Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பந்தருக்குப் பின்பான தலைமை யாருக்கு?

Featured Replies


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாகப் பதிவு செய்து அதனை வழிப்படுத்தியிருந்தால் இன்று தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டு ஒற்றுமையாகச் செயற்பட்டிருக்கும்.ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்வதை இலங்கைத் தமிழரசுக் கட்சி இம்மியும் விரும்பவில்லை.

மாறாக, தமிழரசுக் கட்சியை முதன்மைப் படுத்தவும் பலப்படுத்தவும் அந்தக் கட்சியின் தலைவர்கள் முற்பட்டதால் கூட்டமைப்பு உடைந்து போனது.
இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது பெயரளவில் மட்டுமே இயங்குகிறது.

மற்றும்படி இலங்கைத் தமிழரசுக் கட்சியே கூட்டமைப்பு. கூட்டமைப்பே இலங்கைத் தமிழரசுக் கட்சி என்பதாக ஆகிவிட்டது. இதை நாம் கூறுவதற்காக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதி ராசா அவர்கள் கூட்டமைப்பை கட்டி ஆள்கிறார் என்று யாரும் நினைத்துவிடாதீர்கள்.

இதுஒருபுறமிருக்க, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் அவர்கள் அதட்டியும் சுட்டு விரலால் உறுக்கியும் தனது தலைமைப் பதவியைக் கொண்டு சென்றார்.
கர்மவீரர் காமராஜர்; ஆகட்டும் பார்க்கலாம் என்று கூறுவதைப் போல, சம்பந்தர் அவர்கள் யோசிப்போம். அதுபற்றி ஆராய்வோம். பொறுத்திருக்க வேண்டும் என்ற சொற்பதங்களைப் பயன்படுத்திப் பயன்படுத்தி காலத்தைக் கடத்தி விட்டார். காலம் கடத்துவதை அவர் அறியாவிட் டாலும் காலம் அவரின் முதுமையைக் கணக் கிட்டுள்ளது. இப்போது கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தர் அவர்கள் முதுமையின் உச்சமான பிடிக்குள் அகப்பட்டுள்ளார். கேட்கும் சக்தி குறைந்து விட்டது. பேசுவதும் கடினமாயிற்று என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இன்னொருவரிடம் கொடுத்தாக வேண்டும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. தனது தலைமைப் பொறுப்பை இன்னொருவர் பொறுப்பேற்க வேண்டும் என்று இரா.சம் பந்தர் அவர்களே கூறுவதாகக் கேள்வி.

அப்படியானால் கூட்டமைப்பின் அடுத்த தலைவர் யார்? என்பதுதான் நம்முன் எழுந் துள்ள மிகப்பெரிய கேள்வி. இந்தக் கேள்விக்கான பதிலை விரைவில் தேடி எடுப்பதில்தான் கூட்டமைப்பின் எதிர் காலம் தங்கியுள்ளது. 

ஆனாலும் கூட்டமைப்பின் தலைவர் இவர் தான் என்று ஒருவரைச் சுட்டிக்காட்டி அவரைத் தலைவராக ஏற்பதற்கு கூட்டமைப்பில் உள்ள எவரும் தயாராக இல்லை என்பதையும் இங்கு கூறித்தானாக வேண்டும்.

சரியோ பிழையோ தனது அதட்டலால் கூட்டமைப்பின் தலைமையை தக்கவைத்துக் கொண்டிருந்த சம்பந்தரின் பணியை இனி யார் செய்ய முடியும் என்ற கேள்விக்கான விடை நீண்ட மெளனமாகவே இருக்கப் போகிறது.

http://valampurii.lk/valampurii/content.php?id=19619&ctype=news

  • கருத்துக்கள உறவுகள்

MP-MA-Sumanthiran-_850x460_acf_cropped.j

நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற ..இந்த
நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற..
என்றும் நல்லவங்க எல்லாரும் ஒங்க பின்னாலே ..நீங்க
நெனச்சதெல்லாம் நடக்குமுங்க கண்ணு முன்னாலே..

  • கருத்துக்கள உறவுகள்

அநேகமா சுமந்திரன் ஐயா தான் வருவார்!
அதோட த.தே.கூட்டமைப்பும் இல்லாமல் போகும்.

  • தொடங்கியவர்

கட்சிக்கு தலைமைதாங்க நாட்டில் உள்ள, ஆளுமையும், விவேகமும், பற்றும் உள்ள  ஒரு புதுமுகம் தேவை. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, ஏராளன் said:

அநேகமா சுமந்திரன் ஐயா தான் வருவார்!
அதோட த.தே.கூட்டமைப்பும் இல்லாமல் போகும்.

அதே.....

8 minutes ago, ampanai said:

கட்சிக்கு தலைமைதாங்க நாட்டில் உள்ள, ஆளுமையும், விவேகமும், பற்றும் உள்ள  ஒரு புதுமுகம் தேவை. 

இப்படி ஒரு விளம்பரம் நாட்டில் உள்ள எல்லா பத்திரிகைகளுக்கும்  கொடுத்தால் எப்படி இருக்கும் அம்பனை. 😂 

  • தொடங்கியவர்
7 minutes ago, tulpen said:

இப்படி ஒரு விளம்பரம் நாட்டில் உள்ள எல்லா பத்திரிகைகளுக்கும்  கொடுத்தால் எப்படி இருக்கும் அம்பனை. 😂 

மக்களின் கட்சியின் மீதான நம்பிக்கையை கூட்டும். 
அரசியலில் ஆர்வத்தை அதிகரிக்கும். 
சனநாயக பண்புகள் மூலம் உரிமைகளை வென்றெடுக்கும் ஆர்வத்தை அதிகரிக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

நான் சிறிதரனை சிபாரிசு செய்கிறன் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ampanai said:

மக்களின் கட்சியின் மீதான நம்பிக்கையை கூட்டும். 
அரசியலில் ஆர்வத்தை அதிகரிக்கும். 
சனநாயக பண்புகள் மூலம் உரிமைகளை வென்றெடுக்கும் ஆர்வத்தை அதிகரிக்கும். 

எங்களுக்கு எங்கே ஐயா ஜனநாயக பண்பு இருந்தது. எங்களிடம் இருந்ததெல்லாம் சாதி சமய பிரதேச வாதம்  மட்டுமே. எங்களிடம்  சனநாயகப் பண்பு இருந்ததா அல்லது பிறரை மதிக்கும் பண்புதான்தானும்  இருந்ததா?  ஓர் உதாரணம் காட்டமுடியுமா உங்களால். ?  

  • கருத்துக்கள உறவுகள்

  அவர்களுக்கு தலை ஆட்டக்கூடிய புதுமுகம் வந்தால் ஆள் தப்பிச்சு. இல்லைனா விக்கினேஸ்வரன் ஐயா  நாறினதைப்பார்த்து எந்த தன்மானமுள்ளவனும் வரமாட்டான்.

  • தொடங்கியவர்
3 hours ago, Maharajah said:

எங்களுக்கு எங்கே ஐயா ஜனநாயக பண்பு இருந்தது. எங்களிடம் இருந்ததெல்லாம் சாதி சமய பிரதேச வாதம்  மட்டுமே. எங்களிடம்  சனநாயகப் பண்பு இருந்ததா அல்லது பிறரை மதிக்கும் பண்புதான்தானும்  இருந்ததா?  ஓர் உதாரணம் காட்டமுடியுமா உங்களால். ?  

அண்மையில், கிழக்கு-வடக்கு பல்கலைக்கழக மாணவர்களின் முயற்சியில் ஐந்து தமிழ் கட்சிகள் கைச்சாத்திட்ட புரிந்துணர்வு அவ்வாறான ஒரு உதாரணம். அதில் ஆறாவது கட்சி கையொப்பம் இடாமல் வெளியேறியது சனநாயகம்.  

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, ampanai said:

அண்மையில், கிழக்கு-வடக்கு பல்கலைக்கழக மாணவர்களின் முயற்சியில் ஐந்து தமிழ் கட்சிகள் கைச்சாத்திட்ட புரிந்துணர்வு அவ்வாறான ஒரு உதாரணம். அதில் ஆறாவது கட்சி கையொப்பம் இடாமல் வெளியேறியது சனநாயகம்.  

பிரபாகனிடம் துப்பாக்கி இருக்கும்வரையில் ஒழுக்கமாக இருந்த எமது இனம் பிரபாகரனும் இல்லை துப்பாக்கியும் இல்லை என்றவுடன் ஆடும் ஆட்டம் ??  

என்னைப்பொறுத்தவரை எமது இனத்துக்கு சனநாயகம் என்பது இப்போதைய நிலைமையில் பொருத்தமற்றது.  பிரபாகரன் போன்ற ஆளுமைதான் சரி என்று படுகிறது 

  • கருத்துக்கள உறவுகள்

"""அண்மையில், கிழக்கு-வடக்கு பல்கலைக்கழக மாணவர்களின் முயற்சியில் ஐந்து தமிழ் கட்சிகள் கைச்சாத்திட்ட புரிந்துணர்வு அவ்வாறான ஒரு உதாரணம். அதில் ஆறாவது கட்சி கையொப்பம் இடாமல் வெளியேறியது சனநாயகம்"""

 

ஆக இவர்களெல்லாம் சனநாயகம் என்னவென்று காட்டுவதர்ட்க்காகத்தான் வெளியேறினார்கள் என்று கூறுகிறீர்கள். உங்களுக்கு முசுப்பாத்தி கூடிப்போச்சு.  சனிக்கிழமைதானே,  புரிகிறது. 😃😃😃

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.