Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்­ட­மைப்பை விமர்­சிப்­ப­வர்­க­ளுக்கு விரைவில் உரிய பதிலை வழங்­குவோம்

Featured Replies

கூட்­ட­மைப்பை விமர்­சிப்­ப­வர்­க­ளுக்கு விரைவில் உரிய பதிலை வழங்­குவோம்

 

 

வட­மா­காண முத­ல­மைச்சர் உட்­பட  கூட்­ட­மைப்­பினை விமர்­சிப்­ப­வர்­க­ளுக்கு  உரிய பதில் வழங்­குவோம் எனத்தெரி­வித்த இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்சித் தலைவர்  மாவை சேனா­தி­ராஜா, ஊரைப்பற்றித் தெரி­யா­த­வர்கள்  ஐ.நா. விட­யங்­களைப் பற்றி பேசு­கின்­றார்கள். நீங்­களும் அவ்­வாறு செயற்­ப­டக்­ கூ­டாது என்றும்  வலி­யு­றுத்­தினார்.

TNA.jpg

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் உள்­ளூ­ராட்சி மன்ற வேட்­பா­ளர்­க­ளு­ட­னான கலந்­து­ரை­யாடல் நேற்று நல்லூர் இளங்­க­லைஞர் மண்­ட­பத்தில் நடை­பெற்­ற­போதே அவர் இதனைத் தெரி­வித்தார்.

அங்கு அவர் மேலும் தெரி­விக்­கையில்,

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்குள் பிரச்­சி­னைகள், சர்ச்­சைகள், கருத்து மோதல்கள் இருந்­தாலும் கூட்­ட­மைப்­புக்குள் உள்ள கட்­சி­களின் தலை­வர்­க­ளிடம் ஒற்­றுமை உள்­ளது. ஒற்­று­மை­யா­கவே செயற்­பட்டு வரு­கின்றோம். இன்றும் உங்கள் முன்னால் வந்­துள்ளோம். உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் புனர்­வாழ்வு பெற்ற முன்னாள் போரா­ளி­களை இணைத்­துள்ளோம். எமது இனத்­திற்­காக, மண்­ணிற்­காக, விடு­த­லைக்­காக சைனைட் குப்பி கட்­டி­ய­வர்கள் இன்று எம்­முடன் இணைந்­துள்­ளார்கள். அவர்­களை ஜன­நா­யகப் பாதையில் கொண்டு செல்­ல­வேண்டும். அதற்­காக அவர்­களை நாம் இணைத்­துள்ளோம். 

வடக்கு கிழக்கில் பல இடங்­க­ளிலும் வேட்­பா­ளர்­க­ளாக அவர்­களை நிய­மித்­துள்ளோம். 

2018ஆம் ஆண்­டுக்­கான வரவு செலவுத் திட்­டத்தில் முன்னாள் போரா­ளி­க­ளுக்­காக மற்றும் பெண் தலை­மைத்­துவக் குடும்­பங்­க­ளுக்­காக பல திட்­டங்­களை உள்­ள­டக்­கி­யுள்ளோம். இவை எமது முயற்­சி­யே­யாகும். புனர்­வாழ்வு பெற்ற போரா­ளி­க­ளுக்­காக அங்­க­வீ­ன­ம­டைந்­த­வர்­க­ளுக்­காக பல திட்­டங்கள் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளன. வடக்கு கிழக்கில் 21 திட்­டங்கள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளன. 

50 ஆயிரம் வீட்­டுத்­திட்டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது. பொருத்து வீடுகள் தொடர்பில் பல சர்ச்­சைகள் உரு­வாக்­கப்­பட்ட நிலையில் அவை தடுத்து நிறுத்­தப்­பட்­டுள்­ளன.

ஊட­கங்­களில் பல உண்­மைக்கு மாறான செய்­திகள் எங்­க­ளுக்கு எதி­ராக வந்து கொண்­டி­ருக்­கின்­றன. இது தொடர்பில் அனை­வரும் அறிந்­தி­ருப்­பீர்கள். வட­மா­காண முத­ல­மைச்சர் கூட தானே கேள்வி எழுதி தானே பதி­ல­ளிக்­கின்ற விட­யத்தில் நாங்கள் மிகவும் கவ­லை­ய­டைந்­துள்ளோம். அதற்­கான பதிலை திட்­ட­வட்­ட­மாக விரைவில் அறி­விப்போம். 

எமது கட்­சியின் செய­லாளர் அதற்குப் பதில் வழங்­குவார் அதன் பின்னர் நாங்கள் பதில் வழங்­குவோம். நாங்கள் இதற்­காக அஞ்­ச­வு­மில்லை. மறைந்­தி­ருக்­க­வு­மில்லை. வர­லாற்றில் அவ்­வா­றான தவ­று­களை நாங்கள் இழைக்­க­வில்லை. எமது இலக்­கு­களை நோக்கிச் சென்று கொண்­டி­ருக்­கின்றோம். 

எங்­களைப் பற்றி விமர்­சிப்­ப­வர்­க­ளுக்கு முத­ல­மைச்­சரோ வேறு யாராக இருந்­தாலோ மக்­க­ளுக்கு முன்னால் தெளி­வான பதிலை வழங்­குவோம். மக்­க­ளுக்கு முன்னால். உண்­மையைப் பேசுவோம். தெளி­வா­கவும் இரா­ஜ­தந்­தி­ர­மா­கவும் எடுத்துச் சொல்வோம். ஒற்­று­மை­யாக எமது இலக்­கு­களை நோக்கிச் செல்வோம். 

தனித் தனிக் கட்­சி­க­ளாகச் சேர்ந்து வாக்­கு­களைக் கேட்­ப­தற்குப் பதி­லாக ஒன்­று­பட்டு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பான ஒரே சின்­னத்­திற்கு வாக்­க­ளிக்கக் கோருவோம். ஊர் விட­யங்­களைத் தெரி­யா­த­வர்கள் ஐ.நா. விட­யங்­களைப் பற்றி பேசு­கின்­றார்கள். அவ்­வா­றா­ன­வற்றை நீங்­களும் செய்­யா­தீர்கள். கிரா­மங்கள் வட்­டா­ரங்­களின் அபி­வி­ருத்­தியை பேச­வேண்டும். உள்­ளூ­ராட்­சியில் அதுவே முக்­கி­ய­மான விட­ய­மாகும்.  

கடந்த உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு அதிக சபை­களைக் கைப்­பற்­றி­ய­போதும் பல விமர்­ச­னங்கள் எழுந்­துள்­ளன. வடக்கு மாகாண சபை­யிலும் நீதி­ய­ரசர், சட்­டத்­த­ர­ணிகள், வைத்­தி­யர்கள் கல்­வி­மான்கள் என இருந்­த­போதும் விமர்­ச­னங்கள் எழுந்த வண்­ணமே இருந்­துள்­ளன. இலங்­கையில் வட­மா­காண சபையைப் போல் வேறு எந்­த­வொரு சபையும் கல்­வி­மான்­களைக் கொண்­டி­ருக்­க­வில்லை. அப்­பி­ரச்­சினை பற்றி பின்னர் பார்ப்போம். இவ்­வா­றான விமர்­ச­னங்கள் இனிவரும் சபைகளில் இடம்பெறக்கூடாது. 

இனிவரும் காலங்களில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு அதிகாரம் அதிகளவில் பகிரப்படவுள்ளன. ஆகவே முறையான நிர்வாகத்தை நடைமுறைப்படுத்த திட்டங்களை வகுக்கவேண்டும். சபைகள் திறம்படச் செயற்படுவதற்கு நாங்கள் பயிற்சிகளை வழங்குவோம். 

மக்களின் தேவைகளை அடையாளம் கண்டு செயலாற்றுபவர்களாக நீங்கள் அனைவரும் மாறவேண்டும். அதற்கேற்ப திட்டங்களை வகுத்து மக்கள் முன்செல்லவேண்டும் என்றார். 

http://www.virakesari.lk/article/28761

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நவீனன் said:

எமது இனத்­திற்­காக, மண்­ணிற்­காக, விடு­த­லைக்­காக சைனைட் குப்பி கட்­டி­ய­வர்கள் இன்று எம்­முடன் இணைந்­துள்­ளார்கள். அவர்­களை ஜன­நா­யகப் பாதையில் கொண்டு செல்­ல­வேண்டும். அதற்­காக அவர்­களை நாம் இணைத்­துள்ளோம். 

தேர்தல் வரும்போது மட்டுமே அவர்கள் தியாகிகள் தேர்தலில் வென்றால் தீவிரவாதிகள் .

தேர்தல் வரும்போது மூச்சுக்கு நூறு தடவை கூட்டமைப்பு வென்றால் எங்கள் டமில் அரசு கட்சி .

2 hours ago, நவீனன் said:

. வட­மா­காண முத­ல­மைச்சர் கூட தானே கேள்வி எழுதி தானே பதி­ல­ளிக்­கின்ற விட­யத்தில் நாங்கள் மிகவும் கவ­லை­ய­டைந்­துள்ளோம்.

உங்கள் வஞ்சகத்தனத்தை அந்தாள் தோலுரித்து காட்டுவது உங்களுக்கு கவலையில்லாமல் நாங்களா கவலைப்படுவது .

 

2 hours ago, நவீனன் said:

எமது கட்­சியின் செய­லாளர் அதற்குப் பதில் வழங்­குவார் அதன் பின்னர் நாங்கள் பதில் வழங்­குவோம். நாங்கள் இதற்­காக அஞ்­ச­வு­மில்லை. மறைந்­தி­ருக்­க­வு­மில்லை. வர­லாற்றில் அவ்­வா­றான தவ­று­களை நாங்கள் இழைக்­க­வில்லை. எமது இலக்­கு­களை நோக்கிச் சென்று கொண்­டி­ருக்­கின்றோம். 

அஞ்சவும் வேண்டாம் மறையவும் வேண்டாம் இதுவரை என்ன நன்மை உங்களால் தமிழர்க்கு ?

வரலாற்றில் பெரும்தவறு உங்களை வெல்ல விட்டு பதவி குடுத்தது .

எந்த இலக்கு என்றால் வசதி ஏற்கனவே சிங்கள படுகொலை ராணுவத்தை எந்த விசாரணையும் இன்றி தப்ப வைத்து விட்டாயிற்று இனி ஒன்றுமே இல்லையே ஒருவேளை தமிழரை சிங்களம் படிப்பித்து புத்த மதத்தில் சேர்ப்பது உங்கள் இலக்காகும் .

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் வந்தால் எல்லாரையும் தேடிப்பிடித்து கட்டியணைப்பீர்கள். முடியமக்கள் உங்களை  சந்திக்க வந்தால் நீங்கள் பேப்பர் வாசிக்கிற    பிஸி, மக்களுக்கு ஏதாவது இக்கட்டான நேரத்தில்,  உதவி  தேவைப்படும்போது  ஆசுபத்திரியில அட்மிட். பெரிசாய் என்ன சொல்லி கிழிக்கப்போறீங்கள்? சொன்ன பொய்யை மெய்யாக்க இன்னொரு பொய்யை அவிழ்ப்பீங்கள். ஐ. நா தெரிஞ்ச வித்துவான் சொல்லுங்கோ. ஐ. நாவில என்ன விடயம் பேசி என்ன தீர்வு எடுத்தநீங்கள் எண்டு. இன்னும் கொஞ்ச காலந்தான் ஏமாத்துவீங்கள். பிறகு ஒரு அப்புகாமியோ, முஸ்தபாவோ வோட்டு கேக்க நீங்கள் கட்டியிருக்கிற வேட்டியை அவிட்டு தலையில சுத்திகொண்டு திரிவியள்.  உங்கட கோவத்தை சிங்களவனிட்டை   முதலில காட்டுங்கோ. இளகினதை கண்டால் தூக்கி தூக்கி அடிப்பீங்கள் எண்டு தெரியும். சும்மா போம் காணும் கதை அளக்காமல். வெளிநாடெல்லாம் போய் முதலமைச்சரை பதவி விலக்க வேணும் எண்டு கூப்பாடு போட்டாரே அவருக்கு எதிராய் என்ன நடவடிக்கை எடுத்தீர் காணும்?  உண்மையை சொன்னால் கோவம் சுருக்கென்று வருகுதோ

  • கருத்துக்கள உறவுகள்
ஊரைப் பற்றித் தெரியாதவர்கள் ஐ.நா பற்றிப் பேசுகின்றனர்! - மாவை காட்டம் 
[Saturday 2017-12-30 09:00]
வட­மா­காண முத­ல­மைச்சர் உட்­பட கூட்­ட­மைப்­பினை விமர்­சிப்­ப­வர்­க­ளுக்கு உரிய பதில் வழங்­குவோம் எனத்தெரி­வித்த இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்சித் தலைவர்  மாவை சேனா­தி­ராஜா, ஊரைப்பற்றித் தெரி­யா­த­வர்கள்  ஐ.நா. விட­யங்­களைப் பற்றி பேசு­கின்­றார்கள். நீங்­களும் அவ்­வாறு செயற்­ப­டக்­ கூ­டாது என்றும்  வலி­யு­றுத்­தினார்.

வட­மா­காண முத­ல­மைச்சர் உட்­பட கூட்­ட­மைப்­பினை விமர்­சிப்­ப­வர்­க­ளுக்கு உரிய பதில் வழங்­குவோம் எனத்தெரி­வித்த இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்சித் தலைவர் மாவை சேனா­தி­ராஜா, ஊரைப்பற்றித் தெரி­யா­த­வர்கள் ஐ.நா. விட­யங்­களைப் பற்றி பேசு­கின்­றார்கள். நீங்­களும் அவ்­வாறு செயற்­ப­டக்­ கூ­டாது என்றும் வலி­யு­றுத்­தினார்.   

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் உள்­ளூ­ராட்சி மன்ற வேட்­பா­ளர்­க­ளு­ட­னான கலந்­து­ரை­யாடல் நேற்று நல்லூர் இளங்­க­லைஞர் மண்­ட­பத்தில் நடை­பெற்­ற­போதே அவர் இதனைத் தெரி­வித்தார்.அங்கு அவர் மேலும் தெரி­விக்­கையில்,

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்குள் பிரச்­சி­னைகள், சர்ச்­சைகள், கருத்து மோதல்கள் இருந்­தாலும் கூட்­ட­மைப்­புக்குள் உள்ள கட்­சி­களின் தலை­வர்­க­ளிடம் ஒற்­றுமை உள்­ளது. ஒற்­று­மை­யா­கவே செயற்­பட்டு வரு­கின்றோம். இன்றும் உங்கள் முன்னால் வந்­துள்ளோம். உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் புனர்­வாழ்வு பெற்ற முன்னாள் போரா­ளி­களை இணைத்­துள்ளோம். எமது இனத்­திற்­காக, மண்­ணிற்­காக, விடு­த­லைக்­காக சைனைட் குப்பி கட்­டி­ய­வர்கள் இன்று எம்­முடன் இணைந்­துள்­ளார்கள். அவர்­களை ஜன­நா­யகப் பாதையில் கொண்டு செல்­ல­வேண்டும். அதற்­காக அவர்­களை நாம் இணைத்­துள்ளோம்.

வடக்கு கிழக்கில் பல இடங்­க­ளிலும் வேட்­பா­ளர்­க­ளாக அவர்­களை நிய­மித்­துள்ளோம். 2018ஆம் ஆண்­டுக்­கான வரவு செலவுத் திட்­டத்தில் முன்னாள் போரா­ளி­க­ளுக்­காக மற்றும் பெண் தலை­மைத்­துவக் குடும்­பங்­க­ளுக்­காக பல திட்­டங்­களை உள்­ள­டக்­கி­யுள்ளோம். இவை எமது முயற்­சி­யே­யாகும். புனர்­வாழ்வு பெற்ற போரா­ளி­க­ளுக்­காக அங்­க­வீ­ன­ம­டைந்­த­வர்­க­ளுக்­காக பல திட்­டங்கள் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளன. வடக்கு கிழக்கில் 21 திட்­டங்கள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளன.

50 ஆயிரம் வீட்­டுத்­திட்டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது. பொருத்து வீடுகள் தொடர்பில் பல சர்ச்­சைகள் உரு­வாக்­கப்­பட்ட நிலையில் அவை தடுத்து நிறுத்­தப்­பட்­டுள்­ளன. ஊட­கங்­களில் பல உண்­மைக்கு மாறான செய்­திகள் எங்­க­ளுக்கு எதி­ராக வந்து கொண்­டி­ருக்­கின்­றன. இது தொடர்பில் அனை­வரும் அறிந்­தி­ருப்­பீர்கள். வட­மா­காண முத­ல­மைச்சர் கூட தானே கேள்வி எழுதி தானே பதி­ல­ளிக்­கின்ற விட­யத்தில் நாங்கள் மிகவும் கவ­லை­ய­டைந்­துள்ளோம். அதற்­கான பதிலை திட்­ட­வட்­ட­மாக விரைவில் அறி­விப்போம்.

எமது கட்­சியின் செய­லாளர் அதற்குப் பதில் வழங்­குவார் அதன் பின்னர் நாங்கள் பதில் வழங்­குவோம். நாங்கள் இதற்­காக அஞ்­ச­வு­மில்லை. மறைந்­தி­ருக்­க­வு­மில்லை. வர­லாற்றில் அவ்­வா­றான தவ­று­களை நாங்கள் இழைக்­க­வில்லை. எமது இலக்­கு­களை நோக்கிச் சென்று கொண்­டி­ருக்­கின்றோம்.

எங்­களைப் பற்றி விமர்­சிப்­ப­வர்­க­ளுக்கு முத­ல­மைச்­சரோ வேறு யாராக இருந்­தாலோ மக்­க­ளுக்கு முன்னால் தெளி­வான பதிலை வழங்­குவோம். மக்­க­ளுக்கு முன்னால். உண்­மையைப் பேசுவோம். தெளி­வா­கவும் இரா­ஜ­தந்­தி­ர­மா­கவும் எடுத்துச் சொல்வோம். ஒற்­று­மை­யாக எமது இலக்­கு­களை நோக்கிச் செல்வோம்.

தனித் தனிக் கட்­சி­க­ளாகச் சேர்ந்து வாக்­கு­களைக் கேட்­ப­தற்குப் பதி­லாக ஒன்­று­பட்டு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பான ஒரே சின்­னத்­திற்கு வாக்­க­ளிக்கக் கோருவோம். ஊர் விட­யங்­களைத் தெரி­யா­த­வர்கள் ஐ.நா. விட­யங்­களைப் பற்றி பேசு­கின்­றார்கள். அவ்­வா­றா­ன­வற்றை நீங்­களும் செய்­யா­தீர்கள். கிரா­மங்கள் வட்­டா­ரங்­களின் அபி­வி­ருத்­தியை பேச­வேண்டும். உள்­ளூ­ராட்­சியில் அதுவே முக்­கி­ய­மான விட­ய­மாகும்.

கடந்த உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு அதிக சபை­களைக் கைப்­பற்­றி­ய­போதும் பல விமர்­ச­னங்கள் எழுந்­துள்­ளன. வடக்கு மாகாண சபை­யிலும் நீதி­ய­ரசர், சட்­டத்­த­ர­ணிகள், வைத்­தி­யர்கள் கல்­வி­மான்கள் என இருந்­த­போதும் விமர்­ச­னங்கள் எழுந்த வண்­ணமே இருந்­துள்­ளன. இலங்­கையில் வட­மா­காண சபையைப் போல் வேறு எந்­த­வொரு சபையும் கல்­வி­மான்­களைக் கொண்­டி­ருக்­க­வில்லை. அப்­பி­ரச்­சினை பற்றி பின்னர் பார்ப்போம். இவ்­வா­றான விமர்­ச­னங்கள் இனிவரும் சபைகளில் இடம்பெறக்கூடாது.

இனிவரும் காலங்களில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு அதிகாரம் அதிகளவில் பகிரப்படவுள்ளன. ஆகவே முறையான நிர்வாகத்தை நடைமுறைப்படுத்த திட்டங்களை வகுக்கவேண்டும். சபைகள் திறம்படச் செயற்படுவதற்கு நாங்கள் பயிற்சிகளை வழங்குவோம். மக்களின் தேவைகளை அடையாளம் கண்டு செயலாற்றுபவர்களாக நீங்கள் அனைவரும் மாறவேண்டும். அதற்கேற்ப திட்டங்களை வகுத்து மக்கள் முன்செல்லவேண்டும் என்றார்.http://www.seithy.com/breifNews.php?newsID=196577&category=TamilNews&language=tamil

  • தொடங்கியவர்
  • ஊர் விடயம் அறியாதவர்கள் ஐ.நா. பற்றிப் பேசுகின்றனர் -மாவை எம்.பி.
ஊர் விடயம் அறியாதவர்கள் ஐ.நா. பற்றிப் பேசுகின்றனர் -மாவை எம்.பி.
 
 

ஊர் விடயம் அறியாதவர்கள் ஐ.நா. பற்றிப் பேசுகின்றனர் -மாவை எம்.பி.

 

ஊர் விட­யங்­களை அறி­யா­த­வர்­கள் எல்­லாம் ஐ.நா. பற்­றிக் கதைப்­பது வேடிக்­கை­யாக உள்­ளது என்று கூறி­னார் தமிழ் அர­சுக் கட்­சி­யின் தலை­வ­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை. சோ. சேனா­தி­ராஜா.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­தல் வேட்­பா­ளர்­க­ளுக்­கான கூட்­டம் நேற்று நல்­லூர் இளங்­க­லை­ஞர் மண்­ட­பத்­தில் நடை­பெற்­றது.
அதில் உரை­யாற்­றும்­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.அவர் தெரி­வித்­தா­வது-,

வேட்­பா­ளர்­கள் தமது கட்­சி­க­ளின் வொள்­கை­கள், நிலைப்­பா­டு­கள் தொடர்­பாக மக்­க­ளின் வீடு, வீடா­கச் சென்று பரப்­பு­ரை­கள் மேற்­கொள்­ளாது தமது சொந்­தத் தகுதி நிலை­கள், கல்வி, அனு­ப­வம் என்­பற்­றைக் குறிப்­பிட்டு மக்­க­ளுக்கு எவ்­வாறு சேவை­யாற்ற முடி­யும் என்­பது தொடர்­பான விளக்­கங்­க­ளைக் கூற முடி­யும்.

வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் தாமா­கக் கேள்­வி­க­ளைக் தொகுத்­துத் தானே பதிலை ஊட­கங்­க­ளுக்கு அனுப்­பு­கின்­றார். அண்­மை­யில் முத­ல­மைச்­சர் வெளி­யிட்ட அறிக்­கைக்­குத் தக்க பதி­லடி விரை­வில் கொடுக்­கப்­ப­டும்.

தேர்­த­லில் கள­மி­றங்­கி­யுள்ள தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் வேட்­பா­ளர்­கள் மன­தில் நம்­பிக்­கை­யு­டன் தேர்­தலை எதிர்­கொள்­ளுங்­கள். நாம் வெல்­வது உறுதி என்ற நம்­பிக்­கை­யு­டன் பய­ணிப்­போம். – என்­றார்.

http://newuthayan.com/story/58996.html

  • கருத்துக்கள உறவுகள்

 

17 minutes ago, நவீனன் said:

நாம் வெல்­வது உறுதி

வென்று....?   என்னத்தை சாதிக்கப் போறீங்கள்? 

  • கருத்துக்கள உறவுகள்

அந்த ஐ நாவில் வடகிழக்கு தமிழருக்கு நியாயம் வாங்கிதருவம் என்றுதானே வோட்டு கேட்டு பதவியில் அமர்ந்த பின் ஐநாவையே மறந்துவிட்டு உங்க குடும்பம் மட்டும் வாழ்ந்தால் காணும் என்று இருந்தநீங்கள்.மறதி வைத்தியரிடம் டமில் அரசு கூட்டத்தை ஏத்தி இறக்கணும் .

  • தொடங்கியவர்

தானே கேள்வி எழுப்பி, தானே பதில் அளிக்கும் வட. முதலமைச்சருக்கு பதிலடி கொடுப்போம்!

 

எமக்கு எதிராக தானே கேள்வி எழுப்பி, தானே பதில் அளித்து வரும் வடக்கு முதலமைச்சருக்கு, தக்க நேரத்தில் பதிலடி கொடுப்போம் என, இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

தானே கேள்வி எழுப்பி, தானே பதில் அளிக்கும் வட. முதலமைச்சருக்கு பதிலடி கொடுப்போம்!

உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வு, நேற்று நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
எமது கூட்டமைப்புக்குள் சில சில சர்ச்சைகள் இருந்தாலும், நாம் தெட்டத்தெளிவாக இணைந்திருக்கிறோம் என்பதை அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும். அவ்வாறே இணைந்து தேர்தலை எதிர்கொள்கிறோம். அண்மையில் பத்திரிகைகளில் எமக்கு எதிராக செய்திகள் வந்துள்ளது. எமது வடக்கு மாகாண முதலமைச்சர் பொரிய கட்டுரைகளை எமக்கு எதிராக எழுதி வெளியிடுகிறார். தானே கேள்வி எழுப்பி தானே பதில் அளித்து வருகிறார் என்ற விடயத்தில் நாம் பெரிதும் கவலையடைந்துள்ளோம். அதற்காக முதலில் எமது கட்சியின் செயலாளர் பதிலளிப்பார். பின்னர் முதலமைச்சருக்கு திட்டவட்டமாக உரிய நேரத்தில் பதில் அறிவிப்போம்.

எமது இலக்குகளை நோக்கி செல்வதில் நாம் யாருக்கும் அஞ்சவில்லை, பொய்யுரைக்கவில்லை வரலாற்றில் அவ்வாறு தவறு இழைக்கவில்லை. பொய்யுரைகளுக்கும் விமர்சனங்களுக்கும் தக்க நேரத்தில் தெளிவாக பதில் கொடுப்போம். அது யாராக இருந்தாலும் பரவாயில்லை பதில் அளிப்போம்.

மக்கள் முன்னால் உண்மை பேசவும், நடைமுறையைப் பேசவும் இராஜதந்திரத்தை எடுத்துச்சொல்லவும், ஒற்றுமையாக செய்ய வேண்டிய எமது பணியை நிறைவேற்ற நாம் உரிய பதிலளிப்போம்.

மேலும் எமது வேட்பாளர்கள் புதிய தேர்தல் முறையில் கடைமைகளை சரியாக செய்யுங்கள். உள்ளுராட்சி தேர்தலில் 25 வீதம் பெண்கள் தெரிவு இருக்க வேண்டும். ஆனால் அதற்கு கூடுதலாகவும் அவர்களின் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும். தேர்தலில் வாக்களிப்பதற்கு, அவர்களை நாம் உற்சாகப்படுத்துகிறோம். ஆனால் பிரதிநிதிகளாக இருப்பது குறைவாகவே உள்ளது. பெண்களை வெற்றி பெற வைக்க வேண்டும். முன்னாள் போராளிகள், எமது அணியில் இணைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களை எங்களோடு இணைத்து, ஜனநாயக பாதைக்கு அழைத்துள்ளோம்.
வரவு செலவு திட்டத்தில், முன்னாள் போராளிகள், பெண்தலைமைத்துவ குடும்பங்கள், போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கென, அவர்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

வட கிழக்கு அபிவிருத்திக்கு என எமது முயற்சியால் 21 திட்டங்கள் விசேடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 50 ஆயிரம் வீட்டுத்திட்டம் கிடைக்கவுள்ளது. பொருத்து வீட்டு திட்டம் நிறுத்தியுள்ளோம். இவை ஊடாக நாம் எமது தேசத்தை கட்டியெழுப்ப என்ன நடவடிக்கைகள் எடுத்தோம் என்பது தெரியும்.

தமது ஊரைப்பற்றியும், பிரதேசத்தை பற்றியும் அறியாத பலர், ஐ.நா பற்றி பேசுகிறர்கள். அரசியல் பற்றி தெரிவது எவ்வாறு முக்கியமோ, அதே போல் அபிவிருத்தியைப் பற்றியும் அதிகம் தெரிந்திருக்க வேண்டும்.

எமது சபைகள்கடந்த காலத்தில் வினைத்திறனுடன் இயக்கவில்லை என்ற கருத்து உள்ளது. அதை கவனத்தில் கொள்ள வேண்டும். முக்கியமாக பெண்கள் இளைஞர்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட்டு தெரிவுசெய்யப்படும் வேட்பாளர்களுக்கு பயிற்சி அளிக்கவுள்ளோம். அதன் மூலம் வினைத்திறனான நிர்வாகத்தை உருவாக்குவோம்.

தற்போதுள்ள கூட்டாட்சி ஒன்றாக இருக்குமோ என்பது எமக்கு தெரியாது. ஆனால் நாம் ஒன்றாக இருக்க வேண்டும். அவர்கள் பிளவு பட்டாலும் நாம் ஒன்றாக இருக்க வேண்டும். நம்பிக்கையோடு எமது முயற்சிகளை அணுக வேண்டும். அவ்வாறே எமது அரசியல் இலக்கை, கொண்டு செல்ல வேண்டும். நம்பிக்கையுடன் போராட வேண்டும். என மேலும் தெரிவித்தார்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/CM-question-itself-is-raised-north-itself-answers

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நவீனன் said:

முன்னாள் போரா­ளி­களை இணைத்­துள்ளோம். எமது இனத்­திற்­காக, மண்­ணிற்­காக, விடு­த­லைக்­காக சைனைட் குப்பி கட்­டி­ய­வர்கள் இன்று எம்­முடன் இணைந்­துள்­ளார்கள். அவர்­களை ஜன­நா­யகப் பாதையில் கொண்டு செல்­ல­வேண்டும். அதற்­காக அவர்­களை நாம் இணைத்­துள்ளோம். 

தேர்தல்  காலம் என்றாலும்

எப்படி  முடிகிறது  இவர்களால் இவ்வாறு நாவாட்ட....???tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்

 ஊரைபற்றி தெரிந்தவர்கள்தான் ஐநா பற்றி பேசலாம் என்றால்.... 

ஊரைபற்றி தெரியாத வைகோ அன்புமணி போன்றவர்கள்தான் எமக்காய் ஐநா மன்றத்தில் பேசி இருக்கின்றனர், ஊரைபற்றி தெரிந்த நீங்கள்  இலங்கை பாராளுமன்றத்தில்கூட எமது பிரச்சனைபற்றி அவர்கள் அளவிற்கு பேசியதில்லை ஐயா!

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nochchi said:
ஊரைப் பற்றித் தெரியாதவர்கள் ஐ.நா பற்றிப் பேசுகின்றனர்! - மாவை காட்டம் 
[Saturday 2017-12-30 09:00]

வட­மா­காண முத­ல­மைச்சர் உட்­பட கூட்­ட­மைப்­பினை விமர்­சிப்­ப­வர்­க­ளுக்கு உரிய பதில் வழங்­குவோம் எனத்தெரி­வித்த இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்சித் தலைவர் மாவை சேனா­தி­ராஜா, ஊரைப்பற்றித் தெரி­யா­த­வர்கள் ஐ.நா. விட­யங்­களைப் பற்றி பேசு­கின்­றார்கள். நீங்­களும் அவ்­வாறு செயற்­ப­டக்­ கூ­டாது என்றும் வலி­யு­றுத்­தினார்.   

 

ஊரைத்தெரிந்து நீங்கள்  சாதித்தது என்ன?

பங்களாக்களும் குடும்பத்துக்கு பதவிகளும்

தமிழர் முதுகில்   50 வருடசவாரியும் தானே..

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, விசுகு said:

ஊரைத்தெரிந்து நீங்கள்  சாதித்தது என்ன?

பங்களாக்களும் குடும்பத்துக்கு பதவிகளும்

தமிழர் முதுகில்   50 வருடசவாரியும் தானே..

நீங்க என்னதான் சொன்னாலும் நாங்க மக்கள் அவர்கள் பொய்ய்கும் பித்தலாட்டத்திற்கும் பின்நிற்கிறார்கள் இவர்களை ஒருத்ரம் மாற்றி அவர்களுக்கு தண்டனை கொடுக்க நினைக்காதவரைக்கும் மக்கள் தலையிம் மிளகாய் என்ன தேங்காயை வைத்து அரைபார்கள் இவர்களும் எதுவும் பெற்று தர போவதில்லை தமிழ் ம்க்களுக்கு ஆனால் இவர்களை பதவியில் இருந்து இறக்க வேண்டும் ஆதையாவது மக்கள் செய்வார்கள் என்று பார்த்தால் எம்மின மக்களை அந்த இறைவன் வந்தாலும் காப்பாற்ற முடியாது 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, valavan said:

 ஊரைபற்றி தெரிந்தவர்கள்தான் ஐநா பற்றி பேசலாம் என்றால்.... 

ஊரைபற்றி தெரியாத வைகோ அன்புமணி போன்றவர்கள்தான் எமக்காய் ஐநா மன்றத்தில் பேசி இருக்கின்றனர், ஊரைபற்றி தெரிந்த நீங்கள்  இலங்கை பாராளுமன்றத்தில்கூட எமது பிரச்சனைபற்றி அவர்கள் அளவிற்கு பேசியதில்லை ஐயா!

நட்சத்திர கருத்து .

Edited by பெருமாள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.