Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் மக்கள் விரும்பவில்லை என்றால் நீதிமன்றமோ பொலிஸ் நிலையமோ செல்ல வேண்டாம்! அதுரலிய தேரர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்து ஆலயங்களில் புத்தர் சிலை வைப்பதை தமிழ் மக்கள் விரும்பாவிட்டால் அதற்காக நீதிமன்றமோ, பொலிஸ் நிலையமோ செல்லவேண்டியதில்லை புத்தர் சிலையை நாங்களே அகற்றுவோம். என அத்துரலிய ரத்தின தேரர் கூறியுள்ளார்.

இந்து பௌத்த கலாசார பேரவையில் 2ம் மொழி கல்வியை நிறைவு செய்த மாணவா்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன் போது மேலும் அவர் கூறுகையில்,

யாழ்ப்பாணத்தில் தமிழ் மாணவா்களுக்கு சிங்களம் கற்பிக்கப்படுகிறது. அதேபோல் கொழும்பில் சிங்கள மாணவா்களுக்கு தமிழ் கற்பிக்கப்படவேண்டும். அதற்கான பொறுப்பு இந்த பேரவைக்கு உள்ளது. மேலும் இந்து சமயத்திற்கும் பௌத்த சமயத்திற்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் உள்ளன. இங்கே இந்து ஆலயங்களில் புத்தர் சிலைகள் வைக்கப்படுவதற்கு எதிா்ப்பு தெரிவிக்கப்படுகின்றது.

உண்மையில் அதனை மக்கள் விரும்பாவிட்டால் அதனை நாங்கள் செய்யமாட்டோம். அதற்காக நீதிமன்றம் செல்ல தேவையில்லை, பொலிஸ் நிலையம் செல்ல தேவையில்லை. இந்து பௌத்த சமயங்களின் செய்தி அன்பு மட்டுமேயாகும். தலதா மாளிகை தாக்கப்பட்டபோது இந்து கோவில்களை பௌத்தர்கள் தாக்கவில்லை. 83 கலவரம் நடைபெற்ற காலத்திலும் கூட இந்து கோவில்களை தாக்கவில்லை. தாக்கவேண்டும் என நாங்கள் நினைக்கவுமில்லை.

 

ஆனால் சவுதி, ஓமான், கட்டாா் போன்ற நாடுகளில் பிள்ளையாா் கோவிலை கட்ட முடியுமா? இலங்கையில் சகல மதங்களுக்கும் பூரணமான சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கின்றது. உயிா்த்த ஞாயிறு தினத்தில் தேவாலயங்கள், விடுதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பலா் உயிாிழந்தனா் இதனை இஸ்லாமிய இனவாதிகளே இதனை செய்தாா்கள். இதனை சொல்வதற்கு அச்சப்படவேண்டியதில்லை.

கிழக்கு மாகாணத்தில் அரபு பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பல்கலைக்கழகம் 2016ம் ஆண்டளவில் உருவாக்கப்பட்டபோது அது தொழில்நுட்ப பல்கலைக்கழகம் என குறிப்பிடப்பட்டது. ஆனால் ஆளுநா் ஹிஷ்புல்லா அரபு நாடுகளில் உள்ளதுபோல் கட்டியுள்ளாா். இதற்கு நிதி யாா் கொடுத்தாா்கள் என பாா்த்தால் 100 மில்லியனுக்கு மேல் சவுதியில் உள்ள மக்களிடமிருந்து பணத்தை பெற்று தனிப்பட்ட பல்கலைக்கழகமாக இயக்கிக் கொண்டிருக்கின்றாா்.

இனவாதத்தை உருவாக்கவேண்டும் அல்லது தேவையற்ற விடயங்களை கற்பிப்பதற்கான பல்கலைக்கழகமாகவே இது இருக்கின்றது. இவ்வாறான பல்கலைக்கழகத்திற்கு இந்துக்களும், பௌத்தர்களும் இடமளிக்ககூடாது.

தனிப்பட்ட ரீதியில் இயங்கிவரும் பல்கலைக்கழகத்தை மாற்ற முடியாவிட்டாலும் அரசுடமையாக மாற்றி தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக மாற்றப்படும். அதற்கான செயற்பாடுகளை நாங்கள் தொடா்ந்தும் எடுப்போம். மேலும் குருநாகல் வைத்தியசாலையில் சில முறைகேடான செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளது. பிள்ளைகளை பெற்றுக் கொள்ள முடியாதவாறு கருத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாம் மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு சென்றபோதும் அநேக தமிழ் தாய்மாா்கள் இவ்வாறான முறைப்பாட்டை கூறியள்ளாா்கள். ஒரு பிள்ளை பெற்ற பின்னா் பிள்ளை பெற முடியாத நிலை உருவாகியுள்ளது. மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் அனேகமான பாடசாலைகளில் தமிழ் இனத்தவா்களை ஆசிாியா்களாக காண முடியவில்லை.

விஞ்ஞான, கணிதபாட அசிரியா்களாக 100ற்கு 80 வீதமானவா்கள் முஸ்லிம்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இதற்கு கல்வி அமைச்சு என்ன செய்துள்ளது. இவ்வாறு கிழக்கில பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. பல நுாற்றுக்கணக்கான காணிகளை அபகாித்துள்ளாா்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பு இவ்வாறான விடயங்களில் அக்கறை செலுத்துவதாக தெரியவில்லை.

ஏற்றுமதி, இறக்குமதியில் முஸ்லிம்கள் அதிகமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறாா்கள். இப்ராஹாம் என்பவா் பஞ்சு வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறாா் இவ்வாறானவா்கள் ஊடாக தமிழ் மக்கள் சூறையாடப்பட்டாா்கள், சிங்கள மக்கள் சூறையாடப்பட்டாா்கள். தமிழ் சிங்கள மக்கள் ஒன்றிணைந்து இஸ்லாமிய இனவாதத்தை அழிக்கவேண்டும்.

இந்துக்களுக்கும் பௌத்தா்களுக்கு இடையில் பலமான அமைப்பை உருவாக்கவேண்டும். தமிழ் தரப்புக்கு எதிா்கட்சி அந்தஸ்த்து கொடுத்தபோதும் அவா்கள் வடக்கில் பிரச்சினை என்றாா்களே தவிர அவா்கள் தீா்வினை கொடுத்ததில்லை.

பல நுற்றுக்கணக்கான தமிழா்கள் இஸ்லாமியா்களை திருமணம் செய்துள்ளனா். அமைச்சுக்களில் நுழைந்துள்ளாா்கள், கிழக்கு மாகாணத்தை அவா்கள் நிா்மானிக்கிறாா்கள்.

இதனை எவரும் கண்டு கொள்வதில்லை. சிங்களவா்களும், தமிழா்களும் நினைத்தால் சகல தகுதிகளையும் நாங்கள் பெற்றுக் கொள்ள முடியும். ஹிஸ்புல்லாஹ், அசாத்சாலி போன்றவா்களை அடுத்த தோ்தலில் தோற்கடிகக்வேண்டும் என்றாா்.

https://www.tamilwin.com/politics/01/217599?ref=imp-news

  • கருத்துக்கள உறவுகள்

எலி கோவணத்தோட வருதே.

மிகவும் கஸ்டப்பட்டு தமிழர்களை சந்தோசப்படுத்திறாராம்.

 

27 minutes ago, Nathamuni said:

எலி கோவணத்தோட வருதே.

மிகவும் கஸ்டப்பட்டு தமிழர்களை சந்தோசப்படுத்திறாராம்.

 

தமிழர்களுக்கு அடிக்கும் போது தாம் சிறுபான்மையினரை வதைக்கவில்லை என்று காட்ட முஸ்லிம்களை தம் பக்கம் இழுத்து வைத்து இருந்தனர். இப்ப முஸ்லிம்களை வதைக்க தொடங்கும் போது தமிழ் மக்கள் தம் பக்கம் தான் என்று உலகுக் காட்ட பிரயத்தனப்படுகின்றனர்.

தமிழர்களை பொறுத்தவரைக்கும் இருவருமே தம்மை வதைப்பவர்கள் தான்.

விடுதலை புலிகளின் சமாதான உடன்படிக்கடியை அன்று சிங்களம் ஏற்று நடந்திருந்தால் இந்த நிலை சிங்களத்திற்கு வந்திருக்காது.

ஐநாவில் முறையிடக்கூடாது ; நீதிமன்றத்திற்கும் செல்லக்கூடாது ; ஆயுதம் தாங்கி போராடவும் கூடாது;   ...

இன்றும், அரசுக்காக ஆதரவு தரும் தமிழர் அரசியல் தரப்பின் கோரிக்கையை அங்கீரித்தால் இந்த நாடு அழிவில் இருந்து மீளலாம். 
 

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, ampanai said:

.

இன்றும், அரசுக்காக ஆதரவு தரும் தமிழர் அரசியல் தரப்பின் கோரிக்கையை அங்கீரித்தால் இந்த நாடு அழிவில் இருந்து மீளலாம். 
 

காலம் கடந்து விட்டது என நினைக்கிறேன்...

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

விடுதலை புலிகளின் சமாதான உடன்படிக்கடியை அன்று சிங்களம் ஏற்று நடந்திருந்தால் இந்த நிலை சிங்களத்திற்கு வந்திருக்காது.

ஐநாவில் முறையிடக்கூடாது ; நீதிமன்றத்திற்கும் செல்லக்கூடாது ; ஆயுதம் தாங்கி போராடவும் கூடாது;   ...

இன்றும், அரசுக்காக ஆதரவு தரும் தமிழர் அரசியல் தரப்பின் கோரிக்கையை அங்கீரித்தால் இந்த நாடு அழிவில் இருந்து மீளலாம். 
 

 

50 minutes ago, putthan said:

காலம் கடந்து விட்டது என நினைக்கிறேன்...

எதுவுமே நிரந்தரமில்லை.

நான் பல தடவைகள் இந்த தளத்தில் பதிவிட்டுளேன்.

எதுவுமே நிரந்தரமில்லை. இந்த நிரந்தரமில்லா நிலைமை காரணமாகவே உலகின் பெரும் மாறுதல்கள் நிகழ்ந்தன, நிகழ்கின்றன, நிகழப்போகின்றன.

அமேரிக்கா உள்ளே வரும் என்றே, அதனை தடுக்க, இந்தியா தமிழர் இயக்கங்களை வளர்த்தது.

அதே அமெரிக்காவுடன் சேர்ந்து அழித்தது.

தமிழர்களின், வடக்கு, கிழக்கு இணைப்பு கோரிக்கையை, சிங்கள இனவாதிகளின் தூண்டுதலில், ஹிஸ்புல்லா, அதாவுல்லா போன்றோர், மூர்க்கமாக எதிர்த்தனர்.

முஸ்லிம்கள் கையில் கிழக்கின் அதிகாரம் வந்த நிலையில், வஹாபிஸமும், அரேபியமும், பயங்கரவாதமும் உள்ளே வந்ததை, இன்று இனவாதிகள் மட்டுமல்ல, இந்தியாவும், அமெரிக்காவும் அதிர்வுடன் நோக்குகின்றன.

இந்தியாவின் தென்புறத்தில், தமிழர்களை ஒடுக்கி விட்டதாக இறுமாந்திருந்த சிங்களத்தின், மடியில் செல்லப் பிள்ளைகளாக விளையாடிக் கொண்டிருந்த, தேள் கொட்டி விட்டது.

அதேவேளை, ஹிஸ்புல்லாவையும், ஆசாத் சாலியையும் பதவி நீக்க, ஆளுமை இல்லாத மைத்திரி, அவர்களை ராஜினாமா செய்ய கோரினார் என்பதையும், தனது பதவி போகும் என்று, அமைச்சரவையில் இருந்து றிசாட்டினை, ரணிலும் நீக்காமல், மொத்தமாக பதவி விலகி, பின் வரிசையில் இருந்து ஆதரவை தொடர   ஆலோசனை சொன்ன கொடுமையும் நடந்ததை பார்த்தோம்.

இப்போது, பிரபாகரனின், புலிகளின் முக்கியத்துவம் இந்தியாவுக்கு மிக தெளிவாக புரிந்துள்ளது.

இந்தியாவோ, அமெரிக்காவோ, தீர்க்கமான நடவடிக்கை எடுக்காமல், சிங்கள இனவாதிகளின் விளையாட்டினை தொடர விட்டால், தமிழர்கள், இஸ்லாமியர்கள் ஆயுதம் தூக்கவும், நாடு மீண்டும் யுத்த பூமியாகவும் மாறக்கூடும்.

ஜெய்சங்கரின் பதவியும், மோடியின் வரவும், இந்தியாவின் புதிய பரிதவிப்பு நிலையை தெரிவிக்கின்றதாகவே செய்தியாளர்கள் சொல்கின்றனர்.

மறுபுறம் சீனா, தென் இலங்கையில் என்ன நிலைப்பாடு எடுக்கும் என்பது தெரியவில்லை. ஆனாலும், இஸ்லாமிய தீவிரவாதம் ஒடுக்கப்படவேண்டும் என்பதில், சீனா ஒத்துழைக்கவும் செய்யும் என்பதும் நிதர்சனம்.

ஆனாலும், ஆயுதம் தூக்கிய மக்கள் என்ற வகையில், கொரில்லா போர்நிலை ஒடுக்க முடியாது என்பதும், புலிகள், ஒரு பலம்வாய்ந்த படையணியாக மாறும் வரையில், தோல்வியை சந்திக்கவில்லை என்பதும் நாம் அறிந்த உண்மை.
 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கூறியவை யாவும் உண்மை......
கொங்க்கொங்க் நாட்டை எப்பவோ உருவாக்கிய சக்தி தனது தேவைக்கு இப்ப பயன்படுத்துகின்றது போல தெரிகின்றது.....யாவும் நீண்ட கால தேவை கருதி உருவாக்கப்படுகின்றது.....ஈழம் ,இலங்கையின் வடக்கு கிழக்கு என்ற கருத்தியலும் அந்த மக்களின் நீண்ட கால தேவையாக இருப்பினும் அவர்களை விட வேறு ஒர்சக்திக்கும் அது தேவைப்படுகின்றது.....காலம் பதில் சொல்லும்.....

இந்தியா தேர்தலில் போட்டியிடாதா இருவருக்கு முக்கிய அமைச்சுபதவிகளை  வழங்கி ஆட்சியை நடத்தும் மோடி ஓர் வித்தியாசமான அரசியல்வாதியாக தெரிகின்றார்...

On 6/14/2019 at 11:34 PM, Nathamuni said:

அமேரிக்கா உள்ளே வரும் என்றே, அதனை தடுக்க, இந்தியா தமிழர் இயக்கங்களை வளர்த்தது.

அதே அமெரிக்காவுடன் சேர்ந்து அழித்தது.

இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி போன்றோர் அமெரிக்க, இஸ்ரேல் எதிர் நிலைப்பாட்டை கொண்டிருந்தவர்கள். அதன் பின் வந்த ஏனைய பிரதமர்கள் அமெரிக்க, இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டை கொண்டிருந்தவர்கள். அதனால் சேர்ந்து அழித்தார்கள்.

On 6/14/2019 at 11:34 PM, Nathamuni said:

முஸ்லிம்கள் கையில் கிழக்கின் அதிகாரம் வந்த நிலையில், வஹாபிஸமும், அரேபியமும், பயங்கரவாதமும் உள்ளே வந்ததை, இன்று இனவாதிகள் மட்டுமல்ல, இந்தியாவும், அமெரிக்காவும் அதிர்வுடன் நோக்குகின்றன.

அவர்கள் அதிர்வுடன் நோக்கவில்லை. வஹாபிஸம், அரேபியம், பயங்கரவாதம் உள்ளே வந்தது அவர்கள் அனுசரணையுடன் தான்.

On 6/14/2019 at 11:34 PM, Nathamuni said:

இப்போது, பிரபாகரனின், புலிகளின் முக்கியத்துவம் இந்தியாவுக்கு மிக தெளிவாக புரிந்துள்ளது.

அப்படியொன்றும் இல்லை.

On 6/14/2019 at 11:34 PM, Nathamuni said:

இந்தியாவோ, அமெரிக்காவோ, தீர்க்கமான நடவடிக்கை எடுக்காமல், சிங்கள இனவாதிகளின் விளையாட்டினை தொடர விட்டால், தமிழர்கள், இஸ்லாமியர்கள் ஆயுதம் தூக்கவும், நாடு மீண்டும் யுத்த பூமியாகவும் மாறக்கூடும்.

நாட்டை பிரச்சினைக்குள் வைத்திருப்பது தான் பலருக்கு விருப்பம். அதை தான் இதுவரை செய்தார்கள், இனியும் செய்வார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்படி வருபவர்கள் முதலில் தமிழர்களுக்கு அரசியல் தீர்வை குடுத்து அரவணைத்து போவது நல்லது ஆனால் எங்களுக்கு வாய்ச்ச அரசியல் வியாபாரிக்களுக்கு கொழும்பு சுடலையில் வீடு என்றாலும் விழுந்து குத்துகரணம் அடிக்கும்கள் சிங்களவனுக்கு .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.