Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் கூட்டமைப்பின் போராட்டம் ஓயாது!- மாவை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Mavai-Senathirasa-720x450-720x450.png

இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் கூட்டமைப்பின் போராட்டம் ஓயாது!- மாவை

எத்தகைய தடைகள் வந்தாலும் அவற்றை முறியடித்து நீண்டகாலமாக தீர்க்கப்படாதுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்போம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சோனதிராஜா உறுதியளித்துள்ளார்.

போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் கல்வியை தொடர்வதற்கான ஊக்குவிப்புத் தொகை வழங்கும் நிகழ்வு இலங்கைத் தமிழசுக் கட்சி அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது.

சுவிஸ் நிறுவனமொன்றின் அனுசரணையுடன் நடைபெற்ற குறித்த நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”எமது மக்களுக்கு என்ன தேவையோ அதனை முன்நிறுத்தி நாங்கள் செயற்பட்டு வருகின்றோம். சிலர் எமது செயற்பாட்டை பார்த்து ஒரு கட்சி சார்ந்து செயற்படுவதாகக் கூச்சல் இடுகின்றார்கள். ஆனால் நாங்கள் ஜனநாயக ரீதியாக செயற்பட்டு ஜனாநாயகத்தை நிலைநாட்டியுள்ளோம்.

அதேபோன்று, நீண்டகாலமாக தீர்க்கப்படாதுள்ள இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை காண்போம். சம நேரத்தில் போரினால் பாதிக்கப்பட்ட எமது மக்களின் பகுதிகளை சீரமைத்தல், பெண் தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துதல், காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டடோர் விவகாரம் தொடர்பாகவும் மீண்டும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றோம்.

இத்தகைய செயற்பாடுகளுக்கு உறுதுணையாக சர்வேதச சமூகமும் எங்களுடன் நிற்கின்றது” எனத் தெரிவித்தார்.

http://athavannews.com/இனப்பிரச்சினைக்கு-தீர்வ/

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் கூட்டமைப்பின் போராட்டம் ஓயாது!- மாவை

தோழர் , இதை எழுதிய ஆதவன் நியூஸ்காரர்  எப்படியான மனநிலையில் எழுதினார் என்று தெரியவில்லை  ( ! ).. ஆனால் தாங்கள் இதை இணைக்கும் போது சிரிப்பை கட்டுபடுத்தி கொண்டு தானே இணைத்தீர்கள் .. ? உண்மையை உரைக்குக .. 🤩

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த மாளிகை கட்ட அத்திபாரம் போட்டுவிட்டார் ரணில் வாழ்க...

  • கருத்துக்கள உறவுகள்

பெட்டி கைமாறும் வரை ஓயாது.....!

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, MEERA said:

பெட்டி கைமாறும் வரை ஓயாது.....!

இதில் என்ன ஒரு சுவாரசியம் என்றால் மீரா அண்ண எங்க ஊருக்கு எந்த நடவடிக்கை எடுப்பதென்றாலும் இவரை கேட்கணுமாம் அப்ப எதுக்கு நாங்கள் உங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று செம்புடன் கேட்டன்  சண்டையா போச்சு அம்பாறைக்கு மட்டக்களப்புக்கும் மாவையருக்கும் என்ன சம்பந்தம் இனி மேல் நாங்கள் யாராவது முஸ்லீம் , அல்லது சிங்கள எம் பியோ அல்லது அமைச்சரயோ கூப்பிட்டு ஆலாத்தி எடுப்போம்

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இதில் என்ன ஒரு சுவாரசியம் என்றால் மீரா அண்ண எங்க ஊருக்கு எந்த நடவடிக்கை எடுப்பதென்றாலும் இவரை கேட்கணுமாம் அப்ப எதுக்கு நாங்கள் உங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று செம்புடன் கேட்டன்  சண்டையா போச்சு அம்பாறைக்கு மட்டக்களப்புக்கும் மாவையருக்கும் என்ன சம்பந்தம் இனி மேல் நாங்கள் யாராவது முஸ்லீம் , அல்லது சிங்கள எம் பியோ அல்லது அமைச்சரயோ கூப்பிட்டு ஆலாத்தி எடுப்போம்

வடக்கு ஆட்களுக்கு கிழக்கின் பிரச்சனைகள் புரியாது..

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, MEERA said:

வடக்கு ஆட்களுக்கு கிழக்கின் பிரச்சனைகள் புரியாது..

புரியவும் மாட்டாது 

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, MEERA said:

வடக்கு ஆட்களுக்கு கிழக்கின் பிரச்சனைகள் புரியாது..

 

40 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

புரியவும் மாட்டாது 

இந்திய இராணுவத்தை இலங்கையைவிட்டுத் துரத்தியபின்பு, கிழக்கை விட்டு வடக்கைமட்டும் உன் விருப்பம்போல் ஆட்சி செய்துகொள் என்று சனாதிபதி பிரேமதாச தலைவர் பிரபாகரனுடன் ஒரு உடன்பாட்டுக்கு வந்து தீர்வை ஏற்படுத்த முயன்றதாகவும், கிழக்கு மக்களை நிர்கதியாக விடுவதை பிரபாகரன் ஏற்க மறுத்ததால் தீர்வு எட்டவில்லை என்றும் செய்திகள் வந்தன.  

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Paanch said:

 

இந்திய இராணுவத்தை இலங்கையைவிட்டுத் துரத்தியபின்பு, கிழக்கை விட்டு வடக்கைமட்டும் உன் விருப்பம்போல் ஆட்சி செய்துகொள் என்று சனாதிபதி பிரேமதாச தலைவர் பிரபாகரனுடன் ஒரு உடன்பாட்டுக்கு வந்து தீர்வை ஏற்படுத்த முயன்றதாகவும், கிழக்கு மக்களை நிர்கதியாக விடுவதை பிரபாகரன் ஏற்க மறுத்ததால் தீர்வு எட்டவில்லை என்றும் செய்திகள் வந்தன.  

 

அது தலைவர் பிரபாகரன் அண்ண  கிழக்கில்லாமல் வடக்கு இல்லையென நினைத்தார் அவர் இவர்களோ?? 

.. கேள்விப்பட்ட அளவில், இல்லை தீர விசாரித்த அளவில் ..

... அன்றைய தளபதியின்(?) வாகன ஓட்டுனர், அதுதான் தகுதி!  .. மற்றையபடி 77 கால/முற்பட்ட தேர்தல்களில், ஊருக்கூர் கையை பிளேடால் கிளித்து இரத்த பொட்டிடும் கூட்டத்தை ஒழுங்கு படுத்தும் தலைவன்! மாட்டை அவிழ்த்து விட்டு, கண்டோடு செட்டில்! அரசியல், சட்டம், ஆங்கிலம் மணத்துக்கும் இல்லை! 

.. தலைமையை ஏர் என்றால், "எனக்கு சட்டம், ஆங்கிலம் பிரட்சனை, "சு"வே அதற்கு தகுதி! ... சொன்னதற்கான ஓடியோ ஆதாரமும் ..!

... டமிழர்களின் பிரட்சனை இல்லையென்றால் ... தீர்ந்தால் ... எம் கதிரைகள்??????????????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, தமிழ் சிறி said:

எத்தகைய தடைகள் வந்தாலும் அவற்றை முறியடித்து நீண்டகாலமாக தீர்க்கப்படாதுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்போம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சோனதிராஜா உறுதியளித்துள்ளார்.

ஈழத்தமிழன் வரலாற்றிலை....... பிள்ளை பேரப்பிள்ளை பூட்டப்பிள்ளை எண்டு சந்ததி நீண்டுகொண்டே போய்க்கொண்டிருக்கு.......ஆனால் உங்கடை முழக்கமோ நிண்ட இடத்திலையே சுத்திக்கொண்டு நிக்கிது...உங்களைப்போலை அரசியல்வாதிகள் தமிழினத்துக்கு கிடைச்சது ஒருவித சாபம் எண்டு நினைக்கிறன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தோழர் , இதை எழுதிய ஆதவன் நியூஸ்காரர்  எப்படியான மனநிலையில் எழுதினார் என்று தெரியவில்லை  ( ! ).. ஆனால் தாங்கள் இதை இணைக்கும் போது சிரிப்பை கட்டுபடுத்தி கொண்டு தானே இணைத்தீர்கள் .. ? உண்மையை உரைக்குக .. 🤩

மக்களை, எவ்வளவு... முட்டாள்களாக  மாவை சேனாதிராஜா  எடை போட்டுள்ளார் என்ற ஆத்திரம் தான் வந்தது. தோழர்.

உண்மையை கதைப்போமாயின் .. கூத்தமைப்பில் அரசியல்/சட்டம் தெரிந்தவர்கள் இன்று சம்பந்தரும், சுமந்திரரும் மட்டும்தான்! 

.... அதில் ஒன்றுக்கு சேடம் இழுக்க தொடங்குகிறது, மற்றதை "மீண்டும் புலி முகமூடி போட்டு சிங்கள தேவைக்காக போடப்படுமாயின் ... 

.... மிகுதி இருப்பது என்னையும், மாவையும் போன்ற மாங்காய்களும் தேங்காய்களும்தான்! 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.