Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரதமர் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து தீர்வை பெற்று தருவார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
vijayakala-new.png?zoom=1.21000002622604
 
தமிழ் மக்களின் அன்றாட பிரச்சனைகள் , இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் எடுத்து நடவடிக்கைகளுக்கு இனவாதிகளின் செயற்பாடுகள் பின்னடைவுகளை ஏற்படுத்தினாலும் , பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து தீர்வை பெற்று தருவார் என கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
 
யாழ்.மானிப்பாய் பகுதியில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
 
மேலும் தெரிவிக்கையில் ,
 
யுத்தத்திற்கு முன்னரான கால பகுதியில் வடக்கு , கிழக்கு மாகாணங்கள் கல்வியில் முன்னிலையில் இருந்தன. தற்போது பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றது. இந்த நிலமையை மாற்றியமைக்க எமது அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளன.
 
கடந்த கால அரசாங்கத்தினால் போதை பொருட்கள் கட்டவிழுத்து விடப்பட்டன. அதனால் பலர் போதைக்கு அடிமையானர்கள். அவர்களின் திறன்கள் அதன் மூலம் மழுங்கடிக்கப்பட்டது. மற்றும் வன்முறை கலாச்சாரங்களும் ஊக்கிவிக்கப்பட்டன. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் , போதை , வன்முறைகளால் பாதிக்கப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
 
அதனால் பாராளுமன்ற உறுப்பினராக குற்றமற்ற சூழலையும் , சமாதானத்தையும் ,இன ஒற்றுமையையும் ஏற்படுத்துவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன்.
 
வன்முறை சம்பவங்களையும் , போதை பொருள் பாவனையையும் காவல்துறையினரினர் கட்டுப்படுத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஆனால் காவல்துறையினரின்  நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை.
 
கடந்த ஆண்டில் 6வயது பாடசாலை மாணவி ஒருவர் வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்டார். அராலி பகுதியில் கொள்ளையர்கள் வீட்டில் இருந்த வயோதிப பெண்ணை வன்புணர்வுக்கு உட்படுத்தினார்கள் இவ்வாறாக பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் அதிகரித்து காணப்பட்டன.
 
இவ்வாறான சம்பவங்களால் பெண் என்ற ரீதியில் மன நிம்மதி இழந்தேன். குற்ற செயல்களை கட்டுப்படுத்துமாறு அதிகாரிகளை வேண்டினேன். விடுதலைப்புலிகள் இவ்வறான குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளை வழங்கி இருந்தார்கள். அது பற்றியே அன்றைய தினம் எனது உரையில் குறிப்பிட்டேன். அந்த உரை தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.
 
ஆயுத போராட்டம் மீண்டும் தலை தூக்க வேண்டும் என்றோ , தனி நாடு அமைய வேண்டும் எனவோ , புலிகளை ஆதரித்து பேச வேண்டுமோ என்ற எந்த உள்நோக்கமும் எனக்கிருக்கவில்லை.
 
சமூகங்களுக்கு இடையில் ஒற்றுமை , சமாதனம் மலர வேண்டும் என விரும்புபவர். அதற்காகவே செயல்படுபவர் நான் என மேலும் தெரிவித்தார்.
  • கருத்துக்கள உறவுகள்

தருவார்!! 

தருவார்!!

தருவார்..

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

தருவார்!! 

தருவார்!!

தருவார்..

சம்பந்தர் பெறுவார்.....???

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, விசுகு said:

சம்பந்தர் பெறுவார்.....???

ஏன் அவரால் முடியாதா

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, விசுகு said:

சம்பந்தர் பெறுவார்.....???

 

45 minutes ago, நந்தன் said:

ஏன் அவரால் முடியாதா

பெறுவார்.....???

பெறுவார்?

பெறுவார்....

ரணில், மண்ணெண்ணெய் வண்டியொன்று வாங்கித் தருவார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Quote

தமிழ் மக்களின் அன்றாட பிரச்சனைகள் , இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் எடுத்து நடவடிக்கைகளுக்கு இனவாதிகளின் செயற்பாடுகள் பின்னடைவுகளை ஏற்படுத்தினாலும் , பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து தீர்வை பெற்று தருவார் என கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நீங்கள்  எல்லோரும்  ஒரேகுட்டையில்  ஊறிய  மட்டைகள். 🤢

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுதப் போராட்டம் மீண்டும் தலைதூக்க வேண்டுமென்று நான் கோரவில்லை – விஜயகலா

Vijayakala.jpg

ஆயுதப் போராட்டம் மீண்டும் தலைதூக்க வேண்டும் என்றோ அல்லது தனி நாடு அமையவேண்டும் என்றோ தான் எண்ணவில்லையென கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இனவாதிகளின் செயற்பாடுகள் பின்னடைவுகளை ஏற்படுத்தினாலும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து தமிழருக்கான தீர்வைப் பெற்றுதருவார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அண்மையில், யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தெரிவிக்கையில், “யுத்தத்திற்கு முன்னரான காலப் பகுதியில் வடக்கு , கிழக்கு மாகாணங்கள் கல்வியில் முன்னிலையில் இருந்தன. தற்போது பின்தங்கிய நிலையிலேயே உள்ளன.

கடந்த கால அரசாங்கத்தினால் போதை பொருட்கள் கட்டவிழுத்து விடப்பட்டன. அதனால் பலர் போதைக்கு அடிமையானர்கள். அவர்களின் திறன்கள் அதன் மூலம் மழுங்கடிக்கப்பட்டதோடு வன்முறைக் கலாசாரங்களும் ஊக்குவிக்கப்பட்டன.

இந்நிலையில், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், போதைவஸ்து பாவனை மற்றும் வன்முறைகளால் பாதிக்கப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

வன்முறை சம்பவங்களையும், போதை பொருள் பாவனையையும் கட்டுப்படுத்துவதில் பொலிஸாரின் நடவடிக்கைகள் திருப்திகரமானதாக இல்லை.

விடுதலைப்புலிகள் இவ்வறான குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளை வழங்கியிருந்தார்கள். அது பற்றியே அன்றைய தினம் எனது உரையில் குறிப்பிட்டேன். அந்த உரை தவறுதலாக புரிந்துகொள்ளப்பட்டது.

ஆனால் ஆயுதப் போராட்டம் மீண்டும் தலைதூக்க வேண்டும் என்றோ, தனி நாடு அமையவேண்டும் என்றோ அல்லது புலிகளை ஆதரித்துப் பேச வேண்டுமென்றோ நான் எண்ணவில்லை” என்று தெரிவித்தார்.

 

http://athavannews.com/ஆயுதப்-போராட்டம்-மீண்டும/

 

 

9 hours ago, பிழம்பு said:

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து தீர்வை பெற்று தருவார்

என்ன தீர்வு?
இன்னொரு முறை யாழ் நூலகத்தை எரிப்பதா?

  • கருத்துக்கள உறவுகள்

தீர்வு தீர்வு என்று எல்லாரும் உளறுகினம் சிங்களவன் உட்பட, இது ஒரு தாெற்று நாேயாய் இருக்குமாே?

என்ன கருத்தினை இவர் சொன்னாலும் ரணிலுடன் நேரடியாக இணைத்துள்ளார் ....சுமந்திரன் மாதிரி போலியாக நடிக்கவில்லை ......
 

  • கருத்துக்கள உறவுகள்
On 2/7/2019 at 5:56 PM, நந்தன் said:

ஏன் அவரால் முடியாதா

சொத்து  சேர்ப்பதை  தொடர்கிறதை  பார்த்தால்

முடியும் போலத்தான் இருக்கு  ராசா..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.