Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நான்கு பேருக்கு மரணதண்டனை வழங்க கையொப்பமிட்டுள்ளேன் – ஜனாதிபதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நான்கு பேருக்கு மரணதண்டனை வழங்க கையொப்பமிட்டுள்ளேன் – ஜனாதிபதி

 

MS6

போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகளுக்கு வெகு விரைவில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற ஊடக பிரதானிகளுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே நான்கு போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்குவதற்காக தான் கையொப்பம் இட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

http://www.dailyceylon.com/185235/

  • கருத்துக்கள உறவுகள்

மரணத் தண்டனையை நிறைவேற்றும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்துக

 
June 26, 2019

amnesty-international.png?zoom=0.9024999
போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய 13 கைதிகளுக்கு மரணத் தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென, சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது

ஜூன் 21 இலிருந்து ஜூலை முதலாம் திகதி வரை அறிவிக்கப்பட்டுள்ள தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரத்திற்குள் போதை வர்த்தகத்துடன் தொடர்புபட்டு மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளவர்களுக்கு இதத்தண்டனையை நிறைவேற்ற ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவது குறித்த ஆவணத்தில் இன்று ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் அதனை நிறைவேற்றுவதற்காக ஜனாதிபதி முன்னெடுத்துள்ள அனைத்து திட்டங்களையும் நிறுத்துமாறு, சர்வதேச மன்னிப்புச் சபை கோhக்கை விடுத்துள்ளது

இதேவேளை இவ்வாறு மரண தண்டனையை நிறைவேற்றுவதன் மூலம் இலங்கையை போதைப்பொருள் தொடர்பான குற்றங்களிலிருந்து மீட்டெடுக்க முடியாதென, சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசிய வலய பணிப்பாளர் பிராஜ் பட்நைக் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

http://globaltamilnews.net/2019/125300/

7 hours ago, nunavilan said:

ஏற்கனவே நான்கு போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்குவதற்காக தான் கையொப்பம் இட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

இந்த நாலுல எத்தின பேர் பொய்க் குற்றம் சாட்டப்பட்ட தமிழர்?

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nunavilan said:

போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகளுக்கு வெகு விரைவில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அப்ப இனி உல்லாசபயனத்துறை சேடம் இழுக்கும் போல் தெரிகின்றது ...................................

2 hours ago, Rajesh said:

இந்த நாலுல எத்தின பேர் பொய்க் குற்றம் சாட்டப்பட்ட தமிழர்?

இப்படியான விடயங்கள் கண்ணுக்குள் எண்ணெய் ஊத்திக்கொண்டு சர்வதேச அமைப்புகள் கண்காணிக்கும் அவர்கள் நம்ம மாமா வேலை பார்க்கும் சம்பந்தன் சுமத்திரன் போல அல்ல .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, nunavilan said:

நான்கு பேருக்கு மரணதண்டனை வழங்க கையொப்பமிட்டுள்ளேன் – ஜனாதிபதி

ஏதோ சுத்தி வளைச்சு வருது சனம்....என்னத்துக்கெண்டு தெரியேல்லை?

On 6/26/2019 at 9:41 PM, Rajesh said:

இந்த நாலுல எத்தின பேர் பொய்க் குற்றம் சாட்டப்பட்ட தமிழர்?

இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளவர்களின் பட்டியலில் எட்டு தமிழர்கள்!

ஸ்ரீலங்காவில் மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ள கைதிகளின் பெயர் பட்டியலை சட்டமா அதிபர் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

முதல் கட்டமாக மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளவர்களில் தமிழர் ஒருவரும் முஸ்லீம் ஒருவர் அடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரண தண்டனைக்கு உட்படுத்தப்படவுள்ள 20 கைதிகளின் பெயர் பட்டியலை ஸ்ரீலங்கா சட்டமா அதிபர் திணைக்களம் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பிவைத்துள்ளது.

இவர்களில் தலா 8 முஸ்லீம்கள் மற்றும் தமிழர்களும் நான்கு சிங்களவர்களும் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்.தர்மகரன், எஸ்.புண்ணியமூர்த்தி, எஸ்.கணேசன், எம்.குமார், எஸ்.ஏ.சுரேஷ்குமார், பெருமாள் கணேசன், பி.கமிலஸ் பிள்ளை, டபிள்யூ.விநாயகமூர்த்தி ஆகிய எட்டு தமிழர்கள் மரண தண்டனை விதிக்கப்படவுள்ளவர்கள் பட்டியலில் உள்ளடங்கியுள்ளனர்.

எம்.எஸ்.எம். மஸ்தார், ஜே.ஏ.பூட், பி.ஜே.போல்சிம், எஸ்.மொஹமது ஜான், சையித் மொஹமது உவைஸ், எம்.எஸ்.எம்.மிஸ்வர், ஷாஹுல் ஹமீத் ஹஜ்முல், எஸ்.மசார் ஆகிய முஸ்லீம்களுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளளது.

எம்.கே.பியதிலக, கே.எம்.சமிந்த, டபிள்யூ.ரங்க சம்பத் பொன்சேகா, ஆர்.பி.சுனில் கருணாரத்ன ஆகியோரும் மரண தண்டனை விதிக்கப்படவுள்ளவர்கள் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

இதன்பிரகாரம் இவர்களில் நால்வருக்கு முதல் கட்டமாக மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.ibctamil.com/srilanka/80/123010

39 minutes ago, போல் said:

எம்.தர்மகரன், எஸ்.புண்ணியமூர்த்தி, எஸ்.கணேசன், எம்.குமார், எஸ்.ஏ.சுரேஷ்குமார், பெருமாள் கணேசன், பி.கமிலஸ் பிள்ளை, டபிள்யூ.விநாயகமூர்த்தி ஆகிய எட்டு தமிழர்கள் மரண தண்டனை விதிக்கப்படவுள்ளவர்கள் பட்டியலில் உள்ளடங்கியுள்ளனர். 

போதைப் பொருள் கடத்தல் விடயத்தில் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் பெயர்கள் பெருமளவில் இருப்பதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. இந்தவிடயத்தில் தமிழர்களை யோக்கியர்களாக கருதுவது சிரமம்.

ஆனாலும் சிங்கள நீதித்துறையைப் பொறுத்தவரை அது 99% அளவில் தமிழர்களுக்கு பாரபட்சமாகவே  நடந்து கொண்டிருப்பது 60+ வருட வரலாறு! இந்தப் பின்னணியில் இங்கே பெயர் குறிப்பிடப்பட்டவர்கள், குறிப்பாக தமிழர்கள், உண்மையான குற்றவாளிகளா என்பது பெரும் சந்தேகத்துக்குரிய விடயம்!

சிங்கள நீதித்துறை பெரும்பாலும் (99% க்கு அதிகமாக) தமிழர்களுக்கு எதிராகவே, தமிழர்களுக்கு நீதியை மறுத்தே 60+ வருடங்களாக இயங்கி வந்துள்ளது.

மைத்திரி போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரா கதைத்து வந்தவர். ஆனால் மரண தண்டனை வழங்க இப்ப கையொப்பமிட்டது ஈஸ்டர் குண்டு தாக்குதல் பற்றிய செய்திகளிலிருந்து மக்களை திசைதிருப்புவதற்காக இருக்கலாம்.

மரணதண்டனை நிறைவேற்றப்பட்டால் குற்றமற்றவர்களை குற்றவாளிகளாக காட்டி தண்டனை வழங்குவதும் நடக்கலாம். அதில் தமிழர் தரப்பு அதிகம் பாதிக்கப்படும். 

நாலு பேர் வாழ் வேண்டும் ஆனால்  தப்பும் செய்யலாம் என்பார்கள். இங்கே நாலு பேர் கொல்லபட்டால் தான் தாங்கள், தங்களுக்கும் பாதாள உலகத்திற்கும் இடையிலான உறவு தொடரும் என இந்த சிங்கள அரசியல்வாதிகள் மறைத்து  மக்களை ஏமாற்றுகிறார்கள். 

"ஏற்கனவே நான்கு போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்குவதற்காக தான் கையொப்பம் இட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது". 

  • கருத்துக்கள உறவுகள்

எனது பார்வையில் இனரீதியான கொள்கை அடிப்படையில் இவரே ஒரு மரணதண்டனை குற்றவாளி. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.