Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்பில் மாணவியின் சடலம் கண்டெடுப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

IMG_7014-720x450.jpg

மட்டக்களப்பில் மாணவியின் சடலம் கண்டெடுப்பு!

மட்டக்களப்பு, கல்லடி பாலத்திற்கு அருகிலிருந்து மாணவி ஒருவரின் சடலம் பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கல்லடி, உப்போடை பகுதியிலுள்ள பெண்கள் பாடசாலையில் உயர்தரம் பயிலும் கரடியனாறு பகுதியை சேர்ந்த 18 வயதுடைய மாணவியொருவரது சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நாவற்குடாவில் உள்ள வீடொன்றில் இருந்து பாடசாலைக்கு சென்றுவந்த மாணவியை நேற்று காலை முதல் காணாத நிலையில் நேற்று மாலை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது குறித்த மாணவியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாணவியின் மரணம் தொடர்பிலான விசாரணைகளை மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடயவியல் பிரிவு பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மற்றும் காத்தான்குடி பொலிஸார் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவியின் மரணம் தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/மட்டக்களப்பில்-மாணவி-சடல/

மகிந்த அதிகாரத்தை ஆக்கிரமித்த கையோட நடந்ததாலை சந்தேகம் கருணா போன்ற அவரின் ஆதரவாளர்கள் பக்கம் ஏற்படுகிறது.

3 hours ago, Rajesh said:

மகிந்த அதிகாரத்தை ஆக்கிரமித்த கையோட நடந்ததாலை சந்தேகம் கருணா போன்ற அவரின் ஆதரவாளர்கள் பக்கம் ஏற்படுகிறது.

எனக்கும் முன்னாள் புலிகள் மீதுதான் சந்தேகம். ?

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, ஜீவன் சிவா said:

எனக்கும் முன்னாள் புலிகள் மீதுதான் சந்தேகம். ?

எனக்கு புளட் ஆதரவாளர்கள் மீது தான் பலத்த சந்தேகம் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, nunavilan said:

எனக்கு புளட் ஆதரவாளர்கள் மீது தான் பலத்த சந்தேகம் உள்ளது.

 

4 hours ago, Rajesh said:

மகிந்த அதிகாரத்தை ஆக்கிரமித்த கையோட நடந்ததாலை சந்தேகம் கருணா போன்ற அவரின் ஆதரவாளர்கள் பக்கம் ஏற்படுகிறது.

1 hour ago, ஜீவன் சிவா said:

எனக்கும் முன்னாள் புலிகள் மீதுதான் சந்தேகம். ?

என்ன ஒரு கண்டு பிடிப்பு :grin::grin:

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

 

என்ன ஒரு கண்டு பிடிப்பு :grin::grin:

ஜீவன் சிவாவுக்கு இருக்கும் துணிவு எனக்கும் இருக்கு என காட்டத்தான் எழுதப்பட்டது.:LOL:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

 

என்ன ஒரு கண்டு பிடிப்பு :grin::grin:

ஊர்க்காரன் நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்? 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, nunavilan said:

ஜீவன் சிவாவுக்கு இருக்கும் துணிவு எனக்கும் இருக்கு என காட்டத்தான் எழுதப்பட்டது.:LOL:

மாறி மாறி சொல்லலாம் ஆனால் உண்மையில் கிழக்கில் எதற்கெடுத்தாலும் தற்கொலைகள் தான் அண்மையிமுகநூலில் ஓர் பெண் பிள்ளை வயது 16 தனது புகைப்படத்தை ஒருவனை நம்பி காட்ட அவன் அதை பலருக்கு காட்டியிருப்பான் போல் இருக்கு உடனே தூக்கு ப்போட்டு தற்கொலை பண்ணியது 

லோண் தொல்லைகள் இதனால் ஆண் பெண் தற்கொலைகள் மாதங்களுக்குள் பலமுறை நடக்கிறது 

கல்லடிப்பாலம் கூட தற்போது அதிக தற்கொலைக்கு நல்ல இடமாக மாறியுள்ளது  அது போக நான் மட்டக்களப்பில் தான் வேலை செய்கிறேன் என்னிடம் கேட்கலாம் சும்மா ஊகத்தில் ஊதுறவர்களை விட்டு விடுங்கள் இது நான் முதல் கருத்து சொன்ன ஆளுக்கு பொருந்து நுணா

முதலாவது கருத்து சொன்ன ஆளை கடுப்பாக்க இரண்டாவது ஆளும் இரண்டாவது கருத்து சொன்ன  மூன்றாவது ஆளையும் சும்மா கடுப்பாக்காதீர்கள் tw_unamused:

2 minutes ago, குமாரசாமி said:

ஊர்க்காரன் நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்? 

மேலே சொல்லியுள்ளேன் சாமியார்

Just now, குமாரசாமி said:

ஊர்க்காரன் நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்? 

புலன் பெயர்ந்தவர்களுக்காக நாங்கள் டக்லஸ் மீது பழியை போட்டுட்டு கம்முன்னு நம்மட வேலையை பார்ப்போம். ஆனால் உண்மையை அடிச்சு கேட்டாலும் சொல்லவே மாட்டம் ?

  • கருத்துக்கள உறவுகள்

கல்லடி விவேகானந்தா மகளீர் கல்லூரி மாணவி மரணம்

கல்லடி விவேகானந்தா மகளீர் கல்லூரியின் உயர்தர வகுப்பு மாணவி சடலமாக மீட்பு.

மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட கல்லடி விவேகானந்தா மகளீர் கல்லூரியில் உயர்தர வர்த்தப்பிரிவில் படித்துக்கொண்டிருக்கும் மாணவி இன்று கல்லடி பாலத்தில் மிதந்தவாறு சடலமாக இன்று(30.10.2018) காலை 9.00மணியளவில் மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட மாணவி கரடியனாறு பொலிஸ் பிரிவில் உள்ள கித்துள் கிராமத்தை சேர்ந்த வசந்தராஜா-தேவஜானி(வயது-18)என அடையாளம் காணப்பட்டார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட மாணவி காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குடாவில் உறவினர் ஒருவரின் வீட்டிலிருந்து கல்லடி விவேகானந்தா பாடசாலையில் படித்து வந்துள்ளார்.இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை(28) தனது சொந்தவூரான கித்துள் கிராமத்திற்கு செல்வதாக வசித்துவரும் உறவினர் வீட்டில் தெரிவித்துவிட்டுச் சென்றுள்ளார்.

பொதுமக்கள் பொலிசாருக்கு வழங்கிய தகவல்களை வைத்து சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட மாணவியின் மரணமானது தற்கொலையா அல்லது கொலையா என காத்தான்குடி பொலிசார் துரிதமாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Edited by தனிக்காட்டு ராஜா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 minutes ago, ஜீவன் சிவா said:

புலன் பெயர்ந்தவர்களுக்காக நாங்கள் டக்லஸ் மீது பழியை போட்டுட்டு கம்முன்னு நம்மட வேலையை பார்ப்போம். ஆனால் உண்மையை அடிச்சு கேட்டாலும் சொல்லவே மாட்டம் ?

ஆட்டுக்கை மாட்டை கொண்டுவந்து ஓட்டப்படாது......போய் தியேட்டருக்கு முன்னாலை வெடியை கொழுத்தி போடுங்கோ :grin:

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்தவர்கள் எதியோப்பிய செய்திகளை கேட்டு கருத்து எழுதுகிறார்கள்.:grin::grin:

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, nunavilan said:

புலம்பெயர்ந்தவர்கள் எதியோப்பிய செய்திகளை கேட்டு கருத்து எழுதுகிறார்கள்.:grin::grin:

தற்போது பொய்களை சொல்லியும் பிரபலம் ஆகவேண்டும் என்ற நினைப்பு அதிகம் :90_wave:

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

 

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட மாணவி காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குடாவில் உறவினர் ஒருவரின் வீட்டிலிருந்து கல்லடி விவேகானந்தா பாடசாலையில் படித்து வந்துள்ளார்.இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை(28) தனது சொந்தவூரான கித்துள் கிராமத்திற்கு செல்வதாக வசித்துவரும் உறவினர் வீட்டில் தெரிவித்துவிட்டுச் சென்றுள்ளார்.

இப்படித்தான்  ஒரு  விரிவுரையாளரும் சொல்லிவிட்டுப்போனார்

பிணமாக  மீட்கப்பட்டார்

என்ன  நடக்குது  நாட்டில்??

  • கருத்துக்கள உறவுகள்

மாணவியின் மரணத்தினால் ஒரு குடும்பம் துக்கத்தில் இருக்க இங்கு திண்டது செமிக்க அதை வைத்து கட்சி அரசியல் பேசுமளவுக்கு விடுப்புக் கதைக்கும் நாகரீகம்தான் இருக்கு?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, கிருபன் said:

மாணவியின் மரணத்தினால் ஒரு குடும்பம் துக்கத்தில் இருக்க இங்கு திண்டது செமிக்க அதை வைத்து கட்சி அரசியல் பேசுமளவுக்கு விடுப்புக் கதைக்கும் நாகரீகம்தான் இருக்கு?

அதாகப்பட்டது நீங்கள் ஊரில் அல்லது புலம்பெயர்நாடுகளில் நடக்கும் மரணச்சடங்குகளுக்கு போய் வந்த பழக்கம் இல்லையென்பதை ஊகிக்க முடிகின்றது.
சம்பந்தப்பட்ட உறவினர்களே மரணவீட்டில் புன்னகையுடன் செல்பி படம் எடுத்து பேஸ்புக்கில் படம் எடுத்து போடும் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.?

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, குமாரசாமி said:

அதாகப்பட்டது நீங்கள் ஊரில் அல்லது புலம்பெயர்நாடுகளில் நடக்கும் மரணச்சடங்குகளுக்கு போய் வந்த பழக்கம் இல்லையென்பதை ஊகிக்க முடிகின்றது.
சம்பந்தப்பட்ட உறவினர்களே மரணவீட்டில் புன்னகையுடன் செல்பி படம் எடுத்து பேஸ்புக்கில் படம் எடுத்து போடும் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.?

செத்தவீட்டில் செல்பி எடுப்பவர்கள் மரணித்தவர்களைப் பற்றி தகவல் தரமாட்ட்டார்கள் என்பதால் போகும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. சிலநேரம் செத்துப்போனவரே செல்பி எடுக்கும் இடங்களுக்கும் நீங்கள் போய்வந்திருக்கலாம்!

7 hours ago, தனிக்காட்டு ராஜா said:

சடலமாக மீட்கப்பட்ட மாணவி கரடியனாறு பொலிஸ் பிரிவில் உள்ள கித்துள் கிராமத்தை சேர்ந்த வசந்தராஜா தேவஜானி (வயது-18) ன அடையாளம் காணப்பட்டார்.

தமிழ் சமூகத்தில் இளம் பிராயத்தில் ஏற்படும் அநியாய / அகால மரணங்கள் மிகவும் கவலையானது!

Edited by போல்

  • கருத்துக்கள உறவுகள்
On 10/31/2018 at 3:54 AM, போல் said:

தமிழ் சமூகத்தில் இளம் பிராயத்தில் ஏற்படும் அநியாய / அகால மரணங்கள் மிகவும் கவலையானது!

தற்போது அகால மரணங்கள் தான் அதிகம் வட கிழக்கில் ( விபத்துக்கள் , தற்கொலைகள்)

On 10/30/2018 at 10:53 PM, விசுகு said:

இப்படித்தான்  ஒரு  விரிவுரையாளரும் சொல்லிவிட்டுப்போனார்

பிணமாக  மீட்கப்பட்டார்

என்ன  நடக்குது  நாட்டில்??

நாடே குழம்பிய குட்டையா கிடக்கு 

  • கருத்துக்கள உறவுகள்
On ‎10‎/‎30‎/‎2018 at 11:24 PM, போல் said:

தமிழ் சமூகத்தில் இளம் பிராயத்தில் ஏற்படும் அநியாய / அகால மரணங்கள் மிகவும் கவலையானது!

தமிழ் சமூகத்தைக் கொலை செய்து அழிக்க முடியாமல் நல்லாட்சி வந்துவிட்டது. ஆனாலும் அது வேறு வழிமுறைகளைக் கையாளுகின்றதோ என எண்ணத் தோன்றுகிறது. தமிழ் பகுதிகளில், இளம் பராயத்தவர்களின் வாழ்வாதரத்திற்குக் கொடுக்கப்படும் நெருக்கடிகள், போதைப் பொருட்கள், தவறான செயல்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு என இவைகளும் அநியாய / அகால மரணங்களை ஊக்குவிக்கலாம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.