Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மரணம் திரும்பிச் சென்றது - நிழலி

Featured Replies

இருள் கலந்த சாலையில்
ஒரு சிறு வளைவில்
எனக்கான மரணம்
இன்று
காத்திருந்தது

ஒரு கணப் பொழுதில்
தீர்மானம் மாற்றி
இன்னொரு நாளை
குறித்து விட்டு
திரும்பிச் சென்றது

பனியில் பெய்த மழையில்
வீதியின் ஓரத்தில்
மரணம் காத்திருந்ததையும்
என்னை பார்த்து புன்னகைத்ததையும்
பின் மனம் மாறி
திரும்பிச் சென்றதையும்
நானும் பார்த்திருந்தேன்


தூரத்தில் ஒலி எழுப்பும்
வாகனம் ஒன்றில் அது
ஏறி சென்றதையும்
ஏறிச் செல்ல முன்
தலை திருப்பி
மீண்டும் என்னை பார்த்ததையும்
நான் கண்டிருந்தேன்

எல்லாக் காலங்களிலும்
ஏதோ ஒரு புள்ளியில்
நானும் அதுவும் அடிக்கடி
சந்திக்க முயல்வதும்
பின்
சந்திக்காது பிரிவதும்
அதன் பின் இன்னொரு
சந்திப்பிற்காக காத்திருப்பதுமாக
வாழ்வு நீள்கின்றது

 

-----------

இன்று புதிதாக திறக்கப்பட்ட வீதியில் மோசமாக போயிருக்க கூடிய விபத்தில் சிறு நொடி வித்தியாசத்தில் உயிர் தப்பினேன்.

  • கருத்துக்கள உறவுகள்

மாபெரும் சோகத்தை மனம் கரையும் விதம் கவிதையாக்கிவதற்கும் ஒரு மனத் தைரியம் வேண்டும்......நீங்கள் நீடூழி வாழவேண்டும்.....!  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

இருள் கலந்த சாலையில்
ஒரு சிறு வளைவில்
எனக்கான மரணம்
இன்று
காத்திருந்தது

ஒரு கணப் பொழுதில்
தீர்மானம் மாற்றி
இன்னொரு நாளை
குறித்து விட்டு
திரும்பிச் சென்றது

பனியில் பெய்த மழையில்
வீதியின் ஓரத்தில்
மரணம் காத்திருந்ததையும்
என்னை பார்த்து புன்னகைத்ததையும்
பின் மனம் மாறி
திரும்பிச் சென்றதையும்
நானும் பார்த்திருந்தேன்


தூரத்தில் ஒலி எழுப்பும்
வாகனம் ஒன்றில் அது
ஏறி சென்றதையும்
ஏறிச் செல்ல முன்
தலை திருப்பி
மீண்டும் என்னை பார்த்ததையும்
நான் கண்டிருந்தேன்

எல்லாக் காலங்களிலும்
ஏதோ ஒரு புள்ளியில்
நானும் அதுவும் அடிக்கடி
சந்திக்க முயல்வதும்
பின்
சந்திக்காது பிரிவதும்
அதன் பின் இன்னொரு
சந்திப்பிற்காக காத்திருப்பதுமாக
வாழ்வு நீள்கின்றது

 

-----------

இன்று புதிதாக திறக்கப்பட்ட வீதியில் மோசமாக போயிருக்க கூடிய விபத்தில் சிறு நொடி வித்தியாசத்தில் உயிர் தப்பினேன்.

Bildergebnis für thanks god

அட... நெருங்கிய மரணத்தை கூட, அழகிய கவிதையாக வடிக்க...  நிழலியால்  மட்டுமே முடியும்.
தலைப்பை பார்த்து விட்டு,  கவிதையை... வேகமாக வாசித்த போது, மனது ஒரு வித பதட்டத்தில் இருந்தது.

புதிதாக  போடப் பட்ட  வீதிகளில்... எண்ணைத் தன்மையுடன் கூடிய    வழுவழுப்பு  இருக்கும்.
நீங்கள், ஒரு  குடும்பத் தலைவன். அவர்களை வளர்த்து ஆளாக்கும் மட்டும்,  இவ்வுலகில் வாழ்ந்தே ஆக வேண்டும்.

உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்று நினைக்கின்றேன்.
ஆனால்.. இன்றைய நாளில், உங்களை காப்பாற்றிய இறைவனுக்கு நன்றி சொல்ல,
அருகில் உள்ள கோவிலோ, தேவாலயமோ   எதுவாக இருந்தாலும்,
குடும்பத்துடன் சென்று வருவது, நல்லது என்பது... என் அபிப்பிராயம்.

  • தொடங்கியவர்
1 hour ago, suvy said:

மாபெரும் சோகத்தை மனம் கரையும் விதம் கவிதையாக்கிவதற்கும் ஒரு மனத் தைரியம் வேண்டும்......நீங்கள் நீடூழி வாழவேண்டும்.....!  

சோகம் எல்லாம் இல்லை...

இன்று தான் திறந்த புது றோட் என்பதால் வேகமாக காரை செலுத்திக் கொண்டு இருக்கும் போது, முன்னுக்கு போன பயபுள்ளை இடது பக்கம் இருக்கும் சிறு தெருவுக்கு திரும்புவதற்காக திடீரென்று நிறுத்தினார் (அவருக்கும் புது றோட் தானே).
நான் வழக்கமாக ஓடும் கார் சின்ன திருத்த வேலைக்காக கராஜில் நிற்பதால் இன்ஸூரன்ஸ் தந்த Ford Edge 2017 காரில் தான் நாலு நாட்களாக ஓடுகின்றேன். அந்த கார் இன்னும் சரியாக பழக்கப்படவில்லை.  எனக்கு கிடைத்த ஒரு நொடி அவகாசத்தில் சடுதியாக பிரேக் அடிக்க அது வழுக்கி கொண்டு போய் முன்னுக்கு நிறுத்திய காரை இடிக்க போக  தன்னிச்சையாக அடுத்த லேனுக்கு மாற்றும் போது அடுத்த Lane இல் வந்தவர் அரண்டு போய் ஹோர்ன் அடிக்க, இன்னும் கொஞ்சம் தள்ளி இருக்கும் Shoulder இற்கு காரை மாற்ற, அருகில் இருந்த மதிலில் வேகமாக மோதும் நிலைக்கு சென்று அரை அடி தள்ளி என் கார் நின்றது. இது எல்லாம் ஒரு நொடிக்குள் நிகழ்ந்து விட்டது. அது கொடுத்த அதிர்ச்சி சரியாக வர மூன்று மணி நேரத்துக்கு மேல் எடுத்தது. அந்த அதிர்ச்சி உணர்வுக்குள் தான் இந்த கவிதை(???) யை எழுதியது.

யோசிக்கும் போது நம் மூளை ஆபத்தில் இருந்து தன் உடலை காப்பாற் எவ்வளவு வேகமாக வேலை செய்கின்றது என ஆச்சரியமாக இருக்கு. ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் முன்னைய அனுபவங்களை புரொஸஸ் செய்து முடிவுகளை மனித மூளை எடுக்கின்றது.

10 minutes ago, தமிழ் சிறி said:

Bildergebnis für thanks god

அட... நெருங்கிய மரணத்தை கூட, அழகிய கவிதையாக வடிக்க...  நிழலியால்  மட்டுமே முடியும்.
தலைப்பை பார்த்து விட்டு,  கவிதையை... வேகமாக வாசித்த போது, மனது ஒரு வித பதட்டத்தில் இருந்தது.

புதிதாக  போடப் பட்ட  வீதிகளில்... எண்ணைத் தன்மையுடன் கூடிய    வழுவழுப்பு  இருக்கும்.
நீங்கள், ஒரு  குடும்பத் தலைவன். அவர்களை வளர்த்து ஆளாக்கும் மட்டும்,  இவ்வுலகில் வாழ்ந்தே ஆக வேண்டும்.

உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்று நினைக்கின்றேன்.
ஆனால்.. இன்றைய நாளில், உங்களை காப்பாற்றிய இறைவனுக்கு நன்றி சொல்ல,
அருகில் உள்ள கோவிலோ, தேவாலயமோ   எதுவாக இருந்தாலும்,
குடும்பத்துடன் சென்று வருவது, நல்லது என்பது... என் அபிப்பிராயம்.

என் மூளைக்குத் தான் ...

thank-you-.jpg

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

என் மூளைக்குத் தான் ...

thank-you-.jpg

நிழலி... உங்கள் மூளைக்கு... மட்டும்,  நன்றி, சொல்ல முடியாது. :grin:
நீங்கள்... சாப்பிட்ட,   ஆட்டு 🦌 மூளைக்கும்,  மாட்டு 🐂 மூளைக்கும்... சேர்த்தே...  நன்றி சொல்லி விடுங்கள். 😛

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடன் வேலை செய்யும் இந்தியர் ஒருவரின் நண்பர் ரஜினியின் 2.0 படம் பின்னிரவில் காட்சி பார்த்துவிட்டு திரும்பும்போது motorway இல் மூன்று கார்களுடன் விபத்து ஏற்பட்டு மரணமாகிவிட்டதை இன்றுதான் சொன்னார். இறந்தவருக்கு 36  வயது. மனைவி, இரு பெண் குழந்தைகள் உள்ளனராம். விபத்து எப்படி ஏற்பட்டது என்று தெரியாது. ஆனால் ஒரு குடும்பம் குலைந்துவிட்டது. ஒரு வினாடியில் உயிர்போகக்கூடும் என்பதால் கவனமாக கார் ஓட்டுவது நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

என் மூளைக்குத் தான் ...

thank-you-.jpg

திரும்பிச் செல்லவில்லை.

எச்சரித்து சென்றுள்ளது.... இன்றுபோய்.... இன்னொருநாள் வருகிறேன் என்று....

அது ஒரு தீர்மானத்துடன் வந்திருந்தால், உங்கள் மூளை ஒன்றும் செய்திருக்க முடியாது. 

கவனம் எடுங்கள்...

https://www.thesun.co.uk/archives/news/710808/bskyb-executive-dies-in-tragic-accident-with-his-daughter/

நான் நேர்முகத்துக்கு போனபோது, வந்த இந்த தகவலால், நேர்முகம் ரத்தானது.

ஒரு நினைத்துப் பார்க்க முடியாத விபத்து. 

 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

சே ஒரு அருமையான சான்ஸ் மிஸ்சாகி விட்டது😟 இதை சாட்டியாவது நானும்  ஒரு கவிதை நானும் எழுதி பழகி  இருப்பன்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

சே ஒரு அருமையான சான்ஸ் மிஸ்சாகி விட்டது😟 இதை சாட்டியாவது நானும்  ஒரு கவிதை நானும் எழுதி பழகி  இருப்பன்

ஊருக்கு போனை  போட்டு.... வெட்டித்  தாக்குறதா , பெட்டிக்குள்ள  போட்டு அனுப்புறதா எண்டு கேட்க வைக்கிற வேலை மிஸ் ஆயிருச்சு... :grin:   

  • தொடங்கியவர்
On ‎12‎/‎21‎/‎2018 at 2:56 PM, Nathamuni said:

திரும்பிச் செல்லவில்லை.

எச்சரித்து சென்றுள்ளது.... இன்றுபோய்.... இன்னொருநாள் வருகிறேன் என்று....

அது ஒரு தீர்மானத்துடன் வந்திருந்தால், உங்கள் மூளை ஒன்றும் செய்திருக்க முடியாது. 

கவனம் எடுங்கள்...

https://www.thesun.co.uk/archives/news/710808/bskyb-executive-dies-in-tragic-accident-with-his-daughter/

நான் நேர்முகத்துக்கு போனபோது, வந்த இந்த தகவலால், நேர்முகம் ரத்தானது.

ஒரு நினைத்துப் பார்க்க முடியாத விபத்து. 

 

ஒரு கணப் பொழுதில்
தீர்மானம் மாற்றி
இன்னொரு நாளை
குறித்து விட்டு
திரும்பிச் சென்றது

என்று அதைத்தானே நானும் இவ்வாறு குறிப்பிட்டு இருக்கின்றேன். இப்படி எச்சரிக்கை செய்தது இதுவே முதல் தடவை அல்ல. ஒரு முறை நீரில் மூழ்கி Lifeguards இனால் காப்பாற்றப்பட்டும் இருக்கின்றேன்.

On ‎12‎/‎21‎/‎2018 at 3:35 PM, ரதி said:

சே ஒரு அருமையான சான்ஸ் மிஸ்சாகி விட்டது😟 இதை சாட்டியாவது நானும்  ஒரு கவிதை நானும் எழுதி பழகி  இருப்பன்

சான்ஸ் கிடைக்கவில்லை என்ற கவலையில் ஒரு கவிதை எழுதலாம் தானே

  • தொடங்கியவர்
22 hours ago, Nathamuni said:

ஊருக்கு போனை  போட்டு.... வெட்டித்  தாக்குறதா , பெட்டிக்குள்ள  போட்டு அனுப்புறதா எண்டு கேட்க வைக்கிற வேலை மிஸ் ஆயிருச்சு... :grin:   

நானும் மனைவியும் எங்கள் உடம்பை donate பண்ண எழுதி கொடுத்து இருக்கின்றம் என்பதால் இந்த பிரச்சனை இல்லை. எனக்கு மத சடங்கு எதுவும் செய்ய கூடாது என்று கண்டிப்பாக சொல்லி இருப்பதால் ஒரு நாளைக்கு வைச்சு விட்டு அனுப்பி விடுவினம்

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா....வருஷம் முடிய போகுதே...! நம்ம நிழலி மரணத்தைப் பற்றி..இந்த வருஷம் கதைக்கவே இல்லையே என்று குழம்பிப் போயிருந்த நேரத்தில் நிழலியின் பதிவு வந்திருக்கின்றது!

அப்படி ஒரு நெருக்கம், நிழலிக்கும்...நிழலின் கவிதைகளுக்கும்!

ஏதோ மகாத்மா காந்தி சத்திய சோதனை செய்த்து மாதிரி எழுதியிருக்கிறார்!

பொதுவாக மனித மூளை...நாம் திரும்பத்திரும்ப செய்யும் செயல்களை ஓட்டோ பைலட்டில் விட்டு விடட்டுப் பேசாமல்...பார்த்துக்கொண்டு இருக்கும்!

அவசியம் ஏற்படும் போது உடனேயே தலையிடும்! இந்தக் கால இடைவெளி ஒருவருக்கொருவர் வேறு படும்!

வயது, மனநிலை, தூக்கம், அசதி போன்றவை  காரணங்களாக இருக்கும்!

ஏதோ ...தலைக்கு வந்தது....தலைப்பாகையோடு போனதாக இருக்கட்டும்!

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, நிழலி said:

நானும் மனைவியும் எங்கள் உடம்பை donate பண்ண எழுதி கொடுத்து இருக்கின்றம் என்பதால் இந்த பிரச்சனை இல்லை. எனக்கு மத சடங்கு எதுவும் செய்ய கூடாது என்று கண்டிப்பாக சொல்லி இருப்பதால் ஒரு நாளைக்கு வைச்சு விட்டு அனுப்பி விடுவினம்

நண்பர்களுடனான பாட்டி ஒன்றுக்கு, வேர்க்க, விறுவிறுக்க வந்த நண்பர்.... மிகவும் அதிர்வுடன் காணப்பட்டார். 

என்ன மச்சான் விசயம் என்று கேட்டபோது, கொஞ்சம் பொறு.... டென்ஷன் அடங்கட்டும் என்று சொன்னார்.

பிறகு, சொன்னார்... பெரும் தெரு ஒன்றில் வேகமாக வந்தபோது, முன்னே போன வாகனம் தீடீர் பிரேக் போட்டதால், இவரும் போட, மூன்று முறை வாகனம் வேகமாக சுழன்று வந்து நின்று இருக்கிறது. பின்னால் ஒரு வாகனமும் வராததால் தப்பித் பிழைத்தார்.

அவரது டென்ஷனை போக்க இன்னொரு நண்பர் சொன்ன அந்த வார்த்தைகள், சிரிப்பை வரவழைத்து.... அவரது டென்ஷனைக் குறைத்து 'ஊத்து மச்சான் விஸ்கியை' என்றார். 

நீங்களும் அதில் உள்ள, வேடிக்கையை மட்டும் பார்த்திருப்பீர்கள், டென்ஷன் குறைந்திருக்கும் என்று நினைக்கிறேன். 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

உங்களை விட்டுச்சென்று இருக்கிறது பஸ் மாறிப்பயணம் செய்வது  போலத்தான் றூட் மாறி வந்திருக்கிறது ஆனால் எல்லோரையும் விரும்பம் இல்லாவிட்டாலும் அழைத்து செல்லும் சிலரை விட்டுப்பிடிக்கும் சிலரை எட்டிப்பிடிக்கும் பிடியும் ஒன்றுதான் தப்ப முடியாது 

  • கருத்துக்கள உறவுகள்

 பல்லாண்டு வாழிய நழலி.. 30 தடவையாவது மரனத்தை சந்தித்த அனுபவத்தால்  எனக்கு புரிகிறது உங்கள் கவிதையின் உள்ளும் புறமும்.

து பிரிவதும்
அதன் பின் இன்னொரு
சந்திப்பிற்காக காத்திருப்பதுமாக
வாழ்வு நீள்கின்றது

மரணத்தை எழி

லுடன் சொல்லும் கவிதை வடிவம் மெச்சப்படவேண்டியது. தைமாதம் கனடா வரக்கூடும். சந்திப்போம்

Edited by poet

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.