Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டோருக்கு தமிழ் புலம்பெயர் சமூகம் உதவ வேண்டுமென கோரிக்கை நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின் பிரதமர் வீ.ருத்ரகுமாரன்

Featured Replies

அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டோருக்கு தமிழ் புலம்பெயர் சமூகம் உதவ வேண்டுமென கோரிக்கை 

 


இயற்கை சீற்றத்தினால் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ் புலம்பெயர் சமூகம் உதவ வேண்டுமென நாடு கடந்த தமிழீழ இராச்சியம் கோரியுள்ளது. தென் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டுமென  நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின் பிரதமர் வீ.ருத்ரகுமாரன் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

மழை வெள்ளம் மற்றும் மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணங்களையும் உதவிகளையும் வழங்க உலக நாடுகள் முன்வர வேண்டுமென கோரியுள்ள அவர் மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

நீண்ட காலமாக அனர்த்தங்களினால் பாதிப்பு ஏற்பட்டு வருவதாகவும் போதிய முன் ஆயத்தங்கள் மற்றும் முன்எச்சரிக்கை நடவடி;ககைகள் அவசியம் என்பதே இதன் மூலம் உணர்த்தப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://globaltamilnews.net/archives/28497

  • கருத்துக்கள உறவுகள்

Image result for images of funny faces

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Quote

இயற்கை சீற்றத்தினால் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ் புலம்பெயர் சமூகம் உதவ வேண்டுமென நாடு கடந்த தமிழீழ இராச்சியம் கோரியுள்ளது. தென் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டுமென  நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின் பிரதமர் வீ.ருத்ரகுமாரன் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

வணக்கம் அண்ணோய்! என்ன கனகாலத்துக்கு பிறகு.....

  • கருத்துக்கள உறவுகள்

இதில் ஒரு சின்ன சிக்கல் இருக்கிறது ..........
என்னவெனில் 
இவ்வளவு ஆதி அடித்த போதும் சிங்கள மக்கள் ஆமிக்கு 
ஆதர்வாகத்தானே இருந்தார்கள் எனும் குறை எம்மில் எல்லோருக்கும் உண்டு.

அதே போல .....
இனி அவர்களும் எண்ண மாடடார்களா ?
இவளவு அனர்த்தம் வந்தும் ஒரு தமிழன் வந்தானா என்று ?

இன்னொரு மனிதனின் துன்பத்தில் உதவுவது தான் உண்மையான புண்ணியம்.
அவர்கள் வேண்டுமானால் தாம் புத்திசாலிகள் என்று எண்ணிவிட்டு போகலாம்.

பேருக்கு செய்யாமல் 
ஏதும் உதவி தேவை என்றால் ... நாம் செய்து கொடுப்பதில் தப்பு இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னவோ...இவர் விடுகின்ற அறிக்கைகளுக்கும், யாழ்ப்பாண மன்னனின் வாரிசு என்று சொல்லி ஒரு வட இந்தியக் குஞ்சு விடுகின்ற அறிக்கைகளுக்கும் எந்த வித்தியாசங்களும் இருப்பதாகத் தெரியவில்லை!

ஒருவருக்கொருவர் உதவுவது என்பது மனித இயல்பு!

அதை இன்னொருவர் சொல்லித்தான் செய்ய வேண்டும் என நினைப்பவர்கள்....உதவி செய்யாமல் இருப்பதே நன்றி..!

 

காலத்தால் செய்த உதவி, சிறிதெனினும்,

ஞாலத்தின் மாணப் பெரிது..!

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை  மக்கள் சுனாமியால் பாதிக்கப்பட்டபோது அவர்களுக்கு உதவிய தமிழ் போராளிகள், தமிழர் சிங்களர் என்று பேதம்பார்த்து உதவியதில்லை. பிறரை உதவுமாறு கேட்டதுமில்லை. இயன்றளவு தாங்களாகவே  உதவிசெய்தார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சாமாதான பேச்சு நடந்த.. 2009 மே க்கு முன்னர் நிகழ்ந்த ஒரு வெள்ள பாதிப்பின் போது விடுதலைப் புலிகள் நேரடியாகவே வெள்ள நிவாரணம் எடுத்துச் சென்று தென்னிலங்கை மக்களுக்கு வழங்கினர்.

ஏன் சிங்கள இராணுவக் கைதிகளை கூட அவரவர் பெற்றோர் உறவினர்கள் வந்து சந்தித்துச் செல்ல ஏற்பாடுகள் செய்திருந்தனர். அதுக்கும் மேல்.. போர் கைதிகளாக இருந்தவர்களை கடைசி நேரத்தில் கூட கொல்லாமல்.... விடுவித்துச் சென்றார்கள். 

ஆனால் சிங்களப் படை இவற்றிற்கு எல்லாம் எதிர்மாறாகவே நடந்து கொண்டது. சுனாமியின் போது கூட.. அமெரிக்கனை கூட வடக்கிற்குள் புலிகள் அனுமதிக்கவில்லை. 

மனிதாபிமானம் என்பது இயற்கையானதாக இருக்க வேண்டும். இனம்.. மதம்.. நாடு.. அரசியல் பார்த்து வருவதல்ல அது. எனவே.. இந்த அறிவிப்பை தமிழீழத்தின் மனிதாபிமானம் என்று எடுத்துக் கொள்ளலாம்.

திருக்குறள்.. கூடச் சொல்கிறது.. ஒருவர் செய்த தவறை அவரே உணர.. அவர் தான் சிந்தித்து தானே தன் தவறை உணர்ந்து நானிக் கூனும் நிலைக்கு அவருக்கு நன்மை செய்வது சிறப்புன்னு. இது மனிதாபிமானத்துக்கான நேரம் எனலாம்.

உள்ளூர மனதில் பல காயங்கள் சிங்கள படைகளாலும் அரசுகளாலும் சிங்களக் கடும்போக்காளர்களாலும் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும்.. எல்லா சிங்கள மக்களையும் குழந்தைகளையும் அந்த நோக்கில் காண முடியாது. காண்பது அபந்தம். அது சிங்களவன் முள்ளிவாய்க்காலில் இறந்தோர் எல்லோரையும் புலிகள் என்று கொள்வது போன்றது. 

  • கருத்துக்கள உறவுகள்

 நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின் நிவாரனம் என பொதிகளில் முத்திரை குத்தி இராச்சியத்தின் தூதுவரை அனுப்பி கொடுக்க முடியுமா ?சும்மா அறிக்கை விடுவதை தவிர்த்து பிரயோசனமான முயற்சியில் ஈடுபடுவது மக்களுக்கு நல்லம்.....

19 hours ago, குமாரசாமி said:

வணக்கம் அண்ணோய்! என்ன கனகாலத்துக்கு பிறகு.....

அறிக்கை விடக்கூடிய சந்தர்ப்பம் இப்ப தான் வந்திருக்கு.....

தெற்கில் வெள்ளத்துல பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் கடுமையான பாரபட்சம் காட்டப்படுகிறதாக மக்கள் கூறிவரும் நிலையில் உருத்திரகுமாரன் யாருக்கு வணங்காமுடியை அனுப்ப யோசிக்கிறார்?

வடக்கில் கடுமையான வறட்சியால் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதை கணக்கிலெடுக்காத சிங்கள அரசு, தெற்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது போலீஸ் குண்டர்களை வைத்து வடமாகாணத்தில் உள்ள தமிழ்க் கடைகளில் பொருட்களை சூறையாடி வரும் நிலையில் உருத்திரகுமாருக்கு சிங்களவனுக்கு சாமரம் வீசும் அரசியல் மூளைக்குள் குடைகிறது ஏன்?

சிங்களவனின் சுரண்டலுக்கு உருத்திரகுமார் துணைபோவது அடுத்த எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைக்குமென்ற ஆசையிலா என்பதை அவர் தெளிவுபடுத்தினால் நல்லது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.