Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் வாள் கொண்டு சென்ற பூசகர் மீது வழக்கு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Srilanka-Police.jpg

யாழில் வாள் கொண்டு சென்ற பூசகர் மீது வழக்கு

யாழ்ப்பாணம் – குப்பிளான் பகுதியில் ஆலய தேவைக்காக வாள் கொண்டு சென்ற ஆலய பூசகரை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் விடுவித்துள்ளனர்.

இந்நிலையில் அவர் மீது வழக்க தாக்கல் செய்யவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது. குப்பிளான் பகுதியில் உள்ள ஆலயத்தில் பூஜையை முடித்துக்கொண்டு பூசகர் அங்கிருந்து, உரும்பிராய் பகுதியில் உள்ள ஆலயத்திற்கு பூஜைக்கு செல்லும் போது, அந்த ஆலய தேவைக்காக குப்பிளான் ஆலயத்தில் இருந்து வாள் ஒன்றினை கொண்டு சென்றுள்ளார்.

அவ்வேளை வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் வாளுடன் சென்ற பூசகரை கைது செய்து பொலிஸ் நிலையம் அழைத்துசென்று விசாரணை மேற்கொண்டனர்.

அதன்பின்னர் பொலிஸ் பிணையில் பூசகரை செல்ல அனுமதித்த பொலிஸார், பூசகர் கொண்டு சென்ற வாள் மற்றும் அவரது மோட்டார் சைக்கிள் என்பவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட வாள் மற்றும் மோட்டார் சைக்கிளை நீதிமன்றில் சான்று பொருட்களாக ஒப்படைக்கவுள்ளதாகவும் வாள் கொண்டு சென்றமை தொடர்பாக நீதிமன்றில் வழக்கு தொடரவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

http://athavannews.com/யாழில்-வாள்-கொண்டு-சென்ற/

கடந்த காலங்களில் முஸ்லீம் பள்ளிகளில்தான் வாள்களை தேடி தேடி கண்டுபிடித்தார்கள்। நூற்றுக்கணக்கான வாள்கள் பிடிபடடன। பின்னர் புல்லு வெட்டுவதட்க்கு கொண்டு வந்ததாக கூறினார்கள்। இந்து கோவிலில் எதுக்காக வாள்கள்? சில வேளைகளில் ஏதும் மிருக பலி கொடுப்பதட்காகவோ?

வாழை வெட்ட பூசனிகாய் வெட்ட ஆனால் இந்துக்கள் புல்லை வாளால் வெட்டுவதில்லை நண்பரே இது ஓர் தந்திரமான எழுத்து

வாள் கொண்டு சென்ற பூசகருக்கு பொலிஸ் பிணை

-எம்.றொசாந்த் 

கோவில் தேவைக்காக வாள் கொண்டு சென்ற கோவில் பூசகரை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளனர். 

குறித்த சம்பவம் குப்பிளான் பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

குப்பிளான் பகுதியில் உள்ள கோவிலில் பூஜையை முடித்துக்கொண்ட பூசகர், அங்கிருந்து, உரும்பிராய் பகுதியில் உள்ள கோவிலுக்கு பூஜைக்கு செல்லும் போது, அந்த கோவில் தேவைக்காக குப்பிளான் கோவிலில் இருந்து வாள் ஒன்றினை கொண்டு சென்றுள்ளார். 

அவ்வேளை, வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், வாளுடன் சென்ற பூசகரை கைது செய்து, பொலிஸ் நிலையம் அழைத்துசென்று விசாரணை செய்தனர்.

பின்னர் பொலிஸ் பிணையில் பூசகரை செல்ல அனுமதித்த பொலிஸார், பூசகர் கொண்டு சென்ற வாள் மற்றும் அவரது மோட்டார் சைக்கிள் என்பவற்றை பறிமுதல் செய்துள்ளனர். 

பறிமுதல் செய்யப்பட்ட வாள் மற்றும் மோட்டார் சைக்கிளை நீதிமன்றில் சான்று பொருள்களாக ஒப்படைக்கவுள்ளதாகவும், வாள் கொண்டு சென்றமை தொடர்பில் நீதிமன்றில் வழக்கு தொடரவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/வாள்-கொண்டு-சென்ற-பூசகருக்கு-பொலிஸ்-பிணை/71-246710

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Vankalayan said:

கடந்த காலங்களில் முஸ்லீம் பள்ளிகளில்தான் வாள்களை தேடி தேடி கண்டுபிடித்தார்கள்। நூற்றுக்கணக்கான வாள்கள் பிடிபடடன। பின்னர் புல்லு வெட்டுவதட்க்கு கொண்டு வந்ததாக கூறினார்கள்। இந்து கோவிலில் எதுக்காக வாள்கள்? சில வேளைகளில் ஏதும் மிருக பலி கொடுப்பதட்காகவோ?

உங்களுக்கு சைவமும் தெரியாது கிறீஸ்தவமும் தெரியாது...

16 hours ago, MEERA said:

உங்களுக்கு சைவமும் தெரியாது கிறீஸ்தவமும் தெரியாது...

அது சரி। வாள் வெட்டு கும்பலை பற்றி எழுதினது எனது தப்பு। 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Vankalayan said:

அது சரி। வாள் வெட்டு கும்பலை பற்றி எழுதினது எனது தப்பு। 

வாள் வெட்டு குழுவிற்கும் இவருக்கும் என்ன தொடர்பு?

  • கருத்துக்கள உறவுகள்

வாழை வெட்டு திருவிழா ( மானம்பூ ). நவராத்திரி விழாவின் போது இடம்பெறும் இந்த திருவிழாவில் பக்தர்கள் பெரும் திரளாக கலந்துகொண்டு இறை அருள் பெறும் அற்புத காட்சியை இனி இலங்கையில் காணமுடியாது.

vanni1.jpg

vanni4.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, Paanch said:

வாழை வெட்டு திருவிழா ( மானம்பூ ). நவராத்திரி விழாவின் போது இடம்பெறும் இந்த திருவிழாவில் பக்தர்கள் பெரும் திரளாக கலந்துகொண்டு இறை அருள் பெறும் அற்புத காட்சியை இனி இலங்கையில் காணமுடியாது.

விசயம் தெரிந்தவர்களுடன் காலத்தை கொண்டு போகலாம். மதம் சமய முறைகள் தெரியாதவர்களுடன் ஒதுங்கியிருப்பதே நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Paanch said:

வாழை வெட்டு திருவிழா ( மானம்பூ ). நவராத்திரி விழாவின் போது இடம்பெறும் இந்த திருவிழாவில் பக்தர்கள் பெரும் திரளாக கலந்துகொண்டு இறை அருள் பெறும் அற்புத காட்சியை இனி இலங்கையில் காணமுடியாது.

vanni1.jpg

vanni4.jpg

வாழைவெட்டு ஐப்பசி கார்த்திகையில் எல்லா வருவது ...
இப்போ குப்பிழானில் என்ன வெட்டுகிறார்கள்? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Maruthankerny said:

வாழைவெட்டு ஐப்பசி கார்த்திகையில் எல்லா வருவது ...
இப்போ குப்பிழானில் என்ன வெட்டுகிறார்கள்? 

வைரவர் மடை வரும்.......கழிப்பு கழிச்சாலும் பூசணிக்காய் வெட்ட வாள் வேணும்.😎

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Vankalayan said:

அது சரி। வாள் வெட்டு கும்பலை பற்றி எழுதினது எனது தப்பு। 

 

On 3/11/2020 at 5:32 AM, Vankalayan said:

கடந்த காலங்களில் முஸ்லீம் பள்ளிகளில்தான் வாள்களை தேடி தேடி கண்டுபிடித்தார்கள்। நூற்றுக்கணக்கான வாள்கள் பிடிபடடன। பின்னர் புல்லு வெட்டுவதட்க்கு கொண்டு வந்ததாக கூறினார்கள்। இந்து கோவிலில் எதுக்காக வாள்கள்? சில வேளைகளில் ஏதும் மிருக பலி கொடுப்பதட்காகவோ?

பலி கொடுப்பதற்காக மட்டும் வாள் பாவிக்கப்படுவதில்லை. சைவ சமயத்தில் பல்வேறு சமயாசார நடவடிக்கைகளுக்காக வாள் கத்தி முதலானவை பாவிக்கப்படுவது வழமை. இவை தாக்குதல் ஆயுதங்கள் அல்ல.சட்ட விரோத  நடவடிக்கைகளுக்குப்  பாவிக்கப்படுவதில்லை.

பொலிசார் சிங்களவராயிருப்பாரோ ?

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, Kapithan said:

 

பலி கொடுப்பதற்காக மட்டும் வாள் பாவிக்கப்படுவதில்லை. சைவ சமயத்தில் பல்வேறு சமயாசார நடவடிக்கைகளுக்காக வாள் கத்தி முதலானவை பாவிக்கப்படுவது வழமை. இவை தாக்குதல் ஆயுதங்கள் அல்ல.சட்ட விரோத  நடவடிக்கைகளுக்குப்  பாவிக்கப்படுவதில்லை.

பொலிசார் சிங்களவராயிருப்பாரோ ?

சைவ சமயத்தில்  இந்த ஆட்களே இல்லை ....
இந்த வெட்டுறது கொத்துறு எல்லாம் பின்னாளில் வந்தது 

On 3/11/2020 at 7:22 PM, MEERA said:

உங்களுக்கு சைவமும் தெரியாது கிறீஸ்தவமும் தெரியாது...

நூற்றுக்கு நூறு உண்மை!

On 3/12/2020 at 12:54 PM, MEERA said:

வாள் வெட்டு குழுவிற்கும் இவருக்கும் என்ன தொடர்பு?

அதை அந்த மனிதரிடம்தான் கேட்க வேண்டும்। அல்லது இதில் கருது எழுதும் சில இந்தியர்கள் இருக்கிறார்கள்। சில நேரம் அவர்களுக்கு தெரிந்திருக்கும்।

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Vankalayan said:

அதை அந்த மனிதரிடம்தான் கேட்க வேண்டும்। அல்லது இதில் கருது எழுதும் சில இந்தியர்கள் இருக்கிறார்கள்। சில நேரம் அவர்களுக்கு தெரிந்திருக்கும்।

இந்த திரியினுள் வாள் வெட்டுக் குழுவை கொண்டு வந்தது யார்? எதையும் எழுதும் முன்னர் சற்று யோசித்து எழுதுங்கள்

Just now, MEERA said:

இந்த திரியினுள் வாள் வெட்டுக் குழுவை கொண்டு வந்தது யார்? எதையும் எழுதும் முன்னர் சற்று யோசித்து எழுதுங்கள்

।வாள் வெட்டுக்குழுவை நான் இதட்குள் இழுக்குமுன் இந்த வாளைப்பற்றித்தான் எழுதினேன்। எந்த ஆதாரமும் இல்லாமல் எனக்கு இந்துவும் தெரியாது கிறிஸ்தவமும் தெரியாது எப்படி நீங்கள் எழுதலாம்। நான் இந்து, கிறிஸ்தவ, முஸ்லீம் கல்லூரிகளில் படித்திருக்கிறேன் அவர்களுடைய மதத்தைப்பற்றியும் நன்றாக அறிந்திருக்கிறேன்। உங்களைவிட எனக்கு தேவாரம் பாட நன்றாக தெரியும்। இந்துக்கோவில்களில் இன்றும் மிருக பலி கொடுக்கிறார்கள்। தொண்டமானாறு , முன்னேஸ்வரம் ஆலயங்களில் இப்போதும் மிருகப்பலி செலுத்துகிறார்கள்। அந்த நோக்கோடுதான் அந்த திரியில் எழுதினேன்। அது பிழை என்றால் என்ன பிழை என்று குறிப்பிட்டிருக்க வேண்டும்। அதை விட்டுப்போட்டு எனக்கு ஒரு மதமும் தெரியாது எண்டு எப்படி விதண்டாவாதமாக எழுத முடியும்?

முதலில் உங்கள்  கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போட்டு மற்றவன் கண்ணில் இருக்கும் துரும்பை எடுத்துப்போட வழி பாருங்கள்।

 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Vankalayan said:

।வாள் வெட்டுக்குழுவை நான் இதட்குள் இழுக்குமுன் இந்த வாளைப்பற்றித்தான் எழுதினேன்। எந்த ஆதாரமும் இல்லாமல் எனக்கு இந்துவும் தெரியாது கிறிஸ்தவமும் தெரியாது எப்படி நீங்கள் எழுதலாம்। நான் இந்து, கிறிஸ்தவ, முஸ்லீம் கல்லூரிகளில் படித்திருக்கிறேன் அவர்களுடைய மதத்தைப்பற்றியும் நன்றாக அறிந்திருக்கிறேன்। உங்களைவிட எனக்கு தேவாரம் பாட நன்றாக தெரியும்। இந்துக்கோவில்களில் இன்றும் மிருக பலி கொடுக்கிறார்கள்। தொண்டமானாறு , முன்னேஸ்வரம் ஆலயங்களில் இப்போதும் மிருகப்பலி செலுத்துகிறார்கள்। அந்த நோக்கோடுதான் அந்த திரியில் எழுதினேன்। அது பிழை என்றால் என்ன பிழை என்று குறிப்பிட்டிருக்க வேண்டும்। அதை விட்டுப்போட்டு எனக்கு ஒரு மதமும் தெரியாது எண்டு எப்படி விதண்டாவாதமாக எழுத முடியும்?

முதலில் உங்கள்  கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போட்டு மற்றவன் கண்ணில் இருக்கும் துரும்பை எடுத்துப்போட வழி பாருங்கள்।

 

படித்தால் மட்டும் போதாது அதற்கூடா வாழ்ந்திருக்க வேண்டும்.

இல்லையெனில் மற்ற மதங்களை அறிந்த என்னை விட தேவாரம் நன்றாக பாட தெரிந்த நீங்கள் அவ்வாறன ஒரு கருத்தை எழுயிருக்க மாட்டீர்கள்

Just now, MEERA said:

படித்தால் மட்டும் போதாது அதற்கூடா வாழ்ந்திருக்க வேண்டும்.

இல்லையெனில் மற்ற மதங்களை அறிந்த என்னை விட தேவாரம் நன்றாக பாட தெரிந்த நீங்கள் அவ்வாறன ஒரு கருத்தை எழுயிருக்க மாட்டீர்கள்

எது? கோவிலில் பலி செலுத்தவதில்லையென்ற சொல்லுகிறீர்கள்।

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.