Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுமந்திரன் எம்.பி பங்கேற்கவிருந்த லண்டன் கூட்டம் திடீரென இரத்து.!

Featured Replies

சுமந்திரன் எம்.பி பங்கேற்கவிருந்த லண்டன் கூட்டம் திடீரென இரத்து.!

 

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இலண்டன் கிளையின் ஏற்பாட்டில் அரசியல் தீர்வுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வியூகம் என்னும் தலைப்பில் லண்டனில் நடைபெறவிருந்த புலம்பெயர்ந்தவர்களுடனான கலந்துரையாடல் திடீரென இரத்து செய்யப்பட்டுள்ளது.

Image result for சுமந்திரன் எம்.பி

கடந்த வெள்ளிக்கிழமை மலையில் லண்டனில் மேற்படி கூட்டம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்,ஏ.சுமந்திரனின் பங்கேற்புடன் நடைபெறவிருந்தது. இருப்பினும் அநாமதேய தரப்பினரின் எதிர்மறையான அறிவிப்புக்கள் மற்றும் பிரசாரங்களை அடுத்து வீணான குழப்பங்களை தவிர்த்துக்கொள்ளும் வகையில் மேற்படி கூட்டம் இறுதி தருணத்தில் இரத்துச் செய்யப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளதாக லண்டன் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதேவேளை, இன்றும் நாளையும் சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பிலான கலந்துரையாடலொன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கனடா கிளையின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக சுமந்திரன் எம்.பி லண்டனில் இருந்து நேற்று கனடா நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளதாக அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. 

http://www.virakesari.lk/article/29733

  • கருத்துக்கள உறவுகள்

நாடு நாடாய் திரிந்து கல்லெறி வேண்டுவதே பிழைப்பாய் போச்சு .

  • கருத்துக்கள உறவுகள்

 

பாதுகாப்பு போதாமல் இருந்திருக்குமோ?

  • கருத்துக்கள உறவுகள்

அவருக்கு கனடா பாதுகாப்பான நாடு... சி.டி.சி பொங்கலில் மனுசம் வாயெல்லாம் பல்லாக இருக்குது....இந்த பொங்கலில் ரூபவாகினிக்குப்பதில்...சுமந்திரன் வந்தார்.....அவ்வளவுதான்...கனடாவிலை கூத்தமைப்பை அசக்கேலாது...அதுவும் பொங்கலிலை...15க்கு மேற்பட்ட பொலிசு அதிகாரிகள் ..வந்தவை....அய்யாவும் வந்த அரசியல் வாதிகளிடம்...எங்கடை பிரச்சினை தீர்த்தாயிற்று என்று அய்யா அடித்துச் சொன்னவர்....சி.ரி.சி காரரும் கைதட்டி  வரவேற்றவை.... எப்படியும் தெருக்கூத்துக்கு.....சிங்கள டான்சு இருக்கும்...

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

அவருக்கு கனடா பாதுகாப்பான நாடு... சி.டி.சி பொங்கலில் மனுசம் வாயெல்லாம் பல்லாக இருக்குது....இந்த பொங்கலில் ரூபவாகினிக்குப்பதில்...சுமந்திரன் வந்தார்.....அவ்வளவுதான்...கனடாவிலை கூத்தமைப்பை அசக்கேலாது...அதுவும் பொங்கலிலை...15க்கு மேற்பட்ட பொலிசு அதிகாரிகள் ..வந்தவை....அய்யாவும் வந்த அரசியல் வாதிகளிடம்...எங்கடை பிரச்சினை தீர்த்தாயிற்று என்று அய்யா அடித்துச் சொன்னவர்....சி.ரி.சி காரரும் கைதட்டி  வரவேற்றவை.... எப்படியும் தெருக்கூத்துக்கு.....சிங்கள டான்சு இருக்கும்...

 டொராண்டோ தான் ஐயாவுக்கு பாதுகாப்பு மொன்றியல் ,வன்கூவர் போன்ற இடங்களில் இருந்து   டமில் அரசு விசுவாசிகள் அழைப்பு என்று விட்டால்  டான்சு கூத்து என்று சும்மை கூப்பிட்டு   வரவிட்டு செருப்பு மாலை போட்டு வாழ்த்தலாம் .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ இவரை தேர்வு செய்து பாராளுமன்றத்துக்கு அனுப்பிய யாழ்மக்களை என்ன சொல்லி திட்டலாம்? அவர்களும் அதே மனநிலை உள்ளவர்கள் என்று சொல்லிவிடலாமா?

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, பெருமாள் said:

 டொராண்டோ தான் ஐயாவுக்கு பாதுகாப்பு மொன்றியல் ,வன்கூவர் போன்ற இடங்களில் இருந்து   டமில் அரசு விசுவாசிகள் அழைப்பு என்று விட்டால்  டான்சு கூத்து என்று சும்மை கூப்பிட்டு   வரவிட்டு செருப்பு மாலை போட்டு வாழ்த்தலாம் .

அய்யா இங்கும் இதுதான் வேண்டும்....காட்டிக்கொடுப்போர் அதிமிகு இடம் டொரொன்ரோ.....அதைவிட சி.டி.சி..காரர் தேசிய அரசியல் விருப்பகாரர்....சிங்கள நட்புக்கூடிய விசுவாசிகள்.....ஆரம்பத்தில் புலி விசுவாசம் காரணமாக கொடுத்த நூறு டொலர்களே லட்சக் கணக்கில்வரும் .....அன்பளிப்புகள்... வேற கணக்கு..... ஆட்டம் போடலாம்தானே...

 

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, valavan said:

அப்போ இவரை தேர்வு செய்து பாராளுமன்றத்துக்கு அனுப்பிய யாழ்மக்களை என்ன சொல்லி திட்டலாம்? அவர்களும் அதே மனநிலை உள்ளவர்கள் என்று சொல்லிவிடலாமா?

பக்கத்து நாட்டிலை மோடியை தெரிவு செய்த சனமே தங்களை தாங்களே திட்டுவது போல் இதுவும் .

நாங்கள் அப்பவே இவரை தெரிவு செய்ய வேண்டாம் என்று கத்த சனம் இவர் செய்வார் என்று நம்பி வாக்கு போட்டு அனுப்பியது இப்ப விளங்கிவிட்டுது சனத்துக்கு சொந்த ஊரிலும் கல்லெறி வேண்டிக்கொண்டு வடமராட்சி பக்கம் எட்டியும் பார்க்க முடியாது சரி வெளிநாட்டில் என்று இங்கு வந்தால் இங்கும் சனம் கல்லுடன் நிக்குது .

 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, பெருமாள் said:

பக்கத்து நாட்டிலை மோடியை தெரிவு செய்த சனமே தங்களை தாங்களே திட்டுவது போல் இதுவும் .

 

மோடி ஒரேயொரு தடவைதான் தெரிவு அங்குள்ள மக்களால் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார், ஆனால் சுமந்திரன் இரண்டுமுறை யாழ் வாக்காளர்களால் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்களே பெருமாள்? 

ஒருவேளை சிங்களவன் இரண்டாவது தேர்தலில் சுமந்திரனுக்கு ஆதரவா கள்ள வாக்கு போட்டுவிட்டானோ தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, valavan said:

மோடி ஒரேயொரு தடவைதான் தெரிவு அங்குள்ள மக்களால் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார், ஆனால் சுமந்திரன் இரண்டுமுறை யாழ் வாக்காளர்களால் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்களே பெருமாள்? 

ஒருவேளை சிங்களவன் இரண்டாவது தேர்தலில் சுமந்திரனுக்கு ஆதரவா கள்ள வாக்கு போட்டுவிட்டானோ தெரியவில்லை.

உங்களின் பதில் சிரிப்புத்தான் வருகிறது முதலில் சுமத்திரன் எப்படி இரண்டுமுறை என்பதை அறிந்துவிட்டு வாருங்கள் இங்கு .

1 hour ago, valavan said:

அப்போ இவரை தேர்வு செய்து பாராளுமன்றத்துக்கு அனுப்பிய யாழ்மக்களை என்ன சொல்லி திட்டலாம்? அவர்களும் அதே மனநிலை உள்ளவர்கள் என்று சொல்லிவிடலாமா?

எதோ எழுத வேணும் என்பதுக்காக எழுதுவது போல் உள்ளது .

  • தொடங்கியவர்

சுமந்திரன் தேசிய பட்டியல் மூலமே 2010 இல் பாராளுமன்றம் போனார்.

2015 இல்தான் தேர்தல் மூலம் வெற்றி பெற்றார்

7 minutes ago, valavan said:

மோடி ஒரேயொரு தடவைதான் தெரிவு அங்குள்ள மக்களால் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார், ஆனால் சுமந்திரன் இரண்டுமுறை யாழ் வாக்காளர்களால் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்களே பெருமாள்? 

 

 

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

உங்களின் பதில் சிரிப்புத்தான் வருகிறது முதலில் சுமத்திரன் எப்படி இரண்டுமுறை என்பதை அறிந்துவிட்டு வாருங்கள் இங்கு .

அப்போ இன்னொருமுறை தமிழர்களால் சுமந்திரன் பாராளுமன்றத்துக்கு அனுப்பபடவேமாட்டார் என்று உறுதியாக சொல்வீர்களா நீங்கள் பெருமாள்?

3 minutes ago, பெருமாள் said:

 

எதோ எழுத வேணும் என்பதுக்காக எழுதுவது போல் உள்ளது .

அப்படியெல்லாம் இல்லை , சும்மா கருத்தாடல் செய்யலாம் என்பதற்காகவே, உங்களுக்கு பிடிக்கவில்லையென்றால் சொல்லுங்கள் நான் இதில் இருந்து விலகி கொள்கிறேன்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 minutes ago, valavan said:

அப்போ இன்னொருமுறை தமிழர்களால் சுமந்திரன் பாராளுமன்றத்துக்கு அனுப்பபடவேமாட்டார் என்று உறுதியாக சொல்வீர்களா நீங்கள் பெருமாள்?

இவர்தான் அடுத்தமுறையும் வெல்லுவார். ஏனெண்டால் சனத்துக்கு வேறை வழியில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, valavan said:

அப்போ இன்னொருமுறை தமிழர்களால் சுமந்திரன் பாராளுமன்றத்துக்கு அனுப்பபடவேமாட்டார் என்று உறுதியாக சொல்வீர்களா நீங்கள் பெருமாள்?

ஜனநாயகம் கேலிகூத்தாகி பலவருடங்கள் ஆகிவிட்டன மக்களுக்கு சுமத்திரன் தேவையில்லாட்டியும் சொறிலங்கா அரசுக்கும் எம் பிரச்சினையில் குளிர் காயும் நாடுகளுக்கும் சுமத்திரன் தேவை அது தெரிந்துதான் குளிர்விட்டு ஆடுது இன்னுமொரு முறை சுமத்திரன் வரலாம் வரவும் கூடும் ஆனால் டமில் அரசு கட்சி ஈப்பிட்டிப்பி போல் ஒதுக்கபட்ட கட்சியாக இருக்கும் .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

இவர்தான் அடுத்தமுறையும் வெல்லுவார். ஏனெண்டால் சனத்துக்கு வேறை வழியில்லை.

ஏன் குமாரசாமி அண்ணா, சுமந்திரன் மட்டுமே தமிழர்களால் இலங்கை பாராளுமன்றத்துக்கு அனுப்பபடகூடிய  யாழில் இருக்கும் ஒரேயொரு தகுதியுள்ளவரா?

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, valavan said:

 

அப்படியெல்லாம் இல்லை , சும்மா கருத்தாடல் செய்யலாம் என்பதற்காகவே, உங்களுக்கு பிடிக்கவில்லையென்றால் சொல்லுங்கள் நான் இதில் இருந்து விலகி கொள்கிறேன்!

எனக்கு பிடிக்கவில்லை என்பதல்ல முக்கியம் இங்கு ஆக்க பூர்வமான கருத்தாடலை எதிர்பார்க்கிறன்

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

எனக்கு பிடிக்கவில்லை என்பதல்ல முக்கியம் இங்கு ஆக்க பூர்வமான கருத்தாடலை எதிர்பார்க்கிறன்

புரிந்துகொண்டேன் :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 minutes ago, valavan said:

ஏன் குமாரசாமி அண்ணா, சுமந்திரன் மட்டுமே தமிழர்களால் இலங்கை பாராளுமன்றத்துக்கு அனுப்பபடகூடிய  யாழில் இருக்கும் ஒரேயொரு தகுதியுள்ளவரா?

கூனோ குருடோ.....அன்று தொடக்கம் படித்த அரசியல்வாதிகளைத்தான் மக்கள் பாராளுமன்றத்திற்கு அனுப்பியுள்ளார்கள். அனுப்பிக்கொண்டேயிருக்கின்றார்கள்.

அந்த அரசியல்வாதிகளோ வந்த சந்தர்ப்பங்களை தவற விட்டுக்கொண்டேயிருக்கின்றார்கள்.

இந்தமுறையாவது நல்லது நடக்கும் என்ற நப்பாசையில் பெயர்பெற்ற கட்சிக்கே தொடர்ந்தும் வாக்களிக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சந்தர்ப்பங்களை தவறவிடுவது, யாழ் வாக்காளர்களா அவர்கள் தேர்வு செய்யும் அரசியல்வாதிகளா?

Edited by valavan

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, valavan said:

அப்போ இவரை தேர்வு செய்து பாராளுமன்றத்துக்கு அனுப்பிய யாழ்மக்களை என்ன சொல்லி திட்டலாம்? அவர்களும் அதே மனநிலை உள்ளவர்கள் என்று சொல்லிவிடலாமா?

 

6 hours ago, நவீனன் said:

சுமந்திரன் தேசிய பட்டியல் மூலமே 2010 இல் பாராளுமன்றம் போனார்.

2015 இல்தான் தேர்தல் மூலம் வெற்றி பெற்றார்

 

நவீனன் செய்திகளை மட்டும் இணைக்காமல் கருத்துக்களை எழுத ஆரம்பிப்பது (அரசியல்) அவரின் அரசியல் பின்னணியை அறிய ஆவலை ஏற்படுத்தியுள்ளது.

6 hours ago, valavan said:

சந்தர்ப்பங்களை தவறவிடுவது, யாழ் வாக்காளர்களா அவர்கள் தேர்வு செய்யும் அரசியல்வாதிகளா?

ஏன் கனடாவில் சரியாக தெரிந்து அனுப்பிய மாதிரில்லலோ உங்கள் கதை போகிறது

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nunavilan said:

நவீனன் செய்திகளை மட்டும் இணைக்காமல் கருத்துக்களை எழுத ஆரம்பிப்பது (அரசியல்) அவரின் அரசியல் பின்னணியை அறிய ஆவலை ஏற்படுத்தியுள்ளது.

கேட்டது வேறை ஆளை ஆனால் நவீனன் முந்திக்கொண்டு பதில் தந்தது ஒரு நெருடல் .

  • தொடங்கியவர்

வணக்கம் நுணா,

எனக்கு எந்த அரசியல் பின்னனியும் இல்லை முன்னனியும் இல்லை.

பொதுவாக பலரும் அறிந்த விடயத்தை எழுதினேன் அவ்வளவுதான்.

இதுக்கு எல்லாம் என்ன அரசியல் பின்னனி இருந்தால்தான் எழுதவேண்டுமா.:unsure:

 

4 hours ago, nunavilan said:

 

நவீனன் செய்திகளை மட்டும் இணைக்காமல் கருத்துக்களை எழுத ஆரம்பிப்பது (அரசியல்) அவரின் அரசியல் பின்னணியை அறிய ஆவலை ஏற்படுத்தியுள்ளது.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, valavan said:

அப்போ இவரை தேர்வு செய்து பாராளுமன்றத்துக்கு அனுப்பிய யாழ்மக்களை என்ன சொல்லி திட்டலாம்? அவர்களும் அதே மனநிலை உள்ளவர்கள் என்று சொல்லிவிடலாமா?

உங்களது   நாரதக்கேள்விக்கு  பதில்க்கேள்வி

தமிழர்கள்  வேறு  எவரை  தற்போது தெரிவு  செய்யமுடியும்????

அவர்களை  தெரிவு  செய்வதால் ஏற்படும் தாக்கத்தை  சுமக்க

தமிழர்கள் சொந்தக்காலில் நிற்கிறார்களா??

அறவட்டிக்கு  சில வேளை  நாம் பணம் எடுப்பதில்லையா?

வட்டிக்கு  தந்தவனை திட்டினாலும் 

காலம் வரும்வரை....?

அப்படி  எடுத்துக்கொள்ளவேண்டியது தான்tw_dissapointed_relieved:

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, valavan said:

சந்தர்ப்பங்களை தவறவிடுவது, யாழ் வாக்காளர்களா அவர்கள் தேர்வு செய்யும் அரசியல்வாதிகளா?

நீங்கள் எப்படி எடுத்து கொள்கிறீர்கள் ?

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

உங்களது   நாரதக்கேள்விக்கு  பதில்க்கேள்வி

தமிழர்கள்  வேறு  எவரை  தற்போது தெரிவு  செய்யமுடியும்????

அவர்களை  தெரிவு  செய்வதால் ஏற்படும் தாக்கத்தை  சுமக்க

தமிழர்கள் சொந்தக்காலில் நிற்கிறார்களா??

அறவட்டிக்கு  சில வேளை  நாம் பணம் எடுப்பதில்லையா?

வட்டிக்கு  தந்தவனை திட்டினாலும் 

காலம் வரும்வரை....?

அப்படி  எடுத்துக்கொள்ளவேண்டியது தான்tw_dissapointed_relieved:

விசுகு அண்ணா நான் எந்த நாரத கருத்தும் சொல்லவில்லை,  அனைத்து விடயங்களிலும் எல்லோருக்கும் ஒரே பார்வை இருக்கும் என்று அர்த்தம் இல்லையே, என்னோட மனசில் பட்டதை கேட்டேன்  மற்றும்படி  நாரத வேலைபார்த்து யாரையும் பிரிக்கவோ சண்டை போட வைக்கவோ முடியுமா? அந்த அளவிற்கு என்னை புத்திசாலியாக நான் கருதவில்லை!

நான் சுமந்திரனுக்கு மக்கள் ஏன் வாக்களித்தார்கள், இனிமேலும் வாக்களிக்கமாட்டார்களா என்று கேட்டதன் அர்த்தம், அங்குள்ளவர்கள் அவர்களுக்கென்றொரு வாழ்க்கையை வாழ தயாராகிவிட்டார்கள், புலத்தின் மக்கள் கருத்தினை அவர்கள் பிரதானமான ஒன்றாக சில இடங்களில் கருதவில்லை என்ற அர்த்ததில்தான்!

சுமந்திரனை வேற வழியில்லாமல் பாராளுமன்றத்திற்கு அனுப்பினார்கள் என்றால் தமிழ்தேசிய கூட்டமைப்பில் போட்டியிட்ட யாரையுமே மக்கள் தோற்கடிக்கவில்லையா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.