Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எதிர்க்கட்சி தலைவர் பதவியை விட்டுக்கொடுக்க முடியாது - த.தே.கூ. திட்டவட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

                                                                                 

(ஆர்.யசி)

ஜனாதிபதி அரசாங்கத்தை தலைமைதாங்கும் நிலையிலும், அமைச்சரவை பிரதானியாக தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்ற நிலையிலும்  இந்த அரசாங்கம் கூட்டணி அரசாங்கம் என்பதை மறுக்க முடியாது. 

TNA.jpg

ஆகவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இணைந்து நடத்தும் ஆட்சியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பே பிரதான எதிர்க்கட்சி என்பதை மறுக்க முடியாது. 

எனவே  எதிர்க்கட்சி தலைவர் பதவியை விட்டுகொடுக்க மாட்டோம் என தமிழ் தேசியக் கூட்டமைபின் ஊடகப் பேச்சாளர் எம்.எ.சுமந்திரன் எம்.பி தெரிவித்தார். 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமித்ததை  அடுத்து மஹிந்த ராஜபக்ஷ அணியினர் தமக்கு  எதிர்க்கட்சி தலைவர் பதவுயிம் அந்தஸ்தும் வேண்டும் என முரண்பட்டு வருவதுடன் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் இது குறித்து முறையிடவும் உள்ளனர். 

இந்நிலையில் இது குறித்து பிரதான எதிர்க்கட்சியாக தற்போது செயற்பட்டு வரும் தமிழ் தேசியக் கூட்டமைபின் நிலைப்பாட்டினை வினவிய போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் இவ்வாறு குறிப்பிட்டார். 

http://www.virakesari.lk/article/46543

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி போடுங்க அரிவாளை....

பண்ணியில் பண்ணிப் பாருங்கோவன். 

சிங்கள கிழட்டு இனவாத சிங்கங்கள் யோசிக்கப் போகிதுகள், என்னடா இது, வெருட்டினா, விட்டுட்டு ஓடுற புள்ளபூச்சிக்களுக்கு கொடுக்கு முளைத்து இருக்குது.

ஆடின காலும், பாடின வாயும் சும்மா இருக்காது எண்டுவினம்..... மகிந்தருக்கு அரச சலுகைகள் எப்படியும் கிடைக்கவேணும்.

எதிர்கட்சி பதவி வேணும் என்றால், முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் பெறும் சலுகைகள் இரத்தாக வேண்டும். இரண்டையும் அரசு, வரிப்பணததில் இருந்து தர ஏலாது என்று பாராளுமன்றத்தில் கிளப்ப வேண்டும்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, பிழம்பு said:

ஆகவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இணைந்து நடத்தும் ஆட்சியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பே பிரதான எதிர்க்கட்சி என்பதை மறுக்க முடியாது. 

எனவே  எதிர்க்கட்சி தலைவர் பதவியை விட்டுகொடுக்க மாட்டோம் என தமிழ் தேசியக் கூட்டமைபின் ஊடகப் பேச்சாளர் எம்.எ.சுமந்திரன் எம்.பி தெரிவித்தார். 

  எங்களுக்கு பதவி முக்கியம்.......ஆனால் அதை பிரயோசனப்படுத்தமாட்டம். :cool:

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த எதிர்கட்சி தலைவரானார்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி கூற சுமந்திரனுக்கு வெட்கம் இல்லை ?

48414370_2029637070455948_5157615510375890944_o.jpg?_nc_cat=109&efg=eyJpIjoidCJ9&_nc_ht=scontent.fcmb2-1.fna&oh=8350aedbf3f5d0158b53d5be2ab94b8c&oe=5C98FD39

 

கூட்டரசாங்கம் பதவியிலிருந்த போது 16 உறுப்பினர்களைக் கொண்ட த.தே.கூட்டமைப்பு  எதிர்க்கட்சியாக இருப்பதற்கு அனுமதியளித்தார்கள். அதே நேரம் பாராளுமன்றத்தில் 56 உறுப்பினர்களைக் கொண்டிருந்த மஹிந்த அணியினர், கூட்டரசாங்கத்தின் பங்காளிகளாக இருக்கும்  சு.கட்சியின் உறுப்பினர்களாக இருப்பதனால் அவர்களுக்கு எதிர்க்கட்சிப் பதவி வழங்கமுடியாது என்றும் கூறிவந்தனர்.
 
இந்த நிலையில் தற்போதைய அரசியல் சூழ்நிலைகளின் பிரகாரம் கூட்டரசாங்கம் என்றவொன்று கிடையாது என்பது உறுதியாகின்றது என்பது தெளிவான பின்பும். அதேநேரம் ஆளும்கட்சியான ஐ.தே.கட்சிக்கு த.தே.கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்ததன் பின்பும், எதிர்க்கட்சி பதவி எங்களுக்குத்தான் உரித்தானது என்று சுமேந்திரன் ஐயாவானர் கூறுவதானது மிகவும் நகைச்சுவையான செயல்பாடாகவே பார்க்கவேண்டியுள்ளது.
 
எதிர்க்கட்சி பதவி தங்களுக்குத்தான் வேண்டும் என்று கூறுவதற்கான காரணம் என்னவென்றால், இப்போதும் ஜனாதிபதியானவர் அமைச்சரவையின் ஒரு அங்கத்தவர் என்பதனால், அவருடைய கட்சியினர்கள் இப்போதும் ரணில் அரசாங்கத்தின் கூட்டாச்சியாகவே இருக்கின்றார்கள் என்ற கேளிக்கூத்தான வாதத்தை முன்வைத்துதான் எதிர்க்கட்சி பதவி எங்களுக்கு வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கின்றார்.
 
இவருடைய கூற்றின்படி பார்த்தால் இப்படியொரு கேள்வியெழுிறது, அதாவது சு.கட்சியைச் சேர்ந்த ஜனாதிபதியானவர் ஜனாதிபதி என்ற முறையில் அமைச்சரவையில் அங்கம் வகிக்கின்றாரா? அல்லது சு.கட்சியின் அங்கத்தவரென்ற முறையில் அமைச்சரவையில் அங்கத்துவம்  வகிக்கின்றாரா? என்ற கேள்வியை மக்கள் தங்களிடம் கேட்கமாட்டார்கள் என்ற துணிவில் கேட்கின்றாரா? என்பது புரியவில்லை.
 
ஒரு ஜனாதிபதியானவர் எந்தக்கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும், ஆட்சியமைக்கும்  அரசாங்கத்தின் அமைச்சரவையில் அவர்தான் அமைச்சரவையின் தலைவராக இருக்க வேண்டும் என்ற சட்டம் இருக்கும்போது, அந்த சட்டத்தின் பிரகாரம் அமைச்சரவையில் இருக்கின்ற ஜனாதிபதியின் கட்சியும் கூட்டரசாங்கத்தின் பங்காளிகள்தான் என்று எப்படிக் கூற முடியும்? 
அப்படியென்றால் அந்தக் கூட்டரசாங்கத்தில் ஜனாதிபதியின் சார்பாக எத்தனை உறுப்பினர்கள் உள்ளார்கள் என்றும், அவர்களுள் எத்தனைபேர்  அமைச்சரவையில் இடம் பிடிக்கப் போகின்றார்கள் என்றும் சுமேந்திரன் ஐயா அவர்கள் நாட்டு மக்களுக்கு  தெளிவுபடுத்த வேண்டும் அல்லவா?
 
ஆகவே சுமேந்திரன் அவரது கட்சியினரும் பகிரங்கமாகவே ரணிலுக்காக வாதடியவர்கள் என்றமுறையிலும், ரணிலுக்கு ஆதரவாக வாக்களித்தவர்கள் என்ற முறையிலும்  அவர்கள் எப்படி ரணில் அரசாங்கத்துக்கு எதிரான எதிர்கட்சி அந்தஷ்த்து பதவி வேண்டும் என்று கோரமுடியும்?  என்ற கேள்விக்கு அவரினால் பதில் தரமுடியுமா?  என்று கேட்கவேண்டியுள்ளது அல்லவா?
 
ஆகவே சுமேந்திரன்  அவர்கள் தன்னை மட்டுமல்ல, பெரும்பாண்மையான மக்களையும் ஏமாற்ற முனைவதானது மிகவும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தலாம்  என்பதை அவர் அறிந்து வைத்துள்ளாரோ தெரியாது, ஆனால் இன்றய அரசியல் சூழ்நிலைியில் மைத்ரி அணியும் மஹிந்த அணியும் ஒன்றாக பயணிக்க என்னியுள்ளார்கள் என்பது தெளிவாகிவிட்டது எனலாம்.  
 
அந்த வகையில் கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகளின்படி மைத்ரி அணியினர் 15 லட்சம் வாக்குகளையும் மஹிந்த அணியினர் 50 லட்சத்துக்கு மேற்பட்ட வாக்கினையும் பெற்றுள்ளார்கள் என்பது உலகமறிந்த உண்மையாகும். அதன் படி பார்த்தால் அவர்கள் இருவரினதும் மக்கள் ஆதரவானது தற்போதைக்கு கிட்டத்தட்ட 65லட்சத்துக்கு மேற்பட்டதாகும் என்ற உண்மை நிலை தெரிந்தும் சுமேந்திரன் ஐயா ஒன்றும் தெரியாதவர்போல் நாடகமாடுவதானது நாட்டு மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தலாம் என்பதையும் அவர் புரிந்து கொண்டாரா என்பது புரியவில்லை.
 
ஆகவே  சுமேந்திரன்  அவர்களும் அவரது கட்சி உறுப்பினர்களும் மரியாதையான முறையிலும், பெரும்பாண்மையான நாட்டு மக்களின் உணர்வுகளை மதித்தும் செயல்பட முன்வரவேண்டும் என்பதோடு தாங்கள் ரணிலின் ஆதரவாளர்களாக இருந்து கொண்டு, அதே ரணில் அரசாங்கத்துக்கு எதிராக எப்படி நீங்கள் உண்மையான எதிர்க்கட்சியாக செயல்படுவீர்கள் என்ற கேள்வக்கு நீங்களே உங்களின் உள்ளத்திடம் கேட்டுப்பார்க்க வேண்டும்.  இந்த நிலையை நடுநிலையாக சிந்திக்கும் எந்த மக்களும் ஏற்றுக் கொள்ள மட்டார்கள் என்பதே எங்களின் கருத்தாகும்.
 
எம்எச்எம் இப்றாஹிம்
கல்முனை.
  • கருத்துக்கள உறவுகள்

 

Quote

ஆகவே சுமேந்திரன்  அவர்கள் தன்னை மட்டுமல்ல, பெரும்பாண்மையான மக்களையும் ஏமாற்ற முனைவதானது மிகவும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தலாம்

எப்படியான பாரதூரமான விளைவுகள் ஏற்படும் என எப்படியான பாரதூரமான விளைவுகள் ஏற்படும் என எம்எச்எம் இப்றாஹிம் சொல்வாரா??  

சிறுபான்மையினருக்கு  சிங்கள மக்களை விட மிக அதிக  பிரச்சனைகள் உள்ளது வெள்ளிடைமலை. எனவே  அவர்கள் எதிர்க்கட்சியாக அவர்கள் இருப்பது நாட்டுக்கு நல்லது தானே?? ( மகிந்தவுக்கு அதிக ஆசனங்கள் இருப்பதோ அல்லது அவருக்கு 50 லட்சம் பேர் வாக்களித்துள்ளார்கள் என்பதை தவிர்த்து  பார்த்தால்)

சிறுபான்மையினருக்கு  சிங்கள மக்களை விட மிக அதிக  பிரச்சனைகள் உள்ளது வெள்ளிடைமலை. எனவே  அவர்கள் எதிர்க்கட்சியாக அவர்கள் இருப்பது நாட்டுக்கு நல்லது தானே?? ( மகிந்தவுக்கு அதிக ஆசனங்கள் இருப்பதோ அல்லது அவருக்கு 50 லட்சம் பேர் வாக்களித்துள்ளார்கள் என்பதை தவிர்த்து  பார்த்தால்)

மகிந்தவுக்கு  தோல்வியால் இருக்கும்  கோபத்தில் எதிர்க்கட்சியாக இருந்து  ரனிலின் கண்ணுக்குள் விரலை விட்டுக்கொண்டு இருப்பார் என்பது தான் நிதர்சனம்.

On 12/17/2018 at 11:20 PM, பிழம்பு said:

எனவே  எதிர்க்கட்சி தலைவர் பதவியை விட்டுகொடுக்க மாட்டோம் என தமிழ் தேசியக் கூட்டமைபின் ஊடகப் பேச்சாளர் எம்.எ.சுமந்திரன் எம்.பி தெரிவித்தார். 

இவர்கள் யார் விட்டுக் கொடுக்காமல் இருப்பதற்கு?

சுமந்திரனின் படுமுட்டாள் தனம் விரைவில் வெளிப்படும்!

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, போல் said:

இவர்கள் யார் விட்டுக் கொடுக்காமல் இருப்பதற்கு?

சுமந்திரனின் படுமுட்டாள் தனம் விரைவில் வெளிப்படும்!

தாமரை மொட்டுக் கட்சியில் பகிரங்கமாக இணைந்து, உறுப்புரிமையும் பெற்றுக் கொண்ட, அந்த கட்சிக்காக உள்ளூராட்சி தேர்தல்ல் பிரச்சாரம் செய்து வெற்றியை பகிரங்கமாக கொண்டாடிய மகிந்தா, எதிர்கட்சி தலைவர் பதவிக்காக, சுதந்திரக் கட்சியில் இருப்பதாக சொல்கிறாரா என்பது குறித்து, அரசியலமைப்பு விதிகளின் 99(13) பிரிவின் கீழ் விசாரித்து வெள்ளியன்று அறிவிப்பதாக, சபாநாயகர் தெரிவித்தார்.

ரவூப் கக்கீம், சுமேந்திரன் ஆட்சேபனையை தொடர்ந்தே இந்த அறிவிப்பு வெளியானது.

http://www.dailymirror.lk/article/Status-of-MPs-joining-SLPP-Speaker-to-rule-on-Select-Committee-159949.html

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

தாமரை மொட்டுக் கட்சியில் பகிரங்கமாக இணைந்து, உறுப்புரிமையும் பெற்றுக் கொண்ட, அந்த கட்சிக்காக உள்ளூராட்சி தேர்தல்ல் பிரச்சாரம் செய்து வெற்றியை பகிரங்கமாக கொண்டாடிய மகிந்தா, எதிர்கட்சி தலைவர் பதவிக்காக, சுதந்திரக் கட்சியில் இருப்பதாக சொல்கிறாரா என்பது குறித்து, அரசியலமைப்பு விதிகளின் 99(13) பிரிவின் கீழ் விசாரித்து வெள்ளியன்று அறிவிப்பதாக, சபாநாயகர் தெரிவித்தார்

maxresdefault.jpg

தோழர் , தாங்கள் கூறியது நடக்கும் போல கிடக்கு .. 😇

  • கருத்துக்கள உறவுகள்

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.