Jump to content

மன்னார் வளைகுடாவில் 62 வகையான புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு


Recommended Posts

157015280883171.jpg

இந்தியாவின் மிக முக்கிய கடல் வாழ் பல்லுயிர் பகுதியான மன்னார் வளைகுடாவில் 62 புதியவகை உயிரினங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

இந்தியாவின் தென்கோடியில் ராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரை மட்டுமின்றி இலங்கை வரையிலும் மன்னார் வளைகுடா பரந்து விரிந்துள்ளது. சுமார் 10 ஆயிரத்து 500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள இந்தப் பகுதியில் 21 தீவுக் கூட்டங்கள் உள்ளன. கடல் வாழ் பல்லுயிர் உயிர்கோளமாக அறிவிக்கப்பட்ட இப்பகுதியில் ஏராளமான பவளப்பாறைகள் உள்ளன.

இந்தப் பவளப்பாறைகள் மீன்கள் உள்ளிட்ட ஏராளமான கடல் வாழ் உயிரினங்களுக்கு முக்கியமான வாழ்விடமாக அமைந்துள்ளன. இங்கு 4 ஆயிரத்து 223 வகையான கடல்வாழ் தாவரம் மற்றும் உயிரினங்கள், அழிந்துவரும் இனமான கடல் பசு, 117 வகை பவளப்பாறைகள், 14 வகை கடல் புற்களும் இருப்பதாகக் கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், மன்னார் வளைகுடாவில் தற்போதைய கடல்வாழ் உயிரியல் வளம் குறித்து விரிவான ஆய்வு நடத்திட மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான அமைச்சகம் திட்டமிட்டது.

இதையடுத்து கடந்த 2017 மே மாதம் முதல் 2019 மார்ச் மாதம் வரை மன்னார் வளைகுடாவில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற இந்த ஆய்வில் பல புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வில் 11 கடல் பஞ்சு இனங்கள், 14 கடின பவளப்பாறை இனங்கள், 2 கடல்பாசி இனங்கள், 2 மீன் இனங்கள், 17 மெல்லிய பவளப்பாறை இனங்கள்,16 சங்கு இனங்கள் என 62 புதிதான உயிரினங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இவை தவிர 50-க்கும் மேற்பட்ட அடையாளம் காண முடியாத புதிய உயிரினங்களும் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மன்னார் வளைகுடா என்பது பல்லாயிரக்கணக்கான மீன்களுக்கு மட்டுமின்றி மனிதர்களுக்கும் உரித்தான இடம். இயற்கைச் சமநிலைக்கும் பல்லுயிர் பெருக்கத்திற்கும் காரணமான மனங்கவரும் மன்னார் வளைகுடாவை காப்பதில் அனைவரும் உறுதியேற்க வேண்டும்.

https://www.polimernews.com/dnews/83171/மன்னார்-வளைகுடாவில்-62வகையான-புதிய-உயிரினங்கள்கண்டுபிடிப்பு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ampanai said:

மன்னார் வளைகுடா என்பது பல்லாயிரக்கணக்கான மீன்களுக்கு மட்டுமின்றி மனிதர்களுக்கும் உரித்தான இடம். இயற்கைச் சமநிலைக்கும் பல்லுயிர் பெருக்கத்திற்கும் காரணமான மனங்கவரும் மன்னார் வளைகுடாவை காப்பதில் அனைவரும் உறுதியேற்க வேண்டும்.

இந்த வளைகுடாவுக்கு அருகில் உள்ள மன்னார் எனும் ஊரில் தமிழினம் அழிந்து வருகின்றது.

Link to comment
Share on other sites

20 hours ago, குமாரசாமி said:

இந்த வளைகுடாவுக்கு அருகில் உள்ள மன்னார் எனும் ஊரில் தமிழினம் அழிந்து வருகின்றது.

ஏன்..????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Dash said:

ஏன்..????

நாங்கள் எல்லாம் வெளி நாட்டில் இருப்பதால்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

நாங்கள் எல்லாம் வெளி நாட்டில் இருப்பதால்.

ஏன் அங்கை இருக்கிறவை மனிசர் இல்லையோ? தமிழர் இல்லையோ? :grin:

Link to comment
Share on other sites

11 minutes ago, குமாரசாமி said:

ஏன் அங்கை இருக்கிறவை மனிசர் இல்லையோ? தமிழர் இல்லையோ? :grin:

வடக்கின் அடாவடி மினிஸ்டர் தனது ஆக்களை குடியேற்றியதை குறிப்பிட்டு உள்ளீர்கள் என நினைக்கிறன்.

Link to comment
Share on other sites

புறக்­க­ணிக்­கப்­பட்ட நிலையில்  மன்னார் மாவட்ட தமி­ழர்கள்

தமிழ் மக்கள் குறிப்­பாக இந்­துக்கள் வாழும் கிரா­மங்கள் சகல வழி­க­ளிலும் புறக்­க­ணிக்­கப்­பட்டு வரு­வதை ஆய்­வுகள், மதிப்­பீ­டுகள் மூலம் அறிய முடி­கின்­றது. கடந்­த­கால யுத்த சூழ்­நி­லையால் பெரிதும் பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் இம்­மா­வட்ட தமிழ் மக்கள் உள்­ளனர். வாழ்­வி­டங்­க­ளையும், சொத்து சுகங்­க­ளையும், உற­வு­க­ளையும் இவ்­வாறு பல இழப்­பு­க­ளையும் இழந்­த­வர்­க­ளாக இவர்கள் உள்­ளனர்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/5/2019 at 3:58 AM, குமாரசாமி said:

இந்த வளைகுடாவுக்கு அருகில் உள்ள மன்னார் எனும் ஊரில் தமிழினம் அழிந்து வருகின்றது.

இன்னும் கொஞ்ச காலம் பொறுங்கள் மொத்தமா சோலி முடியும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இன்னும் கொஞ்ச காலம் பொறுங்கள் மொத்தமா சோலி முடியும் 

தமிழர்களுக்கென்று தமிழ் நாடு இருக்கின்றது.அது மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பரந்து வசதியாக வாழ்கின்றார்கள். கோவில் கூட அமைத்து சுதந்திரமாக வாழ்கின்றார்கள். சிங்கள மக்களுக்கு சிறிலங்காவை விட்டால் உலகில் ஒரு இடமும் ஒரு பிடி மண் கூட இல்லை.அவர்களுக்கு என்று ஒரு நாடு வேண்டும். அது சிறிலங்கா மட்டுமே. நாங்கள் கொஞ்சமாவது மனிதாபத்துடன் சகலதையும் உற்று நோக்க வேண்டும்.நீதி நியாயமாக பார்த்தால் சிறிலங்கா சிங்கள மக்களுக்கே உரித்தானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரிசார்ட் பதியுதீன் அழிப்பதில் மிஞ்சுவதை தந்திரி மலையில் இருந்து பரவும் குடியேற்றம் அழிக்கும்.

அதிலும் மிஞ்சுவதை நாமே, ரோட்டில் கட்டும் வளைவு பற்றிய சர்சைகளால் அழித்துக் கொள்வோம்.

விக்டரும் ராதாவும் தோளோடு தோள் நின்றநாட்களை, பாதர் சிங்கராயரை, நவாலியும் சுதுமலையும் ஒன்றாகவே குறிவைக்கப்பட்டன என்பதை எல்லாம் ஒரு பத்து வருடங்களில் மறந்து, வளைவுகளுக்காய் ஆளையாள் தொண்டையில் பிடிக்கும் இனம் - இன்னும் அழியாமல் இருப்பதுதான் விந்தையிலும் விந்தை.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 10/7/2019 at 2:18 AM, குமாரசாமி said:

தமிழர்களுக்கென்று தமிழ் நாடு இருக்கின்றது.அது மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பரந்து வசதியாக வாழ்கின்றார்கள். கோவில் கூட அமைத்து சுதந்திரமாக வாழ்கின்றார்கள். சிங்கள மக்களுக்கு சிறிலங்காவை விட்டால் உலகில் ஒரு இடமும் ஒரு பிடி மண் கூட இல்லை.அவர்களுக்கு என்று ஒரு நாடு வேண்டும். அது சிறிலங்கா மட்டுமே. நாங்கள் கொஞ்சமாவது மனிதாபத்துடன் சகலதையும் உற்று நோக்க வேண்டும்.நீதி நியாயமாக பார்த்தால் சிறிலங்கா சிங்கள மக்களுக்கே உரித்தானது.

இந்திய தமிழர்களுக்கு தமிழ் நாடு இருக்கிறது இலங்கை தமிழர்களுக்கு ???

புரிந்து கொண்டாலும் லேட்டாக புரிந்து கொண்டீர்கள் போல தோன்றுகிறது 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த விடயத்தை நான் பலமுறை அவதானித்துள்ளேன்.  வயிற்றில் சமிபாட்டுப்(?) பிரச்சனை இருப்பதால் அவை அவ்வாறு செய்கின்றன என நான் நம்புகிறேன். 
    • இலங்கையின் தற்போதைய தேசிய வலைப்பந்தாட்ட வீராங்கனையும் முன்னாள் தலைவருமான செமினி அல்விஸ் ( Semini Alwis ) தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகளை பயன்படுத்தியுள்ளதாக,  இலங்கை ஊக்கமருந்து எதிர்ப்பு முகவர் நிறுவனம் (SLADA) தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 21ஆம் திகதி நடத்தப்பட்ட சோதனைகளின்போது, சிறுநீர் மாதிரிகளில் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகள் இருப்பதாக உலக ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் (WADA) அதிகாரபூர்வமாக செமினிக்கும்,  இலங்கை ஊக்கமருந்து எதிர்ப்பு முகவர் நிறுவனத்துக்கும் தெரிவித்துள்ளது.   வலைப்பந்தாட்ட போட்டி இந்நிலையில், இலங்கை ஊக்கமருந்து எதிர்ப்பு முகவர் நிறுவனம் மற்றும் உலக ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் ஆகிய அமைப்புகளால் நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையில் இலங்கை வலைப்பந்து வீரர் ஒருவர் தோல்வியடைந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   ஆனால், குறித்த வீராங்கனை தாம் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க ‘பி’ மாதிரி சோதனையைத் தொடரலாம் எனவும் அதுவரை அவர் தேசிய பயிற்சி அமர்வுகளில் பங்கேற்பதில் இருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் எனவும் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஷிரோமி பிலப்பிட்டிய தெரிவித்துள்ளார்.   செமினி 2015 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் இரண்டு உலகக் கிண்ண வலைப்பந்தாட்ட போட்டிகளிலும், சில ஆசிய செம்பியன்சிப்களிலும் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஒரு மூத்த வீராங்கனை ஆவார். 2015ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற சிட்னி உலகக் கிண்ணப்போட்டியின்போது  இலங்கை அணியின் தலைவியாகவும் அவர் செயற்பட்டுள்ளார்.  இந்நிலையில், சவூதி அரேபியாவில் எதிர்வரும் செப்டம்பர் 26ஆம் திகதி முதல் ஒக்டோபர் 06ஆம் திகதி வரை நடைபெறவுள்ள 13ஆவது ஆசிய வலைப்பந்து செம்பியன்சிப் போட்டிக்கு தயாராகும்  இலங்கை வலைப்பந்து சம்மேளனக் குழுவில் செமினி அல்விஸ் உள்ளடக்கப்பட்டுள்ளார். https://tamilwin.com/article/sri-lankan-player-failed-doping-test-1715314992?itm_source=parsely-special
    • வெற்றிலை மென்றதற்கு வழக்கா? பழுதடைந்த மரக்கறிகளை விற்றதற்கு வழக்கா ? வெற்றிலை மெல்லுவது யாழ்பாணத்தானின் சுய விருப்பம் அல்லவா ?  ( காவிக் கறையும் வாய்ப்பு ற்றையும் கொண்டு  வரும் ) தற்போது அதிகமாக பாவிக்கிறார்கள்  .😢
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.