Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘மீண்டும் கறுப்பு ஜுலையை உருவாக்க வேண்டாம்’

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாலித ஆரியவன்ச  

 

கலப்பு நீதிமன்றக் கோரிக்கை, மீண்டுமொரு கறுப்பு ஜூலையைத் தோற்றுவிக்க வழிவகுக்குமென்று எச்சரித்துள்ள டிலான் பெரேரா எம்.பி, இலங்கைப் பிரஜை என்ற நிலைப்பாட்டிலிருந்து செயற்படுமாறு சுமந்திரன் எம்.பிக்கு அறிவுறுத்தியுள்ளார்.

பதுளை ஹாலி-எலயில் நேற்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.  

அங்கு தொடர்ந்துரைத்த அவர், இலங்கையில் யுத்தக்குற்றம் இடம்பெற்றதாகத் தெரிவித்து, வழக்குத் தாக்கல் செய்யப் போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறியிருப்பதாகச் சுட்டிக்காட்டியதுடன், தான் ஓர் இலங்கையர் என்பதை, சுமந்திரன் மறந்துவிடக்கூடாதெனவும் அவர் தெரிவித்தார்.  

இலங்கையில் நீதிப்பொறிமுறை ஒன்று உள்ளதால், அரசமைப்புக்கு அமைவாக கலப்பு நீதிமன்றத்தை உருவாக்க முடியாதெனத் தெரிவித்த அவர், ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவர், அரசமைப்புப் பற்றி நன்கு அறிந்திருப்பார் என்றும் தெரிவித்தார்.  

நீதித்துறையில் பேராசிரியராக இருக்கும் முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் எழுதிய நூல்களைக் கற்றே, சுமந்திரன் பரீட்சையில் சித்தியடைந்தார் என்றும், எமது நாட்டுச் சட்டங்களுக்கு அமைவாக, கலப்பு நீதிமன்றத்தை அமைக்க முடியாதென வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன கூறியுள்ளார் என்றும் தெரிவித்தார்.  

இவ்வாறான நிலையில், மீண்டும் கலப்பு நீதிமன்றக் கோரிக்கையை முன்வைப்பது, இந்நாட்டுத் தமிழ் மக்களைப் பலியிடுவதாகவே அமையுமெனவும், அதனால் மீண்டுமொரு கறுப்பு ஜூலைக்கு வழிசமைக்க வேண்டாமென, சுமந்திரன் எம்.பியிடம் கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். 

http://www.tamilmirror.lk/மலையகம்/மீண்டும்-கறுப்பு-ஜுலையை-உருவாக்க-வேண்டாம்/76-231262

அதாவது தமிழ் மக்கள் தங்கள் மீது இழைத்த படுகொலைகளை தொடர்பாகவும், போர்க்குற்றம் தொடர்பாகவும் நீதியான விசாரணை கேட்டால் சிங்களவர்களாகிய நாம் ஒரு பாடம் படிப்பிப்பதற்காக மீண்டும் 83 கலவரம் போன்ற ஒன்றை நிகழ்த்திக் காட்டுவோம் என எச்சரிக்கின்றார்.

தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு கொடுக்கப்படல் வேண்டும் என்று அடிக்கடி சொல்லும் டிலான் பெரேரா போன்ற தம்மை இனவாதம் அற்ற அரசியல்வாதிகளாக வெளிப்படுத்துகின்றவர்களிடம் இருந்தே இப்படியான எச்சரிக்கைகள் வருகின்றன.

சிங்களம் எப்பவும் சிங்களமே

  • கருத்துக்கள உறவுகள்

கட்சிகள் வேறு வேறானலும் கூட, அடிப்படையில் அவர்கள் சிங்களவர்களே. 

தமிழருக்குச் சார்பாக ஒரு துரும்பைத்தானும் அவர்கள் கொடுக்க விரும்புவதில்லை. 

சஜித் பிரேமதாச கூட அண்மையில் சமஷ்ட்டி என்னும் பேச்சிற்கே இடமில்லை என்று கூறியிருக்கிறார். இவர்தான் அடுத்த தலைவராக வரக்கூடியவர் என்று எதிர்பார்க்ல்கப்படுபவர்.

நாங்கள் சிங்களவருள் நல்லவர் எவர் என்று பார்த்துப் பார்த்துத் தொண்டு செய்துகொண்டிருக்கிறோம். ஒரு சிங்களவருக்கெதிராக இன்னொரு சிங்களவரை ஆட்சியில் வைத்திருக்க விரும்புகிறோம். ஏன் அப்படிச் செய்கிறீர்கள் என்று கேட்டாலோ அல்லது, இப்படிச் செய்வதால் என்ன நண்மை தமிழருக்குக் கிடைக்கப்போகிறது என்று கேட்டாலோ எம்மிடம் பதிலில்லை.

தனிப்பட்ட நட்பிற்காகச் செய்கிறோம். ஆனால் மக்களுக்கு இதனால் பயனென்ன என்று கேட்டால், எதுவுமில்லை என்பதுதான் உண்மை.

இப்படியே கறுப்பு யூலையையும், முள்ளிவாய்க்காலையும் காட்டிப் பயமுறுத்தியபடியே எங்களை அடிமையாக்குகிறார்கள். எதுவும் பேசாமல் இருந்துவிடுங்கள். உங்கள் மேல் நடந்த படுகொலைகளை மன்னித்து மறந்துவிடுங்கள். உங்கள் மேல் நாம் நடத்தும் ஆக்கிரமிப்பைச் சகித்துக்கொள்ளுங்கள். இல்லையேல் அழிக்கப்படுவீர்கள் என்பதுதான் செய்தி.

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, ரஞ்சித் said:

கட்சிகள் வேறு வேறானலும் கூட, அடிப்படையில் அவர்கள் சிங்களவர்களே. 

தமிழருக்குச் சார்பாக ஒரு துரும்பைத்தானும் அவர்கள் கொடுக்க விரும்புவதில்லை. 

சஜித் பிரேமதாச கூட அண்மையில் சமஷ்ட்டி என்னும் பேச்சிற்கே இடமில்லை என்று கூறியிருக்கிறார். இவர்தான் அடுத்த தலைவராக வரக்கூடியவர் என்று எதிர்பார்க்ல்கப்படுபவர்.

நாங்கள் சிங்களவருள் நல்லவர் எவர் என்று பார்த்துப் பார்த்துத் தொண்டு செய்துகொண்டிருக்கிறோம். ஒரு சிங்களவருக்கெதிராக இன்னொரு சிங்களவரை ஆட்சியில் வைத்திருக்க விரும்புகிறோம். ஏன் அப்படிச் செய்கிறீர்கள் என்று கேட்டாலோ அல்லது, இப்படிச் செய்வதால் என்ன நண்மை தமிழருக்குக் கிடைக்கப்போகிறது என்று கேட்டாலோ எம்மிடம் பதிலில்லை.

தனிப்பட்ட நட்பிற்காகச் செய்கிறோம். ஆனால் மக்களுக்கு இதனால் பயனென்ன என்று கேட்டால், எதுவுமில்லை என்பதுதான் உண்மை.

இப்படியே கறுப்பு யூலையையும், முள்ளிவாய்க்காலையும் காட்டிப் பயமுறுத்தியபடியே எங்களை அடிமையாக்குகிறார்கள். எதுவும் பேசாமல் இருந்துவிடுங்கள். உங்கள் மேல் நடந்த படுகொலைகளை மன்னித்து மறந்துவிடுங்கள். உங்கள் மேல் நாம் நடத்தும் ஆக்கிரமிப்பைச் சகித்துக்கொள்ளுங்கள். இல்லையேல் அழிக்கப்படுவீர்கள் என்பதுதான் செய்தி.

அதே...

  • கருத்துக்கள உறவுகள்

இனி ஒரு கறுப்பு யூலைபோன்ற தமிழின அழிப்பை இந்தச் சிங்களவரால் உருவாக்க முடியாது. அப்படியும் உருவாக்க முனைந்தால் அந்தத் தினம் கறுப்போ... சிகப்போ.... தமிழீழம் சுதந்திரமடைந்த தினமாக கொண்டாடும் நிலையும் ஏற்படலாம்.   

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:

இனி ஒரு கறுப்பு யூலைபோன்ற தமிழின அழிப்பை இந்தச் சிங்களவரால் உருவாக்க முடியாது. அப்படியும் உருவாக்க முனைந்தால் அந்தத் தினம் கறுப்போ... சிகப்போ.... தமிழீழம் சுதந்திரமடைந்த தினமாக கொண்டாடும் நிலையும் ஏற்படலாம்.   

இதை நீங்கள் எப்படிச் சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. ஏனென்றால், 1983 ஆடிக்கலவரத்தின் பின்னர் இனியொன்று நடவாது என்றுதான் எல்லோரும் நம்பினோம். ஆனால், 2009 இல் அதைவிடவும் பாரிய அளவில் ஒரு இனக்கொலயைச்  சிங்களவன் செய்து முடித்தான். 

ஆகவே, அவன் நிற்கப்போவதில்லை, அவனை எதுவும் தடுக்கப்போவதுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Paanch said:

இனி ஒரு கறுப்பு யூலைபோன்ற தமிழின அழிப்பை இந்தச் சிங்களவரால் உருவாக்க முடியாது. அப்படியும் உருவாக்க முனைந்தால் அந்தத் தினம் கறுப்போ... சிகப்போ.... தமிழீழம் சுதந்திரமடைந்த தினமாக கொண்டாடும் நிலையும் ஏற்படலாம்.   

அதனை குடியேற்றம், புத்தர் சிலைகளை நிறுவுதல், இராணுவத்தை தொடர்ந்து வைத்திருத்தல் என மறைமுகமாக செய்கிறார்கள்.இவை கறுப்பு யூலையை விட மிக மிக ஆபத்தானது.

  • கருத்துக்கள உறவுகள்

கோடுகள் 

ஒன்பதின்  வைகாசி

வைகாசியில்  அவனொருவன்  பெற்றது   ஒளி

 ஒளி அணைந்ததும் அதே   வைகாசி - எங்கள் வீடுகளில்

இன்னமும்  ஏற்றவில்லை  காத்திருக்கின்றோம் நெஞ்சில்  தீயுடன்      

 

மேல் நொந்து போயிற்றே என்றால் -மீண்டும் எண்பத்து  மூன்றாம்

மாப்  புளிப்பது  தோசையின்  நலம்  நாடி 

அணைத்த  உலை - மீண்டும்  கொதிக்க  விறகை  தள்ளும்   நண்பா  நன்றி 

இன்னமும்  ஏற்றவில்லை  காத்திருக்கின்றோம் நெஞ்சில்  தீயுடன்      

 

இரு  கோடுகள்   சமன்  செய்    பாதைகள்   பல 

கோடொன்றை  சற்றே  நீட்டினால்  எல்லோரும்  நலமே 

மறு  கோட்டின்   நுனியை  சற்றே  தட்டினாலும்  முடிவு  ஒன்றே 

இன்னமும்  ஏற்றவில்லை  காத்திருக்கின்றோம் நெஞ்சில்  தீயுடன்      

 

ஒன்பதின்   வைகாசி , நண்பன்  ஒருவனின்   தொலைபன்னி  அழைப்பு 

வேண்டும்  எனக்கு  ஆட்கள் பத்தும் ஆண்டுகள் சிலவும்

பறந்து  சென்று  கோட்டைத்  தட்டுவதே  சால  சிறப்பு  

இன்னமும்  ஏற்றவில்லை  காத்திருக்கின்றோம் நெஞ்சில்  தீயுடன்      

 

வல்லூறுகள்  மீண்டும்  வட்டமிடத்  தொடங்கி  விட்டன

பீனிக்ஸ்     பறவையில்   மீண்டும்   ஒரு  உயிர்த் துடிப்பு 

உலை  கொதிக்கவும்  விறகுகள்  ஒரு பக்கம்   

இன்னமும்  ஏற்றவில்லை நாம்-  கையில்  அரிசியுடனும்  நெஞ்சில்  தீயுடனும்  

 

26 March 2019 …..

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.