Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மதமாற்றத்துக்குத் தூண்டும் செயல்களை நிறுத்தவும்’

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 """தமிழ் கிறீஸ்தவர்கள் சிங்கள கிறீஸ்தவர்களுடன் இணைந்து தம்மை “கிறீஸ்தவர்கள்” என்று மட்டுமே அடையாள படுத்தி கொண்டு தம்மை என்றும் ஆதரித்து வரும் ஐக்கிய தேசிய கட்சியை இலங்கை முழுவதும் பலப்படுத்த வேண்டும். இலங்கையில் உள்ள தமிழ் தேசியவாதம், சிங்கள தேசிய வாதம், பௌத்த மத ஆதிக்கவாதம், இஸ்லாமிய பயங்கரவாதம், சைவ மத துவேசம் போன்றவற்றை இலங்கை கிறீஸ்தவர்கள் அமெரக்க ஐரோப்பிய அவுஸ்திரேலிய கிறீஸ்தவர்களின் ஆதரவுடன் எதிர்கொள்ள முடியும். தமிழ் பேசும் கிறீஸ்தவர்கள் தமிழ் தேசியவாதத்தை கைவிட வேண்டும்."""

நிச்சயமாக இல்லை.  மதம் எமது அடையாளம் அல்ல.  இனம் தான் எமது அடையாளம்.  நீங்கள் கூறுவது சட்டியிலிருந்து அடுப்பில் விழுந்த கதையாகத்தான் முடியும்.  அதுசரி மதத்திற்க்காக மேர்ட்குலகு உதவும் என்று இன்னமும் நம்புகிறீர்களா? 

  • Replies 412
  • Views 38.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மத வசனங்களை வெறும் போதனையாக பார்க்காமல் சாதனையாக அதாவது வாழ்வாக மாற்றும்போது மனிதவாழ்வு முழுமை அடைகிறது. அங்கு பிரிவினை இல்லை சுட்டிக்காட்ட எதுவும் இல்லை. எல்லா நிறைவும், ஒருவர்மேல் ஒருவர் மதிப்பும் ஏற்படும். இதையே அனைத்து மதங்களும் போதிக்கிறது. வாழ்வாக மாற மறுக்கும் போது பாதிப்பு ஏற்பட்டு, குற்றச்சாட்டுகளும், சுட்டிக்காட்டுதலும் வருகிறது.

இந்தத் திரி  வேணுமென்றே  காலத்தின் தேவையறிந்து நீட்டப் படுகிறது போல எனக்குத்  தெரிகிறது 

  • கருத்துக்கள உறவுகள்
On 10/20/2019 at 7:46 AM, சுவைப்பிரியன் said:

இங்கை கன சனம் வேலை வில்லட்டி இல்லாமல் இருக்குதுகள் போல.

வேலை வில்லட்டி இல்லைத்தான் ஆனாலும் இந்தத் திரியை வாசிச்சு 5 நாள் வேலைசெய்த களை வந்திட்டுது 😀

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, tulpen said:

ஜீட் ,

கிறிஸ்தவம் கூறிய கட்டுப்பெட்டிதனமாக வாழ்க்கைக்குள்  ஐரோப்பிய மக்களை இருக்கும் வரை  ஏறத்தாள 15 நூற்றாண்டுகளாக  அவர்களால் எந்த முன்னேறத்தையும் காண முடியவில்லை. மதம் சார்ந்த நம்பிக்கைகளை குறைத்து அறிவியல் தேடலை ஆரம்பித பிறகு தான் ஐரோப்பாவில் மறுமலர்ச்சி ஏற்பட தொடங்கியது.  அறிவியலாளர் அலபேர்ட ஐன்ஸ்ரைன் கூட பைபிள் என்பது  புனைவுகளுடான சிறுபிள்ளை தனமாக புராணம் என்றே கூறினார். இன்றைய ஐரோப்பியர்கள் மத‍ நம்பிக்கைகளை ஒரு சம்பிரதாயமாக  மட்டுமே மேற்கொண்டு வருகிறார்கள். கடவுள் கொடுப்பார் என்ற குருட்டு  நம்பிக்கையை விடுத்து தாம் உழைத்தால் தான் வாழலாம் என்ற ஜதார்த்தத்தை உணர்ந்தவர்களாக  உள்ளார்கள். உத்தியோகபூர்வமாக மத‍த்தை கைவிட இல்லையே தவிர நடைமுறையில் மத நம்பிக்கை அற்ற சமுதாயமாகவே அவர்களில் பெரும்பான்மை மக்கள் வாழ்கிறார்கள். ஐரோப்பாவில் வாழும் எங்களால் அதை உணர முடிகிறது.  உப்பு சப்பற்ற மனித முன்னேற்றத்திற்கு உதவாத மூட நம்பிக்கைகளை அவர்கள்  புறம் தள்ளி பல காலம் ஆகிவிட்டது. ஆகவே மத கடமை என்று மனித முன்னேற்றதிற்கு எது வித‍த்திலும் உதவாத மூடத்தனங்களை மக்கள் மத்தியில் விதைக்காதீர்கள். எமது நாட்டில் பரப்ப படுவது 15 ம் நூற்றாண்டுக்கு முன்னால் ஐரோப்பிய மக்களால் தற்போது கைவிடப்பட்ட மத கொள்கைகளேயே.

எமது தமிழ் மக்கள் இந்து மதம் என்ற பக்கா மூடதனத்திற்கு சிக்குண்டு ஏற்கனவே கடைப்பிடித்த சைவ மத‍த்தில் உள்ள சில நல்ல த‍த்துவங்களை கூற மறந்து இந்து மதம் விதைத்துவிட்ட விஷமான வடிகட்டிய மூடக்கொள்கைகளே த‍மது கலாச்சாரம் என்று தவறாக எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். ஏதோ மதம் தான் கலாசாரம் என்பதே சிலரின்  வாதம். மத‍ம் என்பது கலாச்சசாரத்தின் ஒரு சிறு பகுதியே தவிர அது தான் கலாச்சாரம் என்று இல்லை. அண்மையில் கீழடியில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் அங்கு வாழ்ந்த மக்களை எவ்வளவு எழுத்தறிவுடன் எவ்வாறு ஒரு நகர நாகரீகத்தை கட்டி எழுப்பியிருந்தார்கள் என்பதன் நிருபணம் தான் தமிழருக்கு பெருமை சேர்த்த‍தே தவிர அவர்களின் மதம் அல்ல. கண்டு பிடிக்கபட்ட பல ஆயிரக்கணக்கான பொருட்களில் மத‍ம் தொடர்பாக எந்த தடயமும் கண்டு பிடிக்கபடவில்லை என்பதில் இருந்து கல்வி அறிவுடன் திகழ்ந்த அந்த மக்கள் மதம் தொடர்பாக பெரிய ஈடுபாட்டுடன் இருக்கவில்லை என்பது நிரூபிக்கபட்டுள்ளது. எமது வரலாற்றில் எம்மோடு ஒட்டிவிட்ட ஒட்டுண்ணிகளான மதங்களை புறக்கணித்து மனிதர்களாக  இணைந்து வாழும் போது எம்மால் பல சாதனைகளை கட்டி எழுப்ப முடியும்.  (இந்த நிலையில் கிறிஸ்தவம், இஸ்லாம் தான் ஒட்டுணிகள் இந்து மதம் ஏதோ தமிழரின் பூர்வீக மதம் என்று புலுடா வேறு. எல்லா மதங்களும் மனிதர்களன் பலவீனத்தில் வந்த ஒட்டுண்டிகள் தான்)

துல்ப்பன் கீழடி ஆய்வு மூன்றில் ஒரு பகுதி ஆய்வு கூடச் செய்யப்படவில்லை.நாகரீகத்தின் தொட்டில் என்று கூறப்பட்ட மெசொப்பொத்தேமியாவிலும் சிந்துவெளியில் கூட பல பெண் தெய்வங்களின் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆரம்ப காலங்களில் இயற்கையை மக்கள் வழிபட்டாலும் மக்களை நெறிப்படுத்தவே மதங்கள் உருவாக்கப்படடன. அதனால் தமிழர்களிடம் மத வழிபாடு இருக்கவில்லை என்று கூறுவது தவறு .

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, satan said:

மத வசனங்களை வெறும் போதனையாக பார்க்காமல் சாதனையாக அதாவது வாழ்வாக மாற்றும்போது மனிதவாழ்வு முழுமை அடைகிறது. அங்கு பிரிவினை இல்லை சுட்டிக்காட்ட எதுவும் இல்லை. எல்லா நிறைவும், ஒருவர்மேல் ஒருவர் மதிப்பும் ஏற்படும். இதையே அனைத்து மதங்களும் போதிக்கிறது. வாழ்வாக மாற மறுக்கும் போது பாதிப்பு ஏற்பட்டு, குற்றச்சாட்டுகளும், சுட்டிக்காட்டுதலும் வருகிறது.

இந்தத் திரி  வேணுமென்றே  காலத்தின் தேவையறிந்து நீட்டப் படுகிறது போல எனக்குத்  தெரிகிறது 

ஒருவரை அடையாளம் காணவேண்டுமென்றால் வாய்ப்புக்கள் வழங்கப்படவேண்டும் என்பது எழுதப்படாத விதி 

  • கருத்துக்கள உறவுகள்
On 10/25/2019 at 1:10 AM, மல்லிகை வாசம் said:

மாங்குயில்,

சோ போன்றவர்களை நான் ஆன்மீகத் தலைவர்களாகக் கருதுவதில்லை. அவர் ஒரு அரசியல் பத்திரிகையாளர். ஒரு நகைச்சுவை நடிகராக அவரை எனக்கேப் பிடிக்கும்.

தவிர இந்து மதத்தின் ஆரம்பம் எப்படியாவது இருக்கட்டும். இன்று எனது பெற்றோரும், சூழலும் தந்த வடிவத்தில் இந்து மதத்தைப் பின்பற்றி வருகிறேன். அந்த அளவில் நான் திருப்தியாக இருக்கிறேன். வயது போகப்போக இந்த மதத்தில் கற்றுக்கொள்ள வேண்டிய நிறைய விஷயங்கள் இருக்கின்றன, அவை எனது ஆன்மீக விருத்திக்கு வழித்துணையாக இருக்கும் எனவும் புரிகிறது. 😊

தவிரவும், இன்றுள்ள மதங்களில் தொன்மையான மதம் இந்துமதம் என்பதை மறுக்க முடியாது. 😊

இந்து சமயம் பிற்காலத்தில் எம்மிடம் திணிக்கப்பட்டதேயன்றி சைவமும் தமிழும் தான் இரண்டறக் கலந்து வளர்ந்தது என்றே அறிஞர்கள் கூறுகின்றனர்.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

துல்ப்பன் கீழடி ஆய்வு மூன்றில் ஒரு பகுதி ஆய்வு கூடச் செய்யப்படவில்லை.நாகரீகத்தின் தொட்டில் என்று கூறப்பட்ட மெசொப்பொத்தேமியாவிலும் சிந்துவெளியில் கூட பல பெண் தெய்வங்களின் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆரம்ப காலங்களில் இயற்கையை மக்கள் வழிபட்டாலும் மக்களை நெறிப்படுத்தவே மாதங்கள் உருவாக்கப்படடன. அதனால் தமிழர்களிடம் மத வழிபாடு இருக்கவில்லை என்று கூறுவது தவறு .

அதேபோல் மாதவழிபாடு இருந்தது என்று பொருள் கொள்ளவும் முடியாது. ஏனெனில் ஆய்வு இன்னும் முழுமை பெறவில்லை 

2 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இந்து சமயம் பிற்காலத்தில் எம்மிடம் திணிக்கப்பட்டதேயன்றி சைவமும் தமிழும் தான் இரண்டராக் கலந்து வளர்ந்தது என்றே அறிஞர்கள் கூறுகின்றனர்.

அதே அதே 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Maharajah said:

அதேபோல் மாதவழிபாடு இருந்தது என்று பொருள் கொள்ளவும் முடியாது. ஏனெனில் ஆய்வு இன்னும் முழுமை பெறவில்லை 

சுமேரியரின் தொடர்ச்சி சிந்துவெளியிலும் அதைத்தொடர்ந்து கீழடியிலும் காணப்படுவதால் அங்கும் நிட்சயமாய் வழிபாடு இருந்துதான் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சுமேரியரின் தொடர்ச்சி சிந்துவெளியிலும் அதைத்தொடர்ந்து கீழடியிலும் காணப்படுவதால் அங்கும் நிட்சயமாய் வழிபாடு இருந்துதான் இருக்கும்.

உங்கள் ஊகம் மெய்யாகக்கடவது 

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சுமேரியரின் தொடர்ச்சி சிந்துவெளியிலும் அதைத்தொடர்ந்து கீழடியிலும் காணப்படுவதால் அங்கும் நிட்சயமாய் வழிபாடு இருந்துதான் இருக்கும்.

சுமே, 

விஞ்ஞான ரீதியிலான முடிவுகள் ஊகங்களின் அடிப்படையில் வருவதில்லை என்பது உங்களுக்கு நான் சொல்லி  தெரியவேண்டும் என்பதில்லையே. 

44 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

துல்ப்பன் கீழடி ஆய்வு மூன்றில் ஒரு பகுதி ஆய்வு கூடச் செய்யப்படவில்லை.நாகரீகத்தின் தொட்டில் என்று கூறப்பட்ட மெசொப்பொத்தேமியாவிலும் சிந்துவெளியில் கூட பல பெண் தெய்வங்களின் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆரம்ப காலங்களில் இயற்கையை மக்கள் வழிபட்டாலும் மக்களை நெறிப்படுத்தவே மதங்கள் உருவாக்கப்படடன. அதனால் தமிழர்களிடம் மத வழிபாடு இருக்கவில்லை என்று கூறுவது தவறு .

இதில் நான் முக்கியமாக சொல்ல வந்த விடயம் மத வழிபாட்டுக்கு அங்கு முக்கியத்துவம்  இருக்கவில்லை என்பதையே. அத்துடன் உலகத்தின் முன்னால் தமிழர் பெருமைப்படக்கூடிய விடயம் அங்கு வாழ்ந்த எமது முன்னோர் மக்களின் அறிவுபூர்வமான வாழ்ககை முறையையேயன்றி மதவழிபாடு அல்ல. மதவழிபாட்டை எந்த முட்டாளும் செய்யலாம். நாகரீகமான வாழ்ககையை முன்னேற்றமடைந்த மக்கள. கூட்டம் மட்டுமே  செய்யலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

 தமிழ் இன அழிப்பை நடத்துவதற்கு சில காரணிகளை நுட்பமாய் தெரிந்தெடுத்து, அதிலே ஆழமாய்  மக்களை மூழ்கடித்து விட்டு தன் காரியத்தை சாதுரியமாய், கன கச்சிதமாய் முடிப்பதில் சிறந்தவன் சிங்களவன்  என்பதை கடந்தகாலத்தில் அனுபவத்தில் கண்டவர்கள் நாங்கள். ஆனால் பாடம் படிக்கவில்லை. பைபிளை கற்றுத் தேர்ந்தவர்களும் மதம் மாறுகிறார்கள் அல்லது  எதுவும் வேண்டாமென்று இருக்கிறார்கள் என்று ஒரு கருத்து இங்கு வைக்கப் பட்டது. இதிலிருந்து விளங்கிக்கொள்ள வேண்டியது இந்துக்கள் மட்டும் மதம் மாறவில்லை, விரும்பியவர் விரும்பியதை ஏற்றுக்கொள்கிறார்கள். அவரவர் விருப்பத்தை மதித்து  இந்தத் திரியை மூடி இருக்கலாம். வறுமை, பண ஆசை உள்ளவர்கள் இருக்கிறார்கள் போதனையை விளங்குபவர்கள் வெளியேறுகிறார்கள் என்பது இங்கு புலப்படுத்தியிருக்கிறார்கள் தங்கள் பதிவின் மூலம். முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் சிண்டு  முடிஞ்சாச்சு.  இப்போ சைவருக்கும் கிறிஸ்தவருக்கும் சிண்டு முடிஞ்சு நீராவியடியில் பல விகாரைகள் எழும்புமட்டும் பிடியுங்கோ சண்டையை. முடிய கூப்பாடு போடுங்கோ. சைவ ஆலயத்திற்கு பக்கத்தில் பிக்குவின் உடலை எரித்தது பிழை என்று சுமந்திரன் நீதிமன்றம் போனதற்கு ஞான சாரதேரர் கொடுத்த விளக்கத்தை பார்த்தால் அவர்களது தந்திரம், நோக்கம் புரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் தமிழருக்குள் இருக்கும் மதங்களை அவர்களுக்குள் அவர்களையே  தூண்டி விட்டு அழிக்கும் போது அவன் குற்றவாளி ஆகமாட்டான். அதன்பின் சைவத்தை அழித்து புத்தத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் போது எழும் எதிர்ப்பை சமாளிப்பது அவனுக்கு சுலபமாகி விடும். எதிர்ப்பும் அதிகமாயிராது. பின் இனமும் தானாகவே அழிய இப்போதே நமது கோடரிக்காம்புகள் இருக்கு அவன் பக்கம். அவன் பெற்ற அனுபவம் கைகொடுக்குது.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Maharajah said:

 அதுசரி மதத்திற்க்காக மேர்ட்குலகு உதவும் என்று இன்னமும் நம்புகிறீர்களா? 

கிழக்கு தீமோர் கத்தோலிக்கரை இந்தோனேசிய முஸ்லிம் அரசு அழித்த போது அவுஸ்திரேலிய எண்ணை நிறுவனங்களுடன் கத்தோலிக்க போராளிகளை ஒப்பந்தம் செய்ய உதவி அவுஸ்திரேலிய மற்றும் ஏனைய கிறீஸ்தவ அரசுகளின் உதவியுடன் விடுதலை பெற்று கொடுத்தது உலகளாவிய ரீதியிலான கிறீஸ்தவ அமைப்புகளும் மக்களுமே.

இதே தான் தென் சூடானிலும் நடந்தது. தென் சூடானில் போர்க்காலத்தில் கத்தோலிக்க மத ஏற்பாட்டில் பெருமளவில் பணம் ஒதுக்கப்பட்டு விடுதலைக்காக செய்யப்பட்ட முயற்சிகளில் ஈடுபட்டவர்களில் எனது பால்ய நண்பரான பாதிரியும் ஒருவர். அவருடன் இது பற்றி நிறைய பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Jude said:

கிழக்கு தீமோர் கத்தோலிக்கரை இந்தோனேசிய முஸ்லிம் அரசு அழித்த போது அவுஸ்திரேலிய எண்ணை நிறுவனங்களுடன் கத்தோலிக்க போராளிகளை ஒப்பந்தம் செய்ய உதவி அவுஸ்திரேலிய மற்றும் ஏனைய கிறீஸ்தவ அரசுகளின் உதவியுடன் விடுதலை பெற்று கொடுத்தது உலகளாவிய ரீதியிலான கிறீஸ்தவ அமைப்புகளும் மக்களுமே.

இதே தான் தென் சூடானிலும் நடந்தது. தென் சூடானில் போர்க்காலத்தில் கத்தோலிக்க மத ஏற்பாட்டில் பெருமளவில் பணம் ஒதுக்கப்பட்டு விடுதலைக்காக செய்யப்பட்ட முயற்சிகளில் ஈடுபட்டவர்களில் எனது பால்ய நண்பரான பாதிரியும் ஒருவர். அவருடன் இது பற்றி நிறைய பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது.

உங்களின் கருத்துப்படி,  வடகிழக்கு எங்கும் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுவோர் பெரும்பான்மையாக இருந்திருந்தால் எமது போராட்டம் வெற்றிபெற்றுக்கும். மருவளமாக கூறினால் தமிழர் பெரும்பான்மை சைவசமயத்தவராக இருந்தபடியால் எமது ஆயுதப்போராட்டம் வெற்றியடையவில்லை என்கிறீர்கள். (மேற்குலகு ஆதரிக்கவில்லை ) சரியா ?? 

Just now, Maharajah said:

உங்களின் கருத்துப்படி,  வடகிழக்கு எங்கும் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுவோர் பெரும்பான்மையாக இருந்திருந்தால் எமது போராட்டம் வெற்றிபெற்றுக்கும். மருவளமாக கூறினால் தமிழர் பெரும்பான்மை சைவசமயத்தவராக இருந்தபடியால் எமது ஆயுதப்போராட்டம் வெற்றியடையவில்லை என்கிறீர்கள். (மேற்குலகு ஆதரிக்கவில்லை ) சரியா ?? 

நம்பும்படியாக இல்லையே  !

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Maharajah said:

உங்களின் கருத்துப்படி,  வடகிழக்கு எங்கும் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுவோர் பெரும்பான்மையாக இருந்திருந்தால் எமது போராட்டம் வெற்றிபெற்றுக்கும். மருவளமாக கூறினால் தமிழர் பெரும்பான்மை சைவசமயத்தவராக இருந்தபடியால் எமது ஆயுதப்போராட்டம் வெற்றியடையவில்லை என்கிறீர்கள். (மேற்குலகு ஆதரிக்கவில்லை ) சரியா ?? 

நம்பும்படியாக இல்லையே  !

நீங்கள் சொல்லும் கருத்து முற்றிலும் சரியான கருத்தல்ல. நான் அப்படி பொருள்பட எழுதவில்லை. கிறீஸ்தவ மக்கள், அவர்கள் கிறீஸ்தவர்கள் என்ற காரணத்துக்காக நசுக்க படும்போது, ஏனைய நாடுகளில் உள்ள கிறீஸ்தவ அமைப்புகளும், மக்களும், நசுக்கப்படும் அவர்களுக்கு ஆதரவளித்திருப்பதை காட்டவே, உங்கள். கேள்விக்கு பதிலாக மேற்படி உதாரணங்களை காட்டினேன்.  இவை உலகறிந்த அண்மைக்கால நிகழ்வுகளாதலால் நீங்களாகவே இணையத்தில் மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள முடியும். 

கிறீஸ்தவர்களுக்கு எதிராக பௌத்த பயங்கரவாதம் அவ்வப்போது தலைதூக்கினாலும் முளையிலேயே கிள்ளப்படுவதை நீங்கள் அவதானித்து பாருங்கள். கிறீஸ்தவ மதமாற்ற பிரச்சாரம் சிங்கள பகுகிகளில் பெருமளவில் இடம்பெறுகின்றன. பௌத்தர்கள் அதை தடுப்பது கடினம். இவற்றிற்கு காரணங்கள் எவை என்று ஆய்ந்து பாருங்கள், கிறீஸ்தவ உலகின் பலம் சத்தமின்றி செயற்படுவதை காண்பீர்கள். இதனை சைவர்களின் பலத்தோடு ஒப்பிட்டு பார்த்தீர்களானால், உங்கள் கேள்விக்கு பதில் கிடைக்கலாம். மடலின் அல்பிறைற் அமெரிக்க அரசின் வெளிநாட்டு விவகாரங்களுக்கு பொறுப்பாக இருந்தபோது விடுதலை புலிகளை “இந்து பயங்கரவாதிகள்” என்று குறிப்பிட்டு இருந்தார். 

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Jude said:

நீங்கள் சொல்லும் கருத்து முற்றிலும் சரியான கருத்தல்ல. நான் அப்படி பொருள்பட எழுதவில்லை. கிறீஸ்தவ மக்கள், அவர்கள் கிறீஸ்தவர்கள் என்ற காரணத்துக்காக நசுக்க படும்போது, ஏனைய நாடுகளில் உள்ள கிறீஸ்தவ அமைப்புகளும், மக்களும், நசுக்கப்படும் அவர்களுக்கு ஆதரவளித்திருப்பதை காட்டவே, உங்கள். கேள்விக்கு பதிலாக மேற்படி உதாரணங்களை காட்டினேன்.  இவை உலகறிந்த அண்மைக்கால நிகழ்வுகளாதலால் நீங்களாகவே இணையத்தில் மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள முடியும். 

கிறீஸ்தவர்களுக்கு எதிராக பௌத்த பயங்கரவாதம் அவ்வப்போது தலைதூக்கினாலும் முளையிலேயே கிள்ளப்படுவதை நீங்கள் அவதானித்து பாருங்கள். கிறீஸ்தவ மதமாற்ற பிரச்சாரம் சிங்கள பகுகிகளில் பெருமளவில் இடம்பெறுகின்றன. பௌத்தர்கள் அதை தடுப்பது கடினம். இவற்றிற்கு காரணங்கள் எவை என்று ஆய்ந்து பாருங்கள், கிறீஸ்தவ உலகின் பலம் சத்தமின்றி செயற்படுவதை காண்பீர்கள். இதனை சைவர்களின் பலத்தோடு ஒப்பிட்டு பார்த்தீர்களானால், உங்கள் கேள்விக்கு பதில் கிடைக்கலாம். மடலின் அல்பிறைற் அமெரிக்க அரசின் வெளிநாட்டு விவகாரங்களுக்கு பொறுப்பாக இருந்தபோது விடுதலை புலிகளை “இந்து பயங்கரவாதிகள்” என்று குறிப்பிட்டு இருந்தார். 

நன்றி Jude, 

நீங்கள் கூறியதில் உண்மை இல்லாமல் இல்லை ஆனால் மதம் என்பது மேற்கின் வெளியுறவுக்கொள்கையில் எந்த அளவு செல்வாக்கு செலுத்துகிறதென்பது முக்கியமில்லையா? 

ஒரு மில்லியன் இலங்கைத் தமிழர் மேர்ட்குலகில் இருந்தும் எமது ஆயுதப்போராட்டம் வெற்றிபெறவில்லை.  தனியே மதத்தை மட்டும் முன்னிலைப்படுத்த  வேண்டாம்.

மதம் என்பது அவர்களுக்கு நலிந்து களைத்துப்போய் இருக்கும் மக்களை தங்கள்பக்கம் (நீண்டகாலநோக்கில் பயன்படுத்துவதற்கு ) இழுப்பதற்க்கான வழிமுறையே மதமாற்றம் என்பது என்கருத்து. ஆனால் மதமாற்ற முயற்சிக்கிக்கெதிராக வாய்கிழிய கத்துவோரில் பேடும்பாலானோர் துவண்டுபோய் ஆதரவுக்காய் ஏங்குவோருக்கு,  எங்காவது ஓரிரு ஆதரவு வார்ததைகள் கூறமாட்டாட்களா என பரிதவிப்போருக்கு ஒரு ........... .... ங்குவதில்லை. 

இங்கே ஞாபகத்தில் வருவது பிரித்தானிய பிரபுக்கள் சபையில் (பிரித்தானியர் இந்தியாவை ஆட்ச்சிசெய்த காலத்தில் ) கூறப்பட்ட ஒரு பிரபலமான வாக்கியம். 

""இந்தியாவை ஆட்சி செய்வதட்டக்கு (ஆங்கிலேயர் போல் )நடை, உடை,  பாவனை யாவற்றிலும்  தம்மைப்போல் போல் பயிற்றுவிக்கப்பட்ட சுதேசிகள்தான்சிறந்தவர்கள். அவர்கள் எப்போதும் எமக்கு விசுவாசமாக இருப்பர். (சாரத்தை கூறியுள்ளேன்,  சரியான வசனநடை ஞாபகம் இல்லை )

மொத்தத்தில் தமிழரின் நிலை முள்ளில் விழுந்த சேலைதான். 

(கடினமான வார்த்தை பிரயோகத்திட்கு மன்னிக்கவும். இயலாமையால் வந்தது )

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Maharajah said:

நன்றி Jude, 

நீங்கள் கூறியதில் உண்மை இல்லாமல் இல்லை ஆனால் மதம் என்பது மேற்கின் வெளியுறவுக்கொள்கையில் எந்த அளவு செல்வாக்கு செலுத்துகிறதென்பது முக்கியமில்லையா? 

ஒரு மில்லியன் இலங்கைத் தமிழர் மேர்ட்குலகில் இருந்தும் எமது ஆயுதப்போராட்டம் வெற்றிபெறவில்லை.  தனியே மதத்தை மட்டும் முன்னிலைப்படுத்த  வேண்டாம்.

தனியே மதமோ, மேற்குலகில் தனியே ஒரு இனத்தின் தொகையோ அந்தந்த நாடுகளின் வெளியுறவுக்கொள்கையில் போதிய தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை என்ற கருத்தே எனது கருத்தும்.

கிறீஸ்தவர்கள் தமது மதத்தவருக்கு உதவுவதும் அந்த உதவிகளை பெற்றுக்கொள்ள மற்றைய மதத்தவர்கள் கிறீஸ்தவர்களாக மதம் மாறுவதும் இந்த திரியின் விவாதப்பொருள். ஆகவே, உலகெங்கும் உள்ள கிறீஸ்தவர்கள் தமது மதத்தவருக்கு உதவுவது எல்லோரும் அறிந்த உண்மை. அந்த உதவிகளுள் இராஜதந்திர, சாணக்கிய, மற்றும் இராணுவ உதவிகளும் அடங்கி இருக்கின்றன.இதைத்தான், தென் சூடானிலும், கிழக்கு தீமோரிலும் காணக்கூடியதாக இருந்தது.

ஒரு மில்லியன் இலங்கைத் தமிழர் மேற்குலகில் இருந்தாலும் அவர்கள் மேற்குலகின் கிறீஸ்தவ மதத்தை சாராததால் போதிய ஆதரவை பெற முடியவில்லை.

9 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இந்து சமயம் பிற்காலத்தில் எம்மிடம் திணிக்கப்பட்டதேயன்றி சைவமும் தமிழும் தான் இரண்டறக் கலந்து வளர்ந்தது என்றே அறிஞர்கள் கூறுகின்றனர்.

இந்தக் கொள்கை பற்றிய வாதம் பல தசாப்தங்களாகத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது சுமே அக்கா. 

கிறிஸ்துவுக்கு முன் பல நூற்றாண்டு / சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்ததாகக் கூறப்படும் இந்த ஆரியத் திணிப்பு பற்றிய தெளிவான ஆதாரங்கள் இல்லை. இதற்கு எதிராகவும், ஆதரவாகவும் பல்வேறு விவாதங்கள் தொடர்ந்தாலும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த சம்பவங்களின் உண்மைத்தன்மை பற்றி அறுதியிட்டுக் கூறமுடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. இதனால் தான் இது தொடர்பான ஆராய்ச்சிகளில் நான் அக்கறை காட்டுவதில்லை.

தவிரவும், இன்று நாம் பின்பற்றும் வழிபாட்டு முறைகள், கொண்டாடும் மதப் பண்டிகைகள், இந்து மத நூல்கள் சொல்லும் தத்துவங்கள் சுயநலமும், சூழ்ச்சியும், பரபரப்பும் நிறைந்த இன்றைய சூழலில் ஆன்மீக வழியில் நம்மை ஈடுபடுத்தி நம் சமநிலை மாறாமல் பேண உதவுகின்றன. இதுவே என்போன்றோர் இந்து மதத்தின் மேன்மை பற்றி இடித்துரைக்கக் காரணம். 

அறிவியல் ஆராய்ச்சி என்று எல்லாவற்றுக்கும் ஆதாரம் தேடப் போய், நாம் காலம் காலமாக முன்னோரின் அனுபவங்கள் மூலம் பெற்ற நல்ல விடயங்களை நாமும் அனுபவிக்காமல் 'முற்போக்குத்தனம்' என்ற பெயரில் புறந்தள்ளிச் செல்கின்றோம் என்பதே எனது வருத்தம். 

 

9 hours ago, tulpen said:

இதில் நான் முக்கியமாக சொல்ல வந்த விடயம் மத வழிபாட்டுக்கு அங்கு முக்கியத்துவம்  இருக்கவில்லை என்பதையே. அத்துடன் உலகத்தின் முன்னால் தமிழர் பெருமைப்படக்கூடிய விடயம் அங்கு வாழ்ந்த எமது முன்னோர் மக்களின் அறிவுபூர்வமான வாழ்ககை முறையையேயன்றி மதவழிபாடு அல்ல. 

உங்கள் நாத்திக வாதத்தை முன்னெடுக்க, சிறு அளவிலேயே ஆரம்பிக்கப்பட்ட கீழடி ஆய்வுகளின் தற்போதய முடிவுகளை மட்டும் வைத்து கீழடி மக்கள் மதவழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று கூறுவது அறிவுபூர்வமான கருத்தாகத் தெரியவில்லை. 

மதவழிபாடு இல்லாதபடியால் தான் அறிவுபூர்வமாக இருந்தார்களா? அடிச்சுவிடுறதுக்கு ஒரு அளவே இல்லையா?

உண்மையான அறிவியல் ஒரு ஆராய்ச்சியின் முழுமை பற்றிக் கேள்வி கேட்கும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
23 hours ago, colomban said:

யூத முறைப்படி அவருக்கு விருத்தசேதனம் செய்யப்பட்டது என்று தெள்ளத் தெளிவாக‌ உள்ளது


 

விருத்தசேதனம் என்பது, யூதர்கள் மாத்திரம் பின்பற்றிய நடைமுறை அல்ல.

யூத இனம் தோன்றுவதற்கு முன்பிருந்தே, மனித குலம் பின்பற்றி செய்து வந்த ஒரு நடைமுறை.

இயேசு யூதர் அல்ல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, Jude said:

 

ஒரு மில்லியன் இலங்கைத் தமிழர் மேற்குலகில் இருந்தாலும் அவர்கள் மேற்குலகின் கிறீஸ்தவ மதத்தை சாராததால் போதிய ஆதரவை பெற முடியவில்லை.

 


மேற்குலகில் இருக்கும் எல்லா இலங்கைத்  தமிழரும் கிறிஸ்தவர்களாக இருந்தால்,  தமிழ் ஈழம் கிடைத்திருக்கும் என்று சொல்கிறீர்கள், தீமோர்,  சூடான் போல.

வட, கிழக்கில் வாழும் மக்கள் அனைவரும் கிறிஸ்தவர்களாக இருந்திருந்தால்,  தமிழ் ஈழம் என்ற நாமத்தைக் கூட,  இந்தியா விட்டு வைக்காது.

அங்கு இந்துக்கள் பெரும்பான்மை என்றபடியால்,  இந்திய ஆதரவு சில விட்டுக் கொடுப்புகளுடன் தொடர்ந்தது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, Jude said:

 

கிறீஸ்தவர்கள் தமது மதத்தவருக்கு உதவுவதும் அந்த உதவிகளை பெற்றுக்கொள்ள மற்றைய மதத்தவர்கள் கிறீஸ்தவர்களாக மதம் மாறுவதும் இந்த திரியின் விவாதப்பொருள். ஆகவே, உலகெங்கும் உள்ள கிறீஸ்தவர்கள் தமது மதத்தவருக்கு உதவுவது எல்லோரும் அறிந்த உண்மை. 


 

 

எந்த மதத்தினரும் கிறிஸ்தவர்களாக மாறும் நோக்கில், அவர்களிடம் இருந்து உதவிகளை பெறுவது இல்லை.

இயேசுவை ஜெபித்தால் மாத்திரம்தான் உதவி, என்ற கோட்பாட்டோடு அவர்கள் வருகிறார்கள்.

உதவி பெறுபவர்களுக்கும் வேறு வழியில்லை.  உதவியைப் பெற்று ஜெபிக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

பைபிளும் வேண்டாம், இயேசுவும் வேண்டாம், எமக்கு மனித நேயத்தோடு உதவுங்கள் என்று சொல்லிப் பாருங்கள்.

ஒரு கிறிஸ்தவனும் உங்களை எட்டியும் பார்க்க மாட்டான்.


 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, மல்லிகை வாசம் said:

 

அறிவியல் ஆராய்ச்சி என்று எல்லாவற்றுக்கும் ஆதாரம் தேடப் போய், நாம் காலம் காலமாக முன்னோரின் அனுபவங்கள் மூலம் பெற்ற நல்ல விடயங்களை நாமும் அனுபவிக்காமல் 'முற்போக்குத்தனம்' என்ற பெயரில் புறந்தள்ளிச் செல்கின்றோம் என்பதே எனது வருத்தம். 

 


 


 


காலம் காலமாக முன்னோரின் அனுபவங்கள் மூலம் பெற்ற விடயங்கள்  அறிவியலோடு ஒத்துப்போனால், அவைகளை யாரும் எதிர்ப்பதில்லை.

அறிவியலுக்கு பொருந்தாத விடயங்களை, சிலர் இங்கு வினாவாக எழுப்பும்போது, அதற்கு விடையளிக்காமல் தட்டிக் கழிப்பதனால், ஏற்படும் விபரீதங்களை இங்கு நாம் பார்க்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Jude said:

தனியே மதமோ, மேற்குலகில் தனியே ஒரு இனத்தின் தொகையோ அந்தந்த நாடுகளின் வெளியுறவுக்கொள்கையில் போதிய தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை என்ற கருத்தே எனது கருத்தும்.

கிறீஸ்தவர்கள் தமது மதத்தவருக்கு உதவுவதும் அந்த உதவிகளை பெற்றுக்கொள்ள மற்றைய மதத்தவர்கள் கிறீஸ்தவர்களாக மதம் மாறுவதும் இந்த திரியின் விவாதப்பொருள். ஆகவே, உலகெங்கும் உள்ள கிறீஸ்தவர்கள் தமது மதத்தவருக்கு உதவுவது எல்லோரும் அறிந்த உண்மை. அந்த உதவிகளுள் இராஜதந்திர, சாணக்கிய, மற்றும் இராணுவ உதவிகளும் அடங்கி இருக்கின்றன.இதைத்தான், தென் சூடானிலும், கிழக்கு தீமோரிலும் காணக்கூடியதாக இருந்தது.

ஒரு மில்லியன் இலங்கைத் தமிழர் மேற்குலகில் இருந்தாலும் அவர்கள் மேற்குலகின் கிறீஸ்தவ மதத்தை சாராததால் போதிய ஆதரவை பெற முடியவில்லை.

மதம் என்பது ஒரு இலகுவான கருவி மாத்திரமே.  தங்களுடைய திறந்த போட்டுளதார கொள்கைக்கேற்ற்றபடி அவர்கள் சகல வளங்களையும் தமது தேவைக்கேற்ப பாவிப்பார்கள்.  இந்தியர்களாகட்டும் ஐரோப்பியர்களாகட்டும்,  வட அமெரிக்கர்களாகட்டும்  தமிழரின் போராட்டம் என்பது இலங்கை அரசினை கட்டுப்படுத்துவதட்கான ஒரு ஊடகம் மாத்திரமே.  நீங்கள் கூறுவதுபோல மதம் ஒட்டு பொருட்டே அல்ல.  தமிழரின் ஆயூதப்போராட்டத்திர்க்கு  சகல விததிலும்  மிகப்பெரும் பங்களிப்பை தமிழ் கத்தோலிக்க,  கிறிஸ்தவ  மக்களும் அவர்களது தலைமையும் வழங்கியது.  ஆனால் என்ன அவர்களது பங்களிப்பு ஒருவராலும் அங்கீகரிக்கப்படவில்லை,  புலிகளைத்தவிர. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.