Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மல்லாவி நகரில் பண்டாரவன்னியனுக்குச் சிலை

Featured Replies

அடங்காப்பற்றின் இறுதி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியனின் சிலை நேற்றைய தினம் மல்லாவி நகரில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய காலாநிதி சிவப்பிரகாசம் சிவமோகனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைக்கப்பட்டு வரும் எட்டு சிலைகளில் ஒன்றாக மாவீரன் பண்டாரவன்னியனின் திருவுருவச்சிலை மல்லாவி நகரின் மத்தியில் அமைக்கப்பட்டு நேற்று கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

http://www.tamilwin.com/lifestyle/01/130383?ref=home

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையான பண்டாரவன்னியனின் சிலை கீழே இருக்க  மேற்கூறிய சிலை எவ்வாறு யாரால் அமைக்கப்பட்டது??

 

Image result for பண்டாரவன்னியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

பண்டாரவன்னியன் சிலையை பாக்க ஒரு துண்டு பாணும்  சம்பலும் சாப்பிட்டு வளந்தவர் போலை கிடக்கு......

C1PCOcCUcAAb1VF.jpg

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

பண்டாரவன்னியன் சிலையை பாக்க ஒரு துண்டு பாணும்  சம்பலும் சாப்பிட்டு வளந்தவர் போலை கிடக்கு......

ஹ... ஹா.... ஹா....... சிரித்து வயிறு நோகுது.
இந்தச்  சிலை செய்தவரின்... போட்டோ   இருந்தால், 
அதை பிரேம் பண்ணி... சுவரில,  மாட்டி வைக்க வேணும் போலை கிடக்கு.  :grin:

4 hours ago, nunavilan said:

 

உண்மையான பண்டாரவன்னியனின் சிலை கீழே இருக்க  மேற்கூறிய சிலை எவ்வாறு யாரால் அமைக்கப்பட்டது??

 

 

3 hours ago, குமாரசாமி said:

பண்டாரவன்னியன் சிலையை பாக்க ஒரு துண்டு பாணும்  சம்பலும் சாப்பிட்டு வளந்தவர் போலை கிடக்கு......

 

1 hour ago, தமிழ் சிறி said:

இந்தச்  சிலை செய்தவரின்... போட்டோ   இருந்தால், 
அதை பிரேம் பண்ணி... சுவரில,  மாட்டி வைக்க வேணும் போலை கிடக்கு.  :grin:

இந்த சிலையை நேற்று பாத்தவுடன் 
பண்டாரவன்னியன் எப்ப அனுமானா மாறினார் என்றே கேட்க தோன்றியது.

எதற்கு வம்பு என்று சும்மா இருந்துவிட்டேன்.

அண்ணாத்துரை யாருமறியா திருவள்ளுவருக்கு ஒரு வடிவத்தை கொடுத்தது போன்று நாமும் பண்டாரவன்னியன், சங்கிலியன் போன்றோருக்கு ஒரு வடிவத்தை உருவாக்க வேண்டும்.

இல்லை என்றால் 
ஒரு குரங்கை செய்து நடு சந்தியில் நட்டுவிட்டு கீழே பண்டாரவன்னியன் என்று எழுதிவிட்டு போய்விடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்

Image result for பண்டாரவன்னியன்

இனியாவாது பொருத்தமான, கம்பீரமான, மிடுக்கான பண்டார வன்னியனின் சிலையை செய்து வைப்பார்களாக!

  • கருத்துக்கள உறவுகள்
On 1/4/2017 at 3:10 AM, குமாரசாமி said:

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

பண்டாரவன்னியன் சிலையை பாக்க ஒரு துண்டு பாணும்  சம்பலும் சாப்பிட்டு வளந்தவர் போலை கிடக்கு......

C1PCOcCUcAAb1VF.jpg

சம்பந்தன்.. சுமந்திரன்.. கருணா.. டக்கிளஸ்.. சித்தார்த்தன்.. இப்படியானதுகளை எல்லாம்... மனசில நினைச்சு சிலை வடிச்சிருப்பாய்ங்க போல. :rolleyes:tw_blush:

எதுஎப்படியோ.. ஒரு நினைவுக் கல்லில் நின்ற பண்டாரவன்னியன்.. போரின் பின்னாடி.. இன்று சிலை வைக்கிற நிலைக்கு உயர்ந்தது.. தமிழ் மக்களின் அறியாமையில் கொஞ்சம் அகல வழிசெய்திருக்குது. tw_blush:

On 1/4/2017 at 6:32 AM, ஜீவன் சிவா said:

 

 

இந்த சிலையை நேற்று பாத்தவுடன் 
பண்டாரவன்னியன் எப்ப அனுமானா மாறினார் என்றே கேட்க தோன்றியது.

எதற்கு வம்பு என்று சும்மா இருந்துவிட்டேன்.

அண்ணாத்துரை யாருமறியா திருவள்ளுவருக்கு ஒரு வடிவத்தை கொடுத்தது போன்று நாமும் பண்டாரவன்னியன், சங்கிலியன் போன்றோருக்கு ஒரு வடிவத்தை உருவாக்க வேண்டும்.

இல்லை என்றால் 
ஒரு குரங்கை செய்து நடு சந்தியில் நட்டுவிட்டு கீழே பண்டாரவன்னியன் என்று எழுதிவிட்டு போய்விடுவார்கள்.

முதுகெலும்பு உள்ளதுகள் அங்கு ஒண்டுமில்லை சிலை வடிப்பவனுக்கும் முன்னாள் இதுகள் தான் நினைவில் வந்து போயிருக்கும் இல்லாட்டி சிலை வடிப்பவன் நிதம் சாப்பாடு பாணும் பிளேன்ரியுமோ எதுக்கும் விசாரிக்கணும் 

  • தொடங்கியவர்

பண்டாரவன்னியன் உருவச்சிலை அமைப்பு! தமிழரின் வீரத்தை கொச்சைப்படுத்தும் செயல்!

முல்லைத்தீவு-மல்லாவி நகரில் மாவீரன் பண்டாரவன்னியனின் உருவச் சிலையை எதியோப்பியா, சோமாலியா போன்ற நாடுகளில் பஞ்சத்தினால் பாதிக்கப்பட்டவர்களின்தோற்றத்தில் அமைத்திருக்கின்றார்கள்.

இது மாவீரன் பண்டாரவன்னியனின்மாவீரத்தையும், தமிழர்களின் வீரத்தையும் கொச்சைப்படுத்தும் ஒரு செயல் எனவடமாகாணசபையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வடமாகாணசபையின் 82ம் அமர்வு இன்றைய தினம் மாகாணசபை பேரவை செயலகத்தின் சபாமண்டபத்தில் நடைபெற்றிருந்தது. இதன்போதே மேற்படி விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்போது மாகாணசபை உறுப்பினர் எஸ்.மயூரன் பொது முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகமேற்படி விடயத்தை சபைக்கு கொண்டு வந்தார்.

குறித்த விடயத்தை முன்வைத்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மல்லாவி நகரில் அமைக்கப்பட்டுள்ள சிலைக்கு கீழ்பண்டாரவன்னியன் என எழுதியால் மட்டுமே அது பண்டாரவன்னியனின் சிலை என மற்றவர்களுக்கு தெரியும்.

ஒரு மாவீரனின் சிலையை சோமாலியா, எதியோப்பியா போன்ற நாடுகளில்பஞ்சத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் தோற்றத்தில் அமைத்திருக்கிறார்கள்.

வெளிநாட்டில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் இங்கே வருகிறவர்கள் அந்த சிலையை பார்த்தால்தமிழர்களின் வீரத்தை குறித்து என்ன நினைப்பார்கள்? இது பண்டாரவன்னியனை கொச்சைப்படுத்தும் ஒரு செயல் என்றார்.

தொடர்ந்து பேசிய மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன்25ம் அமர்வில் பண்டாரவன்னியனின் சிலையை முல்லைத்தீவு நகரில் அமைப்பதற்கானதீர்மானம் நிறைவேற்றப்பட்டு இதற்கிடையில் பண்டாரவன்னியனை கொச்சைப்படுத்தும் செயலாகவே நான் பார்க்கிறேன்.

இந்த சிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மல்லாவி பிரதேச மக்கள் எனக்குகொடுத்திருக்கும் கடிதம் ஒன்றில் ஒரு மகள் தனது தந்தையை பார்த்து பண்டாரவன்னியன்போலியோ நோயினாலா இறந்தார் எனக் கேட்டதாக கூறப்பட்டுள்ளது.

எனவே இந்த சிலைஅமைப்பு தமிழ்மக்கள் பண்டாரவன்னியன் மீது கொண்டிருக்கும் கௌரவத்தையும், பண்டாரவன்னியனின் மா வீரத்தையும் கொச்சைப்படுத்தும் ஒரு செயல் எனச் சுட்டிக்காட்டினர்.

இந்நிலையில் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் பேசுகையில் அந்த சிலைக்கு கீழ் 23 ம் புலிகேசிஎன எழுதி விடுங்கள் என்றார்.

 

http://www.tamilwin.com/arts/01/131236?ref=morenews

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.