Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவர் – யாழில் சம்பவம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

main_pic_sexabuse-720x450.jpg

14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவர் – யாழில் சம்பவம்

யாழ்ப்பாண மானிப்பாயில் 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 62 வயது முதியவர் மானிப்பாய் பொலிஸாறால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முத்துதம்பி வீதி மானிப்பாய் பகுதியில் வசிக்கும் 62 வயதுடைய நாகலிங்கம் யோகராசா என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது வீட்டிற்கு தனது நண்பனின் மகளான 14 வயது சிறுமிக்கு இனிப்பு வகைகளை பெற்றுக்கொடுத்து சிறுமியை தனது இச்சைக்கு பயன்படுத்தி வந்துள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சுகயீனம் அடைந்திருந்த குறித்த சிறுமி வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தபோது சிறுமி கர்ப்பமடைந்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டது.

இதன் பின்னர் சிறுமியிடம் பொலிஸார் விசாரணை செய்துள்ளனர். விசாரணையின் போது சிறுமி நடந்தவற்றை கூறியுள்ளார். சிறுமியின் வாக்கு மூலத்தின் பிரகாரம் துஸ்பிரயோகம் செய்த நபரை மானிப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்த நபரை நாளை மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

http://athavannews.com/14-வயது-சிறுமியை-கர்ப்பமாக/

  • கருத்துக்கள உறவுகள்

ஆதவன் நியூஸ்காரர் இந்த செய்தியை விடாது கவனிப்பதோடு, குற்றம் சாட்டப்பட்டவர் ஊழல் செய்தால் அதையும் வெளிக்கொணர வேண்டும்.

மானிப்பாய் பொலிசாருக்கு ஒரு சல்யூட். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

ஆதவன் நியூஸ்காரர் இந்த செய்தியை விடாது கவனிப்பதோடு, குற்றம் சாட்டப்பட்டவர் ஊழல் செய்தால் அதையும் வெளிக்கொணர வேண்டும்.

மானிப்பாய் பொலிசாருக்கு ஒரு சல்யூட். 

ஏற்கனவே கெட்ட பேர், இப்ப சல்யூட் வேறயா? தற்கொலை  முயற்சி தான் இது! 😎

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான திரிகளில் கருத்தாடல் செய்வதாயின்சீண்டல் கருத்தை வைத்தவருக்கும் சீண்டியவருக்கும் இருவருக்குமே சமகால தண்டனை கொடுப்பதாயின் நல்லது அதைவிட்டு ஒருத்தருக்கு மட்டும் தண்டனை கொடுப்பதாயின் ஜஸ்டின் மட்டும் ஆளில்லா கோல் போஸ்ட் ரில் அம்பது கோல் போட்டு நிரப்புவார் .

 

3 hours ago, பெருமாள் said:

இப்படியான திரிகளில் கருத்தாடல் செய்வதாயின்சீண்டல் கருத்தை வைத்தவருக்கும் சீண்டியவருக்கும் இருவருக்குமே சமகால தண்டனை கொடுப்பதாயின் நல்லது அதைவிட்டு ஒருத்தருக்கு மட்டும் தண்டனை கொடுப்பதாயின் ஜஸ்டின் மட்டும் ஆளில்லா கோல் போஸ்ட் ரில் அம்பது கோல் போட்டு நிரப்புவார் .

100 க்கு 200% உண்மை!

இது போன்ற செய்திகளை வாசிக்கிற அளவுக்கு சமகால அரசியல் போக்குகளை வாசிக்கிற ஆக்கள் யாழில் குறைவு.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Justin said:

ஏற்கனவே கெட்ட பேர், இப்ப சல்யூட் வேறயா? தற்கொலை  முயற்சி தான் இது! 😎

😂 😂😂 மிகவும் தப்பான புரிதல் அண்ணா. நான் சொன்னது வேற சல்யூட் (எப்படிச் சமாளிச்சோம் பார்திங்களா). 

large.D42757B4-FAC7-48EA-82C1-97C3C7B82B98.jpeg.f13d0e95a416f9dd38695c06bf59c1ed.jpeg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, பெருமாள் said:

இப்படியான திரிகளில் கருத்தாடல் செய்வதாயின்சீண்டல் கருத்தை வைத்தவருக்கும் சீண்டியவருக்கும் இருவருக்குமே சமகால தண்டனை கொடுப்பதாயின் நல்லது அதைவிட்டு ஒருத்தருக்கு மட்டும் தண்டனை கொடுப்பதாயின் ஜஸ்டின் மட்டும் ஆளில்லா கோல் போஸ்ட் ரில் அம்பது கோல் போட்டு நிரப்புவார் .

 

நீங்களும் சமூகத்தை திருத்துறம் எண்ட பேரிலை கண்ட கண்டதுகளை எழுதிப்பாருங்கோ,வெட்டமாட்டர்,சிவப்புபுள்ளி தரமாட்டார் அந்த கடவுள்.😊

3 hours ago, goshan_che said:

😂😂😂 மிகவும் தப்பான புரிதல் அண்ணா. நான் சொன்னது வேற சல்யூட் (எப்படிச் சமாளிச்சோம் பார்திங்களா). 

large.D42757B4-FAC7-48EA-82C1-97C3C7B82B98.jpeg.f13d0e95a416f9dd38695c06bf59c1ed.jpeg

வெள்ளிக்கிழமைக்கு பொருத்தமான ஒன்றை தந்துள்ளீர்கள். நன்றி கோஷான். 😂

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல  காலம்  அவர்  புலம்  பெயர்ந்தவரில்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, விசுகு said:

நல்ல  காலம்  அவர்  புலம்  பெயர்ந்தவரில்லை

அவர்கள் இதற்கும் வேறொரு கோணத்தில் வகுப்பெடுப்பார்கள்.  கொள்கை இல்லாதவர்களால் எதையும் எந்தப்பக்கமும் சாய்ந்து செய்ய முடியும் என்பதை நீங்கள் அறியாததா என்ன?

 

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, பெருமாள் said:

இப்படியான திரிகளில் கருத்தாடல் செய்வதாயின்சீண்டல் கருத்தை வைத்தவருக்கும் சீண்டியவருக்கும் இருவருக்குமே சமகால தண்டனை கொடுப்பதாயின் நல்லது அதைவிட்டு ஒருத்தருக்கு மட்டும் தண்டனை கொடுப்பதாயின் ஜஸ்டின் மட்டும் ஆளில்லா கோல் போஸ்ட் ரில் அம்பது கோல் போட்டு நிரப்புவார் .

 

பெருமாள், சீண்டல் கருத்து என்று கருதினால் றிப்போர்ட் செய்யலாமே? உங்கள் நோக்கம் dog whistle என்று நினைக்கிறேன்! அப்படித்தானே?

21 hours ago, தமிழ் சிறி said:

முத்துதம்பி வீதி மானிப்பாய் பகுதியில் வசிக்கும் 62 வயதுடைய நாகலிங்கம் யோகராசா என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விசுகு said:

நல்ல  காலம்  அவர்  புலம்  பெயர்ந்தவரில்லை

உண்மைதான்.

2 hours ago, ampanai said:

 

இவ்விரு செய்திகளுக்கும் என்ன சம்பந்தம் அம்பனை?

7 minutes ago, goshan_che said:
2 hours ago, ampanai said:

 

இவ்விரு செய்திகளுக்கும் என்ன சம்பந்தம் அம்பனை?

இவ்வாறு மன நிலை கொண்டவர்கள் ஒரு வித மன நோயாளிகளாகவும் இருக்கலாம்.
அவ்வாறானவர்களுக்கு யாழ் வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்ட புனர்வாழ்வு பிரிவு உதவலாம். 
 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ampanai said:

இவ்வாறு மன நிலை கொண்டவர்கள் ஒரு வித மன நோயாளிகளாகவும் இருக்கலாம்.
அவ்வாறானவர்களுக்கு யாழ் வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்ட புனர்வாழ்வு பிரிவு உதவலாம். 
 

ம்ம்ம் முதலில் 50 வருடம் உள்ளே கடூழியம். அதன் பிறகு புனர்வாழ்வுக்கு அனுப்பலாம்.

இவர்களை மனநோயாளர் என வகைப்படுத்துவது, உண்மையிலேயே மனநோயில் அவதிப்படுபவர்களை அவமதிப்பது போலாகும்.

8 minutes ago, goshan_che said:

ம்ம்ம் முதலில் 50 வருடம் உள்ளே கடூழியம். அதன் பிறகு புனர்வாழ்வுக்கு அனுப்பலாம்.

இவர்களை மனநோயாளர் என வகைப்படுத்துவது, உண்மையிலேயே மனநோயில் அவதிப்படுபவர்களை அவமதிப்பது போலாகும்.

இவர் மாதிரி எண்ணம் கொண்டவர்கள் எல்லா சமூகத்திலும் உள்ளார்கள். தண்டனை தேவைதான். அனால், அது மட்டுமே தீர்வாகாது.

வளர்ந்த நாடுகளில் அது பற்றி ஒரு குடும்ப வைத்தியரிடம் கூறி இவ்வாறான மருத்துவ சேவைகளை பெறலாம்.

தாயகத்தில் அவ்வாறான வசதிகள் இல்லை. 

இருந்தாலும், இந்த புதிய வைத்திய சேவை மேலும் ஒரு சிறுவயதினரையாவது காப்பாற்றினால் நன்மைதான்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ampanai said:

இவர் மாதிரி எண்ணம் கொண்டவர்கள் எல்லா சமூகத்திலும் உள்ளார்கள். தண்டனை தேவைதான். அனால், அது மட்டுமே தீர்வாகாது.

வளர்ந்த நாடுகளில் அது பற்றி ஒரு குடும்ப வைத்தியரிடம் கூறி இவ்வாறான மருத்துவ சேவைகளை பெறலாம்.

தாயகத்தில் அவ்வாறான வசதிகள் இல்லை. 

இருந்தாலும், இந்த புதிய வைத்திய சேவை மேலும் ஒரு சிறுவயதினரையாவது காப்பாற்றினால் நன்மைதான்.

நீங்கள் குறிப்பிடும் இந்த மனநோயின் பெயர் என்ன என்று சொல்ல முடியுமா? 

6 minutes ago, Justin said:

நீங்கள் குறிப்பிடும் இந்த மனநோயின் பெயர் என்ன என்று சொல்ல முடியுமா? 

https://en.wikipedia.org/wiki/Sexual_addiction

  • கருத்துக்கள உறவுகள்

அம்பனை,

செக்சுவல் அடிக்சன் என்பது பாலியலுக்கு அடிமையாவது. சின்னப்பிள்ளைகளை பாலியல் ரீதியாக இம்சிபதல்ல.

பாலியல் ரீதியாக இம்சிப்பவருக்கு முதலில் தேவை தண்டனை.

ஆனால் சின்னப்பிள்ளைகள் மேல் எனக்கு ஆர்வம் மிகுகிறது என எதுவும் செய்ய முன்னமே சேவை வழங்குவர்களை அணுகுவோருக்கு counseling  ஹர்மோன் குறைப்பு மூலம் அவர்கள் இந்த வழியில் மேலும் கீழிறங்காமல் தடுக்கும் முறை உண்டு.

https://asapinternational.org/index.html

நீங்கள் மேலே யாழில் அறிமுகமாவதாக பதிந்திருப்பது rehabilitation, பற்றியது, prevention பற்றியது அல்ல. 

ஆனால் இப்படி ஒரு சேவை ஊரில் இருந்தால் நல்லதே.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கு நாட்டுக் கிழவனுகள்.. (பாகிஸ்தான் பங்கிளாதேச முஸ்லீம் கிழவனுகள்.. அவரவர் ஊருக்குப் போய் இளம் பெட்டைகளாய் இறக்கி வைச்சு மேற்கு நாடுகளின் சோசல் காசில் குடும்பம் நடத்துவதும் இதில் அடங்கும்..) பிலிப்பைன்ஸ்.. தாய்லாந்துன்னு போய் இளம் பெண்களை திருமணம் செய்து கூட்டி வருவது போல்.. எமது முதியோருக்கும் திருமண ஆசை வந்தால் செய்ய ஒரு வழிவகை செய்வதனூடு.. இந்த இனிப்பு விளையாட்டை சிறுவர் சிறுமியரோடு செய்வதை சமூகம் கட்டுப்படுத்த முனையலாம். 

சட்டம் ஒழுங்கு எல்லாம் அந்த நாட்டில் இப்போ கிடையாது. அதுவும் தமிழர் பிரதேசங்களில்.. என்பதற்கு இதைவிட ஒரு சாட்சியம் அவசியமில்லை. கைது செய்யப்பட்ட நபர் பொலிஸூக்கோ அல்லது லோயருக்கோ காசைக்கட்டிட்டு வெளில வந்திடுவார். 

Edited by nedukkalapoovan

18 minutes ago, goshan_che said:

நீங்கள் மேலே யாழில் அறிமுகமாவதாக பதிந்திருப்பது rehabilitation, பற்றியது, prevention பற்றியது அல்ல. 

ஆனால் இப்படி ஒரு சேவை ஊரில் இருந்தால் நல்லதே.

பாடசாலைகளில் பாலியல் பற்றிய பதின்ம வயதினருக்கான கல்வி ஒரு விழிப்புணர்வு மற்றும் தடுப்பு முயற்சியாகவும் இருக்கும் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
33 minutes ago, ampanai said:

பாடசாலைகளில் பாலியல் பற்றிய பதின்ம வயதினருக்கான கல்வி ஒரு விழிப்புணர்வு மற்றும் தடுப்பு முயற்சியாகவும் இருக்கும் 

முதல்லை அங்கத்தையான் வாத்தியளுக்கு ஒரு விழிப்புணர்வு சொல்லிக்குடுக்க வேணும்.🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.