Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கடையடைப்புக்கு அழைப்பு

Featured Replies

கடையடைப்புக்கு அழைப்பு
 

எஸ்.நிதர்ஷன் 

மாகாணசபை உறுப்பினர்கள் சிலரினால்,  வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டிருக்கும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கண்டித்து, வடக்கு மாகாணத்தில்  நாளை (16) கடையடைப்பை மேற்கொள்ளுமாறு, தமிழ் மக்கள் பேரவை கேட்டுள்ளது. 

"இந்த குறுகிய முன்னறிவிப்பை பொறுத்துக்கொண்டு, இனத்தின் நலன்கருதி எமது உணர்வுகளை வெளிப்படுத்தும் நோக்குடன், அனைவரும் இந்தக் கடையடைப்புக்கு ஆதரவு தரவேண்டுமென நாம் விநயமுடன் வேண்டுகிறோம். 

மேலும், பதவி போன்ற அற்ப பேரங்களுக்காக கோட்பாடுகளை விட்டுக்கொடுக்காது, எமக்காக புரியப்பட்ட தியாகங்களையும் அர்ப்பணிப்புகளையும் மனதில் கொண்டு மனச்சாட்சியுடன் செயற்பட முன்வருமாறு வடமாகாணசபை அங்கத்தவர்கள் அனைவரையும் இனத்தின் பெயரால் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்" என தமிழ் மக்கள் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/கடையடைப்புக்கு-அழைப்பு/71-198744

  • கருத்துக்கள உறவுகள்

ஆதரவு  நிட்சயம் இந்த அடி அடுத்த அடி என்று இன்னும் இருக்கிறது  இந்த  தமிழ் காம்புகளுக்கு :104_point_left:

  • கருத்துக்கள உறவுகள்

கண்டனம் பகிஸ்கரிப்பு எதிர்ப்பு ஆகியவற்றை காரணம்காட்டி கடையடைப்பு போன்ற  செயற்பாடுகளை செய்வதையும் செய்யும்படி தூண்டுவதையும் அனுமதிப்பதற்கில்லை. தமிழர் பகுதிகளில் வியாபாரம் பொருள்வினியோகம் என்பவற்றை இஸ்தம்பிக்கச் செய்யும் நடவடிக்கைகளை வரவேற்கவும் முடியாது. இதை நம்பிவாழும் ஆயிரமாயிரம் தமிழ் மக்களின் ஜிவனோபாயத்தில் கைவைத்து தான் எங்கள் ஆதரவை விக்கியருக்கு காட்டவேண்டிய கட்டாயமுமில்லை. வேண்டுமென்றால் கூட்டம் போடுங்கள் பேரணி நடாத்துங்கள் எவரதும் அன்றாட உழைப்பில் கைவைக்காமல்  முதலமைச்சருக்கு உங்கள் ஆதரவை வெளிப்படுத்துங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

உது தான் தமிழ் மக்கள் பேரவை
மற்றும் சைக்கிள் கட்சியின்
அரசியலும் போராட்டமும்.

எல்லாவற்றுக்கும் கடையை மூடு
/ கர்த்தாலை அனுஷ்டி/
போக்குவரத்தை தடை செய்/
பள்ளியை மூடு

ஒரு நாள் கடையை மூடுவதால்
ஏற்படும் பொருளாதார இழப்பு என்பது
தமிழ் மக்களுக்குத்தான்.
அதையும் தான் அவர்கள் தான் தாங்க வேண்டும்.

இன்னும் 70 களில் இருந்தும்
எதிர்ப்பு அரசியலில் இருந்தும்
வெளிவராமல்
தமிழ் மக்களின் வாழ்வை நாசமாக்கின்றனர்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vanangaamudi said:

கண்டனம் பகிஸ்கரிப்பு எதிர்ப்பு ஆகியவற்றை காரணம்காட்டி கடையடைப்பு போன்ற  செயற்பாடுகளை செய்வதையும் செய்யும்படி தூண்டுவதையும் அனுமதிப்பதற்கில்லை. தமிழர் பகுதிகளில் வியாபாரம் பொருள்வினியோகம் என்பவற்றை இஸ்தம்பிக்கச் செய்யும் நடவடிக்கைகளை வரவேற்கவும் முடியாது. இதை நம்பிவாழும் ஆயிரமாயிரம் தமிழ் மக்களின் ஜிவனோபாயத்தில் கைவைத்து தான் எங்கள் ஆதரவை விக்கியருக்கு காட்டவேண்டிய கட்டாயமுமில்லை. வேண்டுமென்றால் கூட்டம் போடுங்கள் பேரணி நடாத்துங்கள் எவரதும் அன்றாட உழைப்பில் கைவைக்காமல்  முதலமைச்சருக்கு உங்கள் ஆதரவை வெளிப்படுத்துங்கள்.

இந்த கருத்தில் நிறைய உண்மைகள் இருப்பதால் இதை மறுக்க முடியாது.

அதே நேரம் இரண்டு மூன்று நாட்கள் முன்கூட்டிய அறிவித்து நடாத்தும் 
பகிஷ்கரிப்பில் யாழில் எவ்வாறான நஷ்ட்டம் இழப்பு ஏற்படும் என்பதை 
அறியும் நோக்கில் மேலும் அறிய விரும்புகிறேன்.

கடை திருந்து இருந்தால் என்ன ... பூட்டி இருந்தால் என்ன 
மக்கள் தமக்கு தேவையான பொருட்களைத்தானே வாங்க போகிறார்கள் ?
நாளை பூட்டு என்றால் இன்றே வாங்க போகிறார்கள். யாழில் எல்லோரும் 
உண்ணாமல் இருங்கள் என்றால் உணவு பொருட்கள் நஷ்ட்டம் அடைய இடமுண்டு 
அப்படி பார்த்தால் மக்கள் விரதம் பிடிப்பதை எல்லவோ முதலில் தடை செய்யவேண்டும் ?

மரக்கறிகளை சந்தைக்கு கொண்டுவரும் விவசாயிகள் நிலைமை கொஞ்சம் 
மோசம் அடையலாம் .... ஆனாலும் அது ஒரு சுழற்சி முறைமையாகவே காலம் தொட்டு 
இருக்கிறது கிழமையில் இரு நாட்கள் உள்ளூர் விவசாயிகள் தமது மரக்கறிகள் பழங்களை 
கொண்டுவந்து சந்தை படுத்துகிறார்கள். 

இப்படி ஒரு கடையடைப்பு மூலமே உள்ளூர் மக்களின் மனதில் ஒரு எழுச்சியை உண்டுபண்ணாலாம் 
என்பது என் தனிப்பட்ட எண்ணம் தவிர முதல்வருக்கு மக்களின் ஆதரவு இருந்தால் 
இப்படித்தான் இப்போதைய சூழலில் அங்கு வெளிக்கொணர முடியும் என்பதும் எனது எண்ணம். 

எல்லாம் சாதாரண நிலையில் இருந்தால் ....
யார் பேரணியில் ஈடுபடுவது ? 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்தேசிய அரசியலின் இயங்குவிசையாக (?) இருக்கும் வடமாகாணத்தின் உயர்நிறுவன (ஆள்புலரீதியாகவல்ல)அலகொன்றினுள்  நடக்கும் சபைசார்ந்த ஒழுக்காற்ற நடவடிக்கைகளை எப்படி அனுகவேண்டுமென்று புரியாதவர்களா எமது மக்களின் அமைச்சர்களாகவும் பிரதிநிதிகளாகவும் இருந்தார்கள். சபையிலே குழுநிலைவாதச் செயற்பாடுகளை விட்டுத் தமிழர்நலன்நோக்கிச் செயற்படுவதே சரியானது.  முதல்வருக்கு எதிராககொழும்பு அரசியல்வாதிகளும் பின்னேயுள்ளதாக புதுவெளிச்சம் கூறுகிறது. தமிழர்கள் சிந்திக்கவும் வினாத்தொடுக்கவும் தயங்கக்கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Maruthankerny said:

இந்த கருத்தில் நிறைய உண்மைகள் இருப்பதால் இதை மறுக்க முடியாது.

அதே நேரம் இரண்டு மூன்று நாட்கள் முன்கூட்டிய அறிவித்து நடாத்தும் 
பகிஷ்கரிப்பில் யாழில் எவ்வாறான நஷ்ட்டம் இழப்பு ஏற்படும் என்பதை 
அறியும் நோக்கில் மேலும் அறிய விரும்புகிறேன்.

கடை திருந்து இருந்தால் என்ன ... பூட்டி இருந்தால் என்ன 
மக்கள் தமக்கு தேவையான பொருட்களைத்தானே வாங்க போகிறார்கள் ?
நாளை பூட்டு என்றால் இன்றே வாங்க போகிறார்கள். யாழில் எல்லோரும் 
உண்ணாமல் இருங்கள் என்றால் உணவு பொருட்கள் நஷ்ட்டம் அடைய இடமுண்டு 
அப்படி பார்த்தால் மக்கள் விரதம் பிடிப்பதை எல்லவோ முதலில் தடை செய்யவேண்டும் ?

மரக்கறிகளை சந்தைக்கு கொண்டுவரும் விவசாயிகள் நிலைமை கொஞ்சம் 
மோசம் அடையலாம் .... ஆனாலும் அது ஒரு சுழற்சி முறைமையாகவே காலம் தொட்டு 
இருக்கிறது கிழமையில் இரு நாட்கள் உள்ளூர் விவசாயிகள் தமது மரக்கறிகள் பழங்களை 
கொண்டுவந்து சந்தை படுத்துகிறார்கள். 

இப்படி ஒரு கடையடைப்பு மூலமே உள்ளூர் மக்களின் மனதில் ஒரு எழுச்சியை உண்டுபண்ணாலாம் 
என்பது என் தனிப்பட்ட எண்ணம் தவிர முதல்வருக்கு மக்களின் ஆதரவு இருந்தால் 
இப்படித்தான் இப்போதைய சூழலில் அங்கு வெளிக்கொணர முடியும் என்பதும் எனது எண்ணம். 

எல்லாம் சாதாரண நிலையில் இருந்தால் ....
யார் பேரணியில் ஈடுபடுவது ? 

மக்கள் விழித்தெழக்கூடாது என்பதில் கூட்டமைப்பு மிகவும் கவனமாக இருக்கின்றது.
அதனால் இப்படியான கடையடைப்பு , பகிஷ்கரிப்பு , பேரணிகளை அவர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் விரும்புவதில்லை. 

கடையடைப்பு, ஹர்த்தல் போன்றவற்றில் எனக்கு உடன்பாடு இல்லையென்றாலும் மருதங்கேணி, வாத்தியார் இருவரினதும் கருத்துக்கள் வலுவானவை!

4 hours ago, nochchi said:

 முதல்வருக்கு எதிராககொழும்பு அரசியல்வாதிகளும் பின்னேயுள்ளதாக புதுவெளிச்சம் கூறுகிறது. தமிழர்கள் சிந்திக்கவும் வினாத்தொடுக்கவும் தயங்கக்கூடாது.

இதன் பின்னணியில் மும்மரமாக ஈடுபடுவது சுமந்திரன், மாவை, ஸ்ரீதரன் ஆகியோரே.

இதில்
(1) சுமந்திரன் நீண்டகால ஐக்கியதேசக் கட்சி உறுப்பினராக, விசுவாசியாக இருந்தவர். ரணில் கும்பலின் நல்ல நண்பர். தலைசிறந்த அரைவேக்காட்டு சட்டத்தரணி! இந்தப்  பின்னணியிலேயே சம்பந்தனால் பொறுக்கி எடுக்கப்பட்டவர். இவர் 2 தினங்களுக்கு முன்னர் யாழில் இதோடு கூட்டமைப்பின் கதை முடிந்தது என கூறி சிரித்து சென்றுள்ளார். கூட்டமைப்பை சிதைப்பது அவரது ஒரு நோக்கம் என அவரை அறிந்த ஒருவர் கூறியுள்ளார். விக்ணேஸ்வரனின் வளர்ச்சி தெற்கு அரசியல்வாதிகளுக்கும் சுமந்திரனுக்கும் பெரும் அச்சுறுத்தலாகவும், தமிழருக்கு பலமாகவும் இருப்பதை சகிக்காதவர் சுமந்திரன். அதனால் விக்ணேஸ்வரனை அகற்ற மிகநீண்ட காலமாக சதி செய்துவருபவர்.   

(2) மாவை முதலமைச்சர் கனவுடன் வாழ்பவர். 2.5 வருடங்களின் பின்னர் தன்னை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்று ஏற்கனவே கேட்டிருந்தவர். அடுத்த முதலமைச்சரும் தானே என்று கடும் கனவில் இருப்பவர் மாவை. விக்ணேஸ்வரன் அவர்களின் வளர்ச்சி மாவைக்கு பெரும் தலையிடியாக உருவாகியுள்ளது. தமிழின விரோத அயல்நாட்டு கொலைகாரர்களின் தீவிர விசுவாசியாகவும் உள்ள மாவை விக்ணேஸ்வரனை அகற்ற மிகநீண்ட காலமாக சதி செய்துவருபவர்.   

(3) ஸ்ரீதரன் - வன்னியில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட அவரது சில ஆசிரிய நண்பர்களை காப்பாற்ற முழுமுயற்சியும் எடுத்து குருகுலராஜாவுடன் நெருங்கி பணியாற்றியவர்! வன்னியில் நடக்கும் சில சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும் சிறீதரனுக்கும் நெருங்கிய தொடர்புள்ளது. குருகுலராஜாவுக்கு ஏற்பட்ட நெருக்கடி தன்மீதும் பாயும் என்பதால், சிறீதரனும் விக்ணேஸ்வரனை அகற்ற சுமந்திரன், மாவை கும்பலுடன் மிக அண்மைக் காலத்தில் இணைந்து செயற்பட்டு வருகிறார்.

சில மாதங்களின் முன்னர் ஹிந்திய பயங்கரவாதிகள் முதலமைச்சர் விக்ணேஸ்வரனை அகற்றும் திட்டமொன்றை சுவாமிநாதன், ரணில், மாவை, சம்பந்தனுடன் கலந்துரையாடியது செய்திகளாக கசிந்திருந்தது. இதை சரத்பொன்சேகா பகிரங்கமாக அறிவித்திருந்ததையும் யாரும் மறந்திருக்க முடியாது.

6 hours ago, போல் said:

இதன் பின்னணியில் மும்மரமாக ஈடுபடுவது சுமந்திரன், மாவை, ஸ்ரீதரன் ஆகியோரே.

இதில்
(1) சுமந்திரன் நீண்டகால ஐக்கியதேசக் கட்சி உறுப்பினராக, விசுவாசியாக இருந்தவர். ரணில் கும்பலின் நல்ல நண்பர். தலைசிறந்த அரைவேக்காட்டு சட்டத்தரணி! இந்தப்  பின்னணியிலேயே சம்பந்தனால் பொறுக்கி எடுக்கப்பட்டவர். இவர் 2 தினங்களுக்கு முன்னர் யாழில் இதோடு கூட்டமைப்பின் கதை முடிந்தது என கூறி சிரித்து சென்றுள்ளார். கூட்டமைப்பை சிதைப்பது அவரது ஒரு நோக்கம் என அவரை அறிந்த ஒருவர் கூறியுள்ளார். விக்ணேஸ்வரனின் வளர்ச்சி தெற்கு அரசியல்வாதிகளுக்கும் சுமந்திரனுக்கும் பெரும் அச்சுறுத்தலாகவும், தமிழருக்கு பலமாகவும் இருப்பதை சகிக்காதவர் சுமந்திரன். அதனால் விக்ணேஸ்வரனை அகற்ற மிகநீண்ட காலமாக சதி செய்துவருபவர்.   

(2) மாவை முதலமைச்சர் கனவுடன் வாழ்பவர். 2.5 வருடங்களின் பின்னர் தன்னை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்று ஏற்கனவே கேட்டிருந்தவர். அடுத்த முதலமைச்சரும் தானே என்று கடும் கனவில் இருப்பவர் மாவை. விக்ணேஸ்வரன் அவர்களின் வளர்ச்சி மாவைக்கு பெரும் தலையிடியாக உருவாகியுள்ளது. தமிழின விரோத அயல்நாட்டு கொலைகாரர்களின் தீவிர விசுவாசியாகவும் உள்ள மாவை விக்ணேஸ்வரனை அகற்ற மிகநீண்ட காலமாக சதி செய்துவருபவர்.   

(3) ஸ்ரீதரன் - வன்னியில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட அவரது சில ஆசிரிய நண்பர்களை காப்பாற்ற முழுமுயற்சியும் எடுத்து குருகுலராஜாவுடன் நெருங்கி பணியாற்றியவர்! வன்னியில் நடக்கும் சில சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும் சிறீதரனுக்கும் நெருங்கிய தொடர்புள்ளது. குருகுலராஜாவுக்கு ஏற்பட்ட நெருக்கடி தன்மீதும் பாயும் என்பதால், சிறீதரனும் விக்ணேஸ்வரனை அகற்ற சுமந்திரன், மாவை கும்பலுடன் மிக அண்மைக் காலத்தில் இணைந்து செயற்பட்டு வருகிறார்.

சில மாதங்களின் முன்னர் ஹிந்திய பயங்கரவாதிகள் முதலமைச்சர் விக்ணேஸ்வரனை அகற்றும் திட்டமொன்றை சுவாமிநாதன், ரணில், மாவை, சம்பந்தனுடன் கலந்துரையாடியது செய்திகளாக கசிந்திருந்தது. இதை சரத்பொன்சேகா பகிரங்கமாக அறிவித்திருந்ததையும் யாரும் மறந்திருக்க முடியாது.

இதில் முக்கியமான ஒரு எட்டப்பனின் பெயர் விடுபட்டுவிட்டது! இந்த 3 எட்டப்பர்களுடன் ஓடி ஓடி வேலைசெய்த சீவிகே சிவஞானம் என்ற மோசமான பேர்வழியின் பெயரையும் இதில் இணைக்க வேண்டும்.

சீவிகே சிவஞானம் என்ற சமூக விரோதியின் கடந்தகாலம் தெரிந்தவர்கள் இவரை எங்கே வைக்கவேண்டும் என்பதையும் அறிந்திருப்பார்கள்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.