Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

8 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய விகாராதிபதி: சிறுவனின் நிலைகண்டு கதறிய பெற்றோர்

Featured Replies

பௌத்த மதகுரு ஒருவர்,  8 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் நேற்றிரவு (12.08.2019) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேற்படி கைது செய்யப்பட்டவர் கோமரங்கடவல - மதவாச்சிய பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய பௌத்த மதகுரு எனவும் சுறுலு மஹா முனியாவ என்ற விகாரையின் விகாராதிபதி எனவும் தெரியவருகின்றது.

குறித்த மதகுரு, கடந்த எட்டாம் திகதி தனது மகனை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பெற்றோர் செய்த முறைப்பாட்டையடுத்து  சந்தேகத்தின் பெயரில் பௌத்த மதகுரு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.



virakesari.jpg

துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சிறுவன் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கைது செய்யப்பட்ட பௌத்த மதகுருவை இன்றைய தினம் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கோமரங்கடவல பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை கைது செய்யப்பட்ட பௌத்த மதகுருவை திருகோணமலை நீதவான் சமிலா குமாரி ரத்நாயக்க முன்னிலையில் இன்று முன்னிலைப் படுத்திய போது எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் கட்டளையிட்டார்.

https://www.virakesari.lk/article/62579

 

Edited by ampanai

  • தொடங்கியவர்
12 minutes ago, ampanai said:

குறித்த மதகுரு, கடந்த எட்டாம் திகதி தனது மகனை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பெற்றோர் செய்த முறைப்பாட்டையடுத்து  சந்தேகத்தின் பெயரில் பௌத்த மதகுரு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அர்த்தமுள்ள இந்து மதம் என்ன சொன்னது
அது அவரவர் கடமைகளை வகுத்து தந்தது
ஆசை வந்து வேதியனை ஆட்டி வைத்தது
அதுதான் அள்ளி இட நெருப்பை இங்கே கூட்டி வைத்தது
அர்த்தமுள்ள இந்து மதம் என்ன சொன்னது

கட்டியவள் கொடுத்ததெல்லாம் வாய்க்கு ருசி
அதற்கு கையளவு நீ போட்டாய் வாய்க்கரிசி
உள்ளதெல்லாம் உனக்காக கொடுத்து சென்றாள்
தனக்கு பொட்டோடு பூவை மட்டும் எடுத்து சென்றாள்
அர்த்தமுள்ள இந்து மதம் என்ன சொன்னது

மந்திரத்தில் வந்த சுகம் தந்திரத்தில் போனதடா
கை பிடித்த மனைவியிடம் பொய் படித்த பாவமடா
அர்த்தமுள்ள இந்து மதம் என்ன சொன்னது
அது அவரவர் கடமைகளை வகுத்து தந்தது

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ampanai said:

அர்த்தமுள்ள இந்து மதம் என்ன சொன்னது
அது அவரவர் கடமைகளை வகுத்து தந்தது
ஆசை வந்து வேதியனை ஆட்டி வைத்தது
அதுதான் அள்ளி இட நெருப்பை இங்கே கூட்டி வைத்தது
அர்த்தமுள்ள இந்து மதம் என்ன சொன்னது

கட்டியவள் கொடுத்ததெல்லாம் வாய்க்கு ருசி
அதற்கு கையளவு நீ போட்டாய் வாய்க்கரிசி
உள்ளதெல்லாம் உனக்காக கொடுத்து சென்றாள்
தனக்கு பொட்டோடு பூவை மட்டும் எடுத்து சென்றாள்
அர்த்தமுள்ள இந்து மதம் என்ன சொன்னது

மந்திரத்தில் வந்த சுகம் தந்திரத்தில் போனதடா
கை பிடித்த மனைவியிடம் பொய் படித்த பாவமடா
அர்த்தமுள்ள இந்து மதம் என்ன சொன்னது
அது அவரவர் கடமைகளை வகுத்து தந்தது

எல்லா லைக்கையும் இன்று நல்லூர் கந்தனுக்கு 
பறவைக்காவடி ஆடியவர்களுக்கு போட்டுவிட்ட காரணத்தால் 
இதுக்கு குத்துவத்துக்கு பச்சை இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணதாசனின் “அர்த்தமுள்ள இந்துமதம்” நூல் வரிசையை தேடித் தேடி படித்து இந்து மத்த்தில் காதல் கொண்ட காலத்தை நினைவூட்டுகிறீர்கள்.
மதங்களுள் அழகானதும் இனிமையானதும் இந்து மதம்.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ampanai said:

பௌத்த மதகுரு ஒருவர்,  8 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் நேற்றிரவு (12.08.2019) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேற்படி கைது செய்யப்பட்டவர் கோமரங்கடவல - மதவாச்சிய பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய பௌத்த மதகுரு எனவும் சுறுலு மஹா முனியாவ என்ற விகாரையின் விகாராதிபதி எனவும் தெரியவருகின்றது.


virakesari.jpg

துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சிறுவன் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கைது செய்யப்பட்ட பௌத்த மதகுருவை இன்றைய தினம் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கோமரங்கடவல பொலிஸார் தெரிவித்தனர்.

33 வயதில்... ஒரு விகாரைக்கு  அதிபதியாக  இளம் வயதில் பொறுப்பை வகித்துக் கொண்டு,
சிறுவர் பாலியல் வன்முறையில் இறங்கிய பிக்குவை,  பத்து வருடமாவது மறியலுக்குள் வைக்க வேண்டும்.

சின்னப் பெடியனை.... ஆஸ்பத்திரியிலை  சேர்க்கும் அளவுக்கு.....
முரட்டுத்  தனமாக... அப்பிடி என்னதான் செய்தான், இந்தப் பிக்கு.  

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Maruthankerny said:

எல்லா லைக்கையும் இன்று நல்லூர் கந்தனுக்கு 
பறவைக்காவடி ஆடியவர்களுக்கு போட்டுவிட்ட காரணத்தால் 
இதுக்கு குத்துவத்துக்கு பச்சை இல்லை. 

உங்களுக்காக....அம்பனைக்கு ஒண்டு  போட்டிருக்கு...!😃

  • தொடங்கியவர்
21 minutes ago, தமிழ் சிறி said:

33 வயதில்... ஒரு விகாரைக்கு  அதிபதியாக  இளம் வயதில் பொறுப்பை வகித்துக் கொண்டு,

வடக்கு கிழக்கில் ஆயிரம் விகாரைகள் அமைக்க உள்ள திட்டத்தின் படி ஆயிரம் பேர் அதிபதியாக உள்ளனரே ?  

19 hours ago, ampanai said:

பௌத்த மதகுரு ஒருவர்,  8 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் நேற்றிரவு (12.08.2019) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விகாரைகளுக்குள்ள பௌத்த பிக்குகளும் சர்ச்சுகளுக்குள்ள கிறீஸ்தவ பாதிரிகளும் செய்கிற பாலியல் வன்முறைகளை கணக்கில எடுத்தா அவற்றை பதிவு செய்ய உலகத்துல இருக்கிற பேப்பர்கள் காணாது.

அப்பிடி என்னதான் விஞ்ஞான விளக்கங்களோட தம்மபதத்திலும் பைபிள்ளையும் சொல்லி இருக்கோ தெரியல, நிறைய பிக்குகளும் பாதிரிகளும் சிறுவர், சிறுமிகள் துஸ்பிரயோகத்தில ஆளுக்காள் பலத்த போட்டி போடீனம்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, புங்கையூரன் said:

உங்களுக்காக....அம்பனைக்கு ஒண்டு  போட்டிருக்கு...!😃

நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்

யாழின் விதிமுறைகளில் இருந்து

“சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்
On 8/14/2019 at 5:41 AM, தமிழ் சிறி said:

33 வயதில்... ஒரு விகாரைக்கு  அதிபதியாக  இளம் வயதில் பொறுப்பை வகித்துக் கொண்டு,
சிறுவர் பாலியல் வன்முறையில் இறங்கிய பிக்குவை,  பத்து வருடமாவது மறியலுக்குள் வைக்க வேண்டும்.

சின்னப் பெடியனை.... ஆஸ்பத்திரியிலை  சேர்க்கும் அளவுக்கு.....
முரட்டுத்  தனமாக... அப்பிடி என்னதான் செய்தான், இந்தப் பிக்கு.  

Image result for pakku vetti

சிறு வயதில் துறவியாக போகிறதில் பல சிக்கல்கள் உள்ளன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.