Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கடைசி நிமிடம் வரை ரணில் எங்களை ஏமாற்றிவிட்டார்! கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பகிரங்க குற்றச்சாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரணில் விக்ரமசிங்க அம்பாறை மாவட்ட தமிழ் மக்களை ஏமாற்றி விட்டார். குறிப்பாக சொல்ல போனால் கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்தித் தருவேன் என்று பல தடவைகள் சொல்லி கடைசி நிமிடம்வரை எங்களை ஏமாற்றி விட்டார் என அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

இன்று வெள்ளிக்கிழமை ( 29) நாவிதன்வெளி பிரதேசத்தில் உள்ள வீரச்சோலை அ.த.க. பாடசாலைக்கு ஒலி பெருக்கி சாதனங்களை பண்முக படுதப்பட்ட நிதியிலிருந்து வழங்கி வைக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் எஸ். திருச்செல்வம் தலைமையில் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

வடகிழக்கிலே வாழுகின்ற தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கரத்திலே பாரபடுத்திய விடயம் என்னவென்றால், இன பிரச்சினைக்கான தீர்வு, இன பிரச்சினைக்கான தீர்வினை நாங்கள் உடனடியாக தீர்க்க வேண்டியவர்களாக இருக்கிறோம். அதற்கான செயற்பாடுகள் என்னவென்று அறிந்து தந்திரோபாய ரீதியில் செயற்பட வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வினை முன்னெடுக்க தேசியத்தில் மாத்திரமல்லாது சர்வதேசத்திலும் முன்னெடுத்து வருகின்றோம். முன்னெடுத்து கொண்டே இருப்போம்.

தமிழர்களின் இன பிரச்சினை சார்ந்த விடயங்களை தீர்ப்பதில் தமிழ் தேசிய கூட்டமைப்பை தவிர எந்த கட்சியும் முன்னிக்க போவதில்லை. அது ஐக்கிய தேசிய கட்சியாக இருந்தாலும் சரி,ஸ்ரீ லன்கா பொதுஜன பெரமுன கட்சியாக இருந்தாலும் சரி, ஏன் இப்போது முளைத்த புதிய கட்சியானலும் சரி தமிழர்களின இன பிரச்சினை சார்ந்த விடயங்களில் ஒரு போதும் முன்னிக்க போவதில்லை. என்றும் முன்னின்ற சரித்திரமும் இல்லை.

வட கிழக்கில் ஏக பிரதிநிதியாக இருக்கும் தமிழ் தேசிய கூட்ட்டமைப்பே தமிழர்களின் பலம் என்பதனை தமிழ் மக்கள் ஒரு போதும் மறந்துவிட கூடாது. தேசியத்தில் மட்டுமல்லாது சர்வதேசத்திலும் தமிழர்களின் குரல்லாக ஒலித்து கொண்டிருப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பதனை தமிழ் மக்களாகிய நீங்கள் ஒரு போதும் மறந்துவிட கூடாது.

எப்பொழுது தமிழ் தேசிய கூட்டமைப்பு உடைக்க படுகிறதோ ,சின்னாபின்ன படுத்த படுகிறதோ, அன்று தமிழர்களின் உரிமை குரல் நசுக்க படும் தமிழர்களின் ஒற்றுமை சின்னாபின்னமாக்கப்படும்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுகின்ற விடயம் சம்பந்தமாக, நாங்கள் பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டு நாடாளுமன்றத்திலும் குரல் கொடுத்தோம். அதன் மூலம் தேசிய ரீதியாக கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தை நாங்கள் வெளி உலகத்திற்கு கொண்டு வந்திருக்கின்றோம். கடந்த காலத்திலே பலதரப்பட்ட பேச்சு வார்த்தைகள், முயற்சிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பால் முன்னெடுக்கப்பட்டது. அந்த முயற்சிகள் ஏனைய சமூகத்தவர்களினால் அது பின்தள்ளப்பட்டது.

ஐக்கிய தேசிய கட்சியானது ஒவ்வொரு கால கட்டத்திலும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தருவோம் என்று பல வாக்குறுதிகளை தந்தது, பல ஒப்பந்தங்களை செய்தது எங்களை ஏமாற்றி விட்டது ஐக்கிய தேசிய கட்சி. ஐக்கிய தேசிய கட்சியன் முன்னாள் தலைவர் ரணில் விக்ரமசிங்க அம்பாறை மாவட்ட தமிழ் மக்களை ஏமாற்றி விட்டார். குறிப்பாக சொல்ல போனால் கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தருவேன் என்று பல தடவைகள் சொல்லி கடைசி நிமிடம்வரை எங்களை ஏமாற்றி விட்டது.

ஐக்கிய தேசிய கட்சி எப்படி தமிழ் மக்களை ஏமற்றியதோ அதே போன்று தற்போது ஆட்சிக்கு வந்த கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுன கட்சியும் ஏமாற்றி வருகிறது. எப்படி இருந்தாலும் நாங்கள் தொடர்ச்சியாக கல்முனை பிரதேச செயலக விடயம், அம்பாறை மாவட்ட தமிழர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க கடைசிவரை போராடுவோம் என்றார்.

இந்த நிகழ்விற்கு நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் தவராசா கலையரசன் , பிரதேச சபை உறுப்பினர்களான அ.சுதர்சன், நா.தர்சினி , பாடசாலை ஆசிரியர்கள் , மாணவர்கள், பழய மாணவர்கள், பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

https://www.tamilwin.com/politics/01/232578?ref=home-top-trending

  • கருத்துக்கள உறவுகள்

சரியாகத்தான் கூறியுள்ளீர்கள்.  அவர் உங்களைத் தான் ஏமாற்றிஉள்ளார்.  தமிழ்மக்களை அல்ல. நாங்கள் தெளிவாகத்தான் உள்ளோம்.  

அது சரி தமிழ் அரசியல்வாதிகள் மட்டும் எப்போதும்  ஏமாறுகிறார்களே அது  ஏன்   ? 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Maharajah said:

சரியாகத்தான் கூறியுள்ளீர்கள்.  அவர் உங்களைத் தான் ஏமாற்றிஉள்ளார்.  தமிழ்மக்களை அல்ல. நாங்கள் தெளிவாகத்தான் உள்ளோம்.  

அது சரி தமிழ் அரசியல்வாதிகள் மட்டும் எப்போதும்  ஏமாறுகிறார்களே அது  ஏன்   ? 

ஆட்களை பார்க்கவே.... அவர்களின்,   "காதில் பூ..."  
வைத்த, சோணகிரி மாதிரி உள்ளது. 
அதனால்... சிங்களவன், ஏமாற்றுவதில், தவறு இல்லை. :)

முழு.... **** , தமிழ்  கூட்டத்தை... பாராளுமன்றத்துக்கு அனுப்பி விட்டு,
இப்ப... அங்கை  நோகுது, இங்கை நோகுது......  எண்டு சொன்னால்,
வேறை வைத்தியம் தான்... பார்க்க வேண்டி இருக்கும். கண்டியளோ.... 😎

  • கருத்துக்கள உறவுகள்

பாடசாலைக்கு  ஒலிபெருக்கி சாதனம் வழங்கி வைக்கும் நிகழ்வில் ஒரு அரசியல்வாதி வரவேண்டிய தேவை இல்லை அங்கு அரசியல் பேச வேண்டிய அவசியமும் இல்லை. அரசியல்வாதிகள் பாடசாலைகலையும் அங்கு  கல்விகற்கும் மாணவர்களையும் தமது அரசியல் பிரச்சாரத்தை முன்னெடுக்க தவறாக பயன்படுத்துகிறார்கள்.

இனப்பற்றுள்ள ஒரு அரசியல்வாதியாக இருந்தால் ஏமாற்றப்படமுன்னதாகவே அதுபற்றி உசாராகி செயற்பட்டிருப்பீர்கள். கட்சியில் உள்ள அரசியல்வாதிகள் எவருக்குமே இதை ஊகிக்கமுடியவில்லை என்றால் நீங்கள் ஏன் கட்சி நடத்துகிறீர்கள். ஏமற்றப்பட்டது இதுதான் முதல் முறை என்பது போல இவரின் பேச்சு உள்ளது.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சுத்தமானது .. சுகாதாரமானது .. சுவையானது.. 👍

maxresdefault.jpg

2009இல் இருந்து கடந்த பத்து ஆண்டுகளில், 2019 வரை, கூட்டமைப்பு எதையும் மக்களுக்காக பெரிதாக சாதித்து  விடவில்லை; அரசியல் தீர்வை பெருத்தரவேண்டும் என்ற இலக்கில் இருந்து விலகியே சென்றுள்ளார்கள். 

மக்களை பொறுத்தவரையில் இவர்கள் ஒரு ஏமாற்றமே. 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ampanai said:

2009இல் இருந்து கடந்த பத்து ஆண்டுகளில், 2019 வரை, கூட்டமைப்பு எதையும் மக்களுக்காக பெரிதாக சாதித்து  விடவில்லை; அரசியல் தீர்வை பெருத்தரவேண்டும் என்ற இலக்கில் இருந்து விலகியே சென்றுள்ளார்கள். 

மக்களை பொறுத்தவரையில் இவர்கள் ஒரு ஏமாற்றமே. 

அது என்ன பெரிதாக சாதித்து விடவில்லை ??????? 

அவர்கள் ஒன்றயுமே சாதிக்கவில்லை என்பதை நாகரீகமாக கூறுகிறீர்கள் போலுள்ளது. 

On 11/30/2019 at 2:05 AM, பெருமாள் said:

ரணில் விக்ரமசிங்க அம்பாறை மாவட்ட தமிழ் மக்களை ஏமாற்றி விட்டார். குறிப்பாக சொல்ல போனால் கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்தித் தருவேன் என்று பல தடவைகள் சொல்லி கடைசி நிமிடம்வரை எங்களை ஏமாற்றி விட்டார் என அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

சதிகார சுமந்திரன் வரும்போதே ஏமாற்று நாடகம் தான் நடக்கிறது என்டு புரிந்திருக்கோணுமே!

எலும்புத்துண்டுக்கு பின்னால அலைஞ்சா அடிக்கடி என்ன கடைசிவரை ஏமாறுவதும், ஏமாத்துவதும் சகஜம் தானே!

அதுசரி கம்பெரேலிய என்டு எவ்வளவு காசை போக்கெற்றுக்குள்ள போட்டநீங்கள் என்டு கொஞ்சம் உண்மையை சொல்லுங்கோ பாப்பம்.

8 hours ago, Rajesh said:

அதுசரி கம்பெரேலிய என்டு எவ்வளவு காசை போக்கெற்றுக்குள்ள போட்டநீங்கள் என்டு கொஞ்சம் உண்மையை சொல்லுங்கோ பாப்பம்.

கம்பெரலிய என்றா பொக்கற்றுக்குள்ள காசை போடும் திட்டம் என்று  .தான் பெயராம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.