Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

3 நிமிடத்தில் 40 முறை சிறுவனை அறைந்த ஆசிரியை !!

Featured Replies

3 நிமிடத்தில் 40 முறை சிறுவனை அறைந்த ஆசிரியை !!

3 நிமிடத்தில் 40 முறை சிறுவனை அறைந்த ஆசிரியை !! வீடியோ ஆதாரம் உள்ளே...

பார்ப்பவரின் இதயத்தை உறையவைக்கும் ஒரு நிகழ்வு லக்னோவில் உள்ள புனித ஜான் வியான்னி பள்ளியில் நடைபெற்றுள்ளது. வகுப்பறையில் வருகைப்பதிவு எடுக்கும் பொழுது பதில் கூறாததால் மாணவனை காட்டுமிராண்டி தனமாக தாக்கியுள்ளார் பள்ளி ஆசிரியை.

3 நிமிடத்தில் 40 முறை சிறுவனை அறைந்த ஆசிரியை !! வீடியோ ஆதாரம் உள்ளே...

3 நிமிடத்தில் 40 கன்னத்தில் முறை அறைந்துள்ளார். பின்னர் அவனது மார்பில் கை வைத்து தள்ளி விட்டு, சட்டையின் காலரை பிடித்து இழுத்துள்ளார். காண்போரின் மனதை பதற வைக்கும் இந்த காட்சியானது பள்ளியில் உள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகியுள்ளது.

3 நிமிடத்தில் 40 முறை சிறுவனை அறைந்த ஆசிரியை !! வீடியோ ஆதாரம் உள்ளே...

இந்த நிகழ்வை பற்றி மாணவனின் தந்தை கூறுகையில், 'தலைமை ஆசிரியர் அவரை இடை நீக்கம் செய்வேன் என உறுதி அளித்துள்ளதாகவும், மேலும் சம்மந்தப்பட்ட ஆசிரியரிடம் கேட்கும் பொழுது அவர் பதிலளிக்காமல் கோபமாக பேசியதாக தெரிவித்துள்ளார்'.

3 நிமிடத்தில் 40 முறை சிறுவனை அறைந்த ஆசிரியை !! வீடியோ ஆதாரம் உள்ளே...

மேலும் அன்று பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும்பொழுது என்னுடைய மகன் அமைதியாக வந்தான். அருகாமையில் உள்ள மற்ற மாணவர்கள் கூறியதால் தான் தெரிந்தது. அதன் பின்னரே பள்ளிக்கு சென்று அந்த காமிரா பதிவை பார்த்தேன் என கூறியுள்ளார்.

 

https://news.ibctamil.com/ta/world-affairs/lucknow-teacher-slaps-student-40-times

  • கருத்துக்கள உறவுகள்

CCTV புண்ணியம்...

வாங்கினனாங்க தானே.... அந்த மாதிரி... எங்களுக்கு விழுந்த அடிகள் எல்லாம் ..... இப்ப நினைச்சாலும்...

பிள்ளையார் எண்ட பட்ட பெயர் கொண்ட ஒரு பயல் 3 கழுசான் போட்டுக் கொண்டு வருவான். பின் பக்கம் அடி விழுந்தால் தாங்குமாம் என்று. அடி போடுற வாத்தி கண்டால் கதி என, நாம் பதை பதைத்துக் கொண்டிருப்போம்.

4ம் வகுப்பு முழுவதுமே வாத்திக்கு, அந்த விசயம் தெரியாது. ஆனால் ஒழுங்கா அடி தப்பாம விழும்.

5ம் வகுப்பில், மயங்கி விழுந்த பெண் பிள்ளைக்கு தனது பிளாஸ்கில் இருந்து ஊத்திக் கொடுத்த டீயை குடிக்க மறுத்து விடடாள், 
என கோபத்தில் சாத்தோ, சாத்து என்று சாத்தி.... பின்னர் தாய், தகப்பன், ஊர் விதானை என்று வந்து, போலீசுக்கு போக முன்னம், மாவட்டத்திக்கு வெளியே மாறுதல் வாங்கி, மலையகம் ஓடினார் ஒரு வாத்தி.  

Edited by Nathamuni

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கல்வியை வன்முறையூடாகத்தான் கற்பிக்க முடியுமா? 

வீட்டின் அழுத்தங்களை தீர்க்கும் தலைகளாக மாணவர்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் அடிவாங்கினது கொஞ்ச நஞ்சமில்லை அதாலை உந்த ரீச்சர் அடிச்சது பெரிசாய் தெரியேல்லை. ஊரிலை ஒருசில வாத்திமார் இருக்கினம்.ஒழுங்காய் படிப்பீக்க/சொல்லிக்குடுக்க மாட்டினம். புற்றூல் மட்டையாலை மொளி பாத்து அடிப்பினம். தங்கடை ஆக்கள் என்ன பிழைவிட்டாலும் நோ பிரொப்பளம்...தட்டிக்குடுப்பினம். திருப்பி ஏதும் கதைச்சால்....ஏதும் சொன்னால் கன்னம் சிவக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வருடத்தில் 365 நாட்கள்.

அதில் சனி, ஞ<யிறு 100 (அண்ணளவாக).

ஏனைய விடுமுறைகள் 25 (அண்ணளவாக).

பாடசாலை விடுமுறைகள் 100.(தோராதாயமாக).

நான் போகாத நாட்கள் 50.

வாத்தியார் வராத நாட்கள் 25.

மிகுதி 52 நாட்களில் 73 நாளும் வாங்கிய அடிகள் கொஞ்ச நஞ்சமல்ல.....! tw_blush:

என் போன்ற அப்பாவிகளை வெளுப்பதற்காகவே முழுக்கை சட்டையை துறந்து அரை கை சட்டையுடன் பிரசன்னமாகி சன்னதமாடும் ஆசிரியர்களை கொண்டவர்கள் நாங்கள் .....!

Image associée

 

  • கருத்துக்கள உறவுகள்
On 17.9.2017 at 11:39 PM, குமாரசாமி said:

நான் அடிவாங்கினது கொஞ்ச நஞ்சமில்லை அதாலை உந்த ரீச்சர் அடிச்சது பெரிசாய் தெரியேல்லை. ஊரிலை ஒருசில வாத்திமார் இருக்கினம்.ஒழுங்காய் படிப்பீக்க/சொல்லிக்குடுக்க மாட்டினம். புற்றூல் மட்டையாலை மொளி பாத்து அடிப்பினம். தங்கடை ஆக்கள் என்ன பிழைவிட்டாலும் நோ பிரொப்பளம்...தட்டிக்குடுப்பினம். திருப்பி ஏதும் கதைச்சால்....ஏதும் சொன்னால் கன்னம் சிவக்கும்.

சரியா நொந்துநூலாகிப்போனீங்கள் போலகிடக்கு. என்ன செய்யிறது எங்களுக்கொரு அறிவியல்  ஆசிரியை. அடியோ அடி. பெடியள் தவளை கொண்டரச் சொன்னா பெரிய தவளையாக் கொண்டருவாங்கள் அதுக்கும் அடி. எங்கட வாத்திமைப் பண்பாடு அப்படி. 

On 18.9.2017 at 11:14 AM, suvy said:

ஒரு வருடத்தில் 365 நாட்கள்.

அதில் சனி, ஞ<யிறு 100 (அண்ணளவாக).

ஏனைய விடுமுறைகள் 25 (அண்ணளவாக).

பாடசாலை விடுமுறைகள் 100.(தோராதாயமாக).

நான் போகாத நாட்கள் 50.

வாத்தியார் வராத நாட்கள் 25.

மிகுதி 52 நாட்களில் 73 நாளும் வாங்கிய அடிகள் கொஞ்ச நஞ்சமல்ல.....! tw_blush:

என் போன்ற அப்பாவிகளை வெளுப்பதற்காகவே முழுக்கை சட்டையை துறந்து அரை கை சட்டையுடன் பிரசன்னமாகி சன்னதமாடும் ஆசிரியர்களை கொண்டவர்கள் நாங்கள் .....!

Image associée

 

இப்படியானவர்களுக்கு சரியான உளவியலாளரூடாக வகுப்பெடுக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, nochchi said:

சரியா நொந்துநூலாகிப்போனீங்கள் போலகிடக்கு. என்ன செய்யிறது எங்களுக்கொரு அறிவியல்  ஆசிரியை. அடியோ அடி. பெடியள் தவளை கொண்டரச் சொன்னா பெரிய தவளையாக் கொண்டருவாங்கள் அதுக்கும் அடி. எங்கட வாத்திமைப் பண்பாடு அப்படி. 

இப்படியானவர்களுக்கு சரியான உளவியலாளரூடாக வகுப்பெடுக்க வேண்டும்.

தப்பு நொச்சி....! இன்றைக்கு அந்த ஆசிரியர்களை தெய்வமாய் நினைச்சு பார்க்க தோணுது. அவர்கள் பாதம் பட்ட மண்ணை சிரசில் வைக்க மனம் விரும்புது.அவர்கள் சம்பளத்தை மட்டும் நினைத்து வேலை செய்யவில்லை.அவர்களது தனிப்பட்ட வாழ்விலும் ஒழுக்கத்திலும் ஒரு முன்னுதாரனமாகத் திகழ்ந்தார்கள். பணம் வாங்காமல் மாலை நேர வகுப்புகள் எடுத்தார்கள்.இன்னும் எவ்வளவோ சொல்லலாம் .....!  tw_blush: 

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பக்கத்தில் இருந்தது கதை கொடுக்க.. எனக்கு சோக்கட்டியால ஒரு ரீச்சர் எறிஞ்சவா. இப்பவும் அது தலைல நோகுது.  இப்பவும் அந்த ரீச்சரை பிடிப்பதில்லை.  *ரீச்சர் - ஆசிரியை tw_blush:

அதுக்காக நியாயமாக பாடம் போதித்த ஆசிரியர்கள் மீது இப்பவும் மதிப்புள்ளது. 

 

பிள்ளைகளுக்கு வகுப்பில் அடிப்பது அடிப்படையில் மிகவும் தவறு. நல்ல பழக்கங்களை வன்முறையினூடு சொல்லிக் கொடுக்க முடியாது. எம் சமூகம் எடுத்ததுக்கெல்லாம் வன்முறையை கையில் எடுப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.
....... ஆயினும் ஆயினும் நானெல்லாம் அடிவாங்காமல் வளர்ந்து இருந்தால் கெட்டு குட்டிச் சுவராகி சீரழிஞ்சு சின்னா பின்னம் ஆகி நாசமாகிப் போயிருப்பன்.  ஒரு முறை இடை நிலை பிரிவின் தலைமை ஆசிரியர் (Middle school head master - Jeevanantham) என் வீட்டுக்கே வந்து அம்மாவுக்கு முறையிட்டு அவருக்கு முன்னாலே பூசை கொடுத்த கதையை எல்லாம் பிற்காலத்தில் என் வரலாறு சொல்லும்

சுவி அண்ணா சொன்ன மாதிரி நல்லா அடிச்ச வாத்திமாரை இப்ப கண்டால் கையெடுத்து கும்பிடச் சொல்லுது. ஊருக்கு போகும் போது எப்படியும் அவர்களை சந்திக்க முயல்வதுண்டு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
35 minutes ago, நிழலி said:

பிள்ளைகளுக்கு வகுப்பில் அடிப்பது அடிப்படையில் மிகவும் தவறு. நல்ல பழக்கங்களை வன்முறையினூடு சொல்லிக் கொடுக்க முடியாது. எம் சமூகம் எடுத்ததுக்கெல்லாம் வன்முறையை கையில் எடுப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.
....... ஆயினும் ஆயினும் நானெல்லாம் அடிவாங்காமல் வளர்ந்து இருந்தால் கெட்டு குட்டிச் சுவராகி சீரழிஞ்சு சின்னா பின்னம் ஆகி நாசமாகிப் போயிருப்பன்.  ஒரு முறை இடை நிலை பிரிவின் தலைமை ஆசிரியர் (Middle school head master - Jeevanantham) என் வீட்டுக்கே வந்து அம்மாவுக்கு முறையிட்டு அவருக்கு முன்னாலே பூசை கொடுத்த கதையை எல்லாம் பிற்காலத்தில் என் வரலாறு சொல்லும்

சுவி அண்ணா சொன்ன மாதிரி நல்லா அடிச்ச வாத்திமாரை இப்ப கண்டால் கையெடுத்து கும்பிடச் சொல்லுது. ஊருக்கு போகும் போது எப்படியும் அவர்களை சந்திக்க முயல்வதுண்டு

இப்ப இவர் என்ன சொல்லவாறார்? வாத்திமார் அடிச்சு படிப்பீக்கிறது நல்லதெண்டு சொல்ல வாறாரோ? :cool:

2 minutes ago, குமாரசாமி said:

இப்ப இவர் என்ன சொல்லவாறார்? வாத்திமார் அடிச்சு படிப்பீக்கிறது நல்லதெண்டு சொல்ல வாறாரோ? :cool:

ஐ மீன் ..நான் என்ன சொல்ல வாறன் என்றால் அடிக்கலாம் ...ஆனால் அடிக்க கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

நான் பெரும்பாலும் அடி வாங்கியதில்லை.. ஆனால் ஒருமுறை எப்பொழுதும் வாங்கும் மதிப்பெண்ணைவிட குறைவாக வாங்கியதால் விழுந்த பிரம்படியில் ஈக்கி குத்தி புண்ணாகி காலில் நிரந்தர தழும்பாகிவிட்டது.. இன்னமும் அத்தழும்பை பார்க்கையில் அந்த ஆங்கிலப் பாட ஆசிரியரின் நினவு வந்து செல்லும்.. அவர் போட்டபோடில்தான் பள்ளி இறுதியாண்டு பொதுத்தேர்வில் ஓரளவாவது மதிப்பெண் எடுத்து தேற முடிந்தது..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, suvy said:

தப்பு நொச்சி....! இன்றைக்கு அந்த ஆசிரியர்களை தெய்வமாய் நினைச்சு பார்க்க தோணுது. அவர்கள் பாதம் பட்ட மண்ணை சிரசில் வைக்க மனம் விரும்புது.அவர்கள் சம்பளத்தை மட்டும் நினைத்து வேலை செய்யவில்லை.அவர்களது தனிப்பட்ட வாழ்விலும் ஒழுக்கத்திலும் ஒரு முன்னுதாரனமாகத் திகழ்ந்தார்கள். பணம் வாங்காமல் மாலை நேர வகுப்புகள் எடுத்தார்கள்.இன்னும் எவ்வளவோ சொல்லலாம் .....!  tw_blush: 

 

7 hours ago, nedukkalapoovan said:

எனக்கு பக்கத்தில் இருந்தது கதை கொடுக்க.. எனக்கு சோக்கட்டியால ஒரு ரீச்சர் எறிஞ்சவா. இப்பவும் அது தலைல நோகுது.  இப்பவும் அந்த ரீச்சரை பிடிப்பதில்லை.  *ரீச்சர் - ஆசிரியை tw_blush:

அதுக்காக நியாயமாக பாடம் போதித்த ஆசிரியர்கள் மீது இப்பவும் மதிப்புள்ளது. 

 

ஆசான் கடவுளுக்கு சமம். எமக்கு கல்வியை தந்தவர்கள். :100_pray:

அந்த கல்வியை வன்முறையாக திணிப்பதுதான் வேதனையை தருகின்றது. :114_ear:

புலம் பெயர்நாடுகளில் உள்ள பாடசாலை சுதந்திரங்களை பார்க்க இன்னுமொருக்கால் கொப்பி தூக்கிக்கொண்டு போகணும் போல் இருக்கின்றது.<_<

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, குமாரசாமி said:

 

ஆசான் கடவுளுக்கு சமம். எமக்கு கல்வியை தந்தவர்கள். :100_pray:

அந்த கல்வியை வன்முறையாக திணிப்பதுதான் வேதனையை தருகின்றது. :114_ear:

புலம் பெயர்நாடுகளில் உள்ள பாடசாலை சுதந்திரங்களை பார்க்க இன்னுமொருக்கால் கொப்பி தூக்கிக்கொண்டு போகணும் போல் இருக்கின்றது.<_<

 கு.சா... நீங்கள் தியரியை சொல்கிறீர்கள் நாங்கள் அனுபவத்தையே பேசுகிறோம்.சீதோஷ்ண நிலைகளுக்கு ஏற்றவாறுதான் ஆடை அணிகிறோம். தண்டனைகளும் அப்படியே.அவைகள் கொல்வதற்கல்ல, கோலோச்சுவதற்கானவை.நிழலி ஒப்பேறி  விட்டார்......நானும் ஏதோ கொஞ்சம் ....!

நெடுக்ஸ் : அன்று அந்த ஆசிரியையின் கையில் சோக்கட்டிக்குப் பதில் பேப்பர் வெயிட் இருந்திருந்தால் .....யோசித்து பாருங்கள்...இறைவனின் கருணை புரியும்....!  tw_blush:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 20.9.2017 at 7:17 PM, suvy said:

 கு.சா... நீங்கள் தியரியை சொல்கிறீர்கள் நாங்கள் அனுபவத்தையே பேசுகிறோம்.சீதோஷ்ண நிலைகளுக்கு ஏற்றவாறுதான் ஆடை அணிகிறோம். தண்டனைகளும் அப்படியே.அவைகள் கொல்வதற்கல்ல, கோலோச்சுவதற்கானவை.நிழலி ஒப்பேறி  விட்டார்......நானும் ஏதோ கொஞ்சம் ....!

நெடுக்ஸ் : அன்று அந்த ஆசிரியையின் கையில் சோக்கட்டிக்குப் பதில் பேப்பர் வெயிட் இருந்திருந்தால் .....யோசித்து பாருங்கள்...இறைவனின் கருணை புரியும்....!  tw_blush:

சீதோஷ்ண நிலைக்கேற்ப தண்டனைகள்??????
ஐயா! அப்படியாயின் ஆசிரியர்கள் மாணவிகளின் பாவாடையை தூக்கி பிரம்பால் அடிப்பதை சரியென்கிறீர்களா? :grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.