Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் பிரச்சனைக்கு தீர்வு... மோடியிடம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் வலியுறுத்தல்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் பிரச்சனைக்கு தீர்வு... மோடியிடம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் வலியுறுத்தல்.

ஈழத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் நேரில் வலியுறுத்தினர்.

இலங்கை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடியை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் இன்று சந்தித்தனர், இரா. சம்பந்தன் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் மோடியை சந்தித்து பேசினர்.

இச்சந்திப்பின் போது வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைப்பு, தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வலியுறுத்தினர். தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதன் மூலமாக இந்தியாவின் பாதுகாப்பை பலப்படுத்த முடியும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மோடிக்கு சுட்டிக்காட்டினர்.

இச்சந்திப்பின் போது இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல். இந்தியத் தூதர் ரன்ஜித் சிங் சந்து உள்ளிட்டோர் இருந்தனர்.

Read more at: https://tamil.oneindia.com/news/colombo/modi-meets-tna-delegation-in-colombo-353564.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

D8m_yv9UYAApnhv.jpg

தமிழர்களின் பிரச்சினை – புது டெல்லி வருமாறு கூட்டமைப்பினருக்கு மோடி அழைப்பு!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உட்பட அக்கட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்குப் பின்னர் இலங்கையுடனான ஆதரவை தொடர்ந்தும் வெளிப்படுத்தும் முகமாக பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் போது இரா.சம்பந்தன், நாடாளுமன்ற தேர்தலில் இரண்டாவது தடவையாக வெற்றிபெற்று அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் இந்த சந்திப்பில் புதிய அரசியலமைப்பை உள்ளடக்கிய பல்வேறு முக்கிய பிரச்சினைகள்  13 வது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமாறு பிரதமர் மோடியிடம் வலியுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு இந்த விடயங்கள் குறித்து புது டெல்லியில் ஒரு விரிவான கூட்டம் நடத்தவும் மோடி ஒப்புக்கொண்டதாக கூட்டமைப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன் சித்தார்த்தன் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

D8nFrUNUYAEi9gi.jpg

http://athavannews.com/நரேந்திர-மோடிக்கு-வாழ்த்/

1 hour ago, தமிழ் சிறி said:

இரா. சம்பந்தன் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன்

அத்தனையும் காலங்காலமாக செம்பு தூக்கின, செம்பு தூக்கிற ஆட்கள்!

சம்மந்தன் திக்கித் திக்கி நாங்கள் சனநாயக அரசியல்வாதிகள், 4, 5 கட்சிகள் சேர்ந்து அரசியல் செய்கின்றோம், தமிழருக்கு நீண்ட கால பிரச்சினை இருக்கு, 30 வருடம் சண்டை நடந்தது, நிறைய மக்கள் செத்தது, .... என்று சொல்லி முடிக்க முதல்,

எனக்கு அன்பளிப்புகள் நிறைய இருக்கு அதை வாங்க போக வேண்டும் என்று மோடி வெளிக்கிட்டிருப்பார்!

1 hour ago, தமிழ் சிறி said:

தமிழர்களின் பிரச்சினை – புது டெல்லி வருமாறு கூட்டமைப்பினருக்கு மோடி அழைப்பு!

மேலும் இந்த சந்திப்பில் புதிய அரசியலமைப்பை உள்ளடக்கிய பல்வேறு முக்கிய பிரச்சினைகள்  13 வது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமாறு பிரதமர் மோடியிடம் வலியுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு இந்த விடயங்கள் குறித்து புது டெல்லியில் ஒரு விரிவான கூட்டம் நடத்தவும் மோடி ஒப்புக்கொண்டதாக கூட்டமைப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://athavannews.com/நரேந்திர-மோடிக்கு-வாழ்த்/

சிங்களம் ஒன்றும் தர மாட்டாது ஆனால் எதையும் பெற்றுத்தரும் நோக்கமும் இந்தியாவிடம் இல்லை. மக்களுக்கு போலி நம்பிக்கையை கொடுத்து ( அடுத்த விரிவான மாநாடு) தொடர்ந்தும் ஏமாற்றும் கேவல அரசியல் வித்தை.  

இலக்கம் 13 என்பதுதான் குந்தி போலுள்ளது 😞 .

அடுத்த சந்திப்பில் இதையே வேறு ஒரு இலக்கத்திகல் அழைத்தால் சிங்கள தரப்பை ஏமாற்றிவிடலாம் 🙂 

  • கருத்துக்கள உறவுகள்

சுமத்திரன் எங்கே? 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரதி said:

சுமத்திரன் எங்கே? 

ரெலோவிற்கும் புளொட்டிற்கும் நடுவில் 

அண்மையில் இலங்கை முஸ்லீம் தலைவர்கள் தமது மக்களின் பாதுகாப்பு என்ற காரணத்திற்காக ஒற்றுமையாக தமது பதவிகளை துச்சமென துறந்தார்கள். 

தமிழ் தலைவர்களின் ஒற்றுமையை இந்த படம் அதற்கு பதிலாக சான்றாக  தரப்பட்டுள்ளது. 

அனைவரும் கட்சி பேதங்களை மறந்து, வேட்டி கட்டி,  தமது பலத்தை ஒற்றுமையை தமிழ் மக்களின் பிரதிநிதிகள் வெளிப்படுத்தி உள்ளனர். 

D8nFrUNUYAEi9gi.jpg

Edited by ampanai

  • கருத்துக்கள உறவுகள்

சிரிப்பை அடக்க முடியல 

4 minutes ago, Maruthankerny said:

சிரிப்பை அடக்க முடியல 

தேர்தல் நெருங்குதில்ல. அப்ப இப்பிடி தான் சீன் போட வேணும்.

8 minutes ago, Lara said:

தேர்தல் நெருங்குதில்ல. அப்ப இப்பிடி தான் சீன் போட வேணும்.

அப்பிடியே யாருக்கு வாக்களிக்க வேணும் என்றும் கொஞ்ச காலத்தால் மக்களுக்கு சொல்லுவினம்.

  • கருத்துக்கள உறவுகள்

2015 இல் ஒருக்கா வலியுறுத்திச்சினம்..

பிறகு

2017 இல் ஒருக்கா..

இப்ப 2019 இல்..

மோடி எதையும் காதில போட்டுக்கிறதா இல்லை.

ஹிந்தியாவைப் பொறுத்த வரை... அதன் பூகோள நலனிற்கு இப்போது சிங்கள அரசின் தயவு தான் தேவை.. தமிழர்கள் அல்ல. அந்த வகையில் எதை வலியுறுத்தியும் எதுவும் நிகழாது.

உள்ளூர் மக்களை தொடர்ந்து பேய்க்காட்ட ஏமாற்ற சம் சும் மாவை கும்பலுக்கு.. இது உதவலாம். அவ்வளவே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

அண்மையில் இலங்கை முஸ்லீம் தலைவர்கள் தமது மக்களின் பாதுகாப்பு என்ற காரணத்திற்காக ஒற்றுமையாக தமது பதவிகளை துச்சமென துறந்தார்கள். 

தமிழ் தலைவர்களின் ஒற்றுமையை இந்த படம் அதற்கு பதிலாக சான்றாக  தரப்பட்டுள்ளது. 

அனைவரும் கட்சி பேதங்களை மறந்து, வேட்டி கட்டி,  தமது பலத்தை ஒற்றுமையை தமிழ் மக்களின் பிரதிநிதிகள் வெளிப்படுத்தி உள்ளனர். 

D8nFrUNUYAEi9gi.jpg

செல்வம் அடைக்கலநாதன்....  வேட்டி கட்டவில்லை. 
மோடி போட்டிருக்கிற... "லெகிங்ஸ்" மாதிரி...  ஏதோ ஒன்று அணிந்திருக்கிறார்.  :grin:

Edited by தமிழ் சிறி

1 hour ago, nedukkalapoovan said:

ஹிந்தியாவைப் பொறுத்த வரை... அதன் பூகோள நலனிற்கு இப்போது சிங்கள அரசின் தயவு தான் தேவை.. தமிழர்கள் அல்ல. அந்த வகையில் எதை வலியுறுத்தியும் எதுவும் நிகழாது.

பாக்கிஸ்தானில் தீவிரவாதத்தை வளர்த்ததில் ஹிந்திய ரோவின் பங்கும் அதிகம். பின் ஹிந்தியா இஸ்ரேலிடம் ஆயுதங்களை வாங்கி பாக்கிஸ்தான் தீவிரவாதிகளை அழிப்பார்களாம். பூகோள நலன் பற்றி இவர்களுக்கு ஏதும் அக்கறை இருக்குதென இன்னும் நம்புகிறீர்கள். பூகோள நலன் என்ற பெயரில் போர் தொடங்குவதில் தான் இவர்களுக்கு ஆர்வம்.

சீனாவை சூழ விடக்கூடாது என்பதில் மட்டும் ஹிந்தியா குறியாக இருக்கும். ஆனால் சீனா சூழ்ந்து விடும். 😎

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

ச்சந்திப்பின் போது வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைப்பு, தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வலியுறுத்தினர். தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதன் மூலமாக இந்தியாவின் பாதுகாப்பை பலப்படுத்த முடியும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மோடிக்கு சுட்டிக்காட்டினர்.

சிறிலங்காவிலும் தமிழினம் இருக்கு என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மோடிக்கு சுட்டிக்காட்டியபோது அப்படியா? என்று மோடி ஆச்சரியப்பட்டுப் போனாராம்.! Bildergebnis für Smily+wonder

" இந்திய பிரதமருடன் கலந்துரையாடல்களை நடத்துவதற்கு சுமார் 15 நிமிடங்கள் மாத்திரமே வழங்கப்பட்ட நிலையில், தமது உரிய கலந்துரையாடல்களை நடத்துவதற்கு இது போதுமான காலமாக அமையவில்லை என கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் இந்திய பிரதமர் நரேந்திர மோதியிடம் தெரிவித்துள்ளார்." https://www.bbc.com/tamil/sri-lanka-48573339

கூட்டமைப்பின் ஓரிடத்திலேயே , இந்தியாவிலேயே  தனது  அரசியல் நம்பிக்கைகளை வைத்திருப்பது மடத்தன்மை. இந்திய அரசியல்வாதிகளுக்கும் இது தெரியும். 

ஏன் தமிழர் தலைமைகள் சீன அரசியல் தலைவர்களுடனும் உறவை ஏற்படுத்த, உள்ள உறவை மேம்படுத்த கூடாது? 

15 minutes ago, Paanch said:

சிறிலங்காவிலும் தமிழினம் இருக்கு என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மோடிக்கு சுட்டிக்காட்டியபோது அப்படியா? என்று மோடி ஆச்சரியப்பட்டுப் போனாராம்.! Bildergebnis für Smily+wonder

போன முறை (2017) இலங்கைக்கு வந்த போது தமிழில் tweet போட்ட மோடி இம்முறை இப்ப வரைக்கும் தமிழில் tweet போடேல்லை.

இது போன முறை tweet. 😀

A3F4097C-0944-4911-AEEE-7B9F818E698F.jpg

Edited by Lara

14 minutes ago, ampanai said:

கூட்டமைப்பின் ஓரிடத்திலேயே, இந்தியாவிலேயே  தனது  அரசியல் நம்பிக்கைகளை வைத்திருப்பது மடத்தன்மை. இந்திய அரசியல்வாதிகளுக்கும் இது தெரியும். 

ஏன் தமிழர் தலைமைகள் சீன அரசியல் தலைவர்களுடனும் உறவை ஏற்படுத்த, உள்ள உறவை மேம்படுத்த கூடாது? 

கூட்டமைப்பு இந்தியாவின் கைப்பொம்மை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.