Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்களின் தலைகளில் மண்ணை அள்ளிப்போடும் முடிவுகளை சம்பந்தன் மற்றும் சுமந்திரன் எடுக்கக்கூடாது!

Featured Replies

ஸ்ரீலங்காவில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சிங்கள கட்சிகளின் வேட்பாளர்களில் எவருக்காவது ஆதரவு வழங்குவது என்றால் முதலில் அவர்களிடம் இருந்து சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் தமிழர் தரப்பு உத்தரவாதங்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

இதனைவிடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனும் தன்னிச்சையாக முடிவுகளை எடுத்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு மீண்டும் ஆதரவு வழங்குமாறு தமிழ் மக்களை கோருவார்களானால் அதுவே மீண்டும் தமிழ் மக்களின் தலைகளில் மண்ணை அள்ளிபோட்டுக்கொள்ளும் முடிவாக அமைந்துவிடும் என்றும் சுரேஷ் பிறேமச்சந்திரன் எச்சரித்திருக்கின்றார்.

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன், ஜனாதிபதி தேர்தல் குறித்த முடிவை எடுப்பதற்கு முன்னர் தமிழர் தரப்பினர் அனைவரையும் இணைத்துக்கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் பொதுவான முடிவொன்றை எடுத்து சிங்கள தலைமைகளுடன் பேரம் பேச வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

சிறிலங்காவில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் எவ்வாறான முடிவை எடுக்க வேண்டும் என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களான சம்பந்தனும், சுமந்திரனும் மாத்திரம் தன்னிச்சையாக எடுக்காது, தமிழ் தேசியத்திற்காக உறுதியாக செயற்பட்டுவரும் அனைத்துக் கட்சிகளையும் இணைத்துக்கொண்டு பொதுவான முடிவொன்றை எடுக்க முன் வர வேண்டும் என்றும் சுரேஷ் பிறேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வு மற்றும் ஏனைய பிரதான பிரச்சனைகளுக்கான தீர்வுகள் தொடர்ந்தும் இழுத்தடிப்பு செய்யப்பட்டுவருகின்ற நிலையில், தமிழர் தரப்பினர் அனைவரும் இணைந்து பலமான அணியாக கோரிக்கைகளை முன்வைக்கும் பட்சத்திலேயே சிங்கள தலைமைகள் கவனம்செலுத்தும் என்றும் சுரேஷ் பிறேமச்சந்திரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளையே நிறைவேற்றாத சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ் மக்களுக்கு ஒரு வருடத்திற்குள் எவ்வாறு தீர்வு வழங்கப் போகின்றார் என்றும் கேள்வி எழுப்பினார்.

https://www.ibctamil.com/srilanka/80/128053

சிங்கள அரசியல்வாதிகளை அரசியலால் வெல்லும் திறமை இல்லாத தலைவர்கள் அரசியலில் இருந்து விலகி வேண்டும் இல்லை விலக்கப்பட வேண்டும். 

 

பà®à®®à¯ à®à®¤à¯à®à¯ à®à¯à®£à¯à®à®¿à®°à¯à®à¯à®à®²à®¾à®®à¯: 2 பà¯à®°à¯, à®à¯à®³à¯à®¸à¯ à®à®ªà¯

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Quote

தமிழ் மக்களின் தலைகளில் மண்ணை அள்ளிப்போடும் முடிவுகளை சம்பந்தன் மற்றும் சுமந்திரன் எடுக்கக்கூடாது!

எக்யூஸ் மீ..... சம்சும் கோஷ்டிக்கு வேறை வழி தெரியாது. 😎

17 hours ago, போல் said:

 

சிறிலங்காவில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் எவ்வாறான முடிவை எடுக்க வேண்டும் என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களான சம்பந்தனும், சுமந்திரனும் மாத்திரம் தன்னிச்சையாக எடுக்காது, தமிழ் தேசியத்திற்காக உறுதியாக செயற்பட்டுவரும் அனைத்துக் கட்சிகளையும் இணைத்துக்கொண்டு பொதுவான முடிவொன்றை எடுக்க முன் வர வேண்டும் என்றும் சுரேஷ் பிறேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

 

ஆர் சொல்றது?

ஓ.. மண்டையன் குழு தலைவரா.... அப்பச் சரி சரி

  • கருத்துக்கள உறவுகள்

காலம் கடந்து போனாலும் ஞானம் பொறந்திருக்கே. நல்ல விடயம் தான் . இருந்தாலும் தமிழ் தரப்பின் ஒற்றுமை தேர்தலை முன்வைத்து தான் தேடப்படவேண்டும்மென்ற அவசியம் கிடையாது. இதற்கான அடித்தளம் என்றுமே இருந்திருக்க வேண்டியது அவசியம். தமிழ் மக்களின் உரிமை விவகாரங்களில் அக்கறையுள்ள அனைத்து அரசியல்வாதிகளும் தத்தமது செயற்திட்ட பட்டியலில் தமிழ் தலைமைகளின் ஒற்றுமையை தான் முதலாவதாக வைத்து செயற்பட்டிருக்கவேண்டும்.

20 hours ago, போல் said:

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் பொதுவான முடிவொன்றை எடுத்து சிங்கள தலைமைகளுடன் பேரம் பேச வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதென்ன பேரம்? அதுல மண்டையனுக்கு எவ்வளவு வெட்டு?

சிங்களவனிட்டை பேரம் பேசி காசை வாங்கி கொண்டுதான் முண்டு கொடுக்கோணும் என்டு மண்டையன் வெளிப்படையாகவே பேசத் தொடங்கியிருக்கார்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிழலி said:

ஆர் சொல்றது?

ஓ.. மண்டையன் குழு தலைவரா.... அப்பச் சரி சரி

தம்பி நிழலி  பழையவற்றை மீண்டும் மீண்டும் கையிலெடுக்கத்தான் வேண்டுமா???

 

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, ampanai said:

சிங்கள அரசியல்வாதிகளை அரசியலால் வெல்லும் திறமை இல்லாத தலைவர்கள் அரசியலில் இருந்து விலகி வேண்டும் இல்லை விலக்கப்பட வேண்டும். 

 

பà®à®®à¯ à®à®¤à¯à®à¯ à®à¯à®£à¯à®à®¿à®°à¯à®à¯à®à®²à®¾à®®à¯: 2 பà¯à®°à¯, à®à¯à®³à¯à®¸à¯ à®à®ªà¯

ஒருத்தரும் மிச்சம் இருக்க மாட்டினம் 1900-2019 வரை அத்தனை தலைவர்களும், கிளர்ச்சியாளர்களும் 😂

Edited by goshan_che

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, நிழலி said:

ஆர் சொல்றது?

ஓ.. மண்டையன் குழு தலைவரா.... அப்பச் சரி சரி

 நாங்கள் பழையதுகளை மீண்டும் மீண்டும் தூக்கிப்பிடித்தால் சிங்களமும் சர்வதேசமும் தூக்கிவைத்திருப்பதை கீழே வைக்காது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.