Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில். வீட்டில் கஞ்சா வியாபாரம் செய்த பெண் கைது :

Featured Replies

யாழில். வீட்டில் கஞ்சா வியாபாரம் செய்த பெண் கைது :

 

ganya-2-1.jpg
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ். கந்தர்மட பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து 2 கிலோ கஞ்சா போதை பொருளும் ஒரு தொகை பணமும் யாழ்ப்பாண  காவல்துறையினரினால்  மீட்கப்பட்டு உள்ளது.  கந்தர்மட பகுதியில் உள்ள வீடொன்றில் கஞ்சா வியாபாரம் நடைபெறுவதாக போதை பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை குறித்த வீட்டை  காவல்துறையினர்  சோதனையிட்டனர்.

அதன் போது , குறித்த வீட்டில் இருந்து 2 கிலோ கஞ்சா போதை பொருளும் , ஒரு தொகை பணத்தினையும்  ; கைப்பற்றிய காவல்துறையினர்   வீட்டில் இருந்து குடும்ப பெண்ணையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்ணை  காவல் நிலையத்தில் தடுத்து வைத்து  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். குறித்த பெண் திருமணமான நிலையில் கணவனை பிரிந்து வாழ்பவர் எனவும் , பெண்ணுக்கு கஞ்சாவை விநியோகிப்பவர் தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவரை கைது செய்வதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு உள்ளதாகவும்  காவல்துறையினர் தெரிவித்தனர்.

ganya-1.jpg

http://globaltamilnews.net/archives/51296

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பெண் ஒரு வெறும் முட்டாள்....! செய்யிறது தப்பு, அதையும் தப்பாய் செய்து கொண்டு ... காசை யாராவது கஞ்சாவுடன் சேர்த்து வைப்பார்களா.....!  tw_blush: 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, suvy said:

இந்தப் பெண் ஒரு வெறும் முட்டாள்....! செய்யிறது தப்பு, அதையும் தப்பாய் செய்து கொண்டு ... காசை யாராவது கஞ்சாவுடன் சேர்த்து வைப்பார்களா.....!  tw_blush: 

அவசரத்தில அண்டாக்குள்ள கைவிட்டாலே போகாதாம் அந்த பொண்ணுக்கு என்ன  அவசரமோ அதான் காசு கூட பறிகொடுத்து இருக்கிறது சில வேளை கஸ்ரப்பட்டு உழைத்து சம்பாதித்திருந்தால் இந்த காசு பறி போகாமல் இருந்திருக்கும் 

கள்ள தொழிலில் காசு வந்தால் நிலைக்கவா போகிறது  இது நல்ல உதாரணம் போல் தெரிகிறது :unsure:

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, suvy said:

இந்தப் பெண் ஒரு வெறும் முட்டாள்....! செய்யிறது தப்பு, அதையும் தப்பாய் செய்து கொண்டு ... காசை யாராவது கஞ்சாவுடன் சேர்த்து வைப்பார்களா.....!  tw_blush: 

புலாலை மறுத்தால் கொல்வது நின்றுவிடும்.

பாவம் அந்தப் பெண். கொஞ்சுவதற்குக் கணவனும் இல்லை, கைகொடுத்த கஞ்சாவுமில்லை, சேர்த்துவைத்த காசும் இல்லை. :(

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு புரியுது பாஞ்ச் , தனிக்கு புரிய கொஞ்சம் காலம் எடுக்கும். இப்ப ஜிம்முக்கு போற கெத்தில துள்ளுறார். முன்பு நாங்கள் துள்ளினமாதிரி.....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, suvy said:

எங்களுக்கு புரியுது பாஞ்ச் , தனிக்கு புரிய கொஞ்சம் காலம் எடுக்கும். இப்ப ஜிம்முக்கு போற கெத்தில துள்ளுறார். முன்பு நாங்கள் துள்ளினமாதிரி.....!  tw_blush:

நான் என்ன தப்பா சொன்னன் அவாக்கு கணவன் இல்லையென்றால் பல தொழில்கள் நேர்மையான  தொழில்கள் இருக்கிறது கஞ்சா ஏன் விற்பான்  கஞ்சா விற்றால் குற்றம் குற்றம் தானே இதில் நாம் மனம் நோக தேவையில்லை :unsure:

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நான் என்ன தப்பா சொன்னன் அவாக்கு கணவன் இல்லையென்றால் பல தொழில்கள் நேர்மையான  தொழில்கள் இருக்கிறது கஞ்சா ஏன் விற்பான்  கஞ்சா விற்றால் குற்றம் குற்றம் தானே இதில் நாம் மனம் நோக தேவையில்லை :unsure:

நல்ல  இடத்தில

குறிப்பை  ஒருக்கா  காட்டு  ராசா...:grin:

சனி  இடம் பெயர்ந்தாக    சொல்கிறார்கள்:grin:

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

நல்ல  இடத்தில

குறிப்பை  ஒருக்கா  காட்டு  ராசா...:grin:

நம்மளை பொறுத்த வரைக்கும் நீதி நேர்மை நியாயம்  இதுதான் தேவை :104_point_left:

  • கருத்துக்கள உறவுகள்

அரச அனுமதி பத்திரத்துடன் அதி விசேஷ  பனஞ்சாராயம் தென்னம் சாராயம் விற்கலாம் அதை வாங்கி அடுத்தவேளை வருமானத்திற்கு வழி இல்லாதவனும் அடுத்த தலைமுறையை வாழவைக்கபோகும் பாடசாலை கல்லூரி மாணவர்களும் போதையேற்றி திரியலாம்கிற நிலமை இருக்கும்போதும் கஞ்சா விற்பனைமட்டும் ஒரு அரசாங்கத்திற்கு எந்தவகையில் சட்டவிரோதம்?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நான் என்ன தப்பா சொன்னன் அவாக்கு கணவன் இல்லையென்றால் பல தொழில்கள் நேர்மையான  தொழில்கள் இருக்கிறது கஞ்சா ஏன் விற்பான்  கஞ்சா விற்றால் குற்றம் குற்றம் தானே இதில் நாம் மனம் நோக தேவையில்லை :unsure:

"செய்யிறது தப்பு,"

"புலாலை மறுத்தால் கொல்வது நின்றுவிடும்."

தனி அவர்களே! நான் நீல வர்ணத்தில் முன்னிலைப்படுத்தித் தவறு எங்கே உள்ளது என்பதைத் தெரிவிக்க முயற்சித்துள்ளேன். (அதாவது, மாமிசத்தை எவரும் உண்ணாது இருந்தால், உயிர்களைக் கொன்று அதனை விற்பவர்களும் இருக்கமாட்டார்கள். அதைபோன்றதே போதைப்பொருள் விற்பனையும். )   

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப்பொறுத்தவரை சமூகத்தை கெடுக்கும் எந்த வேலையென்றாலும் அதை செப்பவருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படவேண்டும் அவர் கணவனை பிரிந்திருக்கலாம் பல பிள்ளைகளுக்கு தாயாக கூட இருக்கலாம் தண்டனை வழங்கப்படவேண்டும். குற்றம் செய்பவர்கள் எல்லோருக்கும் ஒவ்வொரு காரணம் சொல்வார்கள் அதை ஏற்கமுடியாது.   

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Paanch said:

"செய்யிறது தப்பு,"

"புலாலை மறுத்தால் கொல்வது நின்றுவிடும்."

தனி அவர்களே! நான் நீல வர்ணத்தில் முன்னிலைப்படுத்தித் தவறு எங்கே உள்ளது என்பதைத் தெரிவிக்க முயற்சித்துள்ளேன். (அதாவது, மாமிசத்தை எவரும் உண்ணாது இருந்தால், உயிர்களைக் கொன்று அதனை விற்பவர்களும் இருக்கமாட்டார்கள். அதைபோன்றதே போதைப்பொருள் விற்பனையும். )   

ஆனால் தற்போதய நிலைக்கு இது சரிவராது என நினைக்கிறன் அதே புலால் வேறு இடத்திலிருந்து  வருகிறது ருசி பார்க்க ஆட்கள் அதிகம் உள்ளதால் 

கஞ்சா ஓர் மூலிகைச்செடி என்பார்கள் அந்தக்காலத்தில் சிலவற்றை ஆயூர்வேத மருந்துக்கும் பயன்படுத்தினார்கள் தற்போது கூட ஆயுர்வேத வைத்தியசாலைக்கு பிடிபடும் ஒரு பகுதி அனுப்பப்படுவதாக கேள்விப்பட்டேன் உன்மை பொய் தெரியாது இருந்தாசலும் அந்தக்கால ஆசாமிகள் இதை சிவமூலி என அழைப்பார்கள் என கேள்வியும் பட்டிருக்கிறேன்  சிலர் பாலியல் தேவைக்கும் பயன்படுத்துவார்கள் சிலர் பைரவருக்கு ரொட்டி வைப்பதற்கும் பயன்படுத்துவார்கள் 

இது பழைய நம்ம சகாக்கள்  முன்னொரு காலத்தில் அலசியது tw_blush:

 

12 minutes ago, தமிழரசு said:

என்னைப்பொறுத்தவரை சமூகத்தை கெடுக்கும் எந்த வேலையென்றாலும் அதை செப்பவருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படவேண்டும் அவர் கணவனை பிரிந்திருக்கலாம் பல பிள்ளைகளுக்கு தாயாக கூட இருக்கலாம் தண்டனை வழங்கப்படவேண்டும். குற்றம் செய்பவர்கள் எல்லோருக்கும் ஒவ்வொரு காரணம் சொல்வார்கள் அதை ஏற்கமுடியாது.   

ம் உன்மைதான் அரசு அண்ண

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, தமிழரசு said:

என்னைப்பொறுத்தவரை சமூகத்தை கெடுக்கும் எந்த வேலையென்றாலும் அதை செப்பவருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படவேண்டும் அவர் கணவனை பிரிந்திருக்கலாம் பல பிள்ளைகளுக்கு தாயாக கூட இருக்கலாம் தண்டனை வழங்கப்படவேண்டும். குற்றம் செய்பவர்கள் எல்லோருக்கும் ஒவ்வொரு காரணம் சொல்வார்கள் அதை ஏற்கமுடியாது.   

உங்கள் கருத்துக்குத் தலைவணங்குகிறேன். ஆனால் இது சிறீலங்காவுக்குப் பொருந்தாது. குற்றம்புரிபவர்களுக்குப் பாரபட்சமின்றி தண்டனைவழங்கும் நாடாக சிறீலங்கா இருந்திருக்குமேயானால் நான் இன்றும் தாய்மண்ணில் வாழ்ந்திருப்பேன். 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, suvy said:

இந்தப் பெண் ஒரு வெறும் முட்டாள்....! செய்யிறது தப்பு, அதையும் தப்பாய் செய்து கொண்டு ... காசை யாராவது கஞ்சாவுடன் சேர்த்து வைப்பார்களா.....!  tw_blush: 

அது தானே சுவியர்!

ஒரு பேணிக்குள்ள போட்டு.....வாழைக்கிடங்குக்குள்ள தாட்டு வைக்கத் தெரியாது!

  • கருத்துக்கள உறவுகள்

மற்றவர்களில் தவறு கண்டு பிடிப்பதில்....எம்மவர்களை விட்டால் வேறு ஆட்களில்லை!

ஒரு பெண் விபசாரம் செய்கிறாள் என்றால்...அவளுக்குக் கல்லெறிய எமது சமூகம் தவறுவதில்லை!

விபச்சாரியும்....தனக்குச் சந்தை இருப்பதனால் தானே விபச்சாரம் செய்கிறாள் என்ற கோணத்தில்...நாம் என்றும் சிந்திப்பதில்லை!

கணவனைப் பிரிந்து வாழும் அவள் என்ன நிர்ப்பந்தத்தில்...கஞ்சா விற்க நேர்ந்ததோ தெரியாது! அல்லது அவள் விற்கும் கஞ்சாவின் விலையில்...எத்தனை சத வீதம் அவளுக்குப் போகின்றதோ தெரியாது!

சுறாக்களை விட்டு விட்டு.....சூடை மீன்களை மட்டும் பிடித்து.. எமது முதுகுகளில் நாமே தட்டித் திருப்திப் படுத்துக் கொள்கிறோம்!

நாளைக்கு அவளுக்குப் பசிக்கும் போது....அவளுக்கு என்ன வழி வைத்திருக்கிறோம்?

கௌரவமாக அவள் மருந்து குடிக்கலாமா?

ஆள் கடத்துபவன், தன்னிடம் வேலை செய்பவர்களுக்குக் கருவாட்டுச் சம்பளம் மட்டுமே கொடுப்பவன், நாட்பட்டுப் போன பொருட்களுக்கு திகதி லேபலை மாத்தி விற்பவன், வரி என்று ஒன்றை ஒரு நாளும் கட்டாதவன், ( அதே நேரம் வாங்குபவர்களிடம் வரி என்று சொல்லி அதிக விலைக்கு விற்பவன் எல்லாம் பெரிய மனிதர் என்று மதிக்கும்...நாம்..இந்தப் பெண்ணின் செயலையும் ஒரு வித்தியாசமான கோணத்துடன் பார்க்கக் கூடாது?

சமுதாயத்தைக் கெடுக்கிறாள் என்று கூறுவோமானால் ////அரசாங்கமே சிகரட்டும், சாராயமும் விற்கிறதே? இவள் ஒருத்தி தான் சமுதாயத்தைக் கெடுக்கிறாள் போலச் சொல்லப் படுகின்றது!

வாங்குபவர்களின் புத்தி எங்கே போகின்றது?

வீட்டுக் வீடு...கள்ளு..சாராயம் விற்பவர்களை...நாம் ஏன் காட்டிக் கொடுக்கவில்லை?

ஆக...பற்றிப் பிடிக்க ஒரு ஆதாரமில்லாதவள்... ஏதோ கொஞ்சம் வித்தால் மட்டும் நடவடிக்கை எடுக்க முன்னுக்கு நிற்கிறோம்!

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தனிக்காட்டு ராஜா said:

கஞ்சா ஓர் மூலிகைச்செடி என்பார்கள் அந்தக்காலத்தில் சிலவற்றை ஆயூர்வேத மருந்துக்கும் பயன்படுத்தினார்கள் தற்போது கூட ஆயுர்வேத வைத்தியசாலைக்கு பிடிபடும் ஒரு பகுதி அனுப்பப்படுவதாக கேள்விப்பட்டேன் உன்மை பொய் தெரியாது இருந்தாசலும் அந்தக்கால ஆசாமிகள் இதை சிவமூலி என அழைப்பார்கள் என கேள்வியும் பட்டிருக்கிறேன்  சிலர் பாலியல் தேவைக்கும் பயன்படுத்துவார்கள் சிலர் பைரவருக்கு ரொட்டி வைப்பதற்கும் பயன்படுத்துவார்கள் 

அமெரிக்காவில் எனது மாநிலம் உட்பட பல மாநிலங்களில் கஞ்சாவை   சட்டரீதியாக வளர்க்கவும் விற்கவும்   கடந்த ஆண்டில்   இருந்து அனுமதிக்க பட்டுள்ளது.  இரு வகையான அனுமதிகள் உள்ளன. மருத்துவ   பாவனைக்கான அனுமதி மற்றும்    சுகபோக பாவனைக்கான அனுமதி.     இந்த அனுமதிகளை அடுத்து   புதிய வணிகங்களும்    அவற்றை பயிற்றுவிக்கும்   பல்கலைக்கழக   பாடத்திட்டங்களும்   ஆரம்பமாகி   உள்ளன.   மற்ற   நாடுகளும்    இனி வரும்    ஆண்டுகளில்    அமெரிக்காவை   பின்பற்றும்   என்று எதிர்பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Jude said:

அமெரிக்காவில் எனது மாநிலம் உட்பட பல மாநிலங்களில் கஞ்சாவை   சட்டரீதியாக வளர்க்கவும் விற்கவும்   கடந்த ஆண்டில்   இருந்து அனுமதிக்க பட்டுள்ளது.  இரு வகையான அனுமதிகள் உள்ளன. மருத்துவ   பாவனைக்கான அனுமதி மற்றும்    சுகபோக பாவனைக்கான அனுமதி.     இந்த அனுமதிகளை அடுத்து   புதிய வணிகங்களும்    அவற்றை பயிற்றுவிக்கும்   பல்கலைக்கழக   பாடத்திட்டங்களும்   ஆரம்பமாகி   உள்ளன.   மற்ற   நாடுகளும்    இனி வரும்    ஆண்டுகளில்    அமெரிக்காவை   பின்பற்றும்   என்று எதிர்பார்க்கலாம்.

நன்றி தகவலுக்கு மூலிகை என்ற பெயரில் பயிரிடப்படுகிறது ஆனாலு அதன் தேவைகள்வேறு விதமாக பாவிக்கப்ப்டும் போது விபரீதமாகிறது ஜீட்

அமெரிக்கா செய்தால் சரிதானே மற்ற நாடுகளும் பின்பற்றும் ஆனால் இலங்கையிலில் இறக்குமதிதான் அதிகம் காடை விசேட ராணுவம் தற்போதும் அலசி ஆராய்கிறது இதனால் பயிரிட முடியவில்லை கசிப்பு உற்பத்தி என்பவற்றை கண்டு பிடித்துள்ளனர் காட்டுப்பகுதியில் 

  • கருத்துக்கள உறவுகள்

சாதாரணமாகத்தான் நான் அந்தக் கருத்தைப் பகிர்ந்தேன், ஆனால் அது நல்லதொரு விவாதமாக செல்வது நல்லதே.....!

ஆயினும் ஒரு விடயம். பொதுவாக கஞ்சா ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற கான்களில்  பயிரிட்டு அறுவடை செய்யும் பெருந்தொழில் பயிர். ஆனால் இங்கு வருவதும் பிடிபடுவதும் கேரள கஞ்சா என்றே சொல்லப் படுகின்றது.  சிறிலங்காவும்  கேரளாவும் ஸ்ரீமா அம்மையார் காலத்தில் இருந்தே மூட்டுவலியும் மூலிகை வைத்தியமுமாய் முடிவின்றி இன்றுவரை நீடித்துக் கொண்டிருக்கும் அன்னியோன்னியமாக உறவுகள். ஈழத்தமிழரை கொன்று குவித்ததில் மலையாளிகளின் பங்கு அளவிடற்கரியது என்பதை யாவரும் அறிவர்.

நீ ஓயாமல் அழு நான் நோகாமல் அடிக்கிறன் என்பதுபோல் கேரளாவூடாகவே இங்கு கஞ்சா கடத்தப்பட்டு அப்பப்ப கொஞ்சம் பிடிபட்டு , சென்றவாரமும் நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் ஒரு அம்பாரம் கஞ்சா பொதிகள் எரியூட்டப் பட்டன.அப்ப கேரளாவிலும் கஞ்சா விவசாயம் நடைபெறுகின்றதா எனக்குத் தெரியவில்லை. அந்தப் பெண்கூட நினைக்கிற அளவு முட்டாள் அல்ல. இது அப்பப்ப நடக்கும் நடைமுறையென்றுதான் நினைக்கிறன்......!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.