங்கிலியால் தாக்கிய போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்

Featured Replies

கிளிநொச்சியில் டிரக்டர் சாரதியை சங்கிலியால் தாக்கிய போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்

 

 

கிளிநொச்சியில்  டிரக்டர்  சாரதியை சங்கிலியால் தாக்கிய போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்

கிளிநொச்சியில் டிரக்டர் சாரதி ஒருவர் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தரால் தாக்கப்படும் காட்சிகளை அங்கிருந்த ஒருவர் கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்துள்ளார்.

ஏ9 வீதியில் 156 ஆம் மைல்கல் பகுதியில் இன்று முற்பகல் 11 மணியளவில் இந்தக் காட்சிகளைப் பதிவு செய்ததாக சம்பவத்தை கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்தவர் நியூஸ்பெஸ்ட்டிற்குக் கூறினார்.

இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் நியூஸ்பெஸ்ட் வினவியபோது, வாகன விபத்து தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை கைது செய்யவே பொலிஸ் போக்குவரத்து பிரிவினர் அங்கு சென்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

வேன் ஒன்றை மோதிவிட்டு டிரக்டர் சாரதி ஒருவர் தப்பிச் செல்வதாக தமக்கு முறைப்பாடு கிடைத்திருந்ததாக கிளிநொச்சி பொலிஸார் குறிப்பிட்டனர்.

சந்தேகநபரான சாரதியிடம் இருந்த இரும்புச்சங்கிலியை பொலிஸ் போக்குவரத்து பிரிவு உத்தியோகத்தர் பறித்தெடுத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் மதுபோதையில் இருந்ததாகவும், அவர் சங்கிலியால் தாக்கியதன் காரணமாக சிலருக்கு காயமேற்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

எவ்வாறாயினும், தாக்குதலில் காயமடைந்த டிரக்டர் சாரதி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

http://newsfirst.lk/tamil/2016/09/கிளிநொச்சியில்-டிப்பர்-ச/

 

  • கருத்துக்கள உறவுகள்

 

இப்படியான செய்திகள் சிங்கள பகுதிகளில் ஏன் வெளி வருவதில்லை ?

நாய்க்கும் மாட்டுக்கும் கோசம் போடும் எருமைகூட்டம்களுக்கு இதுகள் கண்ணில படவில்லையா ?

இப்படி ஒரு கஞ்சா கடதுபவனுக்கு அடிச்சால் நியாயம் அவங்களை அடிக்கமாட்டங்கள் கஞ்சா பிடிபடுமே தவிர ஆக்கள் தப்பும் மர்மம் தெரியவில்லை .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 28.9.2016 at 4:20 PM, நவீனன் said:

 

 

பொலிஸ் செய்தது சரி எண்டு சொல்ல எங்களிட்டை ஒரு கூட்டம் இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

பொலிஸ் செய்தது சரி எண்டு சொல்ல எங்களிட்டை ஒரு கூட்டம் இருக்கு.

இவர்  பொத்திக்கொண்டிருந்திருந்தால்....?

அது தானே அண்ணை...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 28.9.2016 at 8:22 PM, விசுகு said:

இவர்  பொத்திக்கொண்டிருந்திருந்தால்....?

அது தானே அண்ணை...

கணணிக்கு முன்னாலை இருந்து போராடுற கோஷ்டி எண்டு சொல்லுற கூட்டம் இப்ப எந்த வடலிக்கு பின்னாலை ஒதுங்கியிருக்குதுகள் எண்டு தெரியேல்லை

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

கணணிக்கு முன்னாலை இருந்து போராடுற கோஷ்டி எண்டு சொல்லுற கூட்டம் இப்ப எந்த வடலிக்கு பின்னாலை ஒதுங்கியிருக்குதுகள் எண்டு தெரியேல்லை

இப்ப  அவங்க தான் சரியானவர்களாம் அண்ணை..

நாம் பிரபாகரன் காலத்து ஆட்கள்..

பிழையென்றால்

எவனெண்டாலும் ......

  • கருத்துக்கள உறவுகள்

இது தான் இலங்கை பொலிஸ். ஒரு ஆணியும் புடுங்க முடியாது.

ஏற்கனவே தெல்லிப்பளை பொலிசாருக்கு எதிராகவும் சுண்ணாகம் பொலிசாருக்கு எதிராகவும் நீதிமன்றில் வழக்குகள் உள்ளது. அப்படியிருந்தும் இன்று கிளிநொச்சி பொலிசார் இப்படி நடந்து கொண்டுள்ளனர்.

ஏன் அவர்களுக்கு தெல்லிப்பளையிலும் சுண்ணாகத்திலும் நடந்தது தெரியாதா? 

இந்த சிங்கள-பௌத்த போலீஸ் பயங்கரவாதிகளுக்கு வெள்ளையடிக்க புனை கதைகளுடன் ஒருசிலர் திரியினம்.

கிளிநொச்சி இளைஞன் மீது பொலிஸார் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல்

கிளிநொச்சியை சேர்ந்த இளைஞன் ஒருவர் மீது பொலிஸார் காட்டு மிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இன்று ஏ9 வீதியில் வைத்து உழவு இயந்திரமொன்றை செலுத்தி வந்த இளைஞனுக்கும் மற்றொரு வாகன சாரதிக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தினை விளக்குவதற்கு பொலிஸார் இளைஞன் மீது நடத்தியுள்ளார்.

எனினும் குறித்த இளைஞன் தம்மை இரும்புச் சங்கிலியால் தாக்க முற்பட்டதாகவும், மது போதையில் வீதியில் நின்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு தாக்குதலில் இலக்காகி படுகாயமடைந்த இளைஞன், கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

 

மேலும் குறித்த இளைஞன் தவறு செய்திருப்பினும் கூட முரட்டுத்தனமாக தாக்கியுள்ளமை பாரிய குற்றம் என அப்பகுதிமக்கள் விசனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/community/01/119139?ref=home

  • கருத்துக்கள உறவுகள்

குடி போதையில் உழவு இயந்திரம் செலுத்தியது சரியா? 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

குடி போதையில் உழவு இயந்திரம் செலுத்தியது சரியா? 

 அதற்காக சங்கிலியால் அடித்தது நியாயமாகப்படவில்லை தோழரே. நீதியை நிலை நாட்டவேண்டியவர் இப்படி நடந்தால், இவர்கள் மட்டும் குடிபோதையில் என்ன செய்தாலும் சரி. 

  • கருத்துக்கள உறவுகள்

இது பற்றிய பூரணமான விசாரணை இன்னும் முடியவில்லை  விசாரணையை முடிந்ததும் தான் முக்கியமான தகவல்கள் பெற்று கொள்ளலாம்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, MEERA said:

குடி போதையில் உழவு இயந்திரம் செலுத்தியது சரியா? 

குடி வகைகளை வித்து பிளைப்பது யாருங்க நண்பரே ?

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, satan said:

 அதற்காக சங்கிலியால் அடித்தது நியாயமாகப்படவில்லை தோழரே. நீதியை நிலை நாட்டவேண்டியவர் இப்படி நடந்தால், இவர்கள் மட்டும் குடிபோதையில் என்ன செய்தாலும் சரி. 

தோழர் பொலிஸ் அடித்தது சரி என்று சொல்லவில்லை. முற்றிலும் பிழையான செயல்.

 

எந்த நாட்டிலும் சரி பொலிஸ் பயிற்சியின் போது சொல்லிக் கொடுப்பது தான்

" Subject உங்கள் கட்டளையை ஏற்காவிடின் உங்கள் பலத்தை பிரயோகிக்கலாம்".

4 hours ago, பெருமாள் said:

குடி வகைகளை வித்து பிளைப்பது யாருங்க நண்பரே ?

நண்பர் இதெல்லாம் நீதிமன்றில் எடுபடுமா? 

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, பெருமாள் said:

குடி வகைகளை வித்து பிளைப்பது யாருங்க நண்பரே ?

விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணம் இருந்த காலத்தில் யாழ்ப்பாண வடிசாலையை மூடி விட்டால் சாராயம் குடித்து குழப்பம் செய்பவர்களை தவிர்க்க முடியும் என்று அவர்களின் தலைமை செயலகத்தில் இருந்தவர்களுக்கு எனது புத்தி சாதுரியத்தை காட்டினேன்.:11_blush:

அவர்களும் ஒரு சிரிப்புடன் சொன்னார்கள் வடிசாலையை மூடி விட்டால் கள்ளமாக கசிப்பு காய்ச்சுவது கூடிவிடும். அதானால் தான் செய்ய முடியவில்லை. ஆனால் வரி வசூலிக்கிறோம். அது பாவனையை குறைக்கும் என்றார்கள்.  சிறி லங்கா அரசும் அவர்களின் முன்மாதிரியை பின்பற்றுகிறார்கள் போல தெரிகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Jude said:

விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணம் இருந்த காலத்தில் யாழ்ப்பாண வடிசாலையை மூடி விட்டால் சாராயம் குடித்து குழப்பம் செய்பவர்களை தவிர்க்க முடியும் என்று அவர்களின் தலைமை செயலகத்தில் இருந்தவர்களுக்கு எனது புத்தி சாதுரியத்தை காட்டினேன்.:11_blush:

அவர்களும் ஒரு சிரிப்புடன் சொன்னார்கள் வடிசாலையை மூடி விட்டால் கள்ளமாக கசிப்பு காய்ச்சுவது கூடிவிடும். அதானால் தான் செய்ய முடியவில்லை. ஆனால் வரி வசூலிக்கிறோம். அது பாவனையை குறைக்கும் என்றார்கள்.  சிறி லங்கா அரசும் அவர்களின் முன்மாதிரியை பின்பற்றுகிறார்கள் போல தெரிகிறது. 

95 இல் யார் தலைமைச் செயலகத்தில் இருந்தார்கள்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.