Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லா-சப்பலில் தமிழ்க்குழுக்கள் பெரும்மோதல்! ஒருவர் குத்திக்கொலை இருவர் படுகாயம்!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லா-சப்பலில் தமிழ்க்குழுக்கள் பெரும்மோதல்! ஒருவர் குத்திக்கொலை இருவர் படுகாயம்!!

 

பரிஸ் லா-சப்பல் பகுதியில் நேற்றிரவு தமிழ் இளைஞர் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கழுத்துப் பகுதியில் குத்திக்கொல்லபட்டார். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். இந்தசம்பவம் தொடர்பாக சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லா-சப்பல் பகுதியிலுள்ள லூயிஸ்-பிளாங் வீதியில் இரவு 8:40 மணியளவில் இடம்பெற்ற இந்தசம்பவத்தில் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்

அதில் ஒருவர் கையில் கத்திக்குத்துக்கு இலக்கானதாகவும் மற்றவர் உடலில் பின்பகுதியில் காயமடைந்ததாகவும் காவற்துறையினர் அறிவித்துள்ளனர்.

இந்த மோதல் குறித்து அறிவிக்கபட்டதும் காவற்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். எனினும் காவற்துறையினர் வருவதைக் கண்டதும் மோதலில் ஈடுபட்ட இளைஞர்கள் அந்த இடத்திலிருந்து தப்பியோடிவிட்டனர்

ஆயினும் இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள காவற்துறையினர் அவர்கள் இருவரும் தடுத்து வைக்கபட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இரண்டுகுழுக்களுக்கு இடையிலான பழைய குரோதமே இந்த சம்பவத்துக்கு காரணமென குறிப்பிடப்பட்டுள்ளது

தமிழ்மக்களின் வர்த்தக மையமாக கருதப்படும் லா-சப்பல் பகுதியில் இடம்பெற்ற இந்த வன்முறைச்சம்பவத்தால் பரிஸ்வாழ் தமிழர்கள் கவலையடைந்துள்ளனர்.

உயிரிழந்துள்ள இளைஞன் யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியை சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.

https://www.ibctamil.com/france/80/115413?fbclid=IwAR29aS7NCAjJFH80SDEMZu5LvZlMrzSTKah_O7Iv2nvFS9lqYvqpz7ycRyg

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

அதில் ஒருவர் கையில் கத்திக்குத்துக்கு இலக்கானதாகவும் மற்றவர் உடலில் பின்பகுதியில் காயமடைந்ததாகவும் காவற்துறையினர் அறிவித்துள்ளனர்.

ஆவாகுழு யாழிலிருந்து தப்பி பிரான்ஸ்சுக்கு வந்திட்டாங்களோ?
எதுக்கும் கடையைப் பூட்டி கவனமாக இருங்கள் விசுகு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு செக்கன் முடிவு. செத்தவனுக்கு பிள்ளை பிறந்து 7 நாள் வெட்டியவனுக்கு 3 சிறுபிள்ளைகள் வெட்ட உதவியவர்கள் மிகமிக நல்லபிள்ளைகளாக எல்லோராலும் அறியப்பட்டவர்கள் இளம் குடும்பத்தர்கள் ஒன்றுமே புரியல

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
25 minutes ago, விசுகு said:

ஒரு செக்கன் முடிவு. செத்தவனுக்கு பிள்ளை பிறந்து 7 நாள் வெட்டியவனுக்கு 3 சிறுபிள்ளைகள் வெட்ட உதவியவர்கள் மிகமிக நல்லபிள்ளைகளாக எல்லோராலும் அறியப்பட்டவர்கள் இளம் குடும்பத்தர்கள் ஒன்றுமே புரியல

எமது சமுதாயம் திருந்தவே மாட்டுது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

ஒரு செக்கன் முடிவு. செத்தவனுக்கு பிள்ளை பிறந்து 7 நாள் வெட்டியவனுக்கு 3 சிறுபிள்ளைகள் வெட்ட உதவியவர்கள் மிகமிக நல்லபிள்ளைகளாக எல்லோராலும் அறியப்பட்டவர்கள் இளம் குடும்பத்தர்கள் ஒன்றுமே புரியல

 

1 hour ago, குமாரசாமி said:

எமது சமுதாயம் திருந்தவே மாட்டுது.

அப்படி சொல்ல ஏலாது. 0.01% ஆவது அப்படி இருக்கும்.

இங்க இங்கிலாந்திலே ஒருவாரத்தில் 6 பேர், இளம்பிள்ளைகள் கத்தியால் குத்தி கொலையாகி உள்ளனர். 

அரசு, அவசர நிலையாக உயர் அதிகாரிகளை ஒரு சந்திப்புக்கு அழைத்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Nathamuni said:

அப்படி சொல்ல ஏலாது. 0.01% ஆவது அப்படி இருக்கும்.

இங்க இங்கிலாந்திலே ஒருவாரத்தில் 6 பேர், இளம்பிள்ளைகள் கத்தியால் குத்தி கொலையாகி உள்ளனர். 

அரசு, அவசர நிலையாக உயர் அதிகாரிகளை ஒரு சந்திப்புக்கு அழைத்துள்ளது.

முழு கிழக்கு ஐரோப்பிய.. ரஷ்சியா மாபியா குடுக்கும்பல்களின் ராஜ்சியமாகிவிட்டது பிரித்தானியா. குடு தான் இந்தக் கொலைகளுக்கு முக்கிய காரணம். இதோடு நிறவெறி.. பெட்டை வெறி.. பொடியன் வெறிகளும் சேர.. எல்லாம் கொலையில் நிற்குது. அத்தோடு பொலீஸ் குறைப்பு வேற.

இதுக்கு எல்லாம் காரணம்.. ரொனி பிளேயரின்.. எல்லை திறப்பும்.. தொழிற்கட்சி காலத்தில் எடுக்கப்பட்ட தவறான முடிவுகள் தான். எல்லை திறப்பு... மற்றும்.. பிரித்தானிய பொருளாதாரத்தை சரிவுக்கு கொண்டு வந்துவிட்டு.. ரொனி பிளேயர்.. பிரவுண் கும்பல் அரசுக் கட்டில் இருந்து ஓடிவிட்டது. அதன் விளைவு....🙄

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இளையோரின் இழப்பு வருத்தமளிக்கிறது, யுத்தம் முடிந்தாலும் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் விபத்துக்களாலும் குழு மோதலிலும் அநியாயமாக உயிரிழப்பதை தடுக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சில கன பேர் சண்டை பிடிக்கிறார்கள் போதாக்குறைக்கு  முகநூலிலிலும் அடிப்பேன் உதைப்பேன் என்று 

இது இலங்கையில் நடந்திருந்தால் ஆவா குழு அல்லது ராணுவத்தின் வேலையென்று ஆள் ஆளுக்கு வகுப்பு எடுப்பார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

பிரான்சில கன பேர் சண்டை பிடிக்கிறார்கள் போதாக்குறைக்கு  முகநூலிலிலும் அடிப்பேன் உதைப்பேன் என்று 

இது இலங்கையில் நடந்திருந்தால் ஆவா குழு அல்லது ராணுவத்தின் வேலையென்று ஆள் ஆளுக்கு வகுப்பு எடுப்பார்கள்

சண்டை நேரம் தலையாட்டிகளாக இருந்த பலரை அரசே பிரான்சுக்கு அனுப்பியது.இதே போல ஆவா குழு என்று பிடித்தவர்களுக்கு என்ன நடந்ததென்றே தெரியவில்லை.

கூட்டிக் கழித்து பார்த்தா விடை சரியாகவும் இருக்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

சண்டை நேரம் தலையாட்டிகளாக இருந்த பலரை அரசே பிரான்சுக்கு அனுப்பியது.இதே போல ஆவா குழு என்று பிடித்தவர்களுக்கு என்ன நடந்ததென்றே தெரியவில்லை.

கூட்டிக் கழித்து பார்த்தா விடை சரியாகவும் இருக்கலாம்.

இதற்கும்  அதற்கும் தொடர்பு  இருப்பதாக  தெரியவில்லை

ஆனால்  நீங்கள் சொல்வது  போல

பிரான்சில் தான் புலிகளின்  சர்வதேச அலுவலகமும் 

சர்வதேச  பொறுப்பாளரும் இருந்தார்கள்

அதனால்  அதை உடைக்க  அல்லது  குளப்ப பல விதமாகவும்முயன்றார்கள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்
On 3/9/2019 at 11:35 AM, ஈழப்பிரியன் said:

சண்டை நேரம் தலையாட்டிகளாக இருந்த பலரை அரசே பிரான்சுக்கு அனுப்பியது.இதே போல ஆவா குழு என்று பிடித்தவர்களுக்கு என்ன நடந்ததென்றே தெரியவில்லை.

கூட்டிக் கழித்து பார்த்தா விடை சரியாகவும் இருக்கலாம்.

நீங்கள் சொல்வது சரி! தமிழர்களுக்கு கத்தி கோடரி எடுக்கவோ துவக்கு எடுக்கவோ அவர்களால் இயலாது! வேறு யாராவது தான் கையில் திணித்து தள்ளி விட வேணும்! இவ்வளவு சுய புத்தியும் முயற்சியும் இல்லாத மண்டான்களான தமிழர்கள் எப்படி தான் தப்பி இத்தனை நூற்றாண்டுகள் வாழ்ந்தார்களோ தெரியாது! 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

நீங்கள் சொல்வது சரி! தமிழர்களுக்கு கத்தி கோடரி எடுக்கவோ துவக்கு எடுக்கவோ அவர்களால் இயலாது! வேறு யாராவது தான் கையில் திணித்து தள்ளி விட வேணும்! இவ்வளவு சுய புத்தியும் முயற்சியும் இல்லாத மண்டான்களான தமிழர்கள் எப்படி தான் தப்பி இத்தனை நூற்றாண்டுகள் வாழ்ந்தார்களோ தெரியாது! 

ஜஸ்ரின் சண்டை முடிந்த கையோடு புலனாய்வுப் பிரிவுடன் இயங்கியவர் குடும்பமாக பாரீசுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்.

கடந்த காலங்களில் ஆவாகுழு என்று பிடிபட்டோரின் எண்ணிக்கை நுhறுக்கு மேலிருக்கலாம்.இந்த பிடிபட்டவர்களெல்லாம் எங்கே?யாருக்குமே தெரியாது.

எனவே தான் அவர்கள் தான் இவர்களாக இருக்கலாம் என்று தான் எழுதியிருக்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.