Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தனிநாடு கேட்டீர்கள் மாகாண சபையையே நடத்த முடியவில்லை ; மனோ கணேசனிடம் கிண்டலாக கேட்டாராம் தெற்கு ஊடகவியலாளர்

Featured Replies

தனிநாடு கேட்டீர்கள் மாகாண சபையையே நடத்த முடியவில்லை ; மனோ கணேசனிடம் கிண்டலாக கேட்டாராம் தெற்கு ஊடகவியலாளர்

 
 
தனிநாடு கேட்டீர்கள் மாகாண சபையையே நடத்த முடியவில்லை ; மனோ கணேசனிடம் கிண்டலாக கேட்டாராம் தெற்கு ஊடகவியலாளர்
 
தனி­நாடு கேட்­டீர்­கள். மாகாண சபை­யையே நிர்­வ­கிக்க முடி­ய­வில்லை. இவ்­வாறு தென்­னி­லங்கை ஊட­க­வி­ய­லா­ளர், தன்­னி­டம் கேட்­டார் என அமைச்­சர் மனோ கணே­சன் தெரி­வித்­துள்­ளார்.
 
அமைச்­சர் மனோ கணே­சன் தனது முக­நூ­லில் நேற்­றுக் காலை வெளி­யிட்­டுள்ள பதிவிலேயே மேற்படி விட யத்தைக் கூறியுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
 
லங்காதீப செய்தியாளர் என்னை இன்று (நேற்று) அதிகாலையில் அழைத்து, தனிநாடு கேட்டீர்கள், ஒரு மாகாண சபையையே பரிபாலனம் செய்ய முடியவில்லையோ ? என்று கிண்டலாகக் கேட்டார். அவரது கேள்வி, வடமாகாண சபை தொடர்பில், தெற்கில் இன்று உருவாகி வரும் கருத்தோட்டத்தை அறிவிக்கிறது.
 
இலங்கையில் மிகவும் பிரபல மாகாண சபை, வட மாகாண சபையே. அடுத்தது, கிழக்கு மாகாண சபையே. இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. அதிகாரப் பகிர்வு கோரியது நாங்கள். அதைத் தரும்போது ஏனைய ஏழு மாகாணங்களுக்குமாக தந்து, நிலமையைப் பூசி முடித்தார்கள், ஜே.ஆரும், ராஜீவும். இதுதான் உண்மை. ஏனைய மாகாண சபைகளில், குழப்பம், ஊழல், அதிகார துஷ்பிரயோகம் இல்லையா? என்று கேள்வி கேட்டு வடக்கில், கிழக்கில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு எவரும் சப்பைகட்டு கட்ட முடியாது.
 
இது தொடர்பாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் விசாரணைக் குழு நியமித்து நடவடிக்கை எடுத்துள்ளது, மிகவும் நல்ல முற்போக்கான நடவடிக்கையே! அந்த அறிக்கையின் பிரகாரம் காரியங்களை முன்னெடுக்க அவருக்கு அவர் வணங்கும் தெய்வம் அருள் பாலிக்கட்டும்.
 
இது பற்றி நான் பேசுவது, கொழும்பு அரசு அமைச்சர் என்ற உரிமையில் மாத்திரம் அல்ல. எனக்கு இதில் சிறப்புக் காரணங்களும் உள்ளன.
 
மகிந்த ஆட்சியில், அவர் வடக்கு தேர்தலை நடத்தாமல், காலம் தள்ளிக்கொண்டே போனபோது, நடத்த வேண்டும் என்று இங்கிருந்து அழுத்தமாகப் போராடியவர்களில் நான் ஒரு முன்னணியாளன். இன்றைய பல வட மாகாணசபை உறுப்பினர்களுக்கு இது மறந்து விட்டது!.
 
விக்னேஸ்வரனை முதல்வர் வேட்பாளராகப் போட்டியிடச் சம்மதிக்க வைத்தவர்களில் நானும் ஒரு முன்னணியாளன். இது விக்னேஸ்ரனை தவிர, அந்த நேரம் என்னுடன் சேர்ந்து இதில் செயற்பட்ட  தமிழ் ஊடகவியலாளர்கள் உட்பட பலருக்கு மறந்து விட்டது!.
விக்னேஸ்வரன், மாவை.சேனாதிரசா, சி.சிறிதரன் ஆகிய நண்பர்களின் அழைப்பை ஏற்று நான் என் கட்சிப் பணியாளர்களையும் அழைத்துக் கொண்டு, வடக்குச் சென்று, ஒரு வாரத்துக்கு மேல் முகாமிட்டு, கிளிநொச்சி, யாழ், வன்னி மாவட்டங்களில், கூட்டமைப்பின் வெற்றிக்காகக் கடும் பரப்புரையில் ஈடுபட்டேன். இதுவும் அங்குள்ள பலருக்கு மறந்து விட்டது!
 
குறிப்பாக, இன்று சர்ச்சையில் இருக்கின்ற கல்வி அமைச்சர் த.குருகுலராசா மற்றும் அவருடன் சேர்ந்து போட்டியிட்ட இன்னும் இரண்டு உறுப்பினர்களின் (மொத்தம் மூன்று) வெற்றிகளை கிளிநொச்சியில் உறுதிப்படுத்துவதில் எங்கள் பரப்புரை பெரும் பங்கை வகித்தது.
 
அந்த நேரம் என்னை இன்முகத்துடன் கையெடுத்து வணங்கி கூட்டங்களுக்கு அழைத்துப்போன குருகுலராசா, தேர்தலுக்குப் பிறகு இடைநாள்களில் கிளிநொச்சி மற்றும் வடக்குக்கு நான் சென்றபோது என்னை யார் என்றே தெரியாதவர் போல் நடந்துகொண்டார். வட மாகாணசபை பாடசாலைகள் விவகாரங்கள் தொடர்பில், நான் அவருக்கு அனுப்பி வைத்த ஆசிரியர்கள், பொதுமக்கள் சிலரின் கோரிக்கைக் கடிதங்களையும் புறக்கணித்தார்.
 
எனினும் நான் அங்கே போனது அவரை அறிந்து அல்ல, மாறாக என் நண்பர் சி.சிறிதரனின் அழைப்பை ஏற்றே என்பதையும் இங்கே சொல்லியாக வேண்டும். எனக்கு இதுபற்றிப் பேச தார்மீக உரிமை இருக்கின்றது என்பதை வடமாகாணசபை அறிந்து கொள்ள வேண்டும் – என்று குறிப்பிட்டுள்ளார்.

http://uthayandaily.com/story/5720.html

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளைக்காரன் கொடுத்த நாட்டை ஒழுங்காக நடத்த தெரியல்ல அதுக்குள்ள தனி நாடு பற்றி கேள்வி வேறு....

கேட்பார்கள்தானே.

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Iraivan said:

கேட்பார்கள்தானே.

அதேதான் கேட்பார்கள் அதை புலிகள் பெற்றிருந்தால்ல் நாடு எப்படி இருந்திருக்கும் என்றால் நாம் சொல்ல தேவையில்லை அவர்களுக்கே விளங்கியிருக்கும் தற்போது நிருபர் என்ன  ஒரு தமிழனே கேட்பான்  மனோ சார் என்ன நடத்துறியள் என்று 

  • கருத்துக்கள உறவுகள்

'இளகிய இரும்பைக்கண்டால் கொல்லன் தூக்கித் தூக்கி அடிப்பானாம்.' இப்போ தமிழன் இளகிய இரும்பாகிவிட்டான். இரும்பு குளிரத்தான் செய்யும் மறுபடி இறுகத்தான் செய்யும், அப்போது தெரியும். :unsure:

பிரபாகரனும் படையும் வருமென்று யாரும் கனவுகூடக் கண்டிருக்க மாட்டார்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் உலகமே வியக்கத்தக்க வன்னி நிலப்பரப்பை நடத்தி காட்டினார்களே அப்போது ஏன் கேட்க தோன்றவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்


"ஏன் உலகமே வியக்கத்தக்க வன்னி நிலப்பரப்பை நடத்தி காட்டினார்களே அப்போது ஏன் கேட்க தோன்றவில்லை? "

எமது தலைவர் செய்து காட்டியதை நாம் இன்றைக்கும் நடைமுறைப்படுத்தி கைக்கொண்டு வந்திருந்தால் இது உண்மை.
மற்றும்படி தழிழனுக்கு பொது நிர்வாக திறமை-அரசியல் சாணக்கியம்-தொலை நோக்கு-பொதுநல சேவை ரொம்ப கம்மி.
வரப்போகும் ஆபத்தை கண்டறியமுடியாது போனதற்கு தலைவரும் விதிவிலக்கல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ

தமிழீழத்தை  தருவாங்க  போல  இருக்கு....

தந்து பார்க்கிறது....

  • கருத்துக்கள உறவுகள்

அவர் கேட்டதில் என்ன பிழை இருக்குது?...ஒரு முன்னால் நீதியால் மாகாண  சபையை ஒழுங்காக நடத்த முடியவில்லைtw_dissapointed: என்பது எவ்வளவு கேவ்லம்...தலைவரது வழி வந்த பிள்ளையான் எவ்வளவு திறமையாக கிழக்கு மாகண சபையை நடத்தினார்

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தனி ஒருவன் said:

அதேதான் கேட்பார்கள் அதை புலிகள் பெற்றிருந்தால்ல் நாடு எப்படி இருந்திருக்கும் என்றால் நாம் சொல்ல தேவையில்லை அவர்களுக்கே விளங்கியிருக்கும் தற்போது நிருபர் என்ன  ஒரு தமிழனே கேட்பான்  மனோ சார் என்ன நடத்துறியள் என்று 

 

5 hours ago, ரதி said:

...ஒரு முன்னால் நீதியால் மாகாண  சபையை ஒழுங்காக நடத்த முடியவில்லைtw_dissapointed: என்பது எவ்வளவு கேவ்லம்...தலைவரது வழி வந்த பிள்ளையான் எவ்வளவு திறமையாக கிழக்கு மாகண சபையை நடத்தினார்

முதலமைச்சர் நினைத்திருந்தால் விசாரானையே வைக்காமல் தனது பதவியையும் அமைச்சர்களின் பதவிக்காலத்தையும் நீடித்திருக்கலாம்....நீதியரசர் என்றபடியால் தான் விசாரனை கொமிசன்யாவது வைத்தார்....

கே.கே.எஸ் சீமேந்து தொழிற்சாலையின் இயந்திரங்களையே இரும்பு விலைக்கு நாட்டின் ஜனாதிபதியின் சகோதரயா கொள்ளையடிக்கிறார் என்றால் ...சாதாரணா அமைச்சர்கள் எம்மாத்திரம்

  • கருத்துக்கள உறவுகள்

 

9 hours ago, ரதி said:

அவர் கேட்டதில் என்ன பிழை இருக்குது?...ஒரு முன்னால் நீதியால் மாகாண  சபையை ஒழுங்காக நடத்த முடியவில்லைtw_dissapointed: என்பது எவ்வளவு கேவ்லம்...தலைவரது வழி வந்த பிள்ளையான் எவ்வளவு திறமையாக கிழக்கு மாகண சபையை நடத்தினார்

பிள்ளையானுக்கு தற் துணிவு அதிகம் மொழி தெரியாவிட்டாலும் கிழக்கில் தமிழருக்கு பிடிக்கா விட்ட கட்சியானாலும்  நடந்த சேவைகள் நடத்தியவை தெரிந்தும் தெரியாமலும்  நல்லதே பிறகே விளங்கி கொண்டார்கள் மக்கள் இவரது ஆட்சி கிழக்கு முஸ்லிம் மக்களுக்கு பிடிக்க வில்லை காரணம் அவர்கள் அசைவுகள் ஒவ்வொன்றையும் கண் காணித்து  அதற்கேற்றால் போல் பதிலடி அமைந்தது  உதாரணம் சவுதி அரசாங்கத்தால் கட்டப்பட்ட வீடுகள் முஸ்லீம்களுக்காக கிஸ்புல்லாவால்  தமிழ் மக்கள் காணிக்குள் பின்னர் அந்த உறுதியை கொண்டு போய் அந்த வீட்டை பெற்று  மீண்டு அதை தமிழ் மக்களுக்கு வழங்க செய்தது கிழக்கில் நிலம் விற்க , தமிழர் நிலங்களை கையகப்படுத்த விடவில்லை 

 

3 hours ago, putthan said:

 

முதலமைச்சர் நினைத்திருந்தால் விசாரானையே வைக்காமல் தனது பதவியையும் அமைச்சர்களின் பதவிக்காலத்தையும் நீடித்திருக்கலாம்....நீதியரசர் என்றபடியால் தான் விசாரனை கொமிசன்யாவது வைத்தார்....

கே.கே.எஸ் சீமேந்து தொழிற்சாலையின் இயந்திரங்களையே இரும்பு விலைக்கு நாட்டின் ஜனாதிபதியின் சகோதரயா கொள்ளையடிக்கிறார் என்றால் ...சாதாரணா அமைச்சர்கள் எம்மாத்திரம்

சிங்களவர் கொள்ளை அடிக்கும் போது ஒன்றும் செய்ய வில்லை காரணம் அவர்களை கையில் ஆட்சி தமிழர் கொள்ளை அடிக்கும் போது தமிழருக்கான  சேவையை கொஞ்சமாவது தட்டிக்கேட்க வேண்டும் என்ற நப்பாசைதான் 

Edited by தனி ஒருவன்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனி ஒருவன் said:

 

சிங்களவர் கொள்ளை அடிக்கும் போது ஒன்றும் செய்ய வில்லை காரணம் அவர்களை கையில் ஆட்சி தமிழர் கொள்ளை அடிக்கும் போது தமிழருக்கான  சேவையை கொஞ்சமாவது தட்டிக்கேட்க வேண்டும் என்ற நப்பாசைதான் 

நல்ல விடயம் தட்டி கேட்க வேண்டும் ...பெரிய தணடனைகளை மாகாண அரசு கொடுக்காமல் ...மக்களிடம் விட்டு விட வேண்டும் அடுத்த தேர்தலில் மக்கள் பார்த்துகொள்ளட்டும்...மக்கள் அடுத்த முறையும் அவர்களை தெரிவு செய்தால் ....வரவேற்கவேண்டும்...

  • கருத்துக்கள உறவுகள்
On 6/10/2017 at 11:54 AM, putthan said:

நல்ல விடயம் தட்டி கேட்க வேண்டும் ...பெரிய தணடனைகளை மாகாண அரசு கொடுக்காமல் ...மக்களிடம் விட்டு விட வேண்டும் அடுத்த தேர்தலில் மக்கள் பார்த்துகொள்ளட்டும்...மக்கள் அடுத்த முறையும் அவர்களை தெரிவு செய்தால் ....வரவேற்கவேண்டும்...

நல்லவன் என வேஷம் போடு போது  மக்களால் எப்படி கண்டு பிடிக்க முடியும் காலம் பதில் சொல்லும் 

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, தனி ஒருவன் said:

நல்லவன் என வேஷம் போடு போது  மக்களால் எப்படி கண்டு பிடிக்க முடியும் காலம் பதில் சொல்லும் 

வற்றாப்பளை அம்மன் கோவிலுக்கு எறிகனைகள் வீசிய இராணுவம் இன்று துப்பரவு செய்யினம்...காலம்.... பதில் சொல்லட்டும்.....

  • கருத்துக்கள உறவுகள்
Just now, putthan said:

வற்றாப்பளை அம்மன் கோவிலுக்கு எறிகனைகள் வீசிய இராணுவம் இன்று துப்பரவு செய்யினம்...காலம்.... பதில் சொல்லட்டும்.....

ஒரு பக்க பாதைகள் திறந்து விட்டு இருக்கினும்  அங்கினைக்கு :unsure:

  • கருத்துக்கள உறவுகள்
Just now, தனி ஒருவன் said:

ஒரு பக்க பாதைகள் திறந்து விட்டு இருக்கினும்  அங்கினைக்கு :unsure:

ஒம்மோம்...தாயக மக்கள் முடிந்தளவு காணிகளுக்காக போராடுகிறார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, putthan said:

ஒம்மோம்...தாயக மக்கள் முடிந்தளவு காணிகளுக்காக போராடுகிறார்கள்

நம்பி பாராழுமன்றத்துக்கு அனுப்பியவர்கள் நடுதெருவுக்கு விட்ட பின்  அவர்களால் ஒரு சொந்த முயற்ச்சி தானே வெல்லலாம் வெல்லாமல் போகலாம் ஆனால் மக்கள் ஒன்றிணைந்தால் வெல்லலாம் ஆனால் அதற்கு யாரும் கூடிய கவனம் செலுத்த வில்லையே  வலி கொண்டவனுக்கே அதன் வேதனை தெரியும்  :104_point_left:

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தனி ஒருவன் said:

நம்பி பாராழுமன்றத்துக்கு அனுப்பியவர்கள் நடுதெருவுக்கு விட்ட பின்  அவர்களால் ஒரு சொந்த முயற்ச்சி தானே வெல்லலாம் வெல்லாமல் போகலாம் ஆனால் மக்கள் ஒன்றிணைந்தால் வெல்லலாம் ஆனால் அதற்கு யாரும் கூடிய கவனம் செலுத்த வில்லையே  வலி கொண்டவனுக்கே அதன் வேதனை தெரியும்  :104_point_left:

பாராளுமன்ற குழுக்களால் உரிமைகள் விடயத்தில் ஒரு ..யிர் புடுங்க முடியாது என்பது ஐம்பது வருடத்திற்கு முன்பே அறிந்த விடயம்...ஒரு சில அபிவிருத்தி மட்டும் செய்ய முடியும்....

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, putthan said:

பாராளுமன்ற குழுக்களால் உரிமைகள் விடயத்தில் ஒரு ..யிர் புடுங்க முடியாது என்பது ஐம்பது வருடத்திற்கு முன்பே அறிந்த விடயம்...ஒரு சில அபிவிருத்தி மட்டும் செய்ய முடியும்....

 இப்ப உள்ளவங்கள் அபிவிருத்தியிலே சொரண்டுராங்களே புத்து   

பாராழுமன்ற குழுக்களால் ஏன் முடியாமல் போனது ?? முஸ்லீம்கள் எப்படியெல்லாம் பெற்ருக்கொள்கிறார்கள் என்று பாருங்கள் ஆனால்  தமிழர்களுக்கான உரிமைகளை எப்படித்தான் பெற்றுக்கொள்வது ?? 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தனி ஒருவன் said:

 இப்ப உள்ளவங்கள் அபிவிருத்தியிலே சொரண்டுராங்களே புத்து   

பாராழுமன்ற குழுக்களால் ஏன் முடியாமல் போனது ?? முஸ்லீம்கள் எப்படியெல்லாம் பெற்ருக்கொள்கிறார்கள் என்று பாருங்கள் ஆனால்  தமிழர்களுக்கான உரிமைகளை எப்படித்தான் பெற்றுக்கொள்வது ?? 

முஸ்லீம்கள் உரிமை என்று எதுவும் பெறவில்லை...அமைச்சர்களாக இருந்து அபிவிருத்தி செய்கிறார்கள் அத்துடன் மத்தியகிழக்கிலிருந்து பணம் தாராளமாக அமைச்சர்களுக்கு கிடைக்கின்றது அதன் மூலம் செய்கின்றார்கள்...

இங்கு நாங்கள் கருத்து எழுதிக்கொண்டிருக்கும் பொழுதே கேப்பபுலவில் மீண்டும் கதவை மூடிவிட்டுதாம் இராணுவம்....இது தான் சிறிலங்காவின் அரசியல்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.