Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாசிப்பதால் மனிதன் பூரணமடைகிறான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்று கரு பழனியப்பன் பேச்சு கேட்டேன்.

வாசிப்பதால் மனிதன் பூரணமடைகிறான் என்பது குறித்தது.

கேரள நடிகர் மம்முட்டி சிறந்த எழுத்தாளர் கூட. அவர் ஒரு கார் வாங்கினார்.

கேரளாவில் இருந்து காரை இரவோடிரவாக ஓடி சென்னைக்கு அரக்க பரக்க படத்தில் நடிக்க ஓடிவந்தால், அவர் நடிக்கும் படத்தின் இயக்குனர் செல்வமணி மிகவும் மெதுவாக செட்டுக்கு வருகிறார்.

அவரிடம் புறுபுறக்கிறார் மம்முட்டி. அட, நீங்களா ஓடு ரீங்க. டிரைவர் தானே. ரிலாக்ஸ் பண்ணி தூங்கி வர வேண்டியது தானே என்கிறார் இயக்குனர். அடப்போய்யா .... டிரைவர் ஓடவா 60 லட்ச்சத்துக்கு காரை வாங்கினேன் என்கிறார்.

அப்ப என்ன புறுபுறுப்பு.... நீங்க தான் ஓடுனீர்கள்  என்றால், என்ஜோய் பண்ணி  ஓட வேண்டியது தானே என்கிறார் டைரக்டர்.

அந்த மம்முட்டி திரும்பி போகிறார், ஊருக்கு. போற வழில இருட்டில ஒரு மெல்லிய உருவம் காரை மறிக்க கையை காட்டுது.

சொல்லப் பட்ட அறிவுரைகளின் படி நிறுத்தாமல் போகிறார் மம்முட்டி. ஆனால்  மனசு கேட்கவில்லை. 3/4 கிலோ மீட்டர் போனவர், காரை திருப்பிக் கொண்டு வருகிறார். கிழவர் இன்னும் நிக்கிறார். பதைபதைப்புடன்.

என்னையா விஷயம் என்கிறார் மம்முட்டி. இல்லை, மருமக பிரசவ வலில துடிச்சுக்கிட்டு இருக்கிறாயா, ஆசுபத்திரிக்கு போகணும், அதுதான் வண்டி கிடைக்குமா என்று பார்க்கிறேன் என்கிறார்.

அவரது வீட்டுக்கு போய், மருமகளை கூட்டிக் கொண்டு வைத்திய சாலை செல்கின்றனர்.

பதட்டத்தில்  இருந்த யாருமே மம்முட்டியை கண்டு கொள்ள வில்லை.

போகலாம் என்று திரும்பி காருக்கு வருகிறார் மம்முட்டி. பொழுதும் விடிந்து விடுகிறது.

மம்முட்டி கையை பிடித்து, போகும் போது டீ  சாப்பிடு தம்பி என்று கையில் பணத்தினை வைக்கிறார். வேணாம் என்று சொல்ல நினைத்தவர். கையில் பார்த்தால், கிழிந்த இரண்டு ரூபா நோட்டு.

சரிங்க அய்யா என்று தன்னை அடையாளம் கண்டு கொள்ளாத அந்த கிழவரிடம் விடை பெறுகிறார் மம்முட்டி.

நான்கு முறை தேசிய விருது வாங்கிய எனக்கு, அந்த இரண்டு ரூபாவே மிக, மிக சிறந்த விருதாக படுகின்றது, அதை இன்னும் பாதுகாத்து வைத்திருக்கிறேன் என எழுதுகிறார் மம்முட்டி.   

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல மனிதர்களிடம் இருக்கும்  மனசாட்சி  அவர்களை தவறு செய்ய விடாமல் வழி நடத்துகின்றது. வாழ்த்துக்கள் மம்முட்டி ......!   😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

நல்ல மனிதர்களிடம் இருக்கும்  மனசாட்சி  அவர்களை தவறு செய்ய விடாமல் வழி நடத்துகின்றது. வாழ்த்துக்கள் மம்முட்டி ......!   😁

கிழிந்த நோட்டு, டீ  கடை கராரே எடுக்க மாட்டார்.

அதனை செய்த உதவிக்காக கொடுத்து உதவியினை கொச்சைப்படுத்தாமல், போகும்போது டீ குடி தம்பி, என்று  தன்னால் முடிந்த உபகாரம் செய்த பெரியவரின் கண்ணியமும், அதை ஏற்றுக்  கொண்ட  மம்முட்டியின் பெருந்தன்மையும் தான் உண்மையில் பாராட்டுக் குரியது.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

மம்முட்டியை திரையில் பார்க்கும் முகத்தில் அவருடைய உள்ளம் வெள்ளை என்று தெரியும். பந்தா இல்லாமல் எத்தனை பிரபலங்கள் இவரைப் போன்று இருப்பார்கள்? மிகவும் குறைவு என்றுதான் நினைக்கின்றேன்.

தலைப்பின் உட்பொருளுக்கும் கட்டுரைக்கும் சம்பந்தம் இல்லாவிட்டாலும் ஒரு அனுபவம் பகிர்வு மனித நேயத்தை ஆழமாகக் காட்டுகிறது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, இணையவன் said:

தலைப்பின் உட்பொருளுக்கும் கட்டுரைக்கும் சம்பந்தம் இல்லாவிட்டாலும் ஒரு அனுபவம் பகிர்வு மனித நேயத்தை ஆழமாகக் காட்டுகிறது. 

அப்படி இல்லையே இணையவன்.

மம்முட்டி எழுதியதை வாசிக்கும் போது அவரின் மறுபுறமும், அத்துடன் நாமும் சந்தர்ப்பம் கிடைக்கும் போது உதவவேண்டும் என்ற எண்ணம் மனதில் வருகிறதே. அதுதான் மனித(மு)ம் பூரணம் அடையும் உணர்வு.

சுயநலம் தானே குற்றங்களின் பிறப்பிடம்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

மம்முட்டி அவர்கள் பற்றிய, அவரது வரலாற்றின் இந்தப் புள்ளியானது.... என்னிடம் உள்ள மனிதத்தை சிறிது புடம்போட உதவியது. :100_pray: 

  • 5 months later...

நல்லதொரு பகிர்வு - 'நல்ல எழுத்துக்களை' வாசிப்பதால் மனிதன் பூரணமடைகிறான்.

  • 4 weeks later...

" வாசிப்பதால் மனிதன் பூரணமடைகிறான் " அருமையான சொற்தொடர்!

  • கருத்துக்கள உறவுகள்

நின்று போன வாசிப்பு பழக்கத்தை இன்றுடன் மறுபடியும் ஆரம்பிக்கலாம் என்பதை தலையங்கம் நினைவு படுத்துகின்றது .

  • கருத்துக்கள உறவுகள்
On 7/17/2019 at 4:24 PM, Gowin said:

" வாசிப்பதால் மனிதன் பூரணமடைகிறான் " அருமையான சொற்தொடர்!

எங்கட ஊர் வாசிகசாலை/சனசமூக நிலையத்தில் நீண்டகாலமாக எழுதி இருந்தது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.