Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

1983 ஆம் ஆண்டு கலவரத்தில் 7 தமிழர்கள் மாத்திரமே உயிரிழந்ததாக அரசாங்கம் தெரிவிப்பு

Featured Replies

1983 ஆம் ஆண்டு கலவரத்தில் 7 தமிழர்கள் மாத்திரமே உயிரிழந்ததாக அரசாங்கம் தெரிவிப்பு

 


1983 ஆம் ஆண்டு கலவரத்தில் 7 தமிழர்கள் மாத்திரமே உயிரிழந்ததாக அரசாங்கம் தெரிவிப்பு
 

1983 ஆம் ஆண்டு நாட்டில் இடம்பெற்ற கலவரங்களில் 7 தமிழர்கள் மாத்திரமே உயிரிழந்ததாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் வினவிய கேள்விக்கு பதலளிக்கும் வகையில், சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு இதனை அறிவித்தது.

1983 ஆம் ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இடம்பெற்ற இனக்கலவரங்களினால் இறந்த, காயமடைந்த மற்றும் காணாமற்போன தமிழர்களின் எண்ணிக்கையை அவர்கள் வசித்த மாவட்டங்களின்படி தனித்தனியாக தெளிவுபடுத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சரிடம் கோரியிருந்தார்.

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சருக்குப் பதிலாக ஆளுங்கட்சியின் பிரதம கொரடா அமைச்சர் கயந்த கருணாதிலக்க இதற்கான பதிலை நேற்று (28) சபையில் சமர்ப்பித்தார்.

அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்களில், 1983 ஆம் ஆண்டு கலவரங்களில் மொத்தமாக 7 தமிழர்களே உயிரிழந்துள்ளதாகவும் ஒருவர் கூட காயமடையவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இனக்கலவரங்கள் இடம்பெற்ற மாவட்டங்களில் அமைச்சு கொழும்பு மாவட்டத்தையும் உள்ளடக்கவில்லை.

அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி பதுளை மாவட்டத்தில் 1983 ஆம் ஆண்டு ஏற்பட்ட இனக்கலவரத்தில் 2 பேர் உயிரிழந்ததுடன், 67 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

மாத்தறை மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கண்டி மாவட்டத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத்தின் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கேகாலை மாவட்டத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 48 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

அதன்படி மொத்தமாக 83 ஜூலை கலவரத்தில் 7 தமிழர்கள் உயிரிழந்துள்ளதுடன், 118 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, 1983 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற கலவரத்தில் பதுளை, மாத்தறை, கண்டி, கேகாலை ஆகிய மாவட்டங்களில் தமிழ் மக்கள் எவரும் கொலை செய்யப்படவில்லை என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

 

http://newsfirst.lk/tamil/2017/07/1983-ஆம்-ஆண்டு-கலவரத்தில்-7-தமி/

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சம்பந்தன் சுமத்திரன் கூட்டம் இருக்கும்வரை இதைவிட பெரிய பொய்களை சிங்களம் துணிந்து சொல்லும் .

14 minutes ago, பெருமாள் said:

இந்த சம்பந்தன் சுமத்திரன் கூட்டம் இருக்கும்வரை இதைவிட பெரிய பொய்களை சிங்களம் துணிந்து சொல்லும் .

இதென்ன பெரிய விடயமே ?

வன்னியில் ஒருத்தரும் இரக்கவில்லை என்று சொன்னவங்களுக்கு !!!

சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளின் பொய்களுக்கு அளவுக்கணக்கே கிடையாது!

இதனை 350 ஆல் பெருக்கினால் ஓரளவு உண்மைகள் வெளிவரும்.

  • கருத்துக்கள உறவுகள்

இதனை கூட எதிர்த்து பதிலளிக்காமல் இழித்த வாய்களாக எதிர்க்கட்சி ஆசனத்தில் அமரவா மக்கள் வாக்களித்தார்கள்??

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

இதனை கூட எதிர்த்து பதிலளிக்காமல் இழித்த வாய்களாக எதிர்க்கட்சி ஆசனத்தில் அமரவா மக்கள் வாக்களித்தார்கள்??

எதிர்கடை காரர் சும்மா கிடப்பது இவர்களுக்கு வசதியாகிவிட்டது இல்லை அவரும் வேண்டுறதை வேண்டிகிட்டு பேருக்கு மாரடிச்சு அழுவுறார் போல் கிடக்கு நான் சொல்வது சைக்கிள் கூட்டம் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 hours ago, நவீனன் said:

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சருக்குப் பதிலாக ஆளுங்கட்சியின் பிரதம கொரடா அமைச்சர் கயந்த கருணாதிலக்க இதற்கான பதிலை நேற்று (28) சபையில் சமர்ப்பித்தார்.

அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்களில், 1983 ஆம் ஆண்டு கலவரங்களில் மொத்தமாக 7 தமிழர்களே உயிரிழந்துள்ளதாகவும் ஒருவர் கூட காயமடையவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

13 hours ago, பெருமாள் said:

இந்த சம்பந்தன் சுமத்திரன் கூட்டம் இருக்கும்வரை இதைவிட பெரிய பொய்களை சிங்களம் துணிந்து சொல்லும் .

13 hours ago, Dash said:

இதென்ன பெரிய விடயமே ?

வன்னியில் ஒருத்தரும் இரக்கவில்லை என்று சொன்னவங்களுக்கு !!!

4 hours ago, nunavilan said:

இதனை கூட எதிர்த்து பதிலளிக்காமல் இழித்த வாய்களாக எதிர்க்கட்சி ஆசனத்தில் அமரவா மக்கள் வாக்களித்தார்கள்??

 

ஒண்டுக்கும் கவலைப்படாதேங்கோ.......கிட்டடியிலை சம்சும் கோஷ்டியே தங்கடை வாயாலை சொன்னாலும் சொல்லுவினம்.

3 minutes ago, குமாரசாமி said:

 

ஒண்டுக்கும் கவலைப்படாதேங்கோ.......கிட்டடியிலை சம்சும் கோஷ்டியே தங்கடை வாயாலை சொன்னாலும் சொல்லுவினம்.

இதெல்லாம் சிம்பிள், 1983இல் நடந்தது இனகலவரம் இல்லை கோஷ்டி சண்டை  என்று ஒன்னாலும் சொல்லலாம்.

  • தொடங்கியவர்

ஜூலை கலவரத்தில் தமிழர்களின் உயிரிழப்பு குறித்து பாராளுமன்றில் ஆவணம் சமர்ப்பிப்பு: பலரும் கண்டனம்

 


ஜூலை கலவரத்தில்  தமிழர்களின் உயிரிழப்பு குறித்து பாராளுமன்றில் ஆவணம் சமர்ப்பிப்பு:  பலரும் கண்டனம்
 

1983 ஆம் ஆண்டு ஜூலை கலவரத்தில் ஏழு தமிழர்களே உயிரிழந்துள்ளதாக சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் பாராளுமன்றத்திற்கு சமர்பித்துள்ள ஆவணம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

83 ஆம் ஆண்டு கலவரத்தில் அநீதி இழைக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்காத போதிலும் உயிரிழந்துவர்களின் எண்ணிக்கையை கூட சரியாக வெளியிடாமை தொடர்பில் மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.

1983 ஆம் ஆண்டு நாட்டில் இடம்பெற்ற கலவரங்களில் 7 தமிழர்கள் மாத்திரமே உயிரிழந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் வினவியிருந்த கேள்விக்கு பதலளிக்கும் வகையில் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் அறிவித்திருந்தது.

இனக்கலவரங்கள் இடம்பெற்ற மாவட்டங்களில் அமைச்சு கொழும்பு மாவட்டத்தையும் உள்ளடக்கியிருக்கவில்லை.

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்களின்படி பதுளை மாவட்டத்தில் 1983 ஆம் ஆண்டு ஏற்பட்ட இனக்கலவரத்தில் இரண்டு பேர் உயிரிழந்ததுடன், 67 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

மாத்தறை மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கண்டி மாவட்டத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக இந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கேகாலை மாவட்டத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 48 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

அதன்படி மொத்தமாக 83 ஜூலை கலவரத்தில் ஏழு தமிழர்கள் உயிரிழந்துள்ளதுடன் 118 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை இலங்கையின் 1983 ஆம் ஆண்டு ஜூலையில் இடம்பெற்ற கலவரத்தில் 400 முதல் 3000 பேர் வரை உயிரிழந்துள்ளதாக பி.பி.சி செய்தி வெளியிட்டிருந்தது.

ஜூலை கலவரம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் காலத்தில் ஆணைகுழுவொன்று நியமிக்ககப்பட்டது.

முன்னாள் பிரதம நீதியரசர் சுப்பையா சர்வாநந்தா தலைமையில் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருந்தது.

ஆணைக்குழுவின் விசாரணைகளின்படி 83 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை கலவரத்தில் சுமார் 1000 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஏழு இலட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பி.பி.சி செய்தி வெளியிட்டிருந்தது.

இதேவேளை இலங்கையில் இடம்பெற்ற குற்றச் செயல்களுக்கு பொறுப்புக் கூற வேண்டியது அவசியமானது என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ ( Justin Trudeau )தெரிவித்துள்ளார்.

கறுப்பு ஜூலை கலவரம் தொடர்பான நினைவு தினத்தை முன்னிட்டு அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

1983ம் ஆண்டு ஜூலை மாதம் 24ம் திகதி முதல் 29ம் திகதி வரையில் ஏற்பட்ட கலவரத்தில் பெரும் எண்ணிக்கையிலானவர்களின் உயிர்கள் காவு கொல்லப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு முன்னெடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் வரவேற்கப்பட வேண்டியவை என குறிப்பிட்டுள்ள அவர் எனினும், குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதலின் ஊடாகவே நம்பிக்கையை கட்டியெழுப்ப முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

http://newsfirst.lk/tamil/2017/07/ஜூலை-கலவரத்தில்-7-தமிழர்/

  • கருத்துக்கள உறவுகள்

நாகங்கள் 5 பேர்தான் இறந்தார்கள் என்று வாதிடவேண்டும் 

மீதி 2 பேரும்  இறந்ததுக்கு 
அரசு ஆதாரம் காட்டிடவேண்டும் என்று வாதிடுவதே பலன் தரும் 

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு அப்ப தனிநாடாக இருந்தது. இப்ப தான்.. சொறீலங்காவோடு இணைந்துக் கொள்ளப்பட்டது.. பலாத்காரமாக.:rolleyes:tw_dissapointed:

நல்லாட்சி அரசாங்கம் சொல்வது சரியான உண்மை என்று நாளை ஹிந்தியாவின் ஹிந்துவுக்கு சிலர் பேட்டி கொடுக்க காத்திருக்கிறார்கள். tw_angry:

22 hours ago, Dash said:

இதென்ன பெரிய விடயமே ?

வன்னியில் ஒருத்தரும் இரக்கவில்லை என்று சொன்னவங்களுக்கு !!!

இந்த பதில் தான் உங்களுக்கும்

24 minutes ago, nedukkalapoovan said:

கொழும்பு அப்ப தனிநாடாக இருந்தது. இப்ப தான்.. சொறீலங்காவோடு இணைந்துக் கொள்ளப்பட்டது.. பலாத்காரமாக.:rolleyes:tw_dissapointed:

நல்லாட்சி அரசாங்கம் சொல்வது சரியான உண்மை என்று நாளை ஹிந்தியாவின் ஹிந்துவுக்கு சிலர் பேட்டி கொடுக்க காத்திருக்கிறார்கள். tw_angry:

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.