Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காதலிக்கும் போது என்ன நடக்கிறது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காதலிக்கும் போது என்ன நடக்கிறது?

Tuesday, 20 February 2007

காதல் என்றால் என்ன? என்னமோ தெரியலை, ‘அது’ வந்தா மட்டும் நெஞ்சு குறுகுறுக்குது என்கிறாள் ஒரு பதினாறு வயதுப் பெண். அவள் விளக்கத்தில், தனிப்பட்ட ஒரு நபரிடம் ஏற்படும் நெஞ்சுக் குறுகுறுவை காதல் என்கிறாள். ‘மனதில் தோன்றுகிற உணர்வுகளில் மிகத் தூய்மையானது’ என்கிறார் ஜான் ட்ரைடன். ‘அந்தப் பொண்ணு பக்கத்திலேயே இருந்தால் பரவாயில்லை போல இருக்கு..’ என்கிறான் ஒரு கல்லூரி மாணவன்.

‘பரவாயில்லை’ போலவையே அவன் காதலாக உணர்கிறான். சிலருக்கு ஒரு பெண்ணை நினைத்து தூக்கம் வருவதில்லை. மாவீரன் நெப்போலியன் கூட ‘எனக்கு காதல் எல்லாம் வந்ததில்லை. ஆனால் ஜோஸபினிடம் மட்டும் ஒரு ஸ்பெஷல் இருக்கிறது..’ என்றார். காதல் ஜோக்குகள், காதல் கவிதைகள், காதல் படங்கள் எல்லாம் உலகத்தில் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றன.’ ‘இந்த பூமி சுழல்கிற அச்சில் ஒரு முடிவடையாத காதல் இருக்கிறது’ என்றான் ஒரு மகா கவிஞன். ‘‘என்ன சார் காதல்? காதலிச்சா எப்படி இருக்கும் தெரியுமா?... மூட்டைப் பூச்சி மருந்தைக் குடிச்சுட்டு தூக்கிட்டுப் போய் ஆஸ்பத்திரியில் போட்டுக் காப்பாத்தி கூப்பிட்டு வரும்போது படற அவஸ்தை இருக்கே ‘அதுதான் ‘சார் காதல்’’ என்கிறார் ஒரு தத்துவவாதி. ஆக்ஸ்போர்ட் டிக்ஷனரி, ‘ஒன்றின் மேல் ஆழ்ந்த அன்பு..’ என்று மனதையும், ஜடத்தையும் சேர்த்துப் பேசுகிறது.

வாழ்வு காதலால் நிரம்பியிருக்கிறது. அதன் முடிவடையாத தொடர்ச்சிக்குக் காமம் தேவைப்படுகிறது. ஆனால் காதல்? காதலுக்கும், காமத்திற்கும் நிறைய வித்தியாசம் இருப்பதாக விஞ்ஞானிகள் சமீபத்தில் நிரூபித்திருக்கிறார்கள்.

காதல் என்கிற உணர்வு மனதிலும், உடலிலும் உருவாக்குகிற தொடர் நிகழ்வுகளுக்கு அறிவியல் ரீதியான விளக்கங்கள் வெளிவந்துவிட்டன. சற்று கவனியுங்கள்.

காதலின் முதல் ஆரம்பப்புள்ளி லஸ்ட். அடுத்த பால் மேல் ஏற்படுகிற காமத்துப்பால். கவர்ச்சி. ‘அட.. இவன் பாக்க நல்லா இருக்கானே?’ என்கிற வியப்பில் தொடங்குவது. ‘கண்ணு பேசுது பாரு..’ என்று சொல்லும்போது, உங்கள் கவனத்தில் தொடங்கி விடுகிறது அந்தப் பெண் மேலான கவர்ச்சி. இதைத் தொடங்கி வைப்பது எது தெரியுமா? டெஸ்ட்டோஸ்டீரான் மற்றும் ஈஸ்ட்ரோஜன் என்கிற ஹார்மோன்கள். இவை பிறந்ததிலிருந்தே நம் உடலில் இருந்தாலும் பருவத்தில் பக்கத்தில் அந்த ஸ்பெஷலான கண்ணை வைத்திருக்கிற பெண்ணைச் சந்திக்கும் போதுதான் விழித்துக் கொள்கின்றன. அடுத்த பாலை நோக்கி ஒரு push தள்ளுமுள்ளுவை இந்த ஹார்மோன்கள்தான் செய்கின்றன.

கண்ணு பேசுது பாத்தியா?.. கத்தி மாதிரி சுழலுது இல்ல? என்றெல்லாம் பேசிவிட்டு கடந்தாகி விட்டது. அந்தப் பெண் மெல்ல மறைந்து கொண்டிருக்கிறாள். நீங்களும் எதிர் திசையில் நடந்து கொண்டிருக்கிறீர்கள். ஆனால் மனம்தான் உங்களுடன் வர மறுக்கிறது. இன்னொரு முறை அந்தப் பெண்ணைப் பார்த்தால் மனதுக்கு இதமாக இருக்கும் போலத் தோன்றுகிறது. நண்பனிடம் ‘ஒரு நிமிஷம் இரு’ என்று பைக்கில் திரும்ப வந்த வழியே போய் மறுபடியும் அந்த பெண்ணப் பார்க்கிற மாதிரி ஒரு ‘யு டர்ன்’ அடித்து வருகிறீர்கள். மனம் சற்று அமைதியடைந்தது போல இருக்கிறது. கூடவே அந்தப் பெண் ஒரு குட்டி செகண்ட் பார்த்தது வேறு இன்பமாக இருக்கிறது. விஞ்ஞானிகள் இந்த நிலையை ‘அட்ராக்ஷன்’ என்று வருணிக்கிறார்கள். கூடவே love structure phase என்றும் சொல்கிறார்கள். காதல் அந்த இடத்தில் தடுக்கி நிற்கிறது. சிலருக்கு அங்கேயே நின்று விடுகிறது. சிலருக்கு நொண்டி நொண்டி நடக்க ஆரம்பித்து விடுகிறது. ஏன் ஸ்ட்ரக் _ தடை என்று சொல்கிறார்கள். அந்தப் பெண்ணைப் பார்த்ததிலிருந்து சரியாகச் சாப்பிட முடியவில்லை. பசியில் தடை. சரியாகத் தூங்க முடியவில்லை. தூக்கத்தில் தடை. படிப்பில் கவனம் செல்லவில்லை. கவனத்தில் தடை. இந்தத் தடைகளோடு தவிக்கும் நிலையை Falling in love என்று வருணிக்கிறார்கள்.

பசி போச்சு. தூக்கம் போச்சு. படிப்பில் கவனம் போச்சு. எங்கேயோ ‘பேஸ்த்’ அடித்த மாதிரி பார்க்க வேண்டியிருக்கிறது. உள்ளங்கை வேர்த்துப் போகிறது. மூச்சு விட்டு விட்டு வருகிறது. ஒழுங்காக யோசிக்கக் கூட முடியவில்லை. வயிற்றில் பூச்சி பறக்கிறது. அதுவும் பெயர் தெரியாத பூச்சி. நெஞ்சிலோ பலப் பல பட்டாம்பூச்சிகள். இதெல்லாம் எப்படி வருகிறது? ஏன் நடக்கிறது? விஞ்ஞானிகள் இதற்குப் பதில் சொல்கிறார்கள். மூளையில் இருக்கிற டோப்பமைன், நார்எபிநெப்ரின் மற்றும் செரடோனின் என்கிற மூன்றும் சேர்ந்துதான் இந்த Falling in love நிலையில் எல்லா கிறுக்குத் தனங்களையும் செய்கின்றன என்கிறார்கள். இவற்றுக்கு ‘லவ் கெமிக்கல்ஸ்’ என்று பெயர் வைத்துவிட்டார்கள். இதிலொரு ஆச்சரியம், இந்த வேதியியல் பொருட்கள் சாக்லெட்டிலும், ஸ்ட்ராபெரியிலும் இருக்கின்றன. சாக்லெட்டை காதலர்கள் உதட்டுக்கு உதடு மாற்றுவதற்குப் பின்ணணியில் இந்தக் காரணம்தான் இருக்கிறது என்கிறார்கள். மேற்சொன்ன லவ் கெமிக்கல்களை கட்டுப்படுத்துகிற PEA என்கிற விஷயம்தான் ‘லஸ்ட்’ நிலையிலிருந்து ‘லவ்’ நிலைக்கு மாற்றுகிறது. எந்தப் பெண்ணையாவது திரும்பத் திரும்பப் பார்க்கத் துடிக்கிறீர்கள் என்றால் ஏதோ பேய் பிடித்து ஆட்டுகிறது என்று நினைக்காதீர்கள். மூளையில் PEA பிடித்து ஆட்டுகிறது.

மேலே சொன்ன இரண்டு நிலைகளையும் தாண்டிய பிறகுதான் வருகிறது ‘அட்டாச்மெண்ட்’ என்கிற மூன்றாவது நிலை _ சேர்ந்தே இருப்பது. காபி கடைகளில், பாங்குகளில், பார்க்குகளில், பீச்சுகளில் என எல்லா இடங்களிலும் பத்து டின் பெவிகாலை ஊற்றி பச்சக் என்று ஒட்டிவிட்ட மாதிரி பலர் கிடப்பதை நீங்கள் பார்த்திருக்க முடியும். அவர்கள் இந்த அட்டாச்மெண்ட் நிலைக்கு வந்து விட்டவர்கள். அவர்களை இப்படி இருக்க வைப்பது இரண்டு ஹார்மோன்கள். ஒன்று ஆக்ஸிடோசின் என்பது, மற்றொன்று வாஸோப்ரஸின்.

ஆக்ஸிடோஸின் காதலர்களுக்கு இடையிலான இணைப்பை உறுதி செய்கிறது. பலப்படுத்துகிறது. வாழ்நாள் முழுக்க ஒரு பந்தம் தொடர வைக்கிறது இல்லையா? அதை வாஸோப்ரஸின் செய்கிறது. இந்த இரண்டுக்கும் இடையில் பக்க வாத்தியங்களை எழுப்பி மங்கல இசை உறவில் உருவாவதில் என்டார்பின்களும் பங்கு பெறுகின்றன.

மற்றொரு காதலர் தினம் வந்திருக்கிறது. சந்தோஷமாக உங்களை வைத்திருக்கும் ஹார்மோன்களோடு அதைக் கொண்டாடுங்கள்.

காதலில் சில விடை தெரியாத கேள்விகள்

1. காதலிக்கும் பெண்ணின் முன்னால் ஏன் சில பையன்கள் எட்டு, பத்து எல்லாம் சைக்கிளில்_ பைக்கில் போட்டுக் காட்டுகிறார்கள் என்று தெரியவில்லை?

2. கெட்ட பையன்களையே ஏன் நிறைய பெண்களுக்குப் பிடிக்கிறது என்று தெரியவில்லை?

3. காதலிக்கிற இரண்டு பேரில், பையன் மட்டும் தேர்வில் தோற்கிறான். பெண் மட்டும் பர்ஸ்ட் க்ளாஸில் பாஸாகிறாள். இது எப்படி என்று தெரியவில்லை?

4. சில ஆண்களும், பெண்களும் ஒரே நேரத்தில் நான்கு ஐந்து பேரைக் காதலிக்கிறார்கள். இது எப்படி என்று தெரியவில்லை?

5. சிலருக்கு தங்கள் ஜாதியிலேயே காதல் வருகிறது. இது எப்படி என்று தெரியவில்லை?

6. பல பெண்கள் செட்டில் ஆகி, தங்கள் சொல்பேச்சு கேட்கிற பையன்களையே காதலிக்கிறார்கள். காதலில் pre plan பற்றி விளக்கங்கள் தரப்படவில்லை.

7. சிலர் பின்னிப் பிணைந்து காதலித்து விட்டு, சத்தமில்லாமல் வேறு வேறு ஆளைத் திருமணம் செய்துகொள்கிறார்கள். அப்போது ஹார்மோன்கள் நிலை பற்றித் தெரியவில்லை.

Kumudam

ஏற்கனவே நெடுக்கு, மூக்கி, கிருபன்ஸ், காவடி தொல்லை தாங்க முடியாமல் நொந்து போயிருக்கும் இந்த நேரத்தில் இது தேவைதானா?

காதலிக்கும் போது என்ன நடக்கிறது என்று ரோயல் பமிலியின் உறுப்பினர்கள் இவ்வாறுதான் கூறுவார்கள், ஒரு கற்பனை:

1. நெடுக்கு: கட்டுப்படுத்தப்படாத காமத்தினால் உருவாகும் காதல் உடல் இச்சைகளைப் போக்கவும் வீண் பிரச்சனைகளிற்கும் வழிகோலும்! :lol::rolleyes::lol:

2. மூக்கி: தங்களைக் கட்டுப்படுத்த தெரியாதவர்கள் ஏனாம் காதலிக்கிறார்கள். :D

3. கிருபன்ஸ்: ஹிஹிஹி இதையெல்லாம் போய் விவாதிப்பாங்களா?

4. காவடி: இதன் மூலம் மனச்சுத்தமும் பின் உடல்ச்சுத்தமும் ஏற்படுகின்றது.

5. வன்னிமைந்தன்: ஒரு ஆண் பெண்ணைப் பார்க்கிறான். அந்தப் பெண் தலையைக் குனிகிறாள். இவன் அவளது கையைத் தழுவுகிறான். அவள் வெட்கத்துடன் சிரிக்கிறாள். இவன் அவளைக் கட்டி அணைக்கிறான். அவள் நீண்ட பெருமூச்சு விடுகிறாள். இருவரும் ஊடல் அடைகின்றனர். பின் மனதைக் கிள்ளுகின்ற தவிப்புடன் இருவரும் பிரிந்து செல்கின்றனர். :lol::lol::lol: :P :lol:

6. தூயவன்: ஒரு பெண்ணைப் புரிந்து கொள்ள முடியாத ஆண், ஒரு ஆணைப் புரிந்து கொள்ள முடியாத பெண் இவர்கள் காதலின் போது பெறும் உடல், உள அனுபவங்கள் குறைகுடம் போன்றது, சலனம் மிக்கது. இவர்கள் காதலித்து வாழ்வதை விட சாவதே எமது சமூகத்திற்கு சிறந்தது.

7. ஆதி: சின்னா நாம விடுவமே சேட்டை! சொல்லி வேலையில்லையடாப்பா! அவளும் நானும் எப்படி எப்படியெல்லாம் அனுபவித்தம் தெரியுமா? காதல் ஒரு சுகமான அனுபவமடாப்பா!!

8. கு.சா: இப்ப இந்தப் பெடி, பெட்டைகள் உந்தக் கோதாரியை பற்றி படிக்கத்தானே பள்ளிக்கூடம் என்று போய் மினக்கட்டுக் கொண்டு இருக்கிதுகள். B)

9. சின்னப்பு: யோவ் கு.சா நீரும் முந்தி உதுக்கு தானே பள்ளிக்கூடம் போறனீர்! மறந்திட்டீரோ? :lol: :angry: :angry: :angry: :lol:

10.ரசிகை: இஞ்ச பப்லிக்கில நின்று வெட்கமில்லாம என்ன கதைக்கிதுகள் என்று பாருங்கோ!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா நான் தப்பிச்சன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காதலிக்கும் போது என்ன நடக்கிறது?

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது...

எது நடக்கின்றதோ அதுவும் நன்றாகவே நடக்கிறது..

எது நடக்கப்போகுதோ அதுகும்

காதலில் நன்றாகவே நடக்கும்...

மாப்பு... வைச்சிட்டான்யா.. ஆப்பு...

Edited by snegi

திரு. மாபிள்ளை அவர்களே...

உங்கள் கற்பனைகள் வர வர அதிகமாக போகுது..இது நல்லதுக்கல்ல. :angry:

சரி..இந்த காதல் கத்தரிக்காயை பற்றி கருத்து கூறுவதெண்டால்...என்னத்த சொல்ல? :lol: ..வீணா போறதென்டு முடிவெடுத்தால், காதலிக்க தொடங்க வேண்டியது தான்.. :lol: உதாரணத்துகு, யாழ் களா விஞ்சானி??, நெடுக்கரை பாருங்கள். காதல் தோல்வியால், எப்படி மனம் பேதலித்து இருகிறார் என்று. இது ஒன்று போதாதா காதலிக்கும் போது என்ன நடக்குது என்டு சொல்ல..'காதலிக்கும் போது மன நோய் வரும்".! :D:rolleyes:

மாப்பு, வாவ்.... கலக்கிறீங்க.....!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

9. சின்னப்பு: யோவ் கு.சா நீரும் முந்தி உதுக்கு தானே பள்ளிக்கூடம் போறனீர்! மறந்திட்டீரோ?

எந்த பள்ளிக்கூடம் போனவயள்

காதலிக்கும் போது....

கழுத்துக்கும் தொண்டைக்கும்

இடையில உருவமில்லாத

ஒரு உருண்டை தோன்றும்!

நான் சொல்லவில்லை

வைரமுத்து சொன்னார்!

நான் சொல்லுறன்...

தலையில இருக்கிற மூளை

வானுக்கும் மண்ணுக்கும்

இடையில கிடந்து தத்தளிக்கும்

நெருப்புப் புகை போல:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

திரு. மாபிள்ளை அவர்களே...

உங்கள் கற்பனைகள் வர வர அதிகமாக போகுது..இது நல்லதுக்கல்ல. :angry:

சரி..இந்த காதல் கத்தரிக்காயை பற்றி கருத்து கூறுவதெண்டால்...என்னத்த சொல்ல? :rolleyes: ..வீணா போறதென்டு முடிவெடுத்தால், காதலிக்க தொடங்க வேண்டியது தான்.. <_< உதாரணத்துகு, யாழ் களா விஞ்சானி??, நெடுக்கரை பாருங்கள். காதல் தோல்வியால், எப்படி மனம் பேதலித்து இருகிறார் என்று. இது ஒன்று போதாதா காதலிக்கும் போது என்ன நடக்குது என்டு சொல்ல..'காதலிக்கும் போது மன நோய் வரும்".! :lol::rolleyes:

காதல் என்ன கால்பந்தாட்டமா வெற்றி பெறவும் தோல்வியடையவும். மனசு என்ன கால்பந்தா ஆளாளுக்கு தட்டி விளையாட. காதலிச்சா அது ஒரு காதல் தான். உயிர் எப்படி ஒன்று போலவோ காதலும் அப்படித்தான். காதல் ஒன்றுதான். இடையில விட்டிட்டு இன்னொண்டோட ஓடுறது வியாதி. அது நமக்கு வராதுங்கோ..! :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஹி.. ஹி..ஹி...மாப்பிளையின் யாழ்கள வாசிப்பும் கற்பனையும் அபாரமாகத்தான் உள்ளன..

காதல் என்பது கடவுள் போன்றது என்று ஒரு முறை சொல்லியிருந்தேன்.

அதற்கு காரணம் காதல் என்பதும் எது என்றும் உண்மையிலேயே அப்படி ஒன்று இருக்கிறதா இல்லையா என்றும் தெரியாது.

கடவுளைப் போல காதலை வைத்தும் பலரை ஏமாற்ற முடியும்

காதலிலும் பல மூடநம்பிக்கைகள் உண்டு.

காதலுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்பது அதில் ஒன்று

காதல் என்பது ஒரு முறை மட்டும்தான் வரும் என்பது இன்னும் ஒன்று!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காதலிக்கும் போதே வாழ்ந்து கொண்டே சாகவும் முடியும் செத்துக்கொண்டே வாழவும் முடியும் இப்படி யாரோ சொல்லியிருக்கினம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுவரை யாராலும் காதலிக்கப் படாதவர்கள்.. யாரையுமே காதலிக்காதவர்கள் காதல் ஒருமுறைதான் வருமெனச் சொல்பவர்கள்.

காதலில் புனிதம்.. கணிதம் எனச் சொல்வதற்கு எதுவும் இல்லை. ஆனால் அது அனுபவிக்கப்பட வேண்டிய உணர்வு

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை யாராலும் காதலிக்கப் படாதவர்கள்.. யாரையுமே காதலிக்காதவர்கள் காதல் ஒருமுறைதான் வருமெனச் சொல்பவர்கள்.

காதலில் புனிதம்.. கணிதம் எனச் சொல்வதற்கு எதுவும் இல்லை. ஆனால் அது அனுபவிக்கப்பட வேண்டிய உணர்வு.

காதலின் பெயரால் பலரைப் பார்ப்பவனு/ளுக்கு காதல் காமக் களியாட்டம்.

காதலின் பெயரால் சிலரைப் பார்பவனு/ளுக்கு காதல் திண்டாட்டம்.

ஒருவரை மட்டும் பார்ப்பவனு/ளுக்கு காதல் வாழ்வில் கொண்டாட்டம். அவனா/னாள் மட்டுமே அதன் புனிதத்தை உணரவும் முடியும்.

ஒரு வீட்டுக்குள்ளேயே ஆளுக்காள் புனிதம் என்பது மாறுபடுகிறது. சிலது நாள் கணக்கில் குளிக்காவிட்டாலும் தான் சுத்தமாக இருப்பதாக எண்ணிக்கொள்ளும் வாழ்ந்து கொள்ளும்..

சிலர் ஒரு தடவை குளித்தால் போதும் அதுவே சுத்தம் என்று இருந்துவிடுவர்.

இன்னும் ஒரு சிலர் வெளியில் போய் வந்து குளித்து சுத்தம் செய்தால் மட்டும் சுத்தம் என்று எண்ணிக் கொள்வர்.

இப்படி சுத்தம் என்பதே மாறுபடும் போது காதல் என்ற நுண்ணுணர்வு என்பது ஆளாளுக்கு காமக்களியாட்டம் முதல் பல வாறுக்கு மாறுபடும். சிலர் காதல் என்ற உணர்வை வைத்து மனிதர்களை தேர்விடுகின்றனர். அவர்களுக்கு காதலை விட தங்கள் வாழ்க்கையின் மீது பயம் அல்லது அதீத சுயநலம்.

காதல் இறைவனாவதும் இல்லாதாவதும் அவரவர் மூளையின் திறனைப் பொறுத்தது மனிதன் அறிந்தது அணுவிலும் சிறியது. அறியாதது பிரபஞ்சம் அளவு. பிரபஞ்சம் அளவு உள்ளதை அறியும் வரை கடவுளைப் பற்றி பேசுவது அறியாமை.

காதல் என்பது உணர முடியாததும் அல்ல. அதை அதை அதற்குரிய பக்குவத்துடன் உணரும் போது மட்டுமே அதன் உண்மையான தன்மை வெளிப்படும். மொத்தத்தில் காதல் ஒரு அன்புமிக்க உறுதியான மென்மையான உணர்வு. பலர் காதல் என்ற உச்சரிப்பின் கீழ் செய்வது காதலே அல்ல. ஆட் தேர்வு..! அது காதலே அல்ல. அவர்களே ஆட்களையும் மாற்றுகின்றனர். அவர்களைப் பொறுத்தவரை காதல் ஒரு கால்பந்தாட்டம். பந்தயம் முடிந்ததும் மைதானம் மாறுவது போல காதல் என்று அவர்கள் உச்சரிப்பதும் இடம் மாறிக் கொள்ளும். அது காதலே அல்ல. அதற்கு மூளையில் நிறையக் கள்ளப் புத்தி பகுதி வேக் பண்ண வேணும். ஏமாளிகள் காதலிப்பது காதலின் பெயரால் ஏமாற்றப்படுதலே நடக்கும். :rolleyes::rolleyes:

Edited by nedukkalapoovan

காதலின் பெயரால் பலரைப் பார்ப்பவனு/ளுக்கு காதல் காமக் களியாட்டம்.

காதலின் பெயரால் சிலரைப் பார்பவனு/ளுக்கு காதல் திண்டாட்டம்.

ஒருவரை மட்டும் பார்ப்பவனு/ளுக்கு காதல் வாழ்வில் கொண்டாட்டம். அவனா/னாள் மட்டுமே அதன் புனிதத்தை உணரவும் முடியும்.

காதலின் பெயரால் ஒருவரையும், அதேநேரம் காமத்தின் பெயரால் பலரையும் பார்ப்பவருக்கு வாழ்வு எப்படி கொண்டாட்டமா? அல்லது திண்டாட்டமா? :rolleyes::rolleyes:<_<

  • கருத்துக்கள உறவுகள்

காதலின் பெயரால் ஒருவரையும், அதேநேரம் காமத்தின் பெயரால் பலரையும் பார்ப்பவருக்கு வாழ்வு எப்படி கொண்டாட்டமா? அல்லது திண்டாட்டமா? :rolleyes::rolleyes:<_<

இரண்டும் கெட்டான். :lol::lol:

காதல் என்ன கால்பந்தாட்டமா வெற்றி பெறவும் தோல்வியடையவும். மனசு என்ன கால்பந்தா ஆளாளுக்கு தட்டி விளையாட. காதலிச்சா அது ஒரு காதல் தான். உயிர் எப்படி ஒன்று போலவோ காதலும் அப்படித்தான். காதல் ஒன்றுதான். இடையில விட்டிட்டு இன்னொண்டோட ஓடுறது வியாதி. அது நமக்கு வராதுங்கோ..! :D:D

எப்ப்டி இப்படி நெடுக்ஸ்?. :icon_idea: .னீங்க பிறந்ததிலேயிருந்து இப்படியா, இல்லை வெளிநாடு போய் இப்படியா..? என்னயிருந்தாலும் உங்கள் வசனம் பலரின் மனதை தொட்டிருக்கும்.. :D

மாபிள்ளை..நெடுக்ஸின் காதல் கதையை(தோல்வியை) வைத்து நம்ம யாழ் சினி ஆர்ட்ஸ் சார்பில் ஒரு படம் இப்பவே எடுக்க தொடங்குவோமா? :P ..சேரனின் ஆட்டோகிராப் மாதிரி, யாழின் எதோ ஒரு கிராப்பை எடுத்து அதை ஒரு வெற்றி படமாக்குவோம்..ஒரே நேரத்தில் செல்வன் சீரியலையும் , நெடுக்ஸின் கதையை படமாகவும் எடுக்கலாம்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

உதெல்லாம் சரி. காதலில் எது வெற்றி எது தோல்வி.காதலித்து காதலித்தவரையே மணம் முடித்தால் அது வெற்றியா.காதலித்தவர்களில் ஒருவர் இடையில காதலை கை விட்டால் அது தோல்வியா.தோல்வி என்றால்

அது யாருக்கு.கை விட்டவருக்கா அல்லது கை விடப்பட்டவருக்கா :D

காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்எல்லோரும் வெற்றி பெற்ரவர்கள் அல்ல

ஒருவரை காதலித்துவிட்டு வேறொருவரை திருமணம் செய்து கொண்டவர்கள் எல்லோரும் தோல்வி அடைந்தவர்கள் என்பதும் அல்ல.காதலித்துக் கொண்டே இருப்பவர்களே வெற்றியாளர்கள்.

மாப்பி தம்பி..உங்க கற்பனை எல்லாம் சூப்பர். நன்றாக நம்ம யாழ் உறவுகளை கவனித்து எழுதி இருக்கீங்கள். வாழ்த்துக்கள்.

அதுசரி காதல் கத்தரிக்காய் என்பார்களே...கத்தரிக்காயாவது கறிக்கு உதவும்..இந்த காதல் என்னத்துக்கு உதவுது?? காதலுக்கு மேலே பலர்

பல கருத்து சொல்லி இருக்காங்க. இனி நான் சொல்ல என்னப்பா இருக்கு.

என்றாலும்..ரசிகை அக்கா சொன்னது சரி தான்! :huh: :angry:

Edited by ப்ரியசகி

சகி அப்பா காதல் எதுக்குமே உதவாது என்று சொல்றீங்கிளா? :-)

ஆமா ரசி அக்கா என்ன சொன்னவா?

10.ரசிகை: இஞ்ச பப்லிக்கில நின்று வெட்கமில்லாம என்ன கதைக்கிதுகள் என்று பாருங்கோ!

10.ரசிகை: இஞ்ச பப்லிக்கில நின்று வெட்கமில்லாம என்ன கதைக்கிதுகள் என்று பாருங்கோ!

ஏனுங்க சகி அக்கா,

உங்கட எழுத்துகளைப் பாக்கிறப்போ நீ றொம்ப றொம்ப இன்னசன்டா தோணுதே, இது நிஜமா? நடிப்பா?

சகி அப்பா காதல் எதுக்குமே உதவாது என்று சொல்றீங்கிளா? :-)
அட சும்மா சொன்னேன் சினேகிதி...காதலை பற்றி நான் என்ன புதுசா சொல்ல இருக்கு..அதுதான் எல்லாரும் சொல்லுறாங்களே.. B)

ஏனுங்க சகி அக்கா,

உங்கட எழுத்துகளைப் பாக்கிறப்போ நீ றொம்ப றொம்ப இன்னசன்டா தோணுதே, இது நிஜமா? நடிப்பா?

போக்கிரி படம் பார்த்தீங்களா? அசின் கூட ரொம்ப இன்னோசண்ட் . பஸ்ஸில தனக்கு அருகில் விஜய் இருக்கும் சீட்டில் வந்திருந்த பொண்ணுக்கிட்ட கூட மரியாதையா நடந்துக்கிட்டாங்க என்ன :rolleyes: (ஐயோ அதுக்காக நான் அசின் எண்டு சொல்ல வரலப்பா..அதுக்கு புதுசா பக்கம் ஓப்பின் பண்ணி கிழிச்சிடுவாங்க..ஆளை விடுங்க)

ஆனாலும் ஒரு விசயம்..யாழ் எல்லா உறவுகளும் ஒன்றாக கூடுற இடமே அன்றி..நாடக மேடையோ..சீரியலோ அல்ல நடிப்பதற்கு!!!!!!

ஆனாலும் ஒரு விசயம்..யாழ் எல்லா உறவுகளும் ஒன்றாக கூடுற இடமே அன்றி..நாடக மேடையோ..சீரியலோ அல்ல நடிப்பதற்கு!!!!!!

ஒத்துக்கிறன் நீங்க இன்னசன்டே இல்ல :rolleyes:

Edited by Innumoruvan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.