Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளிநாட்டுக்கு தப்பியோடிவிட்டாரா நித்தியானந்தா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டுக்கு தப்பியோடிவிட்டாரா நித்தியானந்தா?

45.jpg

சர்ச்சைக்குரிய நபரான நித்தியானந்தா வெளிநாட்டுக்குத் தப்பியோடிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பல்வேறு சர்ச்சைகளிலும், பாலியல் வழக்குகளிலும் சிக்கிய நித்தியானந்தா சட்டத்திலிருந்து தப்பிக்கும் நோக்கில் இந்தியாவை விட்டு வெளிநாட்டுக்குத் தப்பியோடிவிட்டதாக பெங்களூருவில் உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வெளியாகியுள்ளன. அவர் ஏற்கெனவே கெய்மன் தீவுகளில் அரசியல் தஞ்சம் அடைந்துவிட்டதாகவும் சிலர் கூறுகின்றனர். நீண்ட காலமாக பெங்களூருவிலுள்ள ஆசிரமத்தில் நித்தியானந்தா இல்லாத காரணத்தால் இதுபோன்ற செய்திகள் பரவியுள்ளன. இதுபற்றி அவரது சீடர்களில் ஒருவர் பேசுகையில், “அவர் எங்கே இருக்கிறார் என எங்களுக்குத் தெரியாது. அவர் வட இந்தியாவில் இருப்பதாகவும், விரைவில் திரும்புவார் எனவும் அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளுக்குத் தப்பியோடிய விஜய் மல்லையா, நீரவ் மோடி ஆகியோரைப் போலவே நித்யானந்தாவும் தப்பியோடிவிட்டதாக அவரை விமர்சிப்பவர்கள் கூறுகின்றனர். எனினும் நித்தியானந்தா தப்பியோடியிருக்க வாய்ப்பில்லை என்று அதிகாரிகள் கருதுகின்றனர். இதுபற்றி அதிகாரி ஒருவர் பேசுகையில், “அவர் தப்பியோடியிருக்க வாய்ப்பில்லை என கருதுகிறேன். அவரது பாஸ்போர்ட் அண்மையில் காலாவதியாகிவிட்டது. அவரால் சட்டரீதியாக வெளிநாடுகளுக்கு பயணிக்க முடியாது. அவர் வட இந்தியாவில் எங்கோ இருப்பதாக நான் கேள்விப்பட்டேன்” என்று கூறினார். காவல்துறை ஐ.ஜி தயானந்தா பேசுகையில், “அவர் மீது முக்கிய வழக்கு இருப்பதால் அவரது பாஸ்போர்ட் புதுப்பிப்பு கோரிக்கையை காவல்துறை கண்காணிப்பாளர் நிராகரித்துவிட்டார். அவர் பாஸ்போர்ட் அண்மையில் காலாவதியாகிவிட்டது” என்று தெரிவித்தார்.

 

https://minnambalam.com/k/2018/12/19/45

 

  • கருத்துக்கள உறவுகள்

இவங்களுக்கு செய்திகளில் தொடர்ந்து வரனும் தானே ஒளித்து இருந்துவிட்டு தானே பல்லை இளித்துக்கொண்டு வரும் வகையறா இந்த திருட்டு சாமி .

  • கருத்துக்கள உறவுகள்

ரஞ்சித்துடன் பரி நிர்வாண தியானத்தில் இருப்பார் சுவாமிகள்...

தேடாதீங்கப்பா... தேடாதீங்க...

வருவாய்ங்க..... அவசரம் இல்லை... ஆறுதலா  வரட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

ரஞ்சித்துடன் பரி நிர்வாண தியானத்தில் இருப்பார் சுவாமிகள்...

தேடாதீங்கப்பா... தேடாதீங்க...

வருவாய்ங்க..... அவசரம் இல்லை... ஆறுதலா  வரட்டும்.

பிள்ளை...குட்டிகளோடவா?😋

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, sitting

என்னை தேடாதீங்க. நான்... இங்கை இருக்கிறேன். :grin:

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கனுக்கு வேற எங்கேயோ அலுவல் இருக்கிறது போல இந்தாளுக்கு எங்கேயோ மச்சம் இருக்கிறது:unsure::35_thinking:

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: 1 person, sitting

என்னை தேடாதீங்க. நான்... இங்கை இருக்கிறேன். :grin:

தொடங்கின புதுசில, பழைய ஆபிஸ் வெளியால , கஸ்டமரை எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

தலைமறைவான நித்யானந்தா... தனித்தீவில் ரஞ்சிதாவுடன் நித்ய பூஜை...!

swami nithyananda escaped to cayman islands

பாலியல் வழக்கிற்கு பயந்து தனது சிஷ்யை ரஞ்சிதாவுடன் வெளிநாட்டில் உள்ள தனித்தீவில் தலைமறைவாகி இருக்கிறார் சுவாமி நித்யானந்தா. 

நித்யானந்தாவின் தலைமை பீடம் கர்நாடக மாநிலத்தில் ராம்நகர் மாவட்டம் பிடதியில் இருக்கிறது. அங்கு தனக்கு நித்யானந்தா பாலியல் வன்கொடுமை செய்ததாக அவருடைய சிஷ்யை  ஆர்த்திராவ் போலீசில் புகார் கொடுத்திருக்கிறார். அந்த வழக்கு விசாரணை ராம்நகர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவிருக்கிறது. இந்த நேரத்தில் தனது சிஷ்யை ரஞ்சிதாவுடன் சுவாமிகள் எஸ்கேப் ஆகி தனித்தீவில் தலைமறவாகி இருக்கிறார்.

எப்போதும் அழகுப் பெண்கள் புடை சூழ…தோசை சுடறதாகட்டும், நகைக் கண்காட்சி நடத்துவதாகட்டும், இட்ஸ் மீ…தட்ஸ் மீ…என்று பிரசங்கம் செய்வதாகட்டும்... நித்யானந்தா ஸ்டைலே வேறு! அவ்வப்போது பிரச்னைகள் எழும்போது அவர் எஸ்கேப் ஆகும் ஸ்டைலும் வேற லெவல்..!

பாலியல் பலாத்கார வழக்கு விசாரணைக்கு பிடதி நீதிமன்றத்தில் நித்தியானந்தா ஆஜராகவில்லை. ஆர்த்திராவ் உள்ளிட்டோர் தந்த பலாத்கார வழக்கு பிடதி நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இது தொடர்பாக கடந்த ஜுன் மாதம் நித்தியானந்தா மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. ஆனால், நித்யானந்தா ஒருமுறைகூட நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவர் ஆஜராகாததால் வழக்கு விசாரணை ஜனவரி 3-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. நித்தியானந்தா கடந்த ஆறு மாதமாக எங்கிருக்கிறார் என்பதில் மர்மம் நீடித்தது. நித்தியானந்தா தலைமறைவாக இருந்தாலும் தினமும் யூ-டியூப் மூலம் பிரச்சாரம் செய்வதை விடவில்லை. ஆன்மீக பிரச்சாரத்தை எங்கிருந்து நித்தி செய்து வருகிறார் என்ற மர்மம் நீடிக்கிறது.

nithyananda.jpg

ஆனால், அவரது ஆசிரமத்தில் கேட்டால் நித்யானந்தா சதுரம்மாஸ்ய பூஜைக்காக வாரணாசி போய் இருப்பதாக கூறுகிறார்கள். நித்தியின் பாஸ்போர்ட்டை ஏற்கனவே நீதிமன்றம் முடக்கிவிட்டதால், அவர் வாரனாசியில் இருந்து நேபாளம் சென்று அங்கிருந்து கேமேன் தீவுகளுக்கு பறந்து விட்டதாகத் தெரிய வந்திருக்கிறது. கேமேன் ஐலேண்ட் என்பது கரீபியன் கடலில் இருக்கும் ஒரு குட்டி நாடு. நித்யானந்தாவைப் போலவே மிகவும் சுவாரசியமான நாடு அது! இன்றும் பிரிட்டன் ஆட்சியின் கீழ் இருக்கும் இந்த நாடு, ஸ்கூபா டைவிங், ஸ்னார்க்கல் போன்ற விளையாட்டுகளுக்கு மட்டுமல்ல சுவிச்சர்லாந்துக்கு அடுத்து கருப்பு பணம் பதுக்கப்படும் இடமும் இங்குதான். 

இந்தியாவிலிருந்து சமீபத்தில் ஓட்டம் பிடித்த விஜய் மல்லையா, நீரவ் மோடி, முகுல் சோக்சி போன்ற பண முதலைகளும், நம்மூர் அரசியல்வாதிகளும் பதுக்கும் பணத்தை பாதுகாக்கும் நாடு. அங்குதான் நித்யானந்தா தனது நித்ய பூஜைகளை இப்போது ரஞ்சிதாவுடன் செய்து வருகிறார் என்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

இன்னமும் ரஞ்சிதாவா ,போரடிக்காது.......! .அவர் என்ன இல்லறவாசியா ஒன்றையே பிடிச்சுக்கொண்டு அதையே கட்டிக் கொண்டு சிரிக்க.(எதிர்ச்சொல் பயன்படுத்தவில்லை பாதுகாப்பு கருதி)......!😉

  • கருத்துக்கள உறவுகள்

பெரிய மகான்கள் எல்லாம் வாழ்ந்தது போதும் என்ற முடிவுக்கு வந்து விட்டால் அவர்களாகவே ஜீவ சமாதி ஆகிவிடுவதுண்டு அதாவது அவர்களாகவே குழிக்குள் இறங்கி மேலே மண்ணை அள்ளி போட சொல்லிவிடுவார்கள் . நம்ம நித்தி அந்த அளவிக்கு வொர்த் இல்லை என்றாலும் உதிரி பூக்கள் பட கிளைமேக்ஸ் போன்று .. யாராவது . ? 😊

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, suvy said:

இன்னமும் ரஞ்சிதாவா ,போரடிக்காது.......! .அவர் என்ன இல்லறவாசியா ஒன்றையே பிடிச்சுக்கொண்டு அதையே கட்டிக் கொண்டு சிரிக்க.(எதிர்ச்சொல் பயன்படுத்தவில்லை பாதுகாப்பு கருதி)......!😉

தெய்வமே!!!! tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.