Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தேர்தல் காலத்தில் மேடையில் பேசும் பேச்சை நடைமுறைப்படுத்த முடியாது! - தமிழரசுக் கட்சி

Featured Replies

தேர்தல் காலத்தில் மேடையில் பேசும் பேச்சை நடைமுறைப்படுத்த முடியாது!

தேர்தல் காலத்தில் மேடையில் பேசும் பேச்சை நடைமுறைப்படுத்த முடியாது!

 

தேர்தல் காலங்களில் மேடைகளில் பேசப்படும் பேச்சு தேர்தலில் வெல்வதற்காக மட்டுமே, நிர்வாக ரீதியில் அதனை நடைமுறைப்படுத்தமுடியாது என தமிழரசுக் கட்சியின் பொருளாளரும், மூத்த உறுப்பினருமான குலநாயகம் தெரிவித்துள்ளார்.

அண்மையில் வடமாகாண சபையில் இடம்பெற்ற அரசியல் குழப்பம் தொடர்பாக தமிழரசுக் கட்சி இளைஞர் அணிக்கு விளக்கமளிக்கும் கூட்டம் நேற்றையதினம் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் நடைபெற்றது.

இதன்போது தமிழரசுக் கட்சியின் பொருளாளரும், மூத்த உறுப்பினருமான குலநாயகம் உரையாற்றுகையில், தேர்தல் காலங்களில் நாங்கள் மேடையில் பேசும் பேச்சானது, தேர்தலில் வெல்வதற்கு மாத்திரந்தான். அவற்றை நடைமுறைப்படுத்த முடியாது எனத் தெரிவித்த வேளையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இடையில் எழும்பி ஏதோ கூறியதும் அவர் உரையை நிறைவு செய்தார்.

இக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, சரவணபவன், சுமந்திரன் மற்றும்  மாகாணசபை அவை தலைவர் சி.வி.கே.சிவஞானம்மற்றும் தமிழரசு கட்சி மாகாணசபை உறுப்பினர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர்.

http://thuliyam.com/?p=72555

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணே இந்த உண்மைய  அடுத்த தேர்தல் மேடையிலும் சொல்லிடுங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

பின்ன என்ன .ம............ருக்கு அந்த் கருமத்தை சொல்லி வாக்கு  கேட்டு புடுங்குறியள்   ஐயோ பச்சை  பச்சையா வாயில வருதே   அப்படியே பிண்ணுக்கு ஒரு ஒளி வட்டம் தெரியுது 

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் இல்லை ...இவர்களோட வால்கள் நிலைமை தான் கவலைக்கிடம் ...அடித்த விசில்கள் அனைத்தும் புஸ்வாணமாகி இப்போது பேந்தப்பேந்த முழிக்கினம் 

  • தொடங்கியவர்
மக்களை ஏமாற்றி தேர்தலில் வெல்வோம் தமிழரசுக் கட்சிக் கலந்துரையாடலில் உண்மையை உளறிய கனகசபாபதி; ஓடிச் சென்று வாயடைத்தார் சுமந்திரன்
2017-07-03 11:45:18
15035.jpg
தேர்தல் காலத்தில் நாங்கள் மேடையில் பேசும் பேச்சு வேறு, அது தேர்தலில் வெல்வதற்காக பேசுகின்றோம், ஆனால் பின்னர் நடைமுறை என வரும் போது நாங்கள் பேசும் பேச்சு மற்றும் செயற்பாடு என்பன வேறு என தமிழரசுக் கட்சியின் பொருளாளர் கனக சபாபதி உண்மையை உளறியுள்ளார். 
 
வடக்கு மாகாண சபை தொடர்பாக அண்மையில் தமிழரசுக் கட்சி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கும் வகையிலான கலந்துரையாடல் ஒன்று யாழ்.வீரசிங்கம் மண்ட 
பத்தில் நேற்று நடைபெற்றது.
 
நேற்றைய தினம் காலை 10 மணி தொடக்கம் மேற்படி கலந்துரையாடல் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளு மன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தலைமையில் ஆரம்பமாகியது.
 
இந்தக் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் ஈ.சரவணபவன் மற்றும் வட மாகாண அவைத் தவைர் சீ.வீ.கே.சிவஞானம் மற்றும் தமிழ ரசுக் கட்சி மாகாண சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
கலந்துரையாடலில் பங்கேற்க வந்திரு ந்தவர்கள் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அழைப்பிதழ் அனுப்பப்பட்ட உறுப்பினர்கள் மட்டும் அழைப்பிதழ் பரிசோதிக்கப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
 
கலந்துரையாடப்பட்ட ஒருபகுதியில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொருளாளர் கனகசபாபதி பேசும் போது,
தேர்தல் காலங்களில் மேடையில் நின்று நாம் பேசும் பேச்சு வேறு, அது தேர்தலில் வெல்ல வேண்டும் என்பதற்காகப் பேசும் பேச்சு. ஆனால் பின்னர் நிர்வாகம் என்று வரும் போது நாங்கள் பேசும் பேச்சு நடக்கிற நடை வேறு. என்று உண்மையை உளறினார்.
இதன்போது திகைப்படைந்த சுமந்திரன் உடனே எழுந்து சென்று அவரின் காதில் எச்சரித்துப் பேச்சை மாற்றினார்.
மேலும் தமிழரசுக் கட்சி மாகாண சபை உறுப்பினர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்,
 
தன்னைப் பொதுமக்கள் தாக்க வருவதாகவும் விசேட அதிரடிப்படையின் உதவியை நாடவுள்ளதாகவும் கூறியிருந்தார்.
மேற்படி கலந்துரையாடலில் இளைஞர்கள் பல கேள்விகளை கேட்க முற்பட்ட போதும் சரிவர சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என்றும் தாம் கூறியபடி நடக்குமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழரசுக் கட்சி உறுப்பினர் ஒருவர் வலம்புரியிடம் தெரிவித்திருந்தார்.  

 

http://valampurii.lk/valampurii/content.php?id=15035&ctype=news

  • கருத்துக்கள உறவுகள்

தங்களுக்கு எதிர்கீரைக்கடை இல்லை என்கிற துணிவில் இப்படியெல்லாம் உளறி கொட்டுதுகள் .

  • கருத்துக்கள உறவுகள்

இதனை விட.... வாக்குப்  போட்ட மக்களை, கேவலப் படுத்த முடியாது.
இவர்கள்... உசுப்பேத்தி விட்டு விட்டு.... அரசாங்கத்திடம்  கூடிக் குலாவ  போய் விடுவார்கள்.
ஏமாந்தவன்... வாக்களித்த மக்கள் தான்.

இனித்  தேர்தல் வராமலா போகும்.  அப்ப  இவர்களுக்கு இருக்கு....ஆப்பு.

16 hours ago, Athavan CH said:

மக்களை ஏமாற்றி தேர்தலில் வெல்வோம் தமிழரசுக் கட்சிக் கலந்துரையாடலில் உண்மையை உளறிய கனகசபாபதி; ஓடிச் சென்று வாயடைத்தார் சுமந்திரன்

உண்மையை சொல்பவர்களுக்கு எதிராக மக்களை ஏமாற்றும் தமிழரசுக்கட்சி தலைமைகளால் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்! 

  • கருத்துக்கள உறவுகள்
On 3.7.2017 at 9:28 AM, Athavan CH said:
தேர்தல் காலத்தில் மேடையில் பேசும் பேச்சை நடைமுறைப்படுத்த முடியாது!

தேர்தல் காலத்தில் மேடையில் பேசும் பேச்சை நடைமுறைப்படுத்த முடியாது!

இப்போதாவது உண்மையைக் கூறியதைப் பாராட்டவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 7/4/2017 at 8:40 AM, தமிழ் சிறி said:

இதனை விட.... வாக்குப்  போட்ட மக்களை, கேவலப் படுத்த முடியாது.
இவர்கள்... உசுப்பேத்தி விட்டு விட்டு.... அரசாங்கத்திடம்  கூடிக் குலாவ  போய் விடுவார்கள்.
ஏமாந்தவன்... வாக்களித்த மக்கள் தான்.

இனித்  தேர்தல் வராமலா போகும்.  அப்ப  இவர்களுக்கு இருக்கு....ஆப்பு.

அண்ணை ...இங்கு கூட சில வா(ந்)த்திகள் கூத்தமைப்பை  தெரிவு செய்த மக்கள் முட்டாள்களா என்று கேள்வி கேட்டிருந்தினம் 
இப்போது பதில்கள் அவர்களுக்கே தெரிந்திருக்கும் ...அதுதான் இந்த பக்கமே வராமல் மொக்காடுடன் திரிகின்றனர் .
பாவம் வால்களுக்கு  தங்கள்  எஜமானர்களுக்கு ஊர் பக்கம் வந்தால் கொதி தண்ணி ஊத்துவோம் என்று வாக்களித்த மக்கள் வண்டி ,வண்டியாக கழுவி ஊத்துவது  தெரியாதாம் ...விக்கி ஐயாவை பற்றி போட்டால் மட்டும் விழுந்தடிச்சு வருவினம் ...முதலில் நாத்த மருந்தை தங்கள்மீது தெளித்து நாத்தம் போக்கியபின் அடுத்தவனின் நாத்தத்தை மோப்பம் பிடிக்க வரட்டும் 

Edited by அக்னியஷ்த்ரா

On 7/4/2017 at 6:12 AM, பெருமாள் said:

தங்களுக்கு எதிர்கீரைக்கடை இல்லை என்கிற துணிவில் இப்படியெல்லாம் உளறி கொட்டுதுகள் .

எதிர்க்கடை விரைவிலாமே

30 minutes ago, அக்னியஷ்த்ரா said:

அண்ணை ...இங்கு கூட சில வா(ந்)த்திகள் கூத்தமைப்பை  தெரிவு செய்த மக்கள் முட்டாள்களா என்று கேள்வி கேட்டிருந்தினம் 
இப்போது பதில்கள் அவர்களுக்கே தெரிந்திருக்கும் ...அதுதான் இந்த பக்கமே வராமல் மொக்காடுடன் திரிகின்றனர் .
பாவம் வால்களுக்கு  தங்கள்  எஜமானர்களுக்கு ஊர் பக்கம் வந்தால் கொதி தண்ணி ஊத்துவோம் என்று வாக்களித்த மக்கள் வண்டி ,வண்டியாக கழுவி ஊத்துவது  தெரியாதாம் ...விக்கி ஐயாவை பற்றி போட்டால் மட்டும் விழுந்தடிச்சு வருவினம் ...முதலில் நாத்த மருந்தை தங்கள்மீது தெளித்து நாத்தம் போக்கியபின் அடுத்தவனின் நாத்தத்தை மோப்பம் பிடிக்க வரட்டும் 

கூட்டமைப்பு தமிழ் மக்களின் சாபக்கேடு

ம்ம்ம்.  தமிழரசுகட்சி  தமிழ் மக்களின் சாபக்கேடு!

  • கருத்துக்கள உறவுகள்

இவர் உளறித்தான் மக்கள் தெரிய வேண்டும் என்று நினைப்பது மக்களை கொச்சைப்படுத்துவது மாதிரி.அவர்களுக்கு எல்லாம் தெரியும்.வேறு வழி இல்லை.அவளவு தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.