Jump to content

விடுதலைப் புலிகள் குறித்த கருத்துக்காக மன்னிப்புக் கோரமாட்டேன்- விஜயகலா


Recommended Posts

விடுதலைப் புலிகள் குறித்த கருத்துக்காக மன்னிப்புக் கோரமாட்டேன்- விஜயகலா

 

vijayakala-300x200.jpgயாழ்ப்பாணத்தில் கடந்த மாதம் விடுதலைப் புலிகள் தொடர்பாக வெளியிட்ட கருத்துக்காக மன்னிப்புக் கோரவோ, அந்தக் கருத்தை விலக்கிக் கொள்ளவோ போவதில்லை என்று தெரிவித்துள்ளார் முன்னாள் இராஜாங்க அமைச்சரான விஜயகலா மகேஸ்வரன்.

விடுதலைப் புலிகள் மீண்டும் வர வேண்டும் என்று அரசாங்க நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய விஜயகலா மகேஸ்வரன், இராஜாங்க அமைச்சர் பதவியை இழந்தார். அவருக்கு எதிரான நடவடிக்கை குறித்து விசாரணைகளும் நடத்தப்பட்டன.

இந்தநிலையில், ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள விஜயகலா மகேஸ்வரன்,

”நான் எதனைக் கூறினேனோ அதே நிலைப்பாட்டில் தான் இருக்கிறேன். நான் கூறிய கருத்தை விலக்கிக் கொண்டு எனது கௌரவத்தையும் மரியாதையையும் இழக்கமாட்டேன்.

விசாரணை அறிக்கை குறித்து நான் ஆர்வம் கொண்டிருக்கவில்லை. ஆனால் ஊடகங்கள் அதில் ஆர்வம் காட்டுகின்றன.

எனக்கு எதிராக எந்த நடவடிக்கை எடுத்தாலும், அதனை வரவேற்பேன். அதற்கு அச்சப்படமாட்டேன். என் மீது நம்பிக்கை கொண்ட மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன்.

நான் தமிழ் மண்ணில் பிறந்தேன். தெற்கிலுள்ள மக்கள் எங்களுடன் வாழ்ந்திருந்தால், அவர்களும் நான் கூறிய உணர்வுகளையே வெளிப்படுத்தியிருப்பார்கள்.

இன்னும் பல முக்கிய அரசியல்வாதிகள் விசாரணைக்காக வரிசையில் இருக்கிறார்கள்.என்மீதான விசாரணையும் அத்தகைய ஒன்று தான். அதுபற்றி நான் கவலைப்படவில்லை.

விடுதலைப் புலிகளின் காலத்தில் தமிழ் மக்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள் இப்போது எப்படி வாழ்கிறார்கள் என்பதைத் தான் நான் வெளிப்படுத்தினேன்.

அப்போது வல்லுறவு, சிறார் வல்லுறவு, போதைப்பொருட்கள், பாலியல் துன்புறுத்தல்கள், கொலைகள், கொள்ளைகள் பற்றி நாம் கேள்விப்பட்டதில்லை.

ஆனால் இப்போது அதற்குள் தள்ளப்பட்டிருக்கிறோம். நான் இதனை வெளிப்படுத்தியது மற்றவர்களுக்கு கவலையை ஏற்படுத்தியிருந்தால் அது என்னுடைய தவறு அல்ல.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2018/08/19/news/32407

Link to comment
Share on other sites

அக்கா வடக்கு முதலமைச்சர் பதவிக்கு கண் வைக்கிறா போல, கூட்டமைப்பு சீ வீ க்கு பதிலாக இவவை களம் இறக்கினாலும் ஆச்சர்யப்பட வேண்டாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, Dash said:

அக்கா வடக்கு முதலமைச்சர் பதவிக்கு கண் வைக்கிறா போல, கூட்டமைப்பு சீ வீ க்கு பதிலாக இவவை களம் இறக்கினாலும் ஆச்சர்யப்பட வேண்டாம்.

அவ கூட்டமைப்பு கட்சி அல்ல ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவங்க குள்ள நரி ரணிலின் ஆசியுடன்தான் இவ கூவுறா . 

Link to comment
Share on other sites

5 minutes ago, பெருமாள் said:

அவ கூட்டமைப்பு கட்சி அல்ல ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவங்க குள்ள நரி ரணிலின் ஆசியுடன்தான் இவ கூவுறா . 

அதாவது அக்கா கட்சி தாவுவா / மைத்திரி மாதிரி பொது வேட்பாளராக களம் காணவும் சந்தர்ப்பம் உண்டு...!!!!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் அரசியல் மாய ஜாலங்கள் எனக்கு அவ்வளவாகத் தெரியவில்லை - விஜயகலா எவ்வளவு சாதாரண / மலிவான அரசியல்வாதி என்பது உட்பட . ஆனால் சட்டம், ஒழுங்கு நிலைமை  அவர் சொல்வது போல் இருக்கும் பட்சத்தில் , யாராவது இந்த ஒப்பீட்டை ( சுயலாபம் என்றாலும் ) செய்துதானே ஆக வேண்டும் ? சாத்தானாக இருந்தாலும் மெய்மறை ஓதி விட்டுப் போகட்டுமே எனத் தோன்றுகிறது .

 

Link to comment
Share on other sites

2 hours ago, Dash said:

மைத்திரி மாதிரி பொது வேட்பாளராக களம் காணவும் சந்தர்ப்பம் உண்டு...!!!!!!!

கூட்டமைப்பு - ஐக்கிய தேசிய கட்சியின் பொது வேட்பாளராக முதலமைச்சர் பதவிக்கு நிற்கும் சாத்தியம் அதிகம். சி. வி. விக்னேஸ்வரன் வேறு ஆதரவுடன் மீண்டும் போட்டியிடும் போது அவரை வெற்றிபெற விஜயகலா போன்ற ஒருவரே கூட்டமைப்புக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் தேவை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Jude said:

கூட்டமைப்பு - ஐக்கிய தேசிய கட்சியின் பொது வேட்பாளராக முதலமைச்சர் பதவிக்கு நிற்கும் சாத்தியம் அதிகம். சி. வி. விக்னேஸ்வரன் வேறு ஆதரவுடன் மீண்டும் போட்டியிடும் போது அவரை வெற்றிபெற விஜயகலா போன்ற ஒருவரே கூட்டமைப்புக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் தேவை.

அப்படி ஒன்று நடந்தால் 
சீ வி க்கு வெற்றி நிச்சயம்.

அங்கால இந்திய ஆதரவுடன் டக்கலூசும் களம் இறங்குகிறாராம் 
இவர்கள் வாக்குகளை பிரித்துவிட 

சி வி ஆதர்வாவு வாக்குகளுடன் அவர் எளிதாக வெல்லுவார் 
இப்போதைக்கு அதுதான் மக்களுக்கும் நல்லது.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சி.வி ஒரு நல்ல மனிதர்.அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை தனிப்பட எனக்கு.ஆனால் அவர் மீண்டும் முதல்வர் ஆனால் அரக்காத தேராகத்தான் இருக்கும் வட பகுதி.தலைவரே அந்த யுத்த நேரத்திலும் அபிவிருத்திக்கும் வேலை வாய்பிற்க்கும் முக்கியவத்தும் கொடுத்தார்.ஆனால் இவர்?

Link to comment
Share on other sites

1 hour ago, சுவைப்பிரியன் said:

சி.வி ஒரு நல்ல மனிதர்.அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை தனிப்பட எனக்கு.ஆனால் அவர் மீண்டும் முதல்வர் ஆனால் அரக்காத தேராகத்தான் இருக்கும் வட பகுதி.தலைவரே அந்த யுத்த நேரத்திலும் அபிவிருத்திக்கும் வேலை வாய்பிற்க்கும் முக்கியவத்தும் கொடுத்தார்.ஆனால் இவர்?

சி. வி. மிகவும் நல்ல மனிதர். ஆனால் அவர் ஒரு முன்னாள் நீதியரசரே அன்றி தேவையானவற்றை பெற்றுக்கொள்ளும் ஆற்றல் கொண்ட அரசியல்வாதியோ அல்லது வணிக நிறுவன நிருவாகியோ அல்ல. விஜயகலா சிங்கள அரசுக்குள் சுழியோடி தனது கணவரின் வணிகத்தையும் அரசியலையும் இன்றுவரை தனது தேவைக்கு பயன்படுத்தி வரும் திறமையான அரசியல்வாதியும் நிருவாகியும் ஆவார். தேவையானால் கொலைகாரரையும் குண்டர்களையும் கூட தனது தேவைக்கு பயன்படுத்தும் ஆற்றல் உள்ளவர் என்பதை சுவிஸ்குமார் வழக்கு காட்டுகிறது. சி. வி. இந்த விடயங்களில் அனுபவம் இல்லாதவர். ஆனால் துணிகரமாக முன்னாள் பெண் போரளிகளுக்காகவும், விடுதலை புலிகள் பற்றி நல்ல கருத்துகளையும் சொன்னது தவிர வேறு எவற்றை விஜயகலா மக்கள் நலன்கருதி இதுவரை செய்து உள்ளார் என்பது பற்றி செய்திகளில் நான் அறியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Dash said:

அதாவது அக்கா கட்சி தாவுவா / மைத்திரி மாதிரி பொது வேட்பாளராக களம் காணவும் சந்தர்ப்பம் உண்டு...!!!!!!!

என்னது மைத்திரி பொது வேட்பாளரா????? எப்ப தொடக்கம்?
ராசா! அதெல்லாம் சிங்களத்தின்ரை சதுரங்க அரசியல்.......இந்த விசயம் எங்கடை தமிழ் அரசியல்  ஐயாமாருக்கும் தெரியும்.
பொது வேட்பாளர் எண்டது சிங்களத்தின்ரை ஒற்றுமை பாருங்கோ :grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'அந்த பயங்கரத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை' - பிபிசி காஸா செய்தியாளரின் நேரடி அனுபவம் படக்குறிப்பு,அட்னான், பல வாரங்கள் தனது குடும்பத்தை பிரிந்து வாழ்ந்தார். கட்டுரை தகவல் எழுதியவர், அட்னான் அல்-புர்ஷ் பதவி, பிபிசி செய்தியாளர் 9 மணி நேரங்களுக்கு முன்னர் எச்சரிக்கை - இந்த அறிக்கையில் உள்ள புகைப்படங்களும் விளக்கங்களும் சில வாசகர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம். ஏறக்குறைய மூன்று மாதங்களாக, அட்னான் அல்-புர்ஷ் காஸாவிலிருந்து போரைப் பற்றிய செய்திகளை அளித்துக் கொண்டிருந்தார். கூடாரத்தில் வாழ்ந்து, ஒரு நாளைக்கு ஒருவேளை மட்டுமே சாப்பிட்டு, தனது மனைவியையும் ஐந்து குழந்தைகளையும் பாதுகாப்பாக வைத்திருக்கவும் அவர் போராடியிருக்கிறார். பிபிசி அரபு நிருபர்கள், போரைப் பற்றிய செய்திகளைச் சேகரிக்கும் போது தாங்கள் எதிர்கொண்ட திகிலூட்டும் தருணங்களைப் பகிர்ந்துள்ளனர். காஸாவில் ஒரு செய்தியாளராக வேலை பார்த்த போது தான் எதிர்கொண்டதை பிபிசியிடம் பகிர்ந்துகொள்கிறார் அட்னான் அல்-புர்ஷ்.   'குடும்பத்துடன் தெருவில் உறங்கினோம்' படக்குறிப்பு,அட்னான் மற்றும் அவரது குடும்பத்தினர் வாடகைக்கு எடுக்க முடிவு செய்திருந்த குடியிருப்பில் வெடிகுண்டு வீசப்படும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், தெருவில் உறங்கினர் குடும்பத்துடன் அனைவரும் சாலையில் தூங்கிய தருணம் தான், கடந்த ஆறு மாதங்களில் மிகவும் மோசமான தருணங்களில் ஒன்று. தெற்கு காஸாவில் உள்ள கான் யூனிஸ் தெருவில் கடும் குளிரில் என் மனைவி மற்றும் குழந்தைகளின் முகத்தைப் பார்த்துக்கொண்டு நிராதரவாக நின்றேன். எனது 19 வயது இரட்டைப் பிள்ளைகளான ஜக்கியா மற்றும் படூல் அவர்களின் 14 வயது சகோதரி யும்னாவுடன் நடைபாதையில் தூங்கினர். எனது எட்டு வயது மகன் முகமது மற்றும் ஐந்து வயது இளைய மகள் ரஸான் அவர்களின் தாய் ஜைனப் உடன் உறங்கினர். பாலத்தீன ரெட் கிரசண்ட் சொசைட்டியின் (செஞ்சிலுவைச் சங்கம்) தலைமையகத்திற்கு வெளியே நாங்கள் ஓய்வெடுக்க முயன்ற போது, இரவு முழுவதும் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது. ட்ரோன்கள் மேலே பறந்து கொண்டிருந்தன. நாங்கள் ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாடகைக்கு எடுக்க ஏற்பாடு செய்திருந்தோம், ஆனால் கட்டிடத்தின் மீது குண்டு வீசப் போவதாக இஸ்ரேலிய ராணுவம் எச்சரித்ததாக வீட்டு உரிமையாளர் அன்றே எங்களிடம் கூறினார். நான் அப்போதும் வேலை செய்து கொண்டிருந்தேன், ஆனால் எனது குடும்பத்தினர் தங்கள் உடைமைகளுடன் அங்கிருந்து வெளியேறினர். படக்குறிப்பு,பிபிசி குழுவானது கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனை அருகே கூடாரத்தில் இருந்து வேலை செய்தது. 'குடும்பத்தைக் காப்பாற்ற முடியாத குற்றவுணர்ச்சி' நாங்கள் அனைவரும் செஞ்சிலுவை தலைமையகத்தில் சந்தித்தோம், அங்கு ஏற்கனவே இடம்பெயர்ந்த மக்கள் பெருமளவில் திரண்டிருந்தனர். நானும் என் சகோதரனும் இரவு முழுவதும் அட்டைப் பெட்டிகளில் அமர்ந்து என்ன செய்வது என்று விவாதித்தோம். வடக்கு காஸாவில் இருந்த அனைவரையும் தெற்கு நோக்கிச் செல்லுமாறு இஸ்ரேலிய ராணுவம் கேட்டுக் கொண்டதால், அக்டோபர் 13 அன்று எனது குடும்பம் ஜபாலியா நகரத்தை விட்டு வெளியேறியது. எங்களது வீடு மற்றும் பெரும்பாலான பொருட்களை அங்கேயே விட்டுவிட்டு வெளியேறினோம். ஆனால் இப்போது எந்த இடத்திற்கு இஸ்ரேலிய ராணுவம் செல்லச் சொன்னதோ, அதே இடத்தில் குண்டுவெடிப்பில் இருந்து நூலிழையில் தப்பித்தோம். இந்த நேரத்தில் எதையும் தெளிவாகச் சிந்திப்பது மிகவும் கடினம். நான் கோபமாகவும் அவமானமாகவும் உணர்ந்தேன். எனது குடும்பத்தை ஏன் என்னால் பாதுகாக்க முடியவில்லை? என்ற குற்றவுணர்ச்சி ஏற்பட்டது. ஒருவழியாக கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனையில் ஒரு கூடாரத்தில் பிபிசி குழுவுடன் நான் தங்கியிருந்த போது, எனது குடும்பம் மத்திய காஸாவில் உள்ள நுசைரத்தின் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் குடியேறினார்கள். சில நாட்களுக்கு ஒருமுறை என் குடும்பத்தைச் சந்திக்கச் செல்வேன். இணையம் மற்றும் தொலைபேசி சிக்னல்கள் பலமுறை துண்டிக்கப்பட்டதால் அவர்களோடு தொடர்புகொள்வது மிகவும் கடினமாக இருந்தது. ஒருமுறை நான்கைந்து நாட்களுக்கு என் குடும்பத்துடன் பேச முடியாத நிலை இருந்தது.   படக்குறிப்பு,அட்னான், தனது நண்பரின் குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்பட்ட நாளில் நேரலையில் அழுதார். ‘நேரடி ஒளிபரப்பின் போது அழுதேன்’ கான் யூனிஸின் பிபிசி குழுவில் நாங்கள் ஏழு பேர் இருந்தோம். ஒரு நாளைக்கு ஒருவேளை உணவு தான் கிடைத்து வந்தது. சில நேரங்களில் உணவு இருந்தாலும், கழிப்பறை இல்லாததால் மீதம் இருவேளை சாப்பிட மாட்டோம். இதற்கிடையில், எனது நண்பரும் அல் ஜசீரா பணியகத்தின் தலைவருமான வயேல் டாடோ இந்தப் போருக்காக ஒரு பெரிய விலையைக் கொடுத்தார். அவரது குடும்பத்தினர் வசித்து வந்த வீட்டை குறிவைத்து இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் அவரது மனைவி, சிறு மகன், ஏழு வயது மகள் மற்றும் ஒரு வயது பேரன் ஆகியோர் உயிரிழந்தனர். பொதுமக்களின் உயிரிழப்பைக் குறைக்க ‘முடிந்தவரை எச்சரிக்கையாக’ இருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் கூறுகிறது. இந்தத் தாக்குதலில் , 'ஹமாஸ் தீவிரவாதிகளின் முகாம்கள் மட்டுமே குறிவைக்கப்பட்டதாக' இஸ்ரேல் கூறியது. 20 வருடங்களாக எனக்கு நன்கு பரிச்சயமான எனது நண்பர் அழும் காட்சிகளைப் பார்த்தேன். அவர் மத்திய காஸாவில் தனது குழந்தைகளின் மூடிய உடல்களைத் தழுவியவாறு கண்ணீருடன் இருந்தார். அந்த நேரத்தில் நான் அவருடன் இருக்க விரும்பினேன். எனது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அண்டை வீட்டாரின் மரணச் செய்திகள் எனக்கு தொடர்ந்து வந்து கொண்டிருந்த போது இந்தச் செய்தியும் வந்தது. அன்று நான் நேரலையில் பேசிக் கொண்டிருக்கும்போதே அழுதேன். நான் இரவில் அடிக்கடி கண்விழிப்பேன், என் கன்னங்கள் கண்ணீரால் நனைந்திருக்கும். நண்பர் வயேல் அழுத காட்சிகள் என் மனதை விட்டு நீங்கவில்லை. கடந்த 15 ஆண்டுகளில் காஸாவில் நடந்த பல மோதல்களை நான் செய்திகளாக விவரித்துள்ளேன் ஆனால் இந்தப் போர் வித்தியாசமானது. முன்னெப்போதும் இல்லாத அளவு தாக்குதல்கள் நடத்தப்பட்டதால், ஏராளமான மக்கள் இழப்புகளைச் சந்தித்துள்ளனர். படக்குறிப்பு,இஸ்ரேல் எச்சரித்ததையடுத்து, ஆயிரக்கணக்கான மக்கள் வடக்கு காஸாவிலிருந்து வெளியேற வேண்டியிருந்தது. ரேஷன் கடைகள் மீது தாக்குதல் அக்டோபர் 7-ஆம் தேதி காலை 6.15 மணிக்கு எழுந்தேன், என் குழந்தைகள் அலறிக் கொண்டிருந்தார்கள். நான் மேல்தளத்திற்கு சென்று பார்த்தேன், இஸ்ரேலில் இருந்து காஸா மீது ராக்கெட்டுகள் ஏவப்படுவதைக் கண்டேன். ஹமாஸ் இஸ்ரேலுக்குள் நுழைந்ததாகவும், இந்த தாக்குதலில் 1,200 பேர் உயிரிழந்ததாகவும் தெரிய வந்தது. 250 இஸ்ரேலியர்கள் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ளனர், எனவே இஸ்ரேலின் பதிலடி நாங்கள் இதுவரை பார்த்திராத ஒன்றாக இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, காஸாவில் இதுவரை 34,000 பேர் இறந்துள்ளனர், ஆனால் போர் தொடர்கிறது. இன்னும் மக்களின் உயிருக்கு ஆபத்து உள்ளது. போர் ஆரம்பித்து இரண்டு நாட்களாகியிருந்ததால், ஜபாலியாவில் உள்ள ஒரு சந்தைக்குப் பொருட்கள் வாங்கச் சென்றேன். என்னைப் போலவே பொருட்களை வாங்க ஏராளமானோர் அங்கு கூடியிருந்தனர். நான் அந்த பகுதியை விட்டு வெளியேறிய பத்து நிமிடங்களில் அந்த பகுதியில் பலத்த குண்டுவெடிப்பு ஏற்பட்டது. அங்கிருந்த பெரிய ரேஷன் கடைகளும் இடிந்து நாசமாயின. இந்த குண்டுவெடிப்பில் 69 பேர் கொல்லப்பட்டதாகவும், இந்த தாக்குதல் போர்க்குற்றமாக விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பிபிசியின் கேள்விகளுக்கு இஸ்ரேல் ராணுவம் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.   'எனது வீடு முற்றிலும் சேதமடைந்தது' படக்குறிப்பு,கான் யூனிஸில் இருந்த பிபிசி குழு உறுப்பினர்கள் இந்த நிலையில் தான் வாழ வேண்டியிருந்தது. போர் முழுவதும், ஹமாஸ் தளங்களை மட்டுமே குறிவைப்பதாகவும், மேலும் ஹமாஸ் தளங்கள் பொதுமக்கள் வசிக்கும் இடத்தில் உள்ளன என்றும் இஸ்ரேல் கூறுகிறது. ‘ராணுவ இலக்குகள் மீதான தாக்குதல்கள் சர்வதேச சட்டத்தின் தொடர்புடைய விதிகளின்படியே உள்ளன,’ என்றும் அது கூறியுள்ளது. போருக்கு முன்பு, ஜபாலியா ஒரு அழகான, அமைதியான நகரமாக இருந்தது. நான் அங்குதான் பிறந்தேன், என் குடும்பத்துடன் எளிமையான, திருப்தியான வாழ்க்கையை வாழ்ந்தேன். எதிர்காலத்திற்கான திட்டங்கள் இருந்தன. இந்த நகரத்தின் கிழக்கே எனக்கு பண்ணைகள் இருந்தன, அங்கு நான் ஆலிவ், எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு மரங்களை என் கைகளால் நட்டேன். அது மிகவும் அமைதியான இடம், மாலையில் வேலை முடிந்ததும் அங்கு அமர்ந்து தேநீர் அருந்துவது எனக்கு மிகவும் பிடிக்கும். கான் யூனிஸ் செல்ல வடக்கு காஸாவை விட்டு வெளியேற முடிவு செய்த நாள், நான் காஸா நகரில் இருந்த எனது வீட்டையும் பிபிசி அலுவலகத்தையும் விட்டு வெளியேறினேன், அது என் வாழ்க்கையில் மிக முக்கியமான தருணமாக இருக்கும் என்று எனக்குத் தெரியும். ஒரு காரில் 10-க்கும் மேற்பட்ட நபர்களுடன், நானும் எனது குடும்பத்தினரும், சாமான்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்டோம். ஆயிரக்கணக்கானவர்கள் தெற்கு நோக்கிய ஒரு சாலையில் நடந்தும், சில வாகனங்களிலும் சென்றுக் கொண்டிருந்தார்கள். நாங்கள் தெற்கு காஸாவுக்குச் சென்று கொண்டிருந்தபோது, சாலையின் இருபுறமும் குண்டுவெடிப்புகள் நடந்தன. பயணத்தை நிறுத்த வேண்டியதாயிற்று. வழியில், என் குழந்தைகள் என்னிடம் கேட்டார்கள், "நாம் எங்கே போகிறோம்? நாளைக்கு மீண்டும் வருவோமா?” நான் வீட்டை விட்டு வெளியேறும்போது எனது புகைப்பட ஆல்பத்தை என்னுடன் எடுத்துச் செல்ல விரும்பினேன். அதில் எனது குழந்தைப் பருவம், பெற்றோர், மனைவி மற்றும் எனது நிச்சயதார்த்தப் புகைப்படமும் இருந்தது. என் தந்தைக்கு சொந்தமான புத்தகங்களை என்னுடன் கொண்டு வந்திருக்கலாம். எனது தந்தை அரபு மொழி ஆசிரியர். அவர் மறைவுக்குப் பிறகும் அவருடைய புத்தகங்களை நான் வைத்திருந்தேன். பின்னர் எனது வீடு முற்றாக இடிந்து கிடப்பதை எனது பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் மூலம் அறிந்து கொண்டேன். எனது வயல்கள், பண்ணைகள் எரிக்கப்பட்டன. காஸாவில் இருந்து இஸ்ரேலுக்கு கொண்டுசெல்லப்பட்ட உடல்கள் படக்குறிப்பு,அல் ஜசீரா பணியகத்தின் தலைவர் வயேல் டாடோ இரண்டு தனித்தனி வான்வழித் தாக்குதல்களில் தனது குடும்ப உறுப்பினர்களை இழந்தார். அந்த பயங்கரமான பயணத்திற்கு பிறகு தான், ஓர் இரவு ரெட் கிரசண்ட் தலைமையகத்திற்கு வெளியே தெருவில் உறங்கினோம். பின்னர் நான் கான் யூனிஸில் பல வாரங்கள் தொடர்ந்து வேலை செய்தேன். என் குடும்பம் அப்போது நுசைரத்தில் இருந்தது. அவர்களைப் பிரிந்து இருந்தது எனக்கு உளவியல் ரீதியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பல நாட்கள் பல உணர்வுகளுடன் போராடினேன். பின்னர் இஸ்ரேலிய படைகள் முன்னேறி வருவதாகவும், தெற்கை மத்திய மற்றும் வடக்கு காஸாவிலிருந்து பிரிப்பதே அதன் நோக்கமாக இருப்பதாகவும் செய்திகள் வந்தன. நானோ என் குடும்பமோ கொல்லப்படுவோம், இனி ஒருவரையொருவர் பார்க்க மாட்டோம் என்று பயந்தேன். முதல் முறையாக நான் தோற்றுவிட்டதாக உணர்ந்தேன். அது எந்த நாள் என்று கூட நினைவில்லை. வேலையை நிறுத்திவிட்டு என் குடும்பத்திடம் செல்ல நினைத்தேன். இறந்தால் ஒன்றாகவே இறக்க விரும்பினேன். இறுதியாக டிசம்பர் 11 அன்று, நான் ஒரு சக ஊழியருடன் நுசைரத்துக்குப் புறப்பட்டேன். நான் அவ்விடத்தை அடைந்ததும், என் குழந்தைகள் என்னைக் கட்டிப்பிடித்து அழுதனர். என் மகன் ரசான் என் கழுத்தை இறுக்கமாகக் கட்டிக்கொண்டான். எப்படியோ குடும்பத்துடன் ரஃபாவை அடைந்தோம். பிபிசி குழுவும் ரஃபாவை அடைந்தது, நாங்கள் அங்கிருந்து பணியைத் தொடர்ந்தோம். டிசம்பர் பிற்பகுதியில், இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (ஐ.டி.எப்- IDF) சுமார் 80 உடல்களை காஸாவில் உள்ள அதிகாரிகளிடம் ஒப்படைத்ததாக நான் செய்தியில் தெரிவித்தேன். அவர்களில் யாரேனும் இஸ்ரேலிய பணயக்கைதிகளா என்பதை ஆய்வு செய்ய அந்த உடல்கள் காஸாவில் இருந்து இஸ்ரேலுக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டதாக ஐ.டி.எப் கூறியது. ரஃபாவில் உள்ள ஒரு கல்லறைக்குள் ஒரு பெரிய லாரி நுழைந்தது. கொள்கலனை திறந்ததும் துர்நாற்றம் எங்கும் பரவியது. கவசங்கள் மற்றும் முகமூடிகளை அணிந்த மக்கள் மணல் நிலத்தில் ஒரு வெகுஜன புதைகுழியைத் தோண்டி நீல பிளாஸ்டிக் கவர்களில் சுற்றப்பட்ட உடல்களின் எச்சங்களை புதைத்தனர். இதுபோன்ற ஒரு காட்சியை நான் இதற்கு முன்பு பார்த்ததில்லை, அது எவ்வளவு பயங்கரமானது என்பதை விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை.   பட மூலாதாரம்,ADNAN EL-BURSH படக்குறிப்பு,போருக்கு முன்னர் அட்னானும் அவரது குடும்பத்தினரும் வாழ்ந்த வீடு தற்போது முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது பின்னர் ஜனவரியில், பல உடல்கள் கொண்டு வரப்பட்டபோது நான் ரஃபாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் இருந்து செய்தி அளித்துக் கொண்டிருந்தேன். அதில் அல் ஜசீரா பத்திரிகையில் பணியாற்றிய பத்திரிக்கையாளர் வயேலின் மூத்த மகன் ஹம்சாவின் சடலமும் இருந்தது. ஆனால் இதைப் பற்றி வயேலுக்கு யார் தெரிவித்திருப்பார்கள்? அவருக்கு ஏற்கனவே மோசமான ஒரு துயரச் சம்பவம் நடந்துவிட்டது, இதை அவரிடம் சொல்ல முடியாது என்று தோன்றியது. எனது சக ஊழியர்களில் ஒருவர் வயேலின் நெருங்கிய உறவினர்களை அழைத்து, இந்தச் செய்தியை அவர்களுக்குத் தெரிவித்தார். ஹம்சாவும் அவரது வீடியோகிராபர் முஸ்தபா துரையாவும் இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டனர். அந்தக் குறிப்பிட்ட பகுதியில் அதற்கு முன் நடந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக செய்தி அளித்துக் கொண்டிருக்கும்போதே அவரது கார் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. அவர்கள் ‘காஸாவை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்புகளின் உறுப்பினர்கள்' என்று இஸ்ரேலிய ராணுவம் குற்றம் சாட்டுகிறது. அவர்களது குடும்பமும் அல் ஜசீராவும் இந்தக் கூற்றுகளை பொய் என்று நிராகரிக்கின்றன. அவர்கள் இரண்டு பேரும் ஐ.டி.எஃப் வீரர்களுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் ட்ரோன்களை இயக்கியதாக ஐ.டி.எப் கூறுகிறது, ஆனால் வாஷிங்டன் போஸ்ட் விசாரணையில் ‘அவர்கள் இருவரும் அந்த நாளில் ட்ரோன் இயக்கத்தில் ஈடுபட்டதாக எந்த அறிகுறியும் இல்லை.’ என்று கூறுகிறது.   'இந்த உணவு எனக்கு விஷமாகத் தெரிகிறது' படக்குறிப்பு,அட்னான் மற்றும் பிபிசி குழு இறுதியாக பிப்ரவரியில் காஸாவை விட்டு வெளியேறியது. ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ் (Reporters Without Borders) அமைப்பின் கருத்துப்படி, 100-க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள், அவர்களில் பெரும்பாலோர் பாலத்தீனர்கள், அக்டோபர் 7 முதல் காஸாவில் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் ஐ.டி.எப், "எந்தவொரு பத்திரிகையாளரையும் நாங்கள் வேண்டுமென்றே குறிவைத்ததில்லை. ஊடகவியலாளர்கள் உட்பட எந்தவொரு பொதுமக்களுக்கும் குறைந்தபட்ச ஆபத்து மட்டுமே ஏற்படுவதை உறுதிசெய்ய நாங்கள் எல்லா முயற்சிகளையும் செய்கிறோம்'” என்று கூறுகிறது. இறுதியாக பிபிசி குழுவின் குடும்பத்தினர் காஸாவை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டதாக எங்களுக்கு செய்தி வந்தது. நான்கு வாரங்களுக்குப் பிறகு, நாங்களும் எகிப்திய அதிகாரிகளின் உதவியுடன் ரஃபாவை விட்டு வெளியேற முடிந்தது. நான் இதை எழுதும்போது, கத்தாரில் அமர்ந்திருக்கிறேன். ஆனால் ஜபாலியாவில் உள்ள மக்கள், எப்படியாவது தங்கள் விலங்குகளுக்கு தீவனம் அளிக்க புல் பறித்து அதை அரைத்துக் கொண்டிருப்பார்கள் என்று எனக்குத் தெரியும். அதேசமயம் இங்கே நான் ஹோட்டலில் சுத்தமான உணவுடன் அமர்ந்திருக்கிறேன். என்னால் இந்த உணவைச் சாப்பிட முடியவில்லை, இந்த உணவு முழுவதும் விஷம் நிரம்பியுள்ளது போல நான் உணர்கிறேன். https://www.bbc.com/tamil/articles/cglveyprz50o
    • ரி20 உலகக் கிண்ண இந்திய குழாத்தில் ஷிவம் டுபே, சஞ்சு சாம்சன், ரிஷாப் பான்ட் Published By: VISHNU   30 APR, 2024 | 07:50 PM (நெவில் அன்தனி) ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்கான 15 வீரர்களைக் கொண்ட இந்திய குழாம் செவ்வாய்க்கிழமை (30) அறிவிக்கப்பட்டது. இந்திய அணியின் தலைவராக ரோஹித் சர்மாவும், உதவித் தலைவராக ஹர்திக் பாண்டியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய அமெரிக்காவிலும் கரிபியன் தீவுகளிலும் எதிர்வரும் ஜுன் மாதம் 1ஆம் திகதியிலிருந்து 29ஆம் திகதிவரை 20 நாடுகள் பங்குபற்றும் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு அஜித் அகார்கார் தலைமையிலான இந்திய அணி தேர்வுக் குழுவினர் செவ்வாய்க்கிழமை (30) கூடி ஆலோசனை நடத்தி 15 வீரர்களைக் கொண்ட ரி20 உலகக் கிண்ணத்துக்கான இந்திய குழாத்தை தெரிவு செய்தனர். தற்போது நடைபெற்றுவரும் இண்டியன் பீறிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் அற்புதமான ஆற்றல்களை வெளிப்படுத்திவரும் ராஜஸ்தான் றோயல்ஸ் அணித் தலைவர் சஞ்சு செம்சன், சென்னை சுப்பர் கிங்ஸின் அதிரடி நாயகன் ஷிவம் டுபே ஆகியோருக்கு இந்திய குழாத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கார் விபத்தில் சிக்கி நீண்ட காலம் அணியில் இடம்பெறாமல் இருந்த ரிஷாப் பான்டுக்கும் அணியில் இடம் கிடைத்துள்ளது. சில கால இடைவெளிக்குப் பின்னர் யுஸ்வேந்திர சஹால் மீண்டும் இந்திய அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். அவர் கடைசியாக மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் விளையாடியிருந்தார். இம்முறை ஐபிஎல் இல் அசத்திவரும் ருத்துராஜ் கய்க்வாட் உட்பட இன்னும் சிலர் தெரிவாளர்களின் கண்களில் படாதது ஆச்சரியத்திற்குரியது என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். அதேவேளை, ஐ பி எல் இல் பெரிதாக பிரகாசிக்காத  ஹார்திக் பாண்டியா, சூரியகுமார் யாதவ் ஆகியோருக்கு இடம் வழங்கப்பட்டது கிரிக்கெட் விமர்சர்களை மட்டுமல்லாமல் இரசிகர்களையும் ஆச்சரியப்படவைத்துள்ளது. ஆனால், தொழில்முறை கிரிக்கெட்டான ஐபிஎல் இலும் பார்க்க சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பாண்டியா, யாதவ் போன்றவர்கள் அசத்துவார்கள் என தெரிவாளர்கள் நம்புகின்றனர். விக்கெட் காப்பாளர் கே.எல். ராகுலுக்கும் இந்தியா குழாத்தில் இடம் வழங்கப்படவில்லை. அவர் கடந்த வருடம் நடைபெற்ற ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்குப் பின்னர் சர்வதேச ரி20 போட்டிகளில் விளையாடவில்லை. இந்திய குழாத்தில் ரோஹித் ஷர்மா (தலைவர்), யஷஸ்வி ஜய்ஸ்வால், விராத் கோஹ்லி, ரிஷாப் பான்ட், சஞ்சு செம்சன், சூரியகுமார் யாதவ் துடுப்பாட்ட வீரர்களாகவும், ஹார்திக் பாண்டியா (உதவித் தலைவர்), ஷிவம் டுபே, ரவிந்த்ர ஜடேஜா, அக்சார் பட்டேல் ஆகியோர் சகலதுறை வீரர்களாகவும், அர்ஷ்தீப் சிங், ஜஸ்ப்ரிட் பும்ரா, யுஸ்வேந்த்ரா சஹால், குல்தீப் யாதவ், மொமஹத் சிராஜ் ஆகியோர் பந்துவீச்சாளர்களாகவும் இடம்பெறுகின்றனர். நியூஸிலாந்து குழாம் திங்கட்கிழமை (29) அறிவிக்கப்பட்டது. ஏனைய குழாம்கள் இந்தியாவுடன் செவ்வாய்க்கிழமை (30) மாலைவரை நியூஸிலாந்து, தென் ஆபிரிக்கா, நடப்பு சம்பியன் இங்கிலாந்து ஆகிய நாடுகளும் தங்களது உலகக் கிண்ண கிரிக்கெட் குழாம்களை அறிவித்துள்ளன. தென் ஆபிரிக்கா: ஏய்டன் மார்க்ராம் (தலைவர்), குவின்டன் டி கொக், ரீஸா ஹெண்ட்றிக்ஸ், ஹென்றிச் க்ளாசன், டேவிட் மில்லர், ரெயான் ரிக்ல்டன், ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ், மாக்கோ ஜென்சன், ஒட்நீல் பாட்மன், ஜெரால்ட் கொயெட்ஸீ, பிஜோன் ஃபோச்சுன், கேஷவ் மகாராஜ், அன்ரிச் நோக்யா, கெகிசோ ரபாடா, தப்ரெய்ஸ் ஷம்சி. இங்கிலாந்து: ஜொஸ் பட்லர் (தலைவர்), பில் சோல்ட், ஹெரி ப்றூக், மொயீன் அலி, சாம் கரன், லியாம் லிவிங்ஸ்டோன், கிறிஸ் ஜோர்டன், ஆதில் ராஷித், மார்க் வூட், அலெக்ஸ் ஹேல்ஸ், டாவிட் மாலன், பென் ஸ்டோக்ஸ், டெவிட் வில்லி, க்றிஸ் வோக்ஸ், டைமல் மில்ஸ். https://www.virakesari.lk/article/182362
    • ஆ ஊ எண்டால் மனநிலை பாதிக்கப்பட்டவர்.நானும் ஆரையாவது(கோசானை, ஏனெண்டால் எப்பிடித்தான் இந்தாளாலை எல்லாத்துக்கும் கருத்து எழுத முடியுதோ தெரியாது) போட்டுத்தள்ளீட்டு ஒருநடிப்பு போடவேண்டியது தான்
    • "தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / பகுதி: 01    அண்மை காலத்தில் வெளி வந்த ஆதாரம், தடயம் வரை, தமிழர்களின் வரலாறு, வரலாற்றிற்கு முந்திய காலமான கிறிஸ்துக்கு முன்1000- 500 ஆண்டு அளவில் ஆரம்பிக்கப்பட்டதாக நம்பப்பட்டது. அனால், இப்போது தமிழர் / திராவிடர் பண்பாடு, தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டத்தில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர் பழைய நாகரிகத்தை சேர்ந்த தொல்லியல் களங்களிலும் [பெருங்கல்லாலான இடங்களும் சின்னங்களும்], இலங்கை புத்தளத்தில் உள்ள பொம்பரிப்பு அகழ்வு, மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கதிரைவெளி அல்லது கதிரவெளி போன்றவைகளுடன் தொடர்புடையது என வரலாற்று ஆசிரியர்களும் தொல்பொருளியலாளரும் கருதுகிறார்கள். தென் இந்தியாவின் பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தின் அருகிலுள்ள தொல்பொருளாய்வு சார்ந்த இடமான அரிக்கமேடுவில் தோண்டி எடுக்கப்பட்ட பண்டத்தின் துண்டுகள், பொம்மைகள் போன்றவைகள், மிகப் பழைய குடியேற்றப் பகுதியான  இலங்கை, சுன்னாகம் பகுதியில் உள்ள கதிரமலை [கந்தரோடை] பகுதியிலும் கண்டு எடுக்கப்பட்டு உள்ளது. இவைகள் சில கிறிஸ்துக்கு முன் 2000 ஆண்டை சார்ந்ததாக கருதப்படுகிறது. இந்த தொல் பொருள் சாட்சிகள், இந்தியா இலங்கையில் உள்ள இந்த வரலாற்று இடங்கள் நீண்ட காலமாக தொடர்ந்து மக்கள் வாழ்ந்ததிற்கு ஆதாரமாக உள்ளது.   ஆதிச்சநல்லூரில் நடத்தப்பட்ட ஆய்வுகள் மிகவும் முக்கியமான வையாக கருதப்படுகின்றன. 3,800 ஆண்டுகள் பழமையான எலும்புக்கூடுகளும், சுட்ட களி மண்ணினாலான தாழிகளும், தமிழ்ப் பிராமி எழுத்துக்களுடன் கூடிய பல தாழிகளும், இரும்புக் கருவிகள், ஆயுதங்கள், நகையணிகள் என்பனவும், பொன், வெண்கலம், அரிய கல் முதலியவற்றாலான மணிகளும் (beads), இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன. பொன்பரிப்பு அகழ்வாய்வில் வரலாற்றுக்கு முற்பட்ட அடக்கக் களம் (burial site) ஒன்றையும், பல ஈமத்தாழி [Burial urn for the dead in ancient times] களையும் இங்கு கண்டெடுக்கப் பட்டுள்ளன. தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்று தாழிகள் அமைத்தல். இறந்தோரைப் புதைப்பதற்காக தாழிகளை நம் முன்னோர் பயன்படுத்தி உள்ளனர். அத்தாழிகளில் இறந்தோரைப் புதைக்கும் பொழுது, அவர்கள் பயன்படுத்திய பொருள்களையும், விரும்பிய பொருள்களையும், இறந்தோர் உடலுடன் புதைத்த பழைய மரபை அகழ்வாராய்ச்சியின் மூலம் அறிய முடிகிறது. கதிரவெளியில், அகழாய்வின் போது கி மு. 2ம் நூற்றாண்டு தொடக்கம் கி பி. 2ம் நூற்றாண்டு காலப்பகுதிக்குரிய பல தடையங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. புதுச்சேரிக்கு அருகாமையில் உள்ள அரிக்கமேடு என்ற இடத்தில் நிகழ்த்திய அகழ் வாராய்ச்சியும் தமிழர் பண்பாட்டுக் கூறுகளை வெளிப்படுத்துகின்றது. இங்கு மண் பாண்டங்கள் பல கிடைத் துள்ளன. விற்பனைச் சாலைகள், பண்டகச் சாலைகள் முதலியவை இருந்ததற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள மிகப் பழைய குடியேற்றப் பகுதிகளில் கதிரமலை [கந்தரோடை] முக்கியமானது. இது இலங்கையிலேயே நகராக்கம் இடம்பெற்ற மிகப் பழைய இடங்களில் ஒன்றாகவும் சொல்லப்படுகின்றது. தற்போது இது சிறிய ஊராக இருப்பினும் பழைய காலத்தில் யாழ்ப்பாணப் பகுதியின் தலைமையிடமாக இருந்ததாகக் கருதப்படுகிறது. முன்னைய காலத்தில் உக்கிரசிங்கன் என்ற தமிழ் மன்னன் கந்தரோடையை தலை நகரமாக கொண்டு ஆட்சி புரிந்ததாக வரலாறு கூறுகின்றது. இவனுடைய காலப்பகுதியாக கி.பி. 785ம் ஆண்டுப்பகுதி குறிப்பிடப்படுகின்றது. இவன் கலிங்க தேசத்திலிருந்து குடியேறியவன் என்றும், விஜயனுடைய பரம்பரையைச் சேர்ந்தவனென்றும் 18 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாண வைபவ மாலையை இயற்றிய மயில்வாகனப் புலவர் வைபவமாலையில் கூறுகிறார். மேலும் யாழ்ப்பாணத்து ஆரியச் சக்கரவர்த்தி அரச பரம்பரையை உருவாக்கியவனும் இவனே என்று சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இவன் சோழ இளவரசியாகிய மாருதப்புரவல்லி மீது காதல் கொண்டு, மணம்புரிந்தான். இவன் தீவிர சைவனாக விளங்கியுள்ளான் என்பதை இவன் செய்த சைவத் திருப்பணிகள் நிரூபிக்கின்றன. இவ்வூரில் செய்யப் பட்ட அகழ்வாய்வுகள் மூலம் பல பண்டைய கால சின்னங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. இப்பகுதியில் அகழ் வாய்வுகளில் கிடைத்த பொருள்கள் சில கி மு. 2000 ஆண்டை சேர்ந்தவை என்பதும் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.   திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் பாதையில் ஏறத்தாழ 24 கிலோமீட்டர் தொலைவில் அமைந் துள்ள ஆதிச்சநல்லூர் தொல்லியல் களத்தில் தொல்லியல் துறையால் அகழ்வாய்வு செய்து 169 மனித தலையோடு ,எலும்புக்கூடு, உயிர் நீங்கிய உடலின் எச்சமிச்சங்கள் கொண்ட  சுட்ட களிமண்ணினால் ஆன தாழிகள் தோண்டியெடுக்கப்பட்டு உள்ளது. அத்துடன் அரிசி உமியும் தானியமும் கருகிய [தீய்ந்த] அரிசியும், வரலாற்றுக்கு முந்திய காலத்தில் வழங்கிய கோடரி போன்ற கருவியும் புதிய கற்காலத்தைச் சார்ந்தவை என உறுதி கூறுகிறது. கல்வெட்டெழுத்துக்களையும் கலைத் தொழில் வேலைப்பாடமைந்த பொருள்களையும் ஆய்வு செய்த தொல்பொருள் ஆய்வாளர்கள், தமிழர் நாகரிகம் குறைந்தது 4000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என தெரிவித்துள்ளார்கள்.    [மேலே உள்ள படத்தில்,ஆதிச்சநல்லூரில் வரலாற்றுக்கு முற்பட்ட இரும்பு காலத்திற்கு உரிய  அடக்கக் களத்தில், தாழி ஒன்று வளர்ச்சியடையாத தமிழ் பிராமி எழுத்துடனும், மனித எலும்புக்கூடும்  மற்றும் சிற்றுருவ பாத்திரங்களும் காணப்படுகின்றன. இவை கி மு.20 ஆம் நூற்றாண்டு மதிக்கத்தக்க இரும்பு கலன்கள் ஆகும். மேலுள்ள படத்தில் தாழியில் உள்ள எழுத்துக்கள் வளர்ச்சியடையாத தமிழ் பிராமி எழுத்துகளாகும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதை "கறிஅரவனாதன்" என்று படித்து நச்சுடைய பாம்பை அனிந்த மாலையாக கொண்ட சிவன் என்று பொருள் தருகிறார் நடன காசிநாதன். ஆனால் அந்த தாழிகளை அகழாய்வு செய்த சத்திய மூர்த்தி அதை "கதிஅரவனாதன்" என்று படித்து அதற்கு கதிரவன் மகன் ஆதன் என்று பொருள் தருகிறார்]     தமிழ்நாட்டில் நடத்தப்பட்டு வரும் அகழாய்வுகளின் மூலம் தமிழர் நாகரிகம் மிகவும் பழமையானது என்பது அடுத்தடுத்து நிரூபிக்கப்பட்டு வருகிறது. இதுவரை மெய்ப்பிக்கப்பட்டுள்ள காலத்தை விடவும் தமிழர்கள் நாகரிகம் மிகவும் தொன்மையானது என்பது இன்று தெரிய வருகிறது. குறிப்பாக கீழடி, சிவகளை, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட இடங்களில் ஆய்வுகள் பல செய்திகளை வெளியே இன்று கொண்டு வருகின்றன. உதாரணமாக, தூத்துக்குடி மாவட்டம் சிவகளை அகழாய்வில் கிடைத்த நெல்லை கரிம பகுப்பாய்வுக்கு உட்படுத்தியபோது அதன் வயது 3,175 ஆண்டுகள் என்று தெரிய வந்திருப்பதாக தமிழ்நாடு தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.     கீழடியில் கிடைத்த கட்டடத் தொகுதிகள், எழுத்துப் பொறிப்புகள், பொருட்கள் ஆகியவை அங்கு ஒரு நகர நாகரிகம்  இருந்ததை உறுதி செய்தன. பொதுவாக கங்கைச் சமவெளியில் கி.மு. ஆறாம் நூற்றாண்டுவாக்கில் இருந்த நகரமயமாக்கம் (Urban Civilisation) தமிழ் நாட்டில் இல்லை என்பது தான் பொதுவான கருதுகோளாக இருந்தது வந்தது. அதேபோல, பிராமி எழுத்து மௌரியர் தோற்றுவித்தது என்றும் அங்கிருந்தே தமிழ் நாட்டிற்கு அந்த எழுத்துகள் வந்தன என்றும் கருதப்பட்டது. ஆனால், கீழடியில் நடந்த ஆய்வுகளின் முடிவுகள், நகரமயமாக்கம் குறித்த கருத்துகளை மாற்றின. அந்த காலகட்டத்திலேயே பிராமி எனப்படும் தமிழி பரவலாக எழுதப்பட்டதை, அங்கு கிடைத்த பானை ஓடுகள் உறுதிப்படுத்தின. உதாரணமாக, சிவகளை அகழாய்வில் விளிம்புடன் கூடிய மண் கிண்ணம் ஒன்றில் கிடைத்த தமிழி எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகளை ஆக்ஸிலரேட்டர் மாஸ் ஸ்பெக்ரோமெட்ரி [Accelerator mass spectrometry] முறையில் பகுப்பாய்வு செய்தபோது, அந்த பானை ஓடுகள், கி.மு. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என தெரியவந்திருப்பதாக தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.     கீழடியில் தற்போது மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளைப் பொறுத்தவரை, பெரிய அளவிலான செங்கல் கட்டுமானங்களும் தமிழி பொறிக்கப்பட்ட பானை ஓடுகளும், கீறல்கள் எழுதப்பட்ட பானை ஓடுகளும் கிடைத்துள்ளன. இவை தவிர, மணிகள், கற்கள், தாயக்கட்டைகள், கங்கைச் சமவெளிக்கே உரியவை என்று கருதப்பட்ட கறுப்பு நிறப் பானைகள், சீப்புகள் போன்றவையையும் கிடைத்துள்ளன.   இங்கு கிடைத்துள்ள கட்டுமானத்தையும் தொல்பொருட்களையும் வைத்துப் பார்க்கும் போது, கீழடி ஒரு பெரிய நகரமாக இருந்திருக்கக்கூடும் என்றும் இந்தியாவுடனும் இலங்கையுடன் வர்த்தகத் தொடர்புகளை வைத்திருக்கக்கூடும் என்றும் தெரிய வருவதாக மாநில தொல்லியல் துறையின் செய்திக் குறிப்பு கூறுகிறது.   மேலும் இந்த அகழாய்வில் சந்திரன், சூரியன் மற்றும் வடிவியல் குறியீடுகளுடன் கூடிய வெள்ளிக் காசு ஒன்று கிடைத்தது. இந்தக் காசை, குப்தர் காலத்தைச் சேர்ந்த ஹர்தேக்கர் வரிசை காசுகளுடன் ஆய்வு செய்த நாணயவியல் ஆய்வாளர் சுஷ்மிதா, இதனை மௌரியர் காலத்துக்கு முற்பட்ட காசு எனக் குறிப்பிட்டிருப்பதாக மாநிலத் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. ஆகவே, கீழடி பகுதிக்கும் வட இந்தியப் பகுதிகளுக்கும் இடையில் வர்த்தகத் தொடர்பு இருந்திருப்பதை இந்தக் காசு உறுதி செய்திருப்பதாகக் கருதலாம்.   அதேபோல, கீழடியிலும் கொற்கையிலும் கிடைத்த கறுப்புநிற பானை ஓடுகளை கவனமாக ஆராய்ந்த இந்தியத் தொல்லியல் துறையின் முன்னாள் தலைமை இயக்குநர் ராகேஷ் திவாரியும், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரவீந்திர என் திவாரியும், கங்கைச் சமவெளிக்கும் இந்தப் பகுதிகளுக்கும் இடையில் வணிகத் தொடர்புகள் இருந்ததை உறுதி செய்வதாக மாநில தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.   கீழடியில் கிடைத்த கரிமப் பொருட்களின் மீது ஏற்கனவே செய்யப்பட்ட கரிமப் பகுப்பாய்வின்படி, அதன் காலம் கி.மு. 585 என தெரிய வந்துள்ளதாகவும் தற்போதைய அகழாய்வில் கிடைத்த பொருட்களின் மீது செய்யப்பட்ட மேலும் இரண்டு கரிம ஆய்வுகளும் இந்தக் காலக் கணிப்பை உறுதிப்படுத்துவதாகவும் தொல்லியல் துறை கூறுகிறது.   மேல் கூறியவற்றால் நாம் அறிவது தமிழ் திராவிடர்கள் தமிழ் நாட்டிலும் இலங்கையிலும்  ஏறத்தாழ 3000 - 4000 ஆண்டுகளாக வாழ்கிறார்கள் என்பது. ஆனால் இது தவறு. தமிழர்கள் இதிலும் கூடிய காலம் வாழ்ந்து உள்ளார்கள் என்பதே உண்மை. ஆகவே இதற்கு முன்பு எங்கு வாழ்ந்தார்கள் என்பதை நாம் காண வேண்டும்.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி 02 தொடரும்   பி கு :    படம் 01 : [ஆதிச்சநல்லூர் அகழாய்வில்  இரும்பு கலன்கள்]   படம் 02 : விளிம்புடன் கூடிய மண் கிண்ணம், சிவகளை அகழாய்வு   படம் 03 : அடுக்குகளுடன் கூடிய துளையிடப்பட்ட குழாய்கள், கொற்கை   படம் 04 :  Annaikottai (variant spelling Annaicoddai) seal inscription   படம் 05 : Inscribed potsherd from archaeological excavation at Tissamaharama, Hambantota District, Sri Lanka: From left to right the first letter is Li, second one is ra and the third one is ti. From right to left they are read as tiraLi. The fourth and fifth ones are symbols or graffiti marks. The sixth letter is mu and the seventh one is Ri. The last two are read from left to right as muRi. A little away is found a vertical line that perhaps marks the end of the legend. Thus evidences the presence of ordinary Tamil speaking people in the population of that region as early as at 2200 years before present, says archaeologist and epigraphist, Ponnampalam Ragupathy. The identification of the script of the legend as Tamil Brāhmi and the decipherment getting the reading Thira’li Mu’ri in Tamil by veteran epigraphist Iravatham Mahadevan in an article in The Hindu.               
    • "தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 04     நாம் எம் வரலாற்றை புரட்டி பார்க்கும் பொழுது, சாட்சியங்களுடன் காட்சி அளிக்கும் மிகப் பண்டைய பாரம்பரியத்தில் ஒன்றாக யோகா [Yoga] இருப்பதை காண்கிறோம். இது இந்தியாவிற்கு ஆரியர் வருகைக்கு முன் இருந்துள்ளது. இதை அத்தாட்சி படுத்துவதாக மொஹெஞ்சதாரோ தொல்லியல் தளம் அமைகிறது. அங்கு சித்தசானா காட்சியில் [Siddhasana posture] பல முத்திரைகள், கல்வெட்டுகள் [inscriptions] கண்டு பிடிக்கப் பட்டுள்ளன. எப்படி என்றாலும் முனி பாரம்பரியத்தில் தோன்றிய யோகா, பிற்காலத்தில் ரிஷி பாரம்பரியத்தில் வேத பண்பாட்டால் பிரபலப் படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது. இது மனித குலம் உருவாக்கிய மிகப் பெரியதொரு சிறப்பு வாய்ந்த பழக்கமாகும், இது உடல் மற்றும் மனப்பிரச்சினைகள் ஆகியவற்றுக்கான நல்ல ஒரு பயிற்சியாகும்.   நாகரிகம் முன்னேற முன்னேற பாரம்பரியமும் அதனுடன் சேர்ந்து பொதுவாக மாறுகிறது, ஏனென்றால் நாகரிகத்துடன் அறிவு மற்றும் அனுபவத்தின் எல்லைகள் விரிவு படுவதே இதற்கான காரணம் ஆகும். எனவே பாரம்பரியமும் அந்தந்த சூழ்நிலைக்கும் அறிவு வளர்ச்சிக்கும் ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொள்கிறது எனலாம். ஒவ்வொரு நாகரிகமும் அந்தந்தக் கால கட்டத்தின் தேவையை பொறுத்து பாரம்பரியத்தை அதற்கு ஏற்றவாறு சரிப்படுத்துகிறது. ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்பு எது சிறப்பாகவும் தேவைப் பட்ட தாகவும் இருந்ததோ, அது இன்று அப்படி இல்லாமல் போகலாம். எனவே, குருட்டு மரபுசார்ந்த அல்லது பழமைவாதவாதத்தால் [blind orthodoxy or conservatism ] அப்படியே பாரம்பரிய பாரம்பரியம் தொடர்வதை எல்லோராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அது எம் அனைத்து முன்னேற்றத்திற்கும் ஒரு பெரிய பின்னடைவு [draw back] ஆகும்.   நாம் இன்றைய கால ஓட்டத்துடன் ஒவ்வாதவைகளை இறுக்க பற்றிக்கொண்டு இருக்காமல், சூழ்நிலைக்கு அறிவு வளர்ச்சிக்கு ஏற்ப விட்டுக்கொடுப்புகளுடன் அவ்வற்றை மாற்றி அமைக்க வேண்டும். நாம் எப்படி வாழ்ந்தோம் என பெருமை படுவது மட்டும் போதாது, எங்கள் முன்னோடிகள் தங்கள் விலை மதிப்பற்ற வம்சமாக விட்டு விட்டு சென்ற நாமும், பெருமைக்கு உரியவராக இன்றைய உலகில் இருந்து அவர்களுக்கு பெருமை தேட வேண்டும்.   ஒரு உதாரணமாக துடக்கு என்ற மரபை எடுப்போம், ஒரு குடும்பத்தில் மரணம், பிறப்பு, பூப்பு போன்ற நிகழ்வுகள் நிகழ்ந்தவிடத்து இக்காலத்தில் கோயில் வழிபாடு, தனிப்பட்ட ஆத்மார்த்த பூசை, அதிதிகளை வரவேற்று உபசரித்தல் போன்ற கடப்பாடுகளில் இருந்து அக்குடும்ப அங்கத்தவர்களுக்கு ஒரு விதி விலக்கு அளிக்கப் படுகின்றது. இது அவர்களின் அதீத துக்கம் அல்லது மகிழ்ச்சியைக் கொண்டாடும் காலம் என்பதால், ஒரு தற்காலிகமாக அளிக்கப்படும் விடுமுறையே, ஆசௌச அல்லது துடக்கு காலம் ஆகும்.   சௌசம் என்றால் சுத்தம் எனப்படும். எனவே, ஆசௌசம் என்றால் சுத்தமற்ற அல்லது 'தீண்டத்தகாமை', 'தூய்மை இன்மை' என்று பொருள்படும். மரணம் என்றால் மறைமுகமாக அவர்களின் மனத்தேறலுக்கான கால அவகாசத்தையும், பிறப்பு என்றால் அந்த மகிழ்வை கொண்டாட, தம்மை அந்த புதிய உறவுடன் நன்கு பிணைத்துக் கொள்ள, பிறந்த குழந்தையுடனும் பெற்ற தாயுடனும் காலத்தை நன்றாக ஒன்றாக கழிக்க, இந்த துடக்கு காலம் வழி செய்கின்றது எனலாம்.   இவர்களை தாயத்தார்கள் என தமிழ் நாட்டிலும், துடக்குக்காரர் என யாழ்ப்பாண மரபிலும் கூறுவர். இது அக்காலத்தில் நிலவிய சமுதாயத்தின் தேவையில் தோன்றிய மரபையும் பிணைப்புகளையும் காட்டி நிற்கின்றது.   எனினும் இத்தகைய மரபுமுறை தற்கால சமுதாயக் கட்டமைப்புகளின் மத்தியில் நியாயப்படுத்தக் கூடியதாக இருக்கின்றதா என்பது ஒரு கேள்விக் குறியே!   ஏன், அந்த காலத்திலேயே, பெண்களை ‘தீட்டு’ என்று புறக்கணிக்கும் கொடுமைக்கு எதிராக முதன் முதலில் கலகம் செய்தவர் தமிழ் தாய் தந்த திருமூலர் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?   அவர் தனது ஒரு பாடலில் [2551], “பிறரைத் தீண்டுவது தமக்குத் தீட்டு! தீட்டு!” என்று கூறுபவர் சிறிதும் அறிவிலார். தீட்டு ஏற்படுத் தும் இடத்தை அவர்கள் அறிந்திலர். தீட்டு என்ன என்பதை மெய்யாக அறிந்து கொண்ட பின்பு, மனித உடலே உண்மையில் பெரிய தீட்டு என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள் என்கிறார். அதாவது பெண்கள் தீட்டு என்றால் அதிலிருந்து உருவான மானுடமும் தீட்டு என்கிறார் திருமூலர்.   "ஆசூசம் ஆசூசம் என்பார் அறிவிலார் ஆசூசம் ஆம்இடம் ஆரும் அறிகிலார் ஆசூசம் ஆம்இடம் ஆரும் அறிந்தபின் ஆசூசம் மானிடம் ஆசூசம் ஆமே."   இன்னும் ஒரு பாடலில்,[2552], தம்மை உள்ளபடி உணர்ந்து கொண்ட தத்துவ ஞானிகளுக்கு ஆசூசம் என்னும் தூய்மையின்மை என்பது கிடையாது என அடித்து கூறுகிறார்.   "ஆசூச மில்லை அருநிய மத்தருக்கு ஆசூச மில்லை அரனை அர்ச் சிப்பவர்க்கு ஆசூச மில்லையாம் அங்கி வளர்ப்போர்க்கு ஆசூச மில்லை அருமறை ஞானிக்கே."   அதே போல, வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1839 நவம்பர் 22 - 1898 சூலை 5) கூட, திருமூலர் வழியில் தீட்டிற்கு எதிராக உரத்துக் குரல் எழுப்பினார். அவர் காலத்திலும் பெண்கள் மாதவிடாய் காலத்தில் கோயில்களுக்குச் செல்லக்கூடாது என்று பழைமைவாதிகள் கூறி வந்தனர். இதற்கு பதிலடி தரும் வகையில் தனது ‘புலவர் புராணம்’ நூலில்,   “வீங்கு புண் முலையாள் மாதவிடாயினள் ஒருத்தி வேட்கை தாங்குறாது இரங்கி அன்னோன் சரண் பணிந்து அதனைச் சொன்னாள் ஏங்குறேல் பெரு நெருப்பிற்கு ஈரம் இன்றே என்றானே!”   அதாவது, பெரு நெருப்பாகிய இறைவனுக்கு தீட்டு இல்லை என்பதை திருஞான சம்பந்தர் கதை மூலம் எடுத்துரைத்தார்.     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   பகுதி: 05 தொடரும்        
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.