Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சர்வதேசம் எங்களுடன் நிற்கின்றது இதனை நாங்கள் சரியாக பயன்படுத்தவேண்டும் - மாவை சேனாதிராசா

Featured Replies

யுத்ததின்போது திரும்பிப் பார்க்காத சர்வதேசம் இன்று எங்களுடன் நிற்கின்றது இந்தச் சந்தர்ப்பத்தை நாங்கள் சரியாக பயன்படுத்தவேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசா தெரிவித்தார்.

கோண்டாவில் மத்திய கிராம அபிவிருத்திச் சங்கம் மத்திய சனசமூக நிலையத்தின் வைரவிழா நேற்று திங்கட்கிழமை மாலை நடைபெற்றது.  இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றம் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

தமிழர்களின் விடுதலைக்காக இலட்சியங்களை அடைவதற்காக தொடர்ந்தும் போராடி வருகின்றோம் இத்தகைய போராட்டங்களில் பலரை நாங்கள் இழந்து நிற்கின்றோம். யுத்த காலத்தில் எங்களைத் திரும்பிப் பார்க்காத சர்வதேச சமூகம் யுத்தம் முடிவடைந்த கையுடன் எங்களைப் பாதுகாப்பதற்காக சர்வதேச ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டது. குறிப்பாக ஐ.நா பொது செயலாளராக இருந்த பாங்கீன்மூன் அரசாட்சியில் இருந்த ஜனாதிபதி பிரதமருடன் கதைத்து எங்களைப் பாதுகாப்பதற்கான ஒப்பந்தங்களை மேற்கொண்டிருந்தார்.

இனப்பிரச்சினை தீர்வை கண்டடைவதற்காகவும் பாதிக்கப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்காவும் இலங்கையை சிறந்த ஒரு கட்டமைப்பு மிக்க நாடாக உருவாக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார்கள் இதன் பின்னணியில் தான் ஐ.நா.மனித உரிமைப் பேரவையில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இத்தகைய நிலையில் ஜனாதிபதியாக பதவி ஏற்ற கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் ஐ.நா.மனித உரிமைப்பேரவையில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்கள். தேர்தலுக்காக பல வாக்குறுதிகள் வழங்குவது போன்று ஐ.நா.வுடனும் மனித உரிமைப்பேரவையின் தீர்மானத்தில் இருந்து விலகுவதாக கூறியுள்ளது. யார் என்ன செய்தாலும் 2021 ஆம் ஆண்டு வரை மனித உரிமைகள் தீர்மானத்தில் இருந்து விலகமுடியாது. அவ்வாறு விலகுவதாயின் பல்வேறு வழிவகைகள் செய்தே அதிலிருந்து மாறமுடியும் ஆனால் அது இலகுவான காரியம் இல்லை பிரேரணைக்கு ஆதரவு வழங்கிய நாடுகள் இவ்வாறான விடையங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் இலங்கை அவ்வாறு வெளியேறுமாக இருந்தால் ஐ.நா.மனித உரிமைப்பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகள் மட்டுமன்றி ஆதரவு வழங்கி வந்த நாடுகள் இலங்கை மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் இத்தகைய சூழல் எமக்கு சாதகமாகவே இருக்கும்.

தற்போதைய அரசியல் சூழலில் எங்களுடன் இருந்தவர்கள் பல கட்சிகளாக உருவாகி வருகின்றார்கள் அவ்வாறு பிரிந்து செல்பவர்கள் மக்கள் மத்தியில் எத்தகைய வகிபாகத்தைக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை அவர்களும் சிந்திக்கவேண்டும் மக்களும் சிந்திக்கவேண்டும் நாங்கள் பிரிந்து செல்வதால் எதையும் அடையப்போவதில்லை ஒற்றுமையே பலம் நாங்கள் ஏமாற்றமாட்டோம் எங்களுக்கான தீர்வை இலக்கை அடையும் வரையும் தொடர்ந்தும் போராடுவோம்


மேலும் கோண்டாவில் மத்திய கிராம அபிவிருத்திச் சங்கம் மற்றும் மத்திய சனசமூக நிலையம் இன்று வைரவிழாவை கொண்டாடுகின்றது இந்தக் கிராம அபிவிருத்திச் சங்கம் இதன் மூலம் ஊரின் பல தேவைகளை சேவையாக செய்து வருகின்றது இது தொடரவேண்டும் இளைஞர் யுவதிகளுக்கு இன்னும் பலமான சேவைகளையும் எதிர்காலத்தையும் உருவாக்குவதற்கு இன்னும் பல முயற்சிகயைும் செய்ய வாழ்த்துக்கள் என்றார்.

https://www.virakesari.lk/article/77467
  

  • தொடங்கியவர்
11 minutes ago, ampanai said:

யுத்ததின்போது திரும்பிப் பார்க்காத சர்வதேசம் இன்று எங்களுடன் நிற்கின்றது இந்தச் சந்தர்ப்பத்தை நாங்கள் சரியாக பயன்படுத்தவேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசா தெரிவித்தார்.

'யுத்ததின்போது திரும்பிப் பார்க்காத சர்வதேசம் இன்று எங்களுடன் நிற்கின்றது' என்பதை ஒரு கணம் ஏற்றுக்கொண்டு ஒரு கேள்வியை முன்வைக்கின்றேன் :

கடந்த சனாதிபதி தேர்தலில் சஜித் வென்றே ஆகவேண்டும் என பிரச்சாரம் செய்தீர்கள். அவர் வென்றிருந்தால் இந்த நிலைமை வந்திருக்குமா?

  • கருத்துக்கள உறவுகள்

நிலைமையை சரியாக பயன்படுத்தி விட்டாலும்………..

  • தொடங்கியவர்
8 minutes ago, nunavilan said:

நிலைமையை சரியாக பயன்படுத்தி விட்டாலும்………..

நுணா,
வசனத்தை முடியுங்கள். தலைக்குள் பல கற்பனைகள் வந்த வண்ணம் உள்ளது 🙂 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, nunavilan said:

நிலைமையை சரியாக பயன்படுத்தி விட்டாலும்………..

 

மாவை  அண்ணாவின்  பேச்சை கேட்டால் மனதுக்குள் படடாம் பூச்சி பறக்குது ,வாங்கோ எல்லாரும் சேர்ந்து தண்ணீயை போடுவம்

4 hours ago, ampanai said:

யுத்ததின்போது திரும்பிப் பார்க்காத சர்வதேசம் இன்று எங்களுடன் நிற்கின்றது இந்தச் சந்தர்ப்பத்தை நாங்கள் சரியாக பயன்படுத்தவேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசா தெரிவித்தார்.

பின்கதவால கோடி கோடியா பணம் கிடைக்கும் என்டு கணக்கு பண்ரார் மாவையார்.

ஆனா முதல்ல தேர்தல்ல வெல்லோனுமே!

அவர் பாசையில் இனிமேல் சுருட்ட ஏலாது இது தான் கடைசி முறை லம்பா சுருட்ட விடுங்கோ எண்டு சொல்லுது மனிசன்

  • கருத்துக்கள உறவுகள்

 

blob:https://www.facebook.com/fbd5e015-cf89-4f11-8751-66548cca4238

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ampanai said:

ஐ.நா பொது செயலாளராக இருந்த பாங்கீன்மூன் அரசாட்சியில் இருந்த ஜனாதிபதி பிரதமருடன் கதைத்து எங்களைப் பாதுகாப்பதற்கான ஒப்பந்தங்களை மேற்கொண்டிருந்தார்

யாரது?  பான்கி மூனா....? நினைத்திருந்தால் போரையே நிறுத்தி அப்பாவி உயிர்களை காத்திருக்கலாம். விருந்துண்டு மகிழ்ந்ததுதான் மிச்சம். உவர் விடுகிற பகிடிக்கும் ஒரு அளவு இருக்கோணும்.

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • தொடங்கியவர்

இன்றுவரை இந்தியா இலங்கை ஐ.நா. தீர்மனத்தில் இருந்து விலகியது பற்றியோ இல்லை சவேந்திர சில்வா என்ற போர்க்குற்றவாளி மீது அமேரிக்கா கொண்டுவந்த தடை பற்றியோ மூச்சும் விடவில்லை.  காரணம், கூட்டமைப்பு ?  

20 hours ago, nunavilan said:

நிலைமையை சரியாக பயன்படுத்தி விட்டாலும்………..

தமிழர் பிரச்சினை உடனே தீர்ந்துவிடும்। நம்மெல்லாருக்கும் ஆடடம் கொண்டாடடம்தான்।

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.