Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய அரசியலமைப்பில் பௌத்தத்திற்கு முன்னுரிமை, தமிழ்த் தேசியக்கூட்டமைப்பும் இணக்கம் -ரணில்!

Featured Replies

புதிய அரசியலமைப்பில் பௌத்தத்திற்கு முன்னுரிமை, தமிழ்த் தேசியக்கூட்டமைப்பும் இணக்கம் -ரணில்!

அரசியல் யாப்பில் பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமை தொடர்ந்தும் அவ்வாறே பேணப்படும் என சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் உறுதியளித்துள்ளார்.

புதிய அரசியல் யாப்பிலும் பழைய அரசியல் யாப்பில் உள்ளதைப்போல் பௌத்த மத்திற்கு முன்னுரிமை அளிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைத்துக் கட்சிகளும் தமது முழுமையான ஆதரவை வழங்கியுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

கொழும்பு கொலன்னாவ பகுதியிலுள்ள விகாரையில் நேற்றிரவு நடைபெற்ற மத வழிபாட்டு நிகழ்வில் கலந்துகொண்டு அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே ரணில் விக்கிரமசிங்க இந்தத் தகவல்களைத் தெரிவித்திருக்கின்றார்.

தொடர்ந்து அவர் கருத்து வெளியிடுகையில்,

புதிய அரசியல் யாப்பில் பௌத்த மதத்தை பாதுகாப்பதற்கு முன்னுரிமை வழங்குவது தொடர்பில் எந்த சிக்கலும் இல்லை எனவும் நாடாளுமன்றத்தில் வகிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைத்துக் கட்சிகளும் பௌத்த மதத்தைப் பாதுகாப்பதற்கும் முன்னுரிமை கொடுப்பதற்குமான விதந்துரைகளை தொடர்ந்தும் அப்படியே வைத்திருக்க முழுமையான இணக்கத்தைத் தெரிவித்திருக்கின்றன.

அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மாத்திரமன்றி கத்தோலிக்கத் திருச்சபையின் அதி மேற்றுராணியாரான கர்தினாலும் இதனை அங்கீகரித்துள்ளார்.

அதேபோல் இந்து, இஸ்லாம் மதங்களின் தலைவர்களும் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கி அதனைப் பாதுகாக்க வேண்டும் என்பதை முழு மனதுடன் ஏற்றுக்கொண்டிருக்கின்றனர்.

அதனால் அரசியல் யாப்பிலுள்ள பௌத்த மதம் தொடர்பான சரத்து தொடர்பில் பிரச்சனையாக்கிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அரசு என்ற ரீதியில் ஜனாதிபதியும், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் நாங்களும் இவற்றை பிரசாரப்படுத்துவதில்லை.

ஆனால் நாம் செயல் ரீதியாக பௌத்த மதத்தை பாதுகாத்து அதனை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம் என்று ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

http://thuliyam.com/?p=44175

  • கருத்துக்கள உறவுகள்

இது தான் சனநாயகம். சூப்பர் அப்பு

  • கருத்துக்கள உறவுகள்

ம்... பெரும்பான்மை....

உது பிரச்சனை இல்லை. மெயின் விசயத்துக்கு என்ன அலுவல் நடக்குதெண்டதை சொல்லுங்கோவன்...

பிரிட்டனில் சர்ச் ஒவ் இங்கிலாந்துக்கு தான் முன்னுரிமை. அந்த மதத்தை சேர்ந்தவர் மட்டுமே சிம்மாசனம் ஏறலாம்.

ஆனால் நாங்களும் கோயில் அமைக்கலாம்... கும்பிடலாம்.

 

  • கருத்துக்கள உறவுகள்

அதற்காக நயினாதீவில் புத்தர் பிறந்தவர் என்று சொல்லி விகாரை அமைக்ககூடாது....கண்டியளோ!

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, putthan said:

அதற்காக நயினாதீவில் புத்தர் பிறந்தவர் என்று சொல்லி விகாரை அமைக்ககூடாது....கண்டியளோ!

புத்தர் யாரப்பா?

எங்கண்ட ஆள்த்தானே.... விஸ்ணுவின்ற அவதாரம்....

பெளத்தனே மிரள்ர அளவுக்கு, பெருமாளே எண்டு கும்பிட்டு கொண்டாட வேண்டியது தானே.

உது புதுசே? முன்னம் மாயோனை, பெருமாள் எண்டும், முருகனை, சிவனாரிண்ட இரண்டாவது பெடி எண்டும் மாத்திப் போடயிக்க, ஓகே எண்டவயள் தானே.

இதெல்லாம் சின்ன கிளுகிளுப்பை பிரச்சனை... பணியாரம் எப்படி வரும் எண்டெல்லே பாக்கோணும்.:208_hamster:

 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Nathamuni said:

புத்தர் யாரப்பா?

எங்கண்ட ஆள்த்தானே.... விஸ்ணுவின்ற அவதாரம்....

பெளத்தனே மிரள்ர அளவுக்கு, பெருமாளே எண்டு கும்பிட்டு கொண்டாட வேண்டியது தானே.

உது புதுசே? முன்னம் மாயோனை, பெருமாள் எண்டும், முருகனை, சிவனாரிண்ட இரண்டாவது பெடி எண்டும் மாத்திப் போடயிக்க, ஓகே எண்டவயள் தானே.

இதெல்லாம் சின்ன கிளுகிளுப்பை பிரச்சனை... பணியாரம் எப்படி வரும் எண்டெல்லே பாக்கோணும்.:208_hamster:

விஷ்ணு இதுவரை 'உத்தியோக பூர்வமாக' எடுத்தது 'ஒன்பது' அவதாரங்கள் மட்டுமே!

பத்தாவது அவதாரம் ' கல்வி' அவதாரமாம்! 

பலராலும்..ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் இந்த அவதாரம் தான்... டொனால்ட் டிரம்ப்  எண்டு ஒரு கதை உலாவுது!

உண்மையோ...? :mellow: 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புங்கையூரன் said:

அவதாரம் தான்... டொனால்ட் டிரம்ப்  எண்டு ஒரு கதை உலாவுது!

உண்மையோ...? :mellow: 

நான் நினைக்கவில்லை ,விஸ்ணு இந்தியாவில் தான் எல்லா அவதாரமும் எடுத்தவர் ,விஸ்னுக்கு விசா இருக்கோ தெரியவில்லை அமெரிக்காவில அவதாரம் எடுக்க .tw_tounge_wink:

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரன் அவர்களே! அது கல்வி அல்ல கல்கி ஆகும். இன்று அமெரிக்கா தானேதான், உலக அமைதியையும், பாதுகாப்பையும் மேற்கொள்வதாக தெரிவித்து நிற்கிறது. அதே அமெரிகாவில்தான்  டொனால்ட் டிரம்ப்  பிறந்து வந்துள்ளார். இதனைவைத்துப் பார்க்கும்போது உங்கள் கூற்றுச் சரியானதாகவே தென்படுகிறது, விக்கிப்பீடியாவும் அதுபோலவே தெரிவித்துள்ளது.:grin:

  

கல்கி அவதாரம் என்பது இந்து சமயத்தின் கூற்றுப்படி விஷ்ணு பகவானின் பத்தாவதும் இறுதியுமான மகா அவதாரமாகும். [1]கல்கி பகவான் கலி யுகத்தில் தோன்றி அனைத்து தீயவைகளையும் அழிப்பார் என்பது ஒரு கூற்று. கல்கி என்பதன் பொருள் காலம் அல்லது முடிவிலி ஆகும்.

கல்கியியை பற்றிய தீர்க்கதரிசனம்

சம்பலகிராமத்தின் முக்கியஸ்தரான விஷ்ணுயாசஸ் என்பவருக்கும் அவரது மனைவி சுமதி என்பவருக்கும் பிறப்பார் என பாகவத புராணத்தில் அறிவிக்கபட்டுள்ளது

இங்கு சம்பல என்பதன் பொருள் அமைதி மற்றும் பாதுகாப்பு என்பதாம் அமைதியும் பாதுகாப்பும் உடையகிராமம் என்பது பொருள்

மேலும் விஷ்ணுயாசா என்பதன் பொருள்

விஷ்ணு - இறைவன்

யாசா -அடிமை அல்லது அடியவர் அல்லது பக்தன் என்று தமிழில் பொருள்படும்

அதாவது விஷ்ணுவின் அடியவர் அல்லது விஷ்ணு பக்தன் என்பது பொருள்

மேலும் சுமதி என்பது அமைதியை குறிக்கும் தமிழில் சுமதி என்பதற்கு சு -நல்ல ,மதி- அறிவு என்று அர்த்தப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, புங்கையூரன் said:

விஷ்ணு இதுவரை 'உத்தியோக பூர்வமாக' எடுத்தது 'ஒன்பது' அவதாரங்கள் மட்டுமே!

பத்தாவது அவதாரம் ' கல்வி' அவதாரமாம்! 

பலராலும்..ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் இந்த அவதாரம் தான்... டொனால்ட் டிரம்ப்  எண்டு ஒரு கதை உலாவுது!

உண்மையோ...? :mellow: 

உத அந்தாள் கேள்விப்பட்டால், தன்ற தனிப் பிளேனில போயிறங்கி, குறிகாட்டுவான் பக்கமா நிண்டு, நாய்கத்து, பேய்கத்து கத்துமப்பா...! :grin:

அரசியல் சாசனத்தில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை: ரணில் கருத்தை நிராகரித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு

 

இலங்கையின் புதிய அரசியல் சாசனத்தில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ரணில் விக்ரமசிங்க
 கொலன்னாவை பௌத்த மத நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஏற்றுக் கொண்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதை தமிழ் தேசிய கூட்டமைப்பு நிராகரித்துள்ளது

புதிய அரசியல் சாசனத்திலும் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் விடயத்தை தொடர்ந்து முன்னெடுக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்பட அரசியல் கட்சிகளும் இணக்கம் தெரிவித்துள்ளதாக பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க, கொலன்னாவ பிரதேசத்தில் நடைபெற்ற பௌத்த மத நிகழ்வொன்றில் கூறியிருந்தார்.

பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்கவின் இந்த கூற்றை நிராகரித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரான ஏ.எம் . சுமந்திரன் ''அரசியலமைப்பு வழிகாட்டல் குழுவில் மதம் சார்ந்த விடயங்கள் இதுவரை பேசப்படவில்லை'' என்று தெரிவித்தார்.

''நாட்டில் சகலருக்கும் சம உரிமை என கூறும் அரசியல் சாசனத்தில் ஒரு மதத்திற்கு முன்னுரிமை கொடுப்பது அரசியலமைப்புக்கு முரணானது . நல்லிணக்கத்திற்கு பாதிப்பாக அமையும் '' என்று பிபிசி தமிழோசையிடம் அவர் தெரிவித்தார்.

''புதிய அரசியல் சாசனத்தில் இலங்கை ஒரு மதச் சார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்பதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுதியான நிலைப்பாடு. ஒரு மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்படுவதை அனுமதிக்க முடியாது. அரசியலமைப்பு வழிகாட்டல் குழுவில் சமயம் சார்ந்த விடயங்களும் பேசப்பட வேண்டிய விடயமாக இருந்தாலும் இன்னமும் பேசப் படவில்லை '' என்றும் அவர் கூறினார்.

http://www.bbc.com/tamil/sri-lanka-37616079

  • கருத்துக்கள உறவுகள்

இல்லாத ஊருக்கு வழி சொல்கிறார். tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Paanch said:

புங்கையூரன் அவர்களே! அது கல்வி அல்ல கல்கி ஆகும். இன்று அமெரிக்கா தானேதான், உலக அமைதியையும், பாதுகாப்பையும் மேற்கொள்வதாக தெரிவித்து நிற்கிறது. அதே அமெரிகாவில்தான்  டொனால்ட் டிரம்ப்  பிறந்து வந்துள்ளார். இதனைவைத்துப் பார்க்கும்போது உங்கள் கூற்றுச் சரியானதாகவே தென்படுகிறது, விக்கிப்பீடியாவும் அதுபோலவே தெரிவித்துள்ளது.:grin:

  

கல்கி அவதாரம் என்பது இந்து சமயத்தின் கூற்றுப்படி விஷ்ணு பகவானின் பத்தாவதும் இறுதியுமான மகா அவதாரமாகும். [1]கல்கி பகவான் கலி யுகத்தில் தோன்றி அனைத்து தீயவைகளையும் அழிப்பார் என்பது ஒரு கூற்று. கல்கி என்பதன் பொருள் காலம் அல்லது முடிவிலி ஆகும்.

கல்கியியை பற்றிய தீர்க்கதரிசனம்

சம்பலகிராமத்தின் முக்கியஸ்தரான விஷ்ணுயாசஸ் என்பவருக்கும் அவரது மனைவி சுமதி என்பவருக்கும் பிறப்பார் என பாகவத புராணத்தில் அறிவிக்கபட்டுள்ளது

இங்கு சம்பல என்பதன் பொருள் அமைதி மற்றும் பாதுகாப்பு என்பதாம் அமைதியும் பாதுகாப்பும் உடையகிராமம் என்பது பொருள்

மேலும் விஷ்ணுயாசா என்பதன் பொருள்

விஷ்ணு - இறைவன்

யாசா -அடிமை அல்லது அடியவர் அல்லது பக்தன் என்று தமிழில் பொருள்படும்

அதாவது விஷ்ணுவின் அடியவர் அல்லது விஷ்ணு பக்தன் என்பது பொருள்

மேலும் சுமதி என்பது அமைதியை குறிக்கும் தமிழில் சுமதி என்பதற்கு சு -நல்ல ,மதி- அறிவு என்று அர்த்தப்படும்.

நன்றி..பாஞ்ச்!

கல்கி அவதாரம் என்பது தான் சரி.... நான் எழுதினது...'கல்கி' என்று தான்!

அது கணணினியில் எழுதப்பட்டது...கல்வி!

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Paanch said:

 

கல்கியியை பற்றிய தீர்க்கதரிசனம்

சம்பலகிராமத்தின் முக்கியஸ்தரான விஷ்ணுயாசஸ் என்பவருக்கும் அவரது மனைவி சுமதி என்பவருக்கும் பிறப்பார் என பாகவத புராணத்தில் அறிவிக்கபட்டுள்ளது

இங்கு சம்பல என்பதன் பொருள் அமைதி மற்றும் பாதுகாப்பு என்பதாம் அமைதியும் பாதுகாப்பும் உடையகிராமம் என்பது பொருள்

 

அடிடா சக்கை......அது என்கன்ட‌ சாம்பல் தீவு கண்டியளோ....சம் என்றால் தமிழில் சாம்பல்,தீவு என்றால் "பல" சமஸ்கிருதத்தில் ....சமபல கிராமம் என்பது சாம்பல் தீவு.......திருகோணமலையில் பெரிய‌ விஸ்ணு ஆலயம் உருவாகியுள்ளது......சுமதி என்ற பெயரில் பல தமிழ் பெண்கள் திருகோண்மலையில் உண்டு.... திருகோணமலை எம்.பியை " சம்"என்றுதான் நாங்கள் எல்லோரும் அன்பாக அழைக்கின்றோம்......அவர் சிங்களவரின்ட எதிர்கட்சி தலைவர்......தமிழர்களுக்கு விடிவு காலம் வந்திட்டுது....

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

அடிடா சக்கை......அது என்கன்ட‌ சாம்பல் தீவு கண்டியளோ....சம் என்றால் தமிழில் சாம்பல்,தீவு என்றால் "பல" சமஸ்கிருதத்தில் ....சமபல கிராமம் என்பது சாம்பல் தீவு.......திருகோணமலையில் பெரிய‌ விஸ்ணு ஆலயம் உருவாகியுள்ளது......சுமதி என்ற பெயரில் பல தமிழ் பெண்கள் திருகோண்மலையில் உண்டு.... திருகோணமலை எம்.பியை " சம்"என்றுதான் நாங்கள் எல்லோரும் அன்பாக அழைக்கின்றோம்......அவர் சிங்களவரின்ட எதிர்கட்சி தலைவர்......தமிழர்களுக்கு விடிவு காலம் வந்திட்டுது....

சம்முக்குப் பல சுமதிகள்...., மன்னிக்கவேண்டும், பல தீவுகள் உண்டா? அங்கெல்லாம் செல்லமாக சுட்டித்தனம் புரியும் குழந்தைதான் சும் ஆ....?? அப்பனுக்கே உபதேசம் செய்து வழிகாட்டும் பிள்ளை....! தமிழேன்டா!! :grin:

  • கருத்துக்கள உறவுகள்

 அரசியல் தீர்வை வெளியிடமுன்,  த. தே. கூட்டமைப்பு நித்திரையோ என்று மதத்தை விட்டு ஆழம் பாக்கிறார் ரணிலார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.