Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ்.வடமராட்சி கப்பூதூவெளி நன்னீர் திட்டத்தினை ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.வடமராட்சி கப்பூதூவெளி நன்னீர் திட்டத்தினை ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார்

யாழ்.வடமராட்சி கப்பூதூவெளி நன்னீர் திட்டத்தினை ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார்

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்துக்கான அடிக்கல்லை நாட்டி வைத்துள்ளார்.நாட்டிற்காக ஒன்றிணைவோம்’ தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைப்பதற்காக ஒருநாள் விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி இன்று வெள்ளிக்கிழமையாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளார்.இந்த வேலைத்திட்டத்தின முதல் நிகழ்வாக, விவசாயம், நீரியல் வளத்துறை அமைச்சு மற்றும் ஆசிய வங்கியின் 13 ஆயிரத்து 500 பில்லியன் ரூபாய் நிதியில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள பருத்தித்துறை துறைமுகத்திற்கான பெயர்ப்பலகையை திரைநீக்கம் செய்ததுடன், அடிக்கல்லினை நாட்டி வைத்தார்.4-7

யாழ்.வடமராட்சி, கப்பூதூவெளி, அந்தணத்திடலில் நன்னீர் திட்டத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆரம்பித்து வைத்துள்ளார்.6×10 சதுர கிலோ மீட்டர் சுற்றளவில் 2000 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ளது.அத்துடன் யாழ்ப்பாணம் பழைய கச்சேரிக்கு அண்மையில் அமைக்கப்பட்ட ஸ்மாட் ஸ்ரீலங்கா கட்டடத்தையும் கைதடியில் அமைக்கப்பட்டுள்ள வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி வங்கியினையும் ஜனாதிபதி திறந்து வைத்துள்ளார்.(15)

 

http://www.samakalam.com/முக்கிய-செய்திகள்/யாழ்-வடமராட்சி-கப்பூதூவெ/

‘ஆறாயிரம் ஏக்கர் உவர் நிலங்களாக மாறியுள்ளது’

 

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி – பூநகரிப் பிரதேசத்தில் சுமார் ஆறாயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பு உவர் நிலங்களாக மாறியுள்ளதாக விவசாய  அமைப்புகள் தெரிவித்துள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரிப் பிரதேசம் தொன்மையான ஒரு பிரதேசமாகக் காணபபட்டாலும் அங்கு குடிநீர் பிரச்சனை ஒருபாரிய பிரச்சனையாக காணப்படுகின்றது.

கூடுதலான பயிர் செய்கை நிலங்கள் உவர் நிலங்களாக மாறியமையே இந்த குடிநீர்த் தட்டுப்பாட்டுக்கு பிரதானமான காரணமாக  அமைந்துள்ளது.

பூநகரிப் பிரதேசத்தை பொறுத்தவரையில் ஏறத்தாள ஆறாயிரம் ஏக்கர் நிலப்பரப்பு உவர் நிலங்களாக மாறிறுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரிப் பிரதேசத்தில் கடந்த 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஏற்பட்ட யுத்தம் காரணமாகவும் அதன் பின்னர் உவர் நீர்த் தடுப்பணைகள் பராமரிக்கப்படாமலும் கைவிடப்பட்டமையால் பூநகரிப் பிரதேசத்தைச் சூழவுள்ள உவர் நீர்த்தடுப்பணைகள் அழிவடைந்தன.

இதனால் கடல் பெருக்குக்காலங்களில் உவர் நீர் விவசாய விளைநிலங்களுக்குள் உட்புகுந்து வயல் நிலங்கள் உவர் நிலங்களாக மாறியிருப்பதாகவும் கடந்த 2010ஆம் ஆண்டு மீள்குடியேற்றத்தின் பின்னர் பல்வேறு திட்டங்களின் ஊடாக உவர் நீர்த்தடுப்பணைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு உவர் நீர்த் தடுப்பணைகள் அமைக்கப்பட்டு பூநகரிப் பிரதேசத்தில் ஆங்காங்கே காணப்படுகின்ற சிறுகுளங்களையும் புனரமைத்து மழை நீரைத்தேக்குவதன் மூலம், நிலங்களின் உவர்த்தன்மையைப் போக்கி, விவசாய நடவடிக்கையில் ஈடுபடமுடியும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

http://www.tamilmirror.lk/வன்னி/ஆறாயிரம்-ஏக்கர்-உவர்-நிலங்களாக-மாறியுள்ளது/72-237646

ஜம்புக்குளத்தைக் காணவில்லை

 

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி - கோரக்கன்கட்டு பகுதியில், சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக காணப்பட்ட சிறிய குளமான ஜம்புக்குளம், கடந்த சில தினங்களுக்கு முன் தனியார் ஒருவரால் கனரக வாகனங்கள் கொண்டு முழுமையாக மூடப்பட்டுள்ளது.

குறித்த குளமானது, இந்தப் பிரதேசத்தில் உள்ள கால்நடைகளுக்கான குடிநீர்த் தேவையை நிறைவு செய்யும் ஓர் குளமாகக் காணப்பட்டதுடன், குளத்தை அண்மித்த பகுதிகளில் உள்ள கிணறுகளிலும் நன்னீர் காணப்பட்டதாகவும், அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த குளத்தை தனி நபரொருவர் ஆக்கிரமித்து, அதனை முழுமையாக அழித்து, மண் நிரவி மூடியுள்ளதாகவும், அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதனால், எதிர்காலத்தில் இப்பிரதேசத்தில், கால்நடைகளுக்கான நீர் இல்லாமல் போவதுடன், அருகிலுள்ள கிணறுகளிலும் தண்ணீர் இல்லாமல் போகும் நிலை ஏற்படுமெனவும், அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது தொடர்பில், கமநலசேவை நிலையம், மாவட்டக் கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் ஆகியோரிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும், அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.

http://www.tamilmirror.lk/வன்னி/ஜம்புக்குளத்தைக்-காணவில்லை/72-237744

’வரட்சி நீடித்தால் நீர் விநியோகத்தில் சிக்கல் வரும்’

 

-மு.தமிழ்ச்செல்வன்

கிளிநொச்சி நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினரால் மேற்கொள்ளப்படுகின்ற நீர் விநியோகமானது, இரண்டு நாள்களுக்கு ஒரு தடவையே விநியோகிக்கப்படுவதாகத் தெரிவித்த மாவட்ட நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை, வரட்சியான வானிலை தொடர்ந்து நீடித்தால், இரண்டு நாளுக்கு ஒரு தடவை வழங்கும் குடிநீர் விநியோகத்திலும், நெருக்கடி நிலை ஏற்படுமெனவும் கூறியுள்ளது.

இது குறித்து தொடர்ந்துரைத்த மாவட்ட நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினர், கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் கடும் வரட்சி காரணமாக, நீர்நிலைகளில் நீர் வற்றியதால், குடிநீருக்கான நீரைப் பெற்றுக்கொள்வதில் சிரமங்கள் காணப்படுவதாகவும் தெரிவித்தனர்.

குறிப்பாக, கிளிநொச்சி குளத்தின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளதாகத் தெரிவித்த சபையினர்,. அதிகளவு பாசி காணப்படுவதால் நீரின் நிறமும் மாற்றமடைந்துள்ளதாகவும் கூறினர்.

இதனால், நாளொன்றுக்கு, 700 மீற்றர் கீயூப் நீரைச் சுத்திகரித்து வழங்கி வந்த நிலைமை மாறி, தற்போது சுமார் 350 மீற்றர் கீயூப் நீரையே சுத்திகரித்து வழங்க முடிவதாகக் கூறிய சபையினர், தம்மால் 14 கிராம அலுவலர் பிரிவுகளுக்கே, குழாய் வழி நீர் விநியோகம் மேற்கொள்ளப்படுகிறதெனவும் தெரிவித்தனர்.

தற்போது நிலவும் வரட்சியான வானிலை தொடர்ந்து நீடித்தால், இரண்டு நாளுக்கு ஒரு தடவை வழங்கும் குடிநீர் விநியோகத்திலும், நெருக்கடி நிலை ஏற்படுமெனவும், சபையினர் மேலும் கூறினர்.

http://www.tamilmirror.lk/வன்னி/வரட்சி-நீடித்தால்-நீர்-விநியோகத்தில்-சிக்கல்-வரும்/72-237745

திட்டங்களை முறையாக முன்னெடுத்தால் அருமையான திட்டங்களாக அமையும்.

On 8/31/2019 at 7:59 PM, கிருபன் said:

கப்பூதூவெளி

இப்ப தான் இந்த பேரை கேக்கிறேன்.
அப்பிடி ஓர் ஊர் இருக்கோ?

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Rajesh said:

இப்ப தான் இந்த பேரை கேக்கிறேன்.
அப்பிடி ஓர் ஊர் இருக்கோ?

இது என்னுடைய  கிராமத்துக்கு பக்கத்து கிராமம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, வாதவூரான் said:

இது என்னுடைய  கிராமத்துக்கு பக்கத்து கிராமம்

 80ம் ஆண்டளவிலை கப்பூதுவிலையிருந்து எனக்கு பொம்புளை பேசி வந்தது நான் வேண்டாம் எண்டுட்டன்😎

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, குமாரசாமி said:

 80ம் ஆண்டளவிலை கப்பூதுவிலையிருந்து எனக்கு பொம்புளை பேசி வந்தது நான் வேண்டாம் எண்டுட்டன்😎

பால்ய விவாகம் அப்ப நடக்கிறதோ அண்ணை?!😊

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

 80ம் ஆண்டளவிலை கப்பூதுவிலையிருந்து எனக்கு பொம்புளை பேசி வந்தது நான் வேண்டாம் எண்டுட்டன்😎

15056311-1307992399245793-90202839557694

மை மைன்ட் வாய்ஸ்  என்னத்த சொல்ல இந்த மனுசனுக்கு மச்சம் தான் 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

 80ம் ஆண்டளவிலை கப்பூதுவிலையிருந்து எனக்கு பொம்புளை பேசி வந்தது நான் வேண்டாம் எண்டுட்டன்😎

கப்பூதுவில கேட்டா வேறை மாரிச் சொல்லீனம்? 😂.

நானும் இந்த ஊருக்கு போனதில்லை, சாவச்சேரியில் இருந்து சரசாலை, நுணாவில் வழியே பருத்துறை போற வழியில் இருக்குதாம்?

இந்த திட்டம் பற்றி மேலும் தகவல் இருந்தால், பகிரவும்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 9/4/2019 at 11:47 AM, ஏராளன் said:

பால்ய விவாகம் அப்ப நடக்கிறதோ அண்ணை?!😊

ஏன் என்னைப்பாக்க என்ன மாதிரி தெரியுது? 😁

On 9/4/2019 at 6:05 PM, தனிக்காட்டு ராஜா said:

15056311-1307992399245793-90202839557694

மை மைன்ட் வாய்ஸ்  என்னத்த சொல்ல இந்த மனுசனுக்கு மச்சம் தான் 

இப்பவும் எனக்கு பின்னாலை மகளிர் கூட்டம் அலையுது எண்டு சொன்னால் நம்பவே போறிங்க ராசா? 😎

On 9/4/2019 at 6:59 PM, goshan_che said:

கப்பூதுவில கேட்டா வேறை மாரிச் சொல்லீனம்? 😂.

அங்கத்தையான் சனம் பொய் சொல்லுற சனம்....அதாலைதான் நான் வேண்டாம் எண்டனான் :cool:

பதில் சொன்ன அனைவருக்கும் நன்றிகள்! 

கலிகைச் சந்தில இருந்து ஒரு 6, 7 km தூரத்துல இருக்காம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.