Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீதியோரத்தில் அரப்பு வைத்த வேலையற்ற பட்டதாரிகள்

Featured Replies

வீதியோரத்தில் அரப்பு வைத்த வேலையற்ற பட்டதாரிகள்

 

 

மட் ட க்களப்பு வேலையற்ற பட்டதாரிகள்  புதுவருட  தினமான இன்று வீதியில் அரப்பு வைத்து  தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

unnamed__5_.jpg

சத்தியாகிரக  போராட்டம் தொடங்கி இன்றுடன் 53 வது  நாளை கடந்தும்  இதுவரைக்கும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை .

unnamed__4_.jpg

அரசியல் வாதிகளும்  அரசாங்கமும் வீடுகளில் புதுவருடம் கொண்டாடும் போதும் பட்டதாரிகள் வீதிகளில் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

unnamed__7_.jpg

 
 

http://www.virakesari.lk/article/19038

  • கருத்துக்கள உறவுகள்

சரிதான், வேலை இல்லாட்டி, இப்படி பிரயோசனமில்லாத வேலைகள் செய்யலாம் தான்.

:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

மஞ்சள் வேட்டிய பாருங்க கண்ணை குத்துது 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, முனிவர் ஜீ said:

மஞ்சள் வேட்டிய பாருங்க கண்ணை குத்துது 

:grin: எது ?

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Nathamuni said:

:grin: எது ?

சொல்லவா வேண்டாமா ஆள் சைசுப்பாtw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, முனிவர் ஜீ said:

சொல்லவா வேண்டாமா ஆள் சைசுப்பாtw_blush:

53 நாளா உந்த கூடாரத்துக்குள சமைச்சு சாப்பிட்டே வெயிட் போட்டுட்டார்.tw_cry:

குடத்தோட தண்ணி ஊத்துறவர், நரை மீசை, தலைமயிரோட... அவரும் வேலை தேடுற பட்டதாரியுயோ?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

53 நாளா உந்த கூடாரத்துக்குள சமைச்சு சாப்பிட்டே வெயிட் போட்டுட்டார்.tw_cry:

குடத்தோட தண்ணி ஊத்துறவர், நரை மீசை, தலைமயிரோட... அவரும் வேலை தேடுற பட்டதாரியுயோ?

சச் ..ச அவரு இவங்களுக்கு மருத்து நீர் வைக்க வந்து இருக்கிறார் 

எங்க ஊர்ல ஒன்று சொல்லுவாங்க ஓட்டல்ல சாப்பாடு ஒப்பிசில படுக்க என்று அதே நிலமைதான் இவங்களுக்கு நல்ல சாப்பாடு நல்ல தூக்கம் ரைமுக்கு பெண்கள் வர அலட்டல் முடியும் தருவாயில் எந்தெந்த குடும்பம் குலைய போகுதோ தெரியாது :unsure:

1 hour ago, முனிவர் ஜீ said:

முடியும் தருவாயில் எந்தெந்த குடும்பம் குலைய போகுதோ தெரியாது :unsure:

முனிவரின் சமுதாயம் சார்ந்த ஆழமான கருத்துகளை பார்த்து அப்படியே ஷாக் ஆகிட்டேன்.:grin:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, நவீனன் said:

வீதியோரத்தில் அரப்பு வைத்த வேலையற்ற பட்டதாரிகள்

நாலு கடியனை அவிட்டுவிட ......இருக்கிற வேலையளை தேடிப்போய் செய்வினம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, ஜீவன் சிவா said:

முனிவரின் சமுதாயம் சார்ந்த ஆழமான கருத்துகளை பார்த்து அப்படியே ஷாக் ஆகிட்டேன்.:grin:

கூடின கூட்டு அப்பிடியெல்லே...:grin:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஜீவன் சிவா said:

முனிவரின் சமுதாயம் சார்ந்த ஆழமான கருத்துகளை பார்த்து அப்படியே ஷாக் ஆகிட்டேன்.:grin:

 

50 minutes ago, குமாரசாமி said:

கூடின கூட்டு அப்பிடியெல்லே...:grin:

மட்டக்களப்புக்கு வந்த ஒரு பட்ட தாரி  அவர் ஒரு சுய தொழிலாளி  அவர் வீடுகளில் மின்சார வயறிங் செய்து கொடுக்கும் ஒருவர் ஒட்டு  மொத்த பட்டதாரிகளையும் இவர்கள் அழைத்தாக செல்கிறார் அங்கே சொந்த வேலையை விட்டு போனவர் அங்கே நடந்த சம்பவங்களை சொன்னார் அடுத்தநாள் வந்து அண்ண அங்கே போனால்  நம்ம தொழ்லி கெட்டு போகும் என்று அடுத்த நாளே அங்கு போகாமல்  தன்ற சுய வேலைக்கு வந்து விட்டார் ஏன் ஆர்பாட்டத்துக்கு போகல் என்று கேட்ட போது  அண்ண அவர் சொன்னது  ஆர்ப்பாட்டம் நடக்குதோ இல்லையோ  ஆள் ஆள் மாறி நல்லா கதைச்சுக்கொண்டு திரிகிறார்கள்  அதான் போகல் என்றார் பட்டதாரி பெண்கள் நல்ல ஸ்குட்டி பைக்கில் வந்து இரங்குறார்கள் அதை வாங்கியத்ற்கு ஒரு தையல் மெசினை வாங்கி யன்னல் வைத்த மேற்சட்டை தைத்தாவது பொழைச்சுக்கலாம்

ஒடேல் போல்  வராட்டியும் ஒழுங்கான குடும்ப சுமை தெரிந்த பெண்ணாக வாழ்க்கையை ஆரம்பித்திருக்கலாம்  வேலை கிடைத்தால்தான் கல்யாணம் வேற என்ற ................... வேற :unsure::unsure::102_point_up_2:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, முனிவர் ஜீ said:

 

மட்டக்களப்புக்கு வந்த ஒரு பட்ட தாரி  அவர் ஒரு சுய தொழிலாளி  அவர் வீடுகளில் மின்சார வயறிங் செய்து கொடுக்கும் ஒருவர் ஒட்டு  மொத்த பட்டதாரிகளையும் இவர்கள் அழைத்தாக செல்கிறார் அங்கே சொந்த வேலையை விட்டு போனவர் அங்கே நடந்த சம்பவங்களை சொன்னார் அடுத்தநாள் வந்து அண்ண அங்கே போனால்  நம்ம தொழ்லி கெட்டு போகும் என்று அடுத்த நாளே அங்கு போகாமல்  தன்ற சுய வேலைக்கு வந்து விட்டார் ஏன் ஆர்பாட்டத்துக்கு போகல் என்று கேட்ட போது  அண்ண அவர் சொன்னது  ஆர்ப்பாட்டம் நடக்குதோ இல்லையோ  ஆள் ஆள் மாறி நல்லா கதைச்சுக்கொண்டு திரிகிறார்கள்  அதான் போகல் என்றார் பட்டதாரி பெண்கள் நல்ல ஸ்குட்டி பைக்கில் வந்து இரங்குறார்கள் அதை வாங்கியத்ற்கு ஒரு தையல் மெசினை வாங்கி யன்னல் வைத்த மேற்சட்டை தைத்தாவது பொழைச்சுக்கலாம்

ஒடேல் போல்  வராட்டியும் ஒழுங்கான குடும்ப சுமை தெரிந்த பெண்ணாக வாழ்க்கையை ஆரம்பித்திருக்கலாம்  வேலை கிடைத்தால்தான் கல்யாணம் வேற என்ற ................... வேற :unsure::unsure::102_point_up_2:

இவர்களின் பேட்டிகளை பார்த்தேன் ....
அரசு உத்தியோகம் இல்லாமல் ....
கலியாணம் என்பது எவ்வாறு ?
என்ற கேள்வியே இவர்களிடம் பெரிதாக இருந்தது .....

இப்பிடி மாறி மாறி ஸ்கூட்டியில் ஏற்றி போனால் ....
அந்த பிரச்சனைக்காவது முடிவு வந்திடும் இல்லையா ? 

எனக்கு என்னமோ இந்த ஆர்ப்பாட்டம் 
சரியான பாதையில் போவதாகவே படுகிறது.

போராடுபவர்கள்  இன்னும் கொஞ்சம் ஊக்கம் எடுத்து 
வேலை எடுக்க வேண்டும்....
கலியாண பிரச்சனை முடிவுக்கு வந்திடும். 

முனிவர் !
53 நாள் இரண்டு மாதம் வந்துட்டுது .....
எத்தனை கரை சேர்ந்து இருக்கு ?
ஏதும் தகவல் கிடைத்ததா ?  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, Maruthankerny said:

53 நாள் இரண்டு மாதம் வந்துட்டுது .....
எத்தனை கரை சேர்ந்து இருக்கு ?
ஏதும் தகவல் கிடைத்ததா ?  

இவரும் முனிவரும் ஏதோ ஒரு விசயத்தோடைதான் இதுக்கை நிண்டு வளையம் கட்டினம்.:cool:

அது சரி....மருதங்கேணியும் முனிவரும் உங்கை நிக்கிற இரண்டு பட்டதாரி பொம்புளையளை கூப்பிட்டு தாலியை கட்டி அரப்பு வைக்கலாம் தானே?????

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

இவரும் முனிவரும் ஏதோ ஒரு விசயத்தோடைதான் இதுக்கை நிண்டு வளையம் கட்டினம்.:cool:

அது சரி....மருதங்கேணியும் முனிவரும் உங்கை நிக்கிற இரண்டு பட்டதாரி பொம்புளையளை கூப்பிட்டு தாலியை கட்டி அரப்பு வைக்கலாம் தானே?????

அரப்பு வைக்கிறது என்றால் ..........அழுத்தி வைக்கலாம்.
அரசாங்க உத்தியோகம் எல்லோ கேட்க்கினம்.??
அதுக்கு ஆமியிலதான் சேர்க்கவேணும்.

அப்பிடியே சிரியா ஊடாக 
வட கொரியா போய் தப்பி வந்தால் 
நிறைய மாற்றம் தானா வரும். 
ஓகே என்றால் ..... கூப்பிடலாம். 

5 hours ago, குமாரசாமி said:

அது சரி....மருதங்கேணியும் முனிவரும் உங்கை நிக்கிற இரண்டு பட்டதாரி பொம்புளையளை கூப்பிட்டு தாலியை கட்டி அரப்பு வைக்கலாம் தானே?????

அப்படி எண்டால் கன்னுக்குட்டியோடேதான் மாடு அவுக்கணும். பலர் அப்படித்தான் இஞ்ச குந்தி இருக்கிறாங்கப்பு.:grin:

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Maruthankerny said:

முனிவர் !
53 நாள் இரண்டு மாதம் வந்துட்டுது .....
எத்தனை கரை சேர்ந்து இருக்கு ?
ஏதும் தகவல் கிடைத்ததா ?  

அநேகமா கனது கரயேறிவிட்டது என்ற புலனாய்வு தகவல்கள் சொல்கின்றன மருதர்  

 

8 hours ago, குமாரசாமி said:

இவரும் முனிவரும் ஏதோ ஒரு விசயத்தோடைதான் இதுக்கை நிண்டு வளையம் கட்டினம்.:cool:

அது சரி....மருதங்கேணியும் முனிவரும் உங்கை நிக்கிற இரண்டு பட்டதாரி பொம்புளையளை கூப்பிட்டு தாலியை கட்டி அரப்பு வைக்கலாம் தானே?????

ம்கும் கு.சாமி யண்ணை அதுக்குள்ள ஏன் போவான் பட்டதாரியென்ற ஒரு திமிரு பாருங்க ஆனால் ஒன்றுக்குமே லாயக்கில்லாத பட்டம் ஒருத்தரிடம் கணணியை  கொடுத்து    ஒரு கடிதம் அடித்து ரைப்பண்ணகொடுத்தேன் தமிழ் வ்ராதாம் தாம் இங்கிலீசு மட்டும் தட்டுவினுமாம்

அதை விட சொந்த ஒரு முடிவு எடுக்க தெரியாதவரை கட்டி இழுத்து கொண்டு போக நான் ரெடி இல்லை  இவங்க இப்படியே இருக்கட்டும்  ஒரு வேளை கிழக்கு மாகாண சபை இவர்களுக்கு தொழில் கொடுக்கும் வாய்ப்பு இருக்கிறது  .இருந்தாலும் தங்களை விட பெரிய தொழில் செய்யும் நபர்களையே விரும்புகிறார்கள்  ( அவந்தான் விட்டு விட்டு போவன்) 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, முனிவர் ஜீ said:

அநேகமா கனது கரயேறிவிட்டது என்ற புலனாய்வு தகவல்கள் சொல்கின்றன மருதர்  

 

ம்கும் கு.சாமி யண்ணை அதுக்குள்ள ஏன் போவான் பட்டதாரியென்ற ஒரு திமிரு பாருங்க ஆனால் ஒன்றுக்குமே லாயக்கில்லாத பட்டம் ஒருத்தரிடம் கணணியை  கொடுத்து    ஒரு கடிதம் அடித்து ரைப்பண்ணகொடுத்தேன் தமிழ் வ்ராதாம் தாம் இங்கிலீசு மட்டும் தட்டுவினுமாம்

அதை விட சொந்த ஒரு முடிவு எடுக்க தெரியாதவரை கட்டி இழுத்து கொண்டு போக நான் ரெடி இல்லை  இவங்க இப்படியே இருக்கட்டும்  ஒரு வேளை கிழக்கு மாகாண சபை இவர்களுக்கு தொழில் கொடுக்கும் வாய்ப்பு இருக்கிறது  .இருந்தாலும் தங்களை விட பெரிய தொழில் செய்யும் நபர்களையே விரும்புகிறார்கள்  ( அவந்தான் விட்டு விட்டு போவன்) 

இந்த படிச்ச ........ என்று இழுக்கிறவர்களுக்கு 
எதிராக பல கருத்துக்களை இங்கே நான் பதிவு செய்திருப்பேன் 
உண்மையான காரணம் இதுதான்.

ஒருவன் படிச்சு இருந்தால் அதை ஊர் சொல்லவேண்டும் 
இது தனக்கு தானே சொல்லிக்கொண்டு திரிகிறார்கள் என்றால் 
எதோ கொஞ்சம் தட்டுப்பட்ட நிலை என்றுதான் பொருள்.
யாழ்ப்பாணம் பூராக இவர்களின் கூட்ட்டம்தான்.

பார்த்த சும்மா இருந்தவன்தான் ... இந்த சோம்பேறிகளின் 
படிப்பு செலவையும் பார்த்து ... குடும்பத்தையும் பார்த்து 
நாட்டுக்கும் ஏதும் செய்து இருப்பான்.
இருக்கின்றார்கள். 

தவிர படிச்சவர்கள் என்று தலையில் தூக்கி வைத்த 
பொறுக்கிகள் எல்லாம் எமது இனத்தை விற்று பிழைத்ததே 
வரலாறு ...........

சில வாரங்களினுள் முன்பும் வேலையற்ற பட்டதாரிகள் சம்மந்தமாக ஓர் செய்தி இங்கே காணப்பட்டது. இப்போது அது சார்ந்து இன்னோர் செய்தி. இரண்டிலும் கருத்துக்களை கூறியவர்கள் போராட்டம் செய்பவர்கள் மீது வெறுப்புணர்வுடன் தமது கருத்துக்களை வைத்தார்கள். அவனவனுக்கு அவனவன் பிரச்சனை. இதே போராட்டத்தை வேலையற்ற மருத்துவ பட்டதாரிகள் செய்தால் மேற்கண்ட அதேமாதிரியான வெறுப்பான கருத்துக்களை எதிர்பார்க்க முடியுமா?

ஒவ்வொருவரும் வெளிநாடுகளில் தாங்கள் எப்படி சீவித்தார்கள், சீவிக்கின்றார்கள் என்பதன் அடிப்படையிலும் இந்த போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது கிண்டலுடன் கருத்துக்களை வைத்தார்கள். 

சிறிது காலத்தின்முன் பாடசாலைக்கு ஓர் சிறுமிக்கு அனுமதி கிடைக்கவில்லை என்று ஓர் செய்தி வந்தது. அதற்கு வந்த கருத்துக்கள் அனுதாபத்துடன் அடியடா பிடியடா என்று வந்தன. இதே சிறுமி வளர்ந்து ஒரு காலத்தில் இவ்வாறான போராட்டத்தில் ஈடுபடும்போது எப்படியான கருத்துக்கள் வருமோ யாமறியோம். :rolleyes:

 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, கலைஞன் said:

சில வாரங்களினுள் முன்பும் வேலையற்ற பட்டதாரிகள் சம்மந்தமாக ஓர் செய்தி இங்கே காணப்பட்டது. இப்போது அது சார்ந்து இன்னோர் செய்தி. இரண்டிலும் கருத்துக்களை கூறியவர்கள் போராட்டம் செய்பவர்கள் மீது வெறுப்புணர்வுடன் தமது கருத்துக்களை வைத்தார்கள். அவனவனுக்கு அவனவன் பிரச்சனை. இதே போராட்டத்தை வேலையற்ற மருத்துவ பட்டதாரிகள் செய்தால் மேற்கண்ட அதேமாதிரியான வெறுப்பான கருத்துக்களை எதிர்பார்க்க முடியுமா?

ஒவ்வொருவரும் வெளிநாடுகளில் தாங்கள் எப்படி சீவித்தார்கள், சீவிக்கின்றார்கள் என்பதன் அடிப்படையிலும் இந்த போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது கிண்டலுடன் கருத்துக்களை வைத்தார்கள். 

சிறிது காலத்தின்முன் பாடசாலைக்கு ஓர் சிறுமிக்கு அனுமதி கிடைக்கவில்லை என்று ஓர் செய்தி வந்தது. அதற்கு வந்த கருத்துக்கள் அனுதாபத்துடன் அடியடா பிடியடா என்று வந்தன. இதே சிறுமி வளர்ந்து ஒரு காலத்தில் இவ்வாறான போராட்டத்தில் ஈடுபடும்போது எப்படியான கருத்துக்கள் வருமோ யாமறியோம். :rolleyes:

 

கல்வி என்பது அறிவு வளர்ச்சிக்கு மட்டுமே உதவும் 
அந்த அறிவு மிகுதியால் ..... நாம் வாழ்வையும் மிகுதியாக்கி 
அடுத்தவர் வாழ்வையும் மிகுதியாக்குவதே சிறப்பு.

இன்று நாம் பெருத்த விஞ்ஞானிகள் என்று சொல்பவர்கள் எல்லாம் 
வெற்றிகண்ட காரணத்தால் மட்டுமே தெரிந்து கொள்கிறோம் 
அவர்கள் கடந்து வந்த பாதை எவ்ளவு இடர் உடையது. 

இன்றும் டெஸ்லாவின் பல கண்டுபிடிப்புகள் வேறு நபர்கள் 
உரிமை கூறும் நிலைமை உண்டு ... 
அவர் தாமஸ் எடிசனுடன் சண்டை போட்டு வெளியேறுமட்டும் 
அவருடைய தியரி எல்லாமே தாமஸ் எடிசனின் பெயரிலேயே இருந்து இருக்கிறது.
அவர் அதை பற்றி பெரிதும் அலட்டிடவில்லை சமூகம் பயன் பெற வேண்டும் என்றே விரும்பினார் 
அவர் டி/சி  சரிவராது  எ/சி தான் பயன் தரும் என்று முழுதாக நம்பியதால் 
அதை சமூகத்திடம் சேர்க்கவேண்டும் எனும் காரணத்தினால்தான் எடிசனை விட்டு 
பிரிந்தார் எடிசன் அரசியல்வாதிகளையும் டெஸ்லாவை நம்ப வேண்டாம் என்று 
அறிவுறுத்தி இருந்தார் ...
இன்று நாம் எ/சி ஆல்தான் பலன் பெறுகிறோம் .... டெஸ்லாவின் தியரி இல்லாமல் 
இப்படி ஒரு மின்சார வழங்குதலை செய்திருக்க முடியுமா? 
அவர் தந்து அறிவை சமூகம் எட்டுவதட்கு தன் வாழ்வை கூட அர்ப்பணிக்க தயாராக இருந்தார்.

கலர் போட்டோ ... ஈஸ்ட்மேன் (கலர்) 
அவர் கெமிக்கல்களில் கைவைத்து கை பூராக காயங்களால் 
அவதி உற்றார் ..அதனால் இருந்த ஒரே ஒரு வருமானமாக தட்டச்சு 
வேலையையும் இழந்து ரோட்டுக்கு வந்தார்.
முயறசி தளராது உழைத்து எமக்கும் கலர் போட்டோ காட்டினார்.

இப்படி ஒவ்வரு பொருள் பின்னாலும் ....
ஓர் மனிதனின் துயர் இருக்கிறது.

இவற்றை எல்லாம் வகுப்பில் படித்துவிட்டு .....
வந்து ரோட்டில் நின்று அரப்பு வைத்துக்கொண்டு நின்றால் 
அடுத்தவன் சிரிக்காமல் என்ன செய்வான் ? 
இளைஞர்கள் ரோட்டில் நின்று அரப்பு வைக்கும் நிலையிலா நாடு இருக்கிறது ?
ஒரு சமூக எண்ணம் ?
ஒரு குடும்ப எண்ணம் ?
சொந்த பிழைப்பு எண்ணம் ?

எதுவும் இல்லாத எருமைகளை நம்பித்தான் ......
நாம் அருமையையும் .... அசாதாரண உயிர்களையும் 
அர்ப்பணிக்கும் துயர் நிலை வந்தது.

இவர்கள் 4 வருடம் பல்கலை கழகம் சென்றது தவிர்த்தது 
வேறு எதையும் வெட்டி புடுங்கவில்லை என்பதை 
இவர்கள் புரிந்து கொள்ளவேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நியுஸ்18தமிழ்நாடு

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, கலைஞன் said:

சில வாரங்களினுள் முன்பும் வேலையற்ற பட்டதாரிகள் சம்மந்தமாக ஓர் செய்தி இங்கே காணப்பட்டது. இப்போது அது சார்ந்து இன்னோர் செய்தி. இரண்டிலும் கருத்துக்களை கூறியவர்கள் போராட்டம் செய்பவர்கள் மீது வெறுப்புணர்வுடன் தமது கருத்துக்களை வைத்தார்கள். அவனவனுக்கு அவனவன் பிரச்சனை. இதே போராட்டத்தை வேலையற்ற மருத்துவ பட்டதாரிகள் செய்தால் மேற்கண்ட அதேமாதிரியான வெறுப்பான கருத்துக்களை எதிர்பார்க்க முடியுமா?

ஒவ்வொருவரும் வெளிநாடுகளில் தாங்கள் எப்படி சீவித்தார்கள், சீவிக்கின்றார்கள் என்பதன் அடிப்படையிலும் இந்த போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது கிண்டலுடன் கருத்துக்களை வைத்தார்கள்

சிறிது காலத்தின்முன் பாடசாலைக்கு ஓர் சிறுமிக்கு அனுமதி கிடைக்கவில்லை என்று ஓர் செய்தி வந்தது. அதற்கு வந்த கருத்துக்கள் அனுதாபத்துடன் அடியடா பிடியடா என்று வந்தன. இதே சிறுமி வளர்ந்து ஒரு காலத்தில் இவ்வாறான போராட்டத்தில் ஈடுபடும்போது எப்படியான கருத்துக்கள் வருமோ யாமறியோம். :rolleyes:

 

சிலோனிலை இருக்கிற ஆக்களுக்கு ஒரு செலுட்டு பழக்கம் இருக்குது..

அது தம்பியின்ரை கருத்திலையும் வாசம் அந்தமாதிரி வீசுது....tw_blush:
அதாவது....
அங்கை ஒருத்தரை ஸ்கொலசிப்பிலையோ இல்லை வெளிநாட்டு கவுண்மேந்தின்ரை உதவியாலையோ வெளிநாட்டுக்கு படிக்க அனுப்புவினம்.

அது தினகரனிலையோ இல்லை வீரகேசரியிலையோ இன்னார் மேற்படிப்புக்க்காக வெளிநாடு செல்கிறார் எண்டு தனி விளம்பரமாக வாறது வேறை விசயம்.

அவை இஞ்சை வந்து படிக்கவேணும்...

பட்டம் பெறவேணும்...

பிறகு அங்கை போய் படிச்ச படிப்பை வைச்சு மக்களுக்கு சேவை செய்ய வேணும். இது தான் சட்டமும் நியதியும். நாலு இடத்தை நாலு சனத்தை பார்த்து பழகினால் தான் நாலு விசயம் தெரியும்.அதை உன்ரை நாட்டுக்கு சொல்லிக்குடு எண்டுதான் அர்த்தம்.....

கோட்டு சூட்டு அல்லtw_thumbsdown: tw_thumbsdown: tw_thumbsdown:

ஆனால் !!!!!!

வெளிநாட்டு வாழ்க்கை முறையளை வெளியிலை சொல்ல மாட்டினம்.

ஆடுமாடு மேய்க்கிறவனும் கம்பஸ் போய் வந்தவன் தான் எண்டதை சொல்ல மாட்டினம்..

படிச்சவன் தான் விவசாயம் செய்யுறான் எண்டதையும் சொல்ல மாட்டினம்...

படிச்சவன் படிச்ச வேலைக்கு போராடுற நாடு தன்னிறைவடைஞ்ச பணக்கார நாடு எண்டதை விளங்கப்படுத்தி சொல்ல மாட்டினம்...

விரலுக்கு ஏற்ற வீக்கம் என்பது தனி மனிதனுக்கு மட்டுமல்ல...

சொந்த குடும்பத்திற்கு..

உற்றார் உறவினர்க்கு...

ஊரவர்க்கு....

முழு நாட்டிற்கும் பொருந்தும்..

எங்கடை சனத்துக்கு காசோ பணமோ இல்லை சரீர உதவி மட்டுமில்லை......பார்த்தை....

கண்டதை....வேலை செய்த அனுபவங்களை....

இருப்பதை வைத்து எப்படி வாழலாம்

எப்படி முன்னேறலாம் எண்ட எனக்குத்தெரிஞ்ச அறிவுரையும் சொல்லி விளங்கப்படுத்துவதும் உதவிதான்...:grin:

 

7 hours ago, Maruthankerny said:

தவிர படிச்சவர்கள் என்று தலையில் தூக்கி வைத்த பொறுக்கிகள் எல்லாம் எமது இனத்தை விற்று பிழைத்ததே 

வரலாறு ...........

மருதங்கேணியின் தவறான கருத்துக்களுக்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு!

அண்மைக் காலங்களில் வாழ்ந்து மறைந்த பேராசிரியர் துரைராஜா,  பேராசிரியர் நந்தி போன்றவர்களை மறந்து போய்விட்டதா?

7 hours ago, கலைஞன் said:

சில வாரங்களினுள் முன்பும் வேலையற்ற பட்டதாரிகள் சம்மந்தமாக ஓர் செய்தி இங்கே காணப்பட்டது. இப்போது அது சார்ந்து இன்னோர் செய்தி. இரண்டிலும் கருத்துக்களை கூறியவர்கள் போராட்டம் செய்பவர்கள் மீது வெறுப்புணர்வுடன் தமது கருத்துக்களை வைத்தார்கள். அவனவனுக்கு அவனவன் பிரச்சனை. இதே போராட்டத்தை வேலையற்ற மருத்துவ பட்டதாரிகள் செய்தால் மேற்கண்ட அதேமாதிரியான வெறுப்பான கருத்துக்களை எதிர்பார்க்க முடியுமா?

ஒவ்வொருவரும் வெளிநாடுகளில் தாங்கள் எப்படி சீவித்தார்கள், சீவிக்கின்றார்கள் என்பதன் அடிப்படையிலும் இந்த போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது கிண்டலுடன் கருத்துக்களை வைத்தார்கள். 

சிறிது காலத்தின்முன் பாடசாலைக்கு ஓர் சிறுமிக்கு அனுமதி கிடைக்கவில்லை என்று ஓர் செய்தி வந்தது. அதற்கு வந்த கருத்துக்கள் அனுதாபத்துடன் அடியடா பிடியடா என்று வந்தன. இதே சிறுமி வளர்ந்து ஒரு காலத்தில் இவ்வாறான போராட்டத்தில் ஈடுபடும்போது எப்படியான கருத்துக்கள் வருமோ யாமறியோம். :rolleyes:

 

கலைஞன்! மருத்துவர்கள் மட்டுமல்ல யாராக இருந்தாலும் படித்தபின் சொந்தமாக வேலை தேடும், தொழில் செய்யும், தொழில் தொடங்கும் தன்னம்பிக்கை இல்லையென்றால் அவர்கள் ஒன்றுக்கும் உதவாதவர்கள் என்பதை மறுக்க முடியாது. இவ்வாறு தெருவில் நின்று வேலைப்பிச்சை கேட்டால் அவர்களை சகலரும் எள்ளி நகையாடவே செய்வர்.

தற்போது மருத்துவர்கள், மருத்துவக்கல்லூரி மாணவர்கள் தனியார் மருத்துவக்கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டங்களும் பிச்சைக்காரப் போராட்டங்கள் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கலைஞன் said:

சிறிது காலத்தின்முன் பாடசாலைக்கு ஓர் சிறுமிக்கு அனுமதி கிடைக்கவில்லை என்று ஓர் செய்தி வந்தது. அதற்கு வந்த கருத்துக்கள் அனுதாபத்துடன் அடியடா பிடியடா என்று வந்தன. இதே சிறுமி வளர்ந்து ஒரு காலத்தில் இவ்வாறான போராட்டத்தில் ஈடுபடும்போது எப்படியான கருத்துக்கள் வருமோ யாமறியோம். :rolleyes:

 

கலைஞ்சன் படிப்பு தேவைக்கும் படித்த படிப்பை தேவைக்கும் பயன் படுத்துவதில் வித்தியாசம் இருக்கிறது அந்த சிறுமிக்கு உலகத்தை அறிய படிப்பு தேவைப்பட்டது இவர்களுக்கு படித்த படிப்பை பயன் படுத்த தெரியவில்லை  மொத்தத்தில் இரண்டுக்கும் வித்தியாசமிருக்கிறது 

அந்த சிறுமி  படித்த படிப்பை பயன் படுத்தி ஏதாவது வேலை செய்யலாம்  அல்லது பல பேருக்கு வேலையும் கொடுக்கலாம்  யாமறியோம் tw_blush:

மத்திய அரசாங்கள் இவர்களுக்கு தகுதி காண் பரீட்சை வைத்துதான் எடுப்பது என்று சொல்லவும் பரீட்சைகள் வேண்டாம் என் கிறார்கள்  இவர்கள் கலைஞன் 

Edited by முனிவர் ஜீ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.