Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொழும்பில் எனக்கு வீடு இல்லை நான் மனைவியின் வீட்டில் தான் இருக்கின்றேன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் எனக்கு வீடு இல்லை நான் மனைவியின் வீட்டில் தான் இருக்கின்றேன். எனக்கு என்னத்துக்கு இரண்டு வீடு ஒரு வீட்டில் தான் படுக்க முடியும்? இரண்டு வீட்டில் படுக்க முடியுமா?

-எம்.எ.சுமந்திரன்- 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

மனைவியின் வீடு  என்பது, பிறத்தியார்  வீடா?
அதுகும்... இவருக்கு சொந்தமானது தானே....
இவர்களுக்கு, விளக்கம் கொடுக்கப் போனால், நாங்கள் தான்... லூசுப் பயலுகளாக இருக்க வேண்டும்.
(வாயில் கனக்க... வருகின்றது, எழுத்து நாகரிகம் கருதி எழுதாமல் விடுகின்றேன்) 

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, nunavilan said:

 ஒரு வீட்டில் தான் படுக்க முடியும்? இரண்டு வீட்டில் படுக்க முடியுமா?

-எம்.எ.சுமந்திரன்- 

 

 

உலக வல்லரசுகளையே சிந்திக்க தூண்டிய கேள்வி, இதுக்குத்தான் படித்தவர்கள் அரசியல் செய்யவேண்டுமென்று சொல்வது. இப்படி நுட்பமாக  சிந்திக்க உலக வங்கி தலைவரால்கூட முடியாது, ஐயா சுமந்திரனின் கருத்துக்கள் யாழ்ப்பாண கோட்டை சுவர்களில் பொறிக்கப்படணும்,இதற்கு பின்னாடி வரும் சந்ததிகள் படித்து பயன்பெற ,பல்கலைகழகங்களில் ஆய்வு செய்ய, கல்வி திட்டத்தில் சேர்க்க உதவியாகவிருக்கும்.

1 hour ago, nunavilan said:

கொழும்பில் எனக்கு வீடு இல்லை நான் மனைவியின் வீட்டில் தான் இருக்கின்றேன்.

யாருடைய மனைவியின் வீட்டில் என்று சொல்லாமல் விட்டது ஏன்?

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனின் பதிலைப் பார்க்கும் போது ......பின்வரும் சம்பவம் நினைவுக்கு வருகின்றது!

வெம்பிளி சந்தை அன்று களை கட்டியிருந்த நேரம்! அனேகமாக இந்தியர்கள் கடைகளுக்கு வரும்போது...நோ பார்க்கிங் என்று போட்டிருக்கும் இடங்களைத் தங்களுக்கு விசேடமாக ஒதுக்கிய இடங்களாக நினைத்துக் கொள்வார்கள்! இவ்வாறு நிறுத்தப் பட்டிருந்த பென்ஸ் கார் ஒன்றினுள் மாமியாரைக் காவல் வைத்து விட்டு இந்திய ஜோடி...ஷாப்பிங் சென்று விட்டது!

மாமியாரின் கெட்ட காலம்...அன்றைக்கென்று போலிஸ் கார்களைத் தூக்கி ஏற்றும் 'கிறேன் போன்ற இயந்திரங்களுடன் தயாராக வந்திருந்தது!

போலிஸ் காரன்...காருக்கு அருகில் வந்து...காரின் கண்ணாடியை இறக்குமாறு சைகை செய்தான்!

மாடம்...நீங்கள் இங்கு காரை நிறுத்தியது தவறு....காரை வேறு இடத்தில்...கொண்டு சென்று நிறுத்துங்கள்....!

பதில்...இந்தியில் வந்தது!

இது உங்களது கார் தானே....மாடம்?

மனுசி...சைகையில்...தன்னுடையது தான் என்று கூறவும்.....போலிஸ் காரன் மீண்டும்...காரை எடுக்கும் படி சைகை காட்டினார்!

மீண்டும் இந்தியில் பதில்...!

ஆத்திரமடைந்த போலிஸ் காரர்....மாமியைக் காரை விட்டு இறங்கும் படி...சைகை காட்டவும்...மாமி...மீண்டும் இந்தியில் ..பதில்!

போலிஸ் காரர் ...இறங்க மறுத்த...மாமியாருடன்...காரைக்...கிறேன் கொண்டு தூக்க....அந்தரத்தில் மிதந்த..மாமியார்...திடீரெனச் சரளமாக...ஆங்கிலம் பேசத் துவங்கினார்!

கார்...உண்மையில்....தன்னுடைய பெயரில்..தான் இருக்கின்றது எனவும்...ஆனால்...தனக்குக் கார் ஓட்டத் தெரியாது எனவும்...சொல்லி அழுதார்!

போலீஸ்காரன்....அவரை க் கீழே இறக்கியபடியே...தண்டப் பணத்துக்கான...துண்டை மாமியாரிடம் கொடுத்தார்!

அவருக்குத் தெரியாது....மருமகனின் வரி நிலுவையாக...அந்த பென்ஸ் கார் ...மாறக் கூடும் என்று ..! 

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப....  அவவுடன்,  இது வரை... என்ன,  உருப்படியாக  செய்தீர்கள்,  சுமந்திரன்.
ஒரு அரசியல் வியாதி.... கதைக்கும் கதையா.... இது.
அவுஸ்திரேலியாவில்.... வாங்க ருந்த  அடியில், இவரின்... மனைவியின்  கெஞ்சல் தான்.....  
இவரின்,  உயிரை காப்பாற்றியது என்பதை  மறக்க வேண்டாம்.  சுமந்திரன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உத்தம புத்திரன்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

மனைவியின் வீடு  என்பது, பிறத்தியார்  வீடா?
அதுகும்... இவருக்கு சொந்தமானது தானே....
இவர்களுக்கு, விளக்கம் கொடுக்கப் போனால், நாங்கள் தான்... லூசுப் பயலுகளாக இருக்க வேண்டும்.
(வாயில் கனக்க... வருகின்றது, எழுத்து நாகரிகம் கருதி எழுதாமல் விடுகின்றேன்) 

வெள்ளிக்கிழமைகளில நீங்க விரதம் இருக்க கூடாது பாஸ்

  • கருத்துக்கள உறவுகள்

தந்தை செல்வநாயகமும் இன்றைய தமிழரசுக் கட்சியினரும்

கொழும்பில் 50 ஆண்டுகளாக வாழ்ந்த தந்தை செல்வநாயகம் கடைசிவரை ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தார் என்ற செய்தி பலருக்கு வியப்பாக இருக்கலாம்.

தமிழரசுக் கட்சியை வளர்ப்பதற்காக வழக்கறிஞர் தொழிலில் கைநிறையச் சம்பாதித்த பணத்தை தந்தை செல்வநாயகம் தண்ணீராகச் செலவழித்தார். அரசியலில் புகுந்தால் பெயர், புகழ், பணம் சம்பாதிக்கலாம் என்ற நியதி இருந்த கால கட்டத்தில் தந்தை செல்வநாயகம் அரசியலில் ஈடுபட்டுத் தன் செல்வத்தை இழந்தார்.

கொழும்பில் ஐம்பது ஆண்டுகளாக வாழ்ந்த அவர் கடைசிவரை ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தார் என்ற செய்தி பலருக்கு வியப்பாக இருக்கலாம். ஆனால் அதுதான் உண்மை. அவர் நினைத்திருந்தால் கொழும்பில் ஒன்றல்ல ஒன்பது வீடுகள் அவரால் வாங்கியிருக்க முடியும்.

கொழும்பு, தமிழர்களுக்கு அந்நியமான மண். வடக்கும் கிழக்குமே தமிழர்களுக்கு உரித்தான சொந்த மண். இது அவரது அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.
தந்தை செல்வநாயகம் பிறந்தது மலேசியாவில். படித்தது யாழ்ப்பாணத்தில். தொழில் பார்த்தது கொழும்பில். மறைந்தது சொந்த ஊரான தெல்லிப்பளையில்.

கொழும்பில் உள்ள பிரபல்யமான St.Thomas கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கிய புதிதில் தந்தை செல்வநாயகம் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த அவரது தாயார் கடுமையான சுகயீனம் உற்றிருக்கிறார் எனக் கேள்விப்பட்டு உடனடியாகத் தாயைப் போய்ப் பார்க்க விரும்பி விடுமுறை கேட்டார். ஆனால் அவரது வேண்டுகோள் கல்லூரி அதிபரால் மறுக்கப்பட்டது. உடனே அந்த இடத்திலேயே விலகல் கடிதத்தை கல்லூரி அதிபரிடம் எழுதிக் கொடுத்து விட்டு யாழ்ப்பாணம் பயணமானார். பின்னர் கொழும்பு திரும்பிய அவர் சட்டக் கல்லூரியில் சேர்ந்து சட்டம் படித்து வழக்கறிஞர் (Advocate) பட்டம் பெற்று வெளியேறினார்.
தந்தை செல்வநாயகம் அவர்கள் மார்ச் 31, 1898 இல் பிறந்தவர். அன்னாரது 120 ஆண்டு பிறந்த நாள் நினைவாக இக் கட்டுரை வெளியாகிறது
கட்டுரை ஆக்கம்
திருமிகு. விக்டர் ராஜலிங்கம்

  • கருத்துக்கள உறவுகள்

குடத்தனையில் இவரின் சீதன வீடு உள்ளது, 90 களில் தனது தந்தையாரின் வீட்டின் மாடிப் பகுதியில் குடியிருந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்

தனக்கு சீதனமா வீடு தந்ததென்று பீற்றிக்கிறாருப்பா. விட்டுத்தள்ளுங்க.. வெறுவாய் மெல்லிங்க. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nedukkalapoovan said:

தனக்கு சீதனமா வீடு தந்ததென்று பீற்றிக்கிறாருப்பா. விட்டுத்தள்ளுங்க.. வெறுவாய் மெல்லிங்க. tw_blush:

கொழும்பில் சீதனமாக வீடு கொடுக்குமளவிற்கு அந்த நேரத்தில் இவரும் ”வெயிட்டாக” இல்லை இவரது மனைவி பகுதியும் இல்லை.

இப்போது இருக்கும் வீடு மனைவியின் பெயரில் வாங்கப்பட்டிருக்கலாம்(?).

Edited by MEERA

இவருக்கு உருப்படியா வழக்காடவும் தெரியாது!
இவர் வென்ற வழக்குகள் 1% க்கும் குறைவு!
விடயம் அறிந்த மக்கள் இவரை வைத்து வழக்காடச் செல்வதும் இல்லை!
எப்படி கொழும்பில் சொந்த வீடு வாங்க முடிந்தது?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.