Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்த ராஜபக்ஸ உடனடியாக பதவி விலக வேண்டும்…. இரா. சம்பந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மஹிந்த ராஜபக்ஸ உடனடியாக பதவி விலக வேண்டும்…. இரா. சம்பந்தன்

November 16, 2018

Sambathan-tna.png?zoom=3&resize=335%2C23

பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியது மஹிந்த ராஜபக்ஸவின் ஜனநாயகக் கடமை. இருப்பினும், பெரும்பான்மையை அவர் பாராளுமன்றத்தில் நிரூபிக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் குறிப்பிட்டார்.

பணம் வழங்கி பாராளுமன்ற உறுப்பினர்களை வாங்க பெருமுயற்சி இடம்பெற்ற விடயம் அனைவருக்கும் தெரியும். இருந்தும், அவர்களால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை என இரா. சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.

கடந்த 14 ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை முதலில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர் மீது நம்பிக்கையில்லை என தெரிவித்து கையெழுத்திட்டு சபாநாயகரிடம் சமர்ப்பித்தனர். இலத்திரனியல் ஊடகம் மூலம் வாக்கெடுப்பு நடத்த மீண்டும் பாராளுமன்றம் கூடியது. ஆனால், மஹிந்த ராஜபக்ஸ தரப்பினர் பாராளுமன்றத்தில் குழப்பமேற்படுத்தி, சபாநாயகர் வருகையைக் குழப்பினார்கள். மூன்றாவது முறையாகவும் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரதமராகப் பதவி வகிக்க மஹிந்த ராஜபக்ஸவிற்கு உரிமை இல்லை. உடனடியாக அவர் பதவி விலக வேண்டும். இல்லாவிட்டால் அவர் ஜனநாயக விரோதியாவார். என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் மேலும் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அமளிதுமளியை அடுத்து மீண்டும் பாராளுமன்றம் எதிர்வரும் 19ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

http://globaltamilnews.net/2018/103529/

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மஹிந்த ஒரு ஜனநாயக விரோதி: சம்பந்தன் சாடல்

மஹிந்த ராஜபக்ஷ உடனடியாக பதவியிலிருந்து விலக வேண்டும். இல்லையேல் ஜனநாயக விரோதியாக கருதப்படுவார் என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் சாடியுள்ளார்.

நாடாளுமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) ஒத்திவைக்கப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், ”கடந்த மாதம் 26ஆம் திகதி ஜனாதிபதியினால் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டதிலிருந்தே இந்த பிரச்சினைகள் தோற்றம் பெற்றன.

இப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டு பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்திருக்க வேண்டும். ஆனால், அந்த ஜனநாயக கடமையை நிறைவேற்ற அவர் தவறிவிட்டார்.

இந்நிலையில், மஹிந்த ராஜபக்ஷ மீதும் அவருக்கு வழங்கப்பட்ட பதவி மீதும் நம்பிக்கை இல்லை என நாடாளுமன்றத்தில் இன்றுடன் மூன்று முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

எனவே, மஹிந்த ராஜபக்ஷ உடனடியாக தனது பதவியிலிருந்து விலக வேண்டும். அவர் மாத்திரமின்றி அமைச்சர்களாக நியமிக்கப்பட்டவர்களும் பதவி விலக வேண்டும். அவர்களுக்கு அப்பதவிகளில் நீடிக்க இனியும் உரிமை இல்லை. அவர்கள் பதவி விலகாவிடின் ஜனநாயக விரோதிகளாக கருதப்படுவர்” எனத் தெரிவித்தார்.

 

http://athavannews.com/மஹிந்த-ஒரு-ஜனநாயக-விரோதி/

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆளுத்தரப்புக்கு நல்லாட்சி சான்றிதழ் வழங்கி.. சொந்த இனத்தைப் படுகொலை செய்தவர்களை.. இன அழிப்புச் செய்தவர்களை எல்லாம் காப்பாற்றி.. அதற்காக சனநாயக விரோத முறையில்.. எதிர்கட்சி தலைவர் பதவியை தக்க வைச்சிருக்கும் சம்பந்தன்.. மகிந்தர் என்ற கொடும் இனப்படுகொலையாளனைப் பார்த்து.. இதைச் சொல்ல அருகதை தான் இருக்கா..??! ??

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nedukkalapoovan said:

ஆளுத்தரப்புக்கு நல்லாட்சி சான்றிதழ் வழங்கி.. சொந்த இனத்தைப் படுகொலை செய்தவர்களை.. இன அழிப்புச் செய்தவர்களை எல்லாம் காப்பாற்றி.. அதற்காக சனநாயக விரோத முறையில்.. எதிர்கட்சி தலைவர் பதவியை தக்க வைச்சிருக்கும் சம்பந்தன்.. மகிந்தர் என்ற கொடும் இனப்படுகொலையாளனைப் பார்த்து.. இதைச் சொல்ல அருகதை தான் இருக்கா..??! ??

நிச்சயமாக  இல்லை. வரும் தேர்தலில், வாக்குகளால் (செருப்பு அல்ல)  சம்பந்தனுக்கு  அடிக்கும், அடியில்....
சுமந்திரன்...  "பிச்சை வேண்டாம், நாயை பிடி"  என்று,     கதறிக்  கொண்டு போக வேணும்.

12 hours ago, nedukkalapoovan said:

ஆளுத்தரப்புக்கு நல்லாட்சி சான்றிதழ் வழங்கி.. சொந்த இனத்தைப் படுகொலை செய்தவர்களை.. இன அழிப்புச் செய்தவர்களை எல்லாம் காப்பாற்றி.. அதற்காக சனநாயக விரோத முறையில்.. எதிர்கட்சி தலைவர் பதவியை தக்க வைச்சிருக்கும் சம்பந்தன்.. மகிந்தர் என்ற கொடும் இனப்படுகொலையாளனைப் பார்த்து.. இதைச் சொல்ல அருகதை தான் இருக்கா..??! ??

நிச்சயமா இருக்கு 

காசை மஹிந்தவிடம் வாங்கி அவரை பதவிக்கு கொண்டுவந்து மக்களை முள்ளிவாய்க்காலில் சம்பந்தர் புதைக்கவில்லை.

12 hours ago, தமிழ் சிறி said:

நிச்சயமாக  இல்லை. வரும் தேர்தலில், வாக்குகளால் (செருப்பு அல்ல)  சம்பந்தனுக்கு  அடிக்கும், அடியில்....
சுமந்திரன்...  "பிச்சை வேண்டாம், நாயை பிடி"  என்று,     கதறிக்  கொண்டு போக வேணும்.

புலியே வேண்டாம் என்று மக்கள் முகாம்களில் அலறியது மட்டுமில்லை இப்பவும் இங்கு கதறுகிறார்கள் 

நீங்கள் கனவிலேயே வாழுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ஜீவன் சிவா said:

நிச்சயமா இருக்கு 

காசை மஹிந்தவிடம் வாங்கி அவரை பதவிக்கு கொண்டுவந்து மக்களை முள்ளிவாய்க்காலில் சம்பந்தர் புதைக்கவில்லை.

மகிந்தவிடம் காசு வாங்கியதற்கு உங்களிடம் உள்ள ஆதாரத்தை காட்டுங்கள். தயவு செய்து வதந்தியை பரப்பாதீர்கள்.

21 minutes ago, ஜீவன் சிவா said:

 

புலியே வேண்டாம் என்று மக்கள் முகாம்களில் அலறியது மட்டுமில்லை இப்பவும் இங்கு கதறுகிறார்கள் 

 

27ம் திகதி தெரியும் மக்களின் மனநிலை....

நீங்கள் கனவிலேயே வாழுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, ஜீவன் சிவா said:

நிச்சயமா இருக்கு 

காசை மஹிந்தவிடம் வாங்கி அவரை பதவிக்கு கொண்டுவந்து மக்களை முள்ளிவாய்க்காலில் சம்பந்தர் புதைக்கவில்லை.

புலியே வேண்டாம் என்று மக்கள் முகாம்களில் அலறியது மட்டுமில்லை இப்பவும் இங்கு கதறுகிறார்கள் 

நீங்கள் கனவிலேயே வாழுங்கள்.

மகிந்தவிடம்.. பதவியும் காசும் வாங்குபவர்களை உலகமே அறியும். அதற்குள் எதற்கு இல்லாத புலிக்கதை.

மேலும்.. மக்கள் இல்லாத புலிகளை இட்டு அலறி அடிப்பதும் இல்லை.. புலிகளை பற்றி உண்மையான மக்கள் குறை சொன்னதும் இல்லை.

புலிகளை குறை சொல்பவர்கள்.. இப்பவும் எப்பவும்.. மக்கள் எதிரிகளாக.. விரோதிகளா..துரோகிகளாக இருந்தோரும் இருப்போரும் மட்டுமே. 

நீங்கள் எந்த வகை என்பது உங்களுக்கே தெரியும். ?

பிச்சையே வேண்டாம் 

புலியைப் பிடி 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஜீவன் சிவா said:

பிச்சையே வேண்டாம் 

புலியைப் பிடி 

கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போவானா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 minutes ago, ஜீவன் சிவா said:

பிச்சையே வேண்டாம் 

புலியைப் பிடி 

  தைரியமிருந்தால் வடகிழக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்றச்சொல்லுங்களன் பாப்பம். :grin:

புலிகள் தான் இப்ப இல்லையே என்னத்துக்கு ஆமி காம்ப்?????

ஓ.......உங்கடை பாதுகாப்புக்கு ஆமி வேணுமெல்லே :cool:

  • கருத்துக்கள உறவுகள்

 

சிறிலங்காவின் அரசியல் சாசனத்தை முறைப்படி பின்பற்றாமல் புதிய பிரதமராக மகிந்தவை  ஜனாதிபதி மைத்திரி தான்தோன்றித்தனமாக நியமித்துவிட்டதால் அந்த நியமனம் செல்லாது என்றும் நாடாளுமன்றத்தில் தொடர்ந்தும் ஐக்கியதேசியக்கட்சிக்குத்தான் அதிகபட்ச பலம் உள்ளதாக கூறப்பட்டுவந்தது. எனவே புதிய அமச்சரவையும் பிரதமர் நியமனமும் செல்லாது என்பது தானே அர்த்தம். அப்படியிருக்க மகிந்த பதவி விலகவேண்டும் என்று அவர் வசம் இல்லாத ஒரு பதவியிலிருந்து விலகும்படி மீண்டும் மீண்டும் மீண்டும் சொல்வதில் ஏதோ சூழ்ச்சி இருப்பதாகவே எனக்குப்படுகிறது. 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஜீவன் சிவா said:

பிச்சையே வேண்டாம் 

புலியைப் பிடி 

என்னப்பா பாராளுமன்றத்திலே தூளெல்லாம் கொண்டு போய் கறி வைக்கிறங்களாம்,:grin:

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஜீவன் சிவா said:

நிச்சயமா இருக்கு 

காசை மஹிந்தவிடம் வாங்கி அவரை பதவிக்கு கொண்டுவந்து மக்களை முள்ளிவாய்க்காலில் சம்பந்தர் புதைக்கவில்லை.

புலியே வேண்டாம் என்று மக்கள் முகாம்களில் அலறியது மட்டுமில்லை இப்பவும் இங்கு கதறுகிறார்கள் 

நீங்கள் கனவிலேயே வாழுங்கள்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.