Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவத்தினருடன் போரிட்ட புலிகளை மன்னித்துவிட்டோம், தமிழர்கள்தான் இனி இறங்கிவரவேண்டும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

படையினருக்கு எதிராகத் தாக்குதல் தொடுத்த தமிழீழ விடுதலைப் புலிகள் மன்னிக்கப்பட்டனர். நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதில் சிங்கள மக்கள் தமது கடமையை சரிவர நிறைவேற்றியுள்ளனர். தமிழர் தரப்பிலிருந்துதான் கூடுதல் பங்களிப்பு அவசியமாகவுள்ளது. இவ்வாறு முன்னாள் வான்படைத் தளபதி எயார் சீப் மார்சல் ரொசான் குணதிலக்க தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

போர் முடிவடைந்தப் பின்னர், புலி உறுப்பினர்கள் மறுவாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டனர். இந்தத் திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. இவ்வாறு புலி உறுப்பினர்கள் மன்னிக்கப்பட்டு, விடுவிக்கப்பட்டுள்ள, இத்தகைய செயற்பாடுகளை தமிழர் தரப்பு வரவேற்கவேண்டும்.

நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு சிங்கள மக்கள் என்ற வகையில் எமது கடமையை சரிவரசெய்துள்ளோம். ஆகவே, நல்லிணக்கம் என்ற இலக்கு வெற்றியடைய வேண்டுமென்றால், தமிழர் தரப்பு கூடுதல் பங்களிப்பை வழங்க முன்வரவேண்டும்.

போர்காலத்தில் எனது தம்பி, தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார். அதற்காக நான் தமிழ் மக்களுடன் முரண்படவில்லை. எனக்கு நிறைய தமிழ் நண்பர்கள் இருக்கின்றனர் – என்றார்.

https://newuthayan.com/story/10/இராணுவத்தினருடன்-போரிட்ட-புலிகளை-மன்னித்துவிட்டோம்.html

  • கருத்துக்கள உறவுகள்

ஓமய்யா 6 மாதம், 1 வருடம் புனர்வாழ்வு கொடுத்து விட்டனிங்கள். அது போல குற்றமிழைத்த படையினரை கைது செய்து புனர்வாழ்வளித்து விடுங்கோ!

20 hours ago, பிழம்பு said:

நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு சிங்கள மக்கள் என்ற வகையில் எமது கடமையை சரிவரசெய்துள்ளோம். ஆகவே, நல்லிணக்கம் என்ற இலக்கு வெற்றியடைய வேண்டுமென்றால், தமிழர் தரப்பு கூடுதல் பங்களிப்பை வழங்க முன்வரவேண்டும்.

இதுக்குமேல குனிஞ்சால் முள்ளந்தண்டு உடைஞ்சுபோம், அதோட கூட்டமைப்புக்கும் வாக்கு விழாது!

இறுதியில், மன்னிப்போம் மறப்போம் என்ற சுலோகம்தான் தமிழருக்கு கைகொடுக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, thulasie said:

இறுதியில், மன்னிப்போம் மறப்போம் என்ற சுலோகம்தான் தமிழருக்கு கைகொடுக்கும்.

சுலோகம்  கூடவா  தமிழருக்கு 

சுயமாக  இருக்கக்கூடாது?????

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் கூற வேண்டியதை இலங்கை சொல்கிறது...

இப்படியான அவல நிலையில் தமிழர்கள்...

--

5 hours ago, thulasie said:

இறுதியில், மன்னிப்போம் மறப்போம் என்ற சுலோகம்தான் தமிழருக்கு கைகொடுக்கும்.

நீங்கள் கூறுவது சரி தான். மன்னிப்பத‍ற்கு உரிய அதிகாரம் தமிழருக்கு கிடைத்த மறுகணமே சிங்கள இராணுவத்தால் இழைக்கப்பட்ட அட்டூழியங்களை மன்னித்துவிடுவார்கள். ஆனால் மறக்கமாட்டார்கள். ஏனென்றால் வரலாற்றை மறக்காது நினைவு வைத்திருக்கும் நாடுகள் தான் உலகில் வளர்ச்சியடைந்திருக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் செய்தி சொல்ல வரும் விடயத்திலும் பார்க்க அதன் தலைப்பு அமைக்கப்பட்ட விதத்தில் தான் எனது சிந்தனை செல்கிறது.

காரணம் இராணுவத்துடன் போரிட்ட புலிகளை மன்னித்துவிட்டோம்  (தமிழர் செய்த பிழைகளை சிங்களவர்கள் மன்னித்துவிட்டார்கள்) என்ற உண்மைக்குப் புறம்பான ஒரு தகவலை வெளிப்படையாக சொல்லி அதற்குப் பிரதிபலனாக இராணுவம்  (சிங்களவர்) செய்த பிழைகளை தமிழர் மன்னிக்கவேண்டியது தான் இனி பாக்கி என்ற வேண்டுகோளை மறைமுகமான ஒரு தொனியில் சொல்ல வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு தமிழர்கள் தான் இனி விட்டுக்கொடுப்புகளைச் செய்யவேண்டும், தமிழர் தமது பிடிவாதத்தைக் கைவிடவேண்டும் என்ற பாணியில்அதற்காக சொற்கள் கவனமாக் கையாளப்பட்டு தலையங்கம் எழுதப்பட்டிருக்கிறது.

இராணுவம்  செய்த பிழைகளை தமிழர் மன்னிக்கவேண்டும் என்ற வேண்டுகோளை செய்தியில் வெளிப்படையாக எழுதினால் அவர்கள் செய்த குற்றத்தை அவர்களே ஒப்புக்கொண்டது போலாகிவிடும் என்பதால் இங்குகூட இராணுவத்தை பாதுகாக்க சிங்கள இனவாதிகளால் மிக்க கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

1 hour ago, vanangaamudi said:

 

இராணுவம்  செய்த பிழைகளை தமிழர் மன்னிக்கவேண்டும் என்ற வேண்டுகோளை செய்தியில் வெளிப்படையாக எழுதினால் அவர்கள் செய்த குற்றத்தை அவர்களே ஒப்புக்கொண்டது போலாகிவிடும் என்பதால் இங்குகூட இராணுவத்தை பாதுகாக்க சிங்கள இனவாதிகளால் மிக்க கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

புலிகள் செய்த அட்டூழியங்களை பகிரங்கரமாக தமிழர் தரப்பு ஏற்றுக்கொள்ளாதவரை, இலங்கை அரசும் இராணுவம் செய்த குற்றங்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.

ஆக, மன்னித்து மறந்துவிடுவதுதான் எல்லாருக்கும் நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

அடி வாங்கினவனையே மன்னிப்பு கேக்க வைக்கிற உங்க விசுவாசம் புல்லரிக்க வைக்குதுங்க!

கடந்த 35 வருடங்களாக சிங்கள தரப்பிலுள்ள சகல தலைவர்களையும் சகல சிங்கள இராணுவ அதிகாரிகளையும் அவர்களை ஆதரித்த ஒரு 10 இலட்சம் சிங்களவர்களையும் கொன்ற பின்னர், 10,000 சிங்கள அப்பாவிகளை சித்திரவதை செய்து ஒப்புதல் வாக்குமூலம் பெற்று சிறைகளில் அடைத்த பின்னர், சிங்களவர்களின் 10 இலட்சம் வீடுகளை குண்டு வீசி தகர்த்த பின்னர், சிங்களவர்களின் 10 இலட்சம் ஏக்கர் காணிகளை தமிழர் ஆக்கிரமித்த பின்னர் மறப்போம் மன்னிப்போம் என கதையளப்பதில் கொஞ்சமாவது நீதி நியாயம் இருக்கும்!

9 hours ago, thulasie said:

புலிகள் செய்த அட்டூழியங்களை பகிரங்கரமாக தமிழர் தரப்பு ஏற்றுக்கொள்ளாதவரை, இலங்கை அரசும் இராணுவம் செய்த குற்றங்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.

ஆக, மன்னித்து மறந்துவிடுவதுதான் எல்லாருக்கும் நல்லது.

இன்னும் இன்னும் எதிர் பார்க்கிறோம் ....வளரட்டும் உங்கள் விசுவாசம் ....

தமிழின விரோதி சுமந்திரன் இந்த கருத்தினை சொல்லிவிட்டார் ....இதனை ஒரு சிங்கள அரசியல்வாதி சொல்லுவதில் ஒரு புதினமும் இல்லை .....மக்கள் செய்ய வேண்டியது அடுத்த தேர்தலில் இவர்களை துரத்துவது ...

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, பிரபாதாசன் said:

இன்னும் இன்னும் எதிர் பார்க்கிறோம் ....வளரட்டும் உங்கள் விசுவாசம் ....

தமிழின விரோதி சுமந்திரன் இந்த கருத்தினை சொல்லிவிட்டார் ....இதனை ஒரு சிங்கள அரசியல்வாதி சொல்லுவதில் ஒரு புதினமும் இல்லை .....மக்கள் செய்ய வேண்டியது அடுத்த தேர்தலில் இவர்களை துரத்துவது ...

இதை தவறான  விமர்சனமாக  பார்க்காதீர்கள்

மாற்றுக்கருத்து  வைப்பதற்கான முழு  முயற்சி  மட்டுமே

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, thulasie said:

புலிகள் செய்த அட்டூழியங்களை பகிரங்கரமாக தமிழர் தரப்பு ஏற்றுக்கொள்ளாதவரை, இலங்கை அரசும் இராணுவம் செய்த குற்றங்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.

ஆக, மன்னித்து மறந்துவிடுவதுதான் எல்லாருக்கும் நல்லது.

புலிகள் செய்த அட்டூழியங்களை யாரும் மறுக்கவில்லையே? அவர்களையும் விசாரியுங்கள் என்றுதானே கேட்கிறோம்? 

நீங்கள் மீண்டும் மீண்டும் புலிகளின் அட்டூழியங்களை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கூறுவது இராணுவத்தின் போர்க்குற்றங்களை மறைப்பதற்காகத்தான் என்பது மிகவும் தெளிவாகிறது.

புலிகளின் அட்டூழியங்களை விசாரிக்க உங்களுக்குத் தடையாக இருப்பது யார்? தமிழர்களா? இல்லையே, அவர்களுக்குப் தடுக்கும் அளவிற்கோ அல்லது புலிகளை ஆதரித்துப் பேசுவதற்கோ அதிகாரமோ சுதந்திரமோ நீங்கள் கொடுக்கவில்லையே? அப்படியிருக்க, யாரிடமிருந்து சம்மதத்தைப் பெறுவதற்காகக் காத்திருக்கிறீர்கள்? நீங்கள் சரணடைந்தபின்னர் கொன்ற புலிகளைவிட, புணர்வாழ்வு என்கிற பெயரில் கசக்கி சமூகத்தின் எல்லைகளில் துப்பியெறிந்துபோன “முன்னாள்ப் புலிகள்” இன்னமும் உங்கள் கண்முன்னேதான் அலைக்கழிந்துகொண்டிருக்கிறார்கள், அவர்களை மீண்டும் பிடித்து விசாரியுங்கள், அட்டூழியங்களுக்குத் தண்டனை கொடுங்கள். யாரும் உங்களை ஏனென்று கேட்கப்போவதோ வேண்டாமென்று தடுக்கப்போவதோ இல்லையே?!

ஆனால், அத்துடன் உங்கள் ராணுவம் செய்த போர்க்குற்றங்களையும், மனித குலத்திற்கெதிரான குற்றங்ககளையும் விசாரியுங்கள். 

ஒன்றோடு ஒன்றைச் சமப்படுத்தி யாரைக் காப்பாற்றப் பாடுபடுகிறீர்கள்?

On 2/23/2019 at 8:37 AM, thulasie said:

புலிகள் செய்த அட்டூழியங்களை பகிரங்கரமாக தமிழர் தரப்பு ஏற்றுக்கொள்ளாதவரை, இலங்கை அரசும் இராணுவம் செய்த குற்றங்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.

ஆக, மன்னித்து மறந்துவிடுவதுதான் எல்லாருக்கும் நல்லது.

சிங்களம் தான் தப்புவதட்கு கையில் எடுத்த ஆயுதம் தான் புலிகள் செய்த குற்றங்கள் ....அதனைத்தான் ***** சுமந்திரன் செய்கிறார் , ***** ***** ....நக்கி பிழைப்பது அவர் தொழிலாக இருக்கலாம் .. சுமந்திரனின் அப்பா எப்படி யாழ் நூலகம் எரிப்புக்கு சிங்களதுக்கு முழு உதவியாளராக இருந்தாரோ அதேமாதிரி அவர் மகன் ,,,,அது எதிர் பார்த்தது தான் ....

ஆனால் தமிழ் மக்களுக்கு தெரியும் தலைவரும் போராளிகளும் தங்களை அர்ப்பணித்து இந்த போராட்டத்திற்கு உயிர் கொடுத்தார்கள் ....உலக நாடுகள் , இந்தியா , இலங்கை , இப்படி எத்தனை சக்திகளை புலிகள் கையாள வேண்டி இருந்தது ....மறு பக்கம் போராட்ட்ம் ... இப்படியான சூழ் நிலைகளில் சில தப்புகள் நடக்கலாம் ....

சிங்களவன் புலிகள் செய்தார்கள் என்பது ....அவர்களின் நோக்கம் வேறு ஆனால் நாங்களே சொல்வது ....இதன் நோக்கம் என்ன ....இதனால் யாருக்கு நட்டம் ...இப்போது இது தேவையா ....

என்ன, நடு நிலை வாதிகள் ஆக உங்களை காட்ட வேண்டுமா ? அதட்குரிய நேரம் இதுவல்ல ....இப்ப நாம் செய்ய வேண்டியது ஒற்றுமையாக சிங்களத்தினை வேரறுக்க வேண்டும் ....உங்கள் நடுநிலை கொளகை என்று எங்கள் மீது சேறு பூச வேண்டாம் ....பாதிக்கப்பட்டவன் தமிழன் ...சிங்களவன் இல்லை ...********** 

*************

சுமந்திரன் பிரபல கஞ்சா விட்பவர்களுக்கும் , சயந்தன் மாதிரி பொம்பிளை பொறுக்கிகளால் அரசியல் செய்பவர் ...இவருக்கு சார்பாக அதே கருத்தில் இருப்பவர்கள் முதலில் உங்களை சுய பரிசோதனை செய்ய வேண்டும் ...

எங்களுக்காக உயிர் விட்ட எங்கள் காவல் தெய்வங்களை குற்றம் சொல்ல எப்படி மனம் வருகின்றது ....இது தான் நீங்கள் செய்யும் பிரதி உபகாரமா ? .

காலத்தின் தேவை கருதி செயலாட்ட வேண்டும் ....கூட்டமைப்பினை துரத்த வேண்டும் ....பொறுப்பில்லாத ******** ....

வடக்கு கிழக்கு இணைத்த சுயாட்சி என்று தேர்தல் அறிக்கையில் சொல்லி மக்கள் வாக்குகளை எடுத்து விட்டு எப்படி ஒற்றையாட்சிக்கு ஆதரவளிக்க முடியும் ? யார் இந்த அதிகாரத்தை இவர்களுக்கு கொடுத்தது ....மக்களை கேட்டார்களா ? ஏன் அவர்களை கேள்வி கேட்க மறுக்கிரிர்கள் .....புலிகள் செய்த தப்புகள், இப்ப என்ன தேவை உள்ளது ? யாருக்கு சிங்களத்துக்கு துணை போவது .... இதனால் தானே நாம் அழிந்தது .

இன்னும் பட்ட அனுபவம் போதாது ?  
 

Edited by நியானி
தணிக்கை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.