Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எல்பிட்டிய தேர்தல் முடிவுகள் வெளியானது! மகிந்த தரப்பு அமோக வெற்றி

Featured Replies

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாரிய வெற்றியை தன்வசப்படுத்திக் கொண்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 23,372 வாக்குகளை பெற்று முதலாவது இடத்தையும், ஐக்கிய தேசியக் கட்சி 10,113 வாக்குகளை பெற்று இரண்டாவது இடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 5,273 வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ள அதேவேளை, மக்கள் விடுதலை முன்னணி 2,435 வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ளது.

இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு 17 ஆசனங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு 7 ஆசனங்களும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்கு 3 ஆசனங்களும், மக்கள் விடுதலை முன்னணிக்கு 2 ஆசனங்களும் கிடைக்கப் பெற்றுள்ளன.

2019-10-11.png

https://www.tamilwin.com/election/01/228345?ref=breaking-news

Edited by போல்

எதிர்பார்த்த தோல்விதான், ஆனாலும் கொஞ்சம் பெரிசாக தெரிகின்றது .  

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலினை அடிப்படையாகக் கொண்டு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றிபெறுவார்கள் என்பதை தீர்மானிக்க முடியாது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார்.

கோத்தபாய கோடி கோடியாக கொள்ளையடித்த காசு சொறிலங்காவின் 'குடி'மக்களை அவர்பால் திரும்ப வைக்கிறது!

14 hours ago, ampanai said:

எதிர்பார்த்த தோல்விதான், ஆனாலும் கொஞ்சம் பெரிசாக தெரிகின்றது .  

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலினை அடிப்படையாகக் கொண்டு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றிபெறுவார்கள் என்பதை தீர்மானிக்க முடியாது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார்.

இதை வைத்து ஜனாதிபதி தேர்தல் முடிவை கணிப்பிட முடியாது என்பது உண்மை.

2015 ஜனாதிபதி தேர்தலில் மகிந்த எல்பிட்டிய பகுதியில் அதிக வாக்குகளை பெற்றார், ஆனால் முழுமையான தேர்தல் முடிவில் தோல்வியை தழுவினார்.

Edited by Lara

1 hour ago, Lara said:

இதை வைத்து ஜனாதிபதி தேர்தல் முடிவை கணிப்பிட முடியாது என்பதை உண்மை.

2015 ஜனாதிபதி தேர்தலில் மகிந்த எல்பிட்டிய பகுதியில் அதிக வாக்குகளை பெற்றார், ஆனால் முழுமையான தேர்தல் முடிவில் தோல்வியை தழுவினார்.

ஓம், மகிந்த 56% மும் மைத்திரி 24℅ மும் 2015 இல் இப் பகுதியில் பெற்று இருந்தனர். இப்பவும் யூ என் பி தன் அதேயளவு வாக்கு வங்கியை தக்க வைத்து இருக்கு. 

கோட்டா வெல்வார், சஜித் தோற்பார்?

எல்பிடிய தேர்தல் முடிவுகள் கோட்டாவின் வெற்றியை உறுதிபடுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, அந்த முடிவுகள் சஜித்தின் தோல்வியையும் உறுதி செய்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அது தொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்,  எல்பிடிய பிரதேச சபைத் தேர்தல் வெற்றியுடன் 20 வேட்பாளர்கள் கோட்டாபயவின் அரசியலம் முகாமில் புதிதாக இணைந்துகொள்வர் எனவும், அதனாலேயே கோட்டாவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

http://www.tamilmirror.lk/செய்திகள்/கடட-வலவர-சஜத-தறபர/175-239908

 

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள மக்களைப் பொறுத்தவரை.. ரணில்.. சந்திரிக்கா.. மைத்திரி கூட்டாட்சி.. நல்லாட்சி கிடையாது. அது சம் சும் மாவை கும்பலுக்கு மட்டும் தான். 

சிங்கள மக்கள் மத்தியில் மகிந்த.. கோத்தா குடும்பம்... எதையாவது செய்யும் மக்களுக்கு என்ற நம்பிக்கை. அதே நம்பிக்கை தமிழ் மக்களுக்கு இவர்கள் மீது வர ஒரு தேவையும் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

எல்பிட்டிய தேர்தல் முடிவு குறித்து மஹிந்த ராஜபக்ஸ கருத்து

12:34 pm October 12, 2019 0 321 Views

 
1561787147-MAHINDA-2

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் நாம் கூறிய பிரகாரம் பொதுமக்கள் முடிவுகளைத் தந்துள்ளார்கள் எனவும், இதுதான் ஜனாதிபதித் தேர்தலிலும் கிடைக்கும் பெறுபேறு என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

குருணாகல, தம்பதெனிய பிரதேசத்தில் நேற்று (11) இரவு இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

எதிர்பார்த்த வகையில் எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் ஒவ்வொரு பகுதியையும் வெற்றி   கொள்ள முடிந்தது. எமக்காக வாக்களித்த மக்களுக்கு நன்றிகள் எனவும்  அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

http://www.dailyceylon.com/190728/

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தபாய வெற்றியைக் கண்டு நடுங்கும் ஹிருணிகா

  •  
Image

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலினை அடிப்படையாகக் கொண்டு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றிபெறுவார்கள் என்பதை தீர்மானிக்க முடியாது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார்.

எல்பிட்டி தொகுதி என்பது மிகச்சரியாகக் கூறுவதென்றால் மத்திய கொழும்பு ஆசனத்தைப் போன்றதாகும். எந்தவொரு அரசாங்கத்திலும் மத்திய கொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சி மாத்திரமே வெற்றிபெற்றிருக்கிறது.

அதேபோன்று எல்பிட்டி தொகுதியில் எதிரணியினர் தான் வெற்றி பெறுவார்கள் என்பதை உறுதியாகக் கூறமுடியும்.

நாங்கள் அந்தத் தொகுதியில் தோல்வியடைவோம் என்பதும் அறிந்த விடயமே. எனினும் சிறியளவிலான இந்தத் தேர்தலை அடிப்படையாகக்கொண்டு ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதைத் தீர்மானிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தந்தை இருக்கும் இடத்திற்கே மகனையும் அனுப்பிவிடுவோம் என்று விமல்வீரவன்ச மிகவும் தவறான கருத்தொன்றைக் கூறியிருந்தார்.

இவ்வாறு பிறரை அச்சுறுத்தி, வன்முறைகளைப் பிரயோகித்து அரசியல் செய்வதே அவர்களுடைய பழக்கமாகும்.

ஒருவேளை கோத்தபாய ராஜபக்ஷ தேர்தலில் வெற்றியடைந்தால் அவருக்கு எதிராகப் பேசுகின்றவர்களின் வாயில் துப்பாக்கிப் பிரயோகம் நடத்துவார்கள். அவ்வாறானதொரு சூழ்நிலையே தற்போது இருக்கின்றது.

இம்முறை தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றியடைந்தால் மாத்திரமே சுதந்திரக்கட்சி பாதுகாக்கப்படும்.

ஏனெனில் அவர் பழிவாங்கும் குணமற்றவர் என்பதால் மீண்டும் சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் தலைநிமிர்ந்து செயற்பட முடியும்.

ஆனால் கோத்தபாய வெற்றியடைந்தால் சுதந்திரக்கட்சி என்ற பெயரை பொதுமக்கள் மறக்கவேண்டிய நிலையே ஏற்படும் என்றும் அவர் இதன்போது கூறினார்.

https://www.ibctamil.com/srilanka/80/129351?ref=rightsidebar

  • தொடங்கியவர்

முன்பே கசிந்த தேர்தல் முடிவுகளால் கடுப்பாகிய மஹிந்த தேசப்பிரிய! அதிர்ச்சியில் மஹிந்த அணி

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் முடிவுகள் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும் முன்னதாகவே தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது.

இதனால் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் முடிவுகளின் உத்தியோகப்பூர்வ ஆவணத்தில் கையெழுத்திட மறுப்பு தெரிவித்துள்ளார்.

எல்பிட்டிய பிரதேச சபையின் தேர்தல் நிறைவடைந்த பின்னணியில், வாக்குச்சீட்டுகள் 17 மத்திய நிலையங்களில் எண்ணப்பட்டுள்ளன.

இதன்படி, இறுதியாக தயாரிக்கப்பட்ட தேர்தல் முடிவுகள் அடங்கிய ஆவணம், கையெழுத்திடுவதற்கு முன்னர் தனியார் தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பப்பட்டுள்ளது.

இவ்வாறு தேர்தல் முடிவு இறுதித் தீர்மானம் எட்டப்படுவதற்கு முன்னர் எவ்வாறு தனியார் தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டது என்பதனை முன்னிலைப்படுத்தி, தேர்தல் முடிவுகள் அடங்கிய இறுதி ஆவணத்தில் மஹிந்த தேசபிரிய கையெழுத்திடவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

https://www.ibctamil.com/srilanka/80/129358?ref=rightsidebar

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.