Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் 17 நோயாளர்களுக்கும் சுவிஸ் போதகர் ஊடாகவே கொரோனா தொற்றியது- வைத்திய பணிப்பாளர் அறிவிப்பு

Featured Replies

5 minutes ago, Nathamuni said:

தலைவா, எனக்கெண்டா,

மூடநம்பிக்கை பத்தி வகுப்பெடுத்து, வகுப்பெடுத்து, அலுலோயா கோஸ்டிகளுக்கு உதவுறமோ எணடல்லோ சனம் நினைக்கப்போகுது.

இல்லையெண்டு நினைக்கிறியளோ?

நான் இலண்டண் விளம்பரம் பத்தி கதைச்சா, ஓடியாந்து கட்டுக்கத எண்டுறியள்... சற்குணம் அய்யாவா, எனக்கு தெரியாதே எண்டுறியள்....

தீட்சை எடுத்தனான் எண்டுறியள், மண் ஜயர் பத்தி தெரியாமல் இருக்கிறியள்

குழப்பமா கிடக்குதே...

மூட நம்பிக்கைகளை தோலுரிப்பது  எப்படி அல்லோயா கோஷ்டிக்கு உதவி செய்யும். மூட நம்பிக்கை இல்லாத மக்களை அவர்களால்  ஏமாற்ற முடியாதே. மூட நம்பிக்கைக்கு ஏற்கனவே பழக்கப்பட்டவர்கள் தானே அதிகம் அல்லோயா கோஷ்டியிடம் சிக்குகிறார்கள். எனவே நாம் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக விவாதிப்பது அல்லோயாவுக்கு பாதகமாகமாக தான் இருக்கும். கவலைப்படதீர்கள்.

மண் ஐயர் பற்றி எனக்கு தெரியாது ஆனால்  மணி ஐயர் பற்றி தெரியும். ஆனால் அவரின் தனிப்பட விடயங்களை தான் தெரியாது என்றேன்.  இதில் என்ன குழப்பம் உங்களுக்கு? 

  • கருத்துக்கள உறவுகள்

பின்ன...

நீஙகள் சொன்ன மூடநம்பிக்கை பத்தி வாசிச்சுப்போட்டன். அதால அலுலோயா கோஸ்டியிடம் போலாம் எண்டு முடிவு செய்தாச்சு.

அது தான் சற்குணம் அய்யா பத்தி கேட்டனான்.

தெரியாதெண்டு போட்டியள்..

எப்பிடியும் எடுத்து, அய்யாவோட கதைச்சு அலுவல் பார்கிறது தான், நன்றி..

 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, tulpen said:

மதம் மாறுபவர்கள் இங்கு பிறந்த பிள்ளைகள் அல்ல. நடைமுறையில் மதம் மாறுபவர்கள் எல்லோரும் இலங்கையில் சமய அறிவு ஊட்டப்பட்டவர்கள்தான். அதனால் தான் அவ‍ர்கள் மதம் மாறுகிறார்கள்.ஆகவே சமய அறிவு ஊட்டபடாத‍தால் தான் அவ‍ர்கள் மதம் மாறுகிறார்கள் என்பது தவறானாது.  இங்கு வாழும் சமய அறிவு ஊட்டபடாத பிள்ளைகளை மதம் மாற்றுவது  இலங்கையில் சமய அறிவு என்ற பெயரில் மூட நம்பிக்கைகளை வளர்க்கபட்டவர்களை ம‍தம் மாற்றுவது போல் அவ்வளவு எளிதாக இருக்காது.  சமய அறிவு ஊட்டபடாத பிள்ளை தனது அறிவில் சிந்திக்கும் . அவ்வாறு தனது அறிவில் சி்ந்திக்கும் அந்த பிள்ளைக்கு  கர்த்தர் வந்து  தன்னை காப்பாற்ற முடியாது என்ற உண்மை தெரிந்திருப்பதால் அப்பிள்ளையைமதம் மாற்றுவது முடியாது. சுய அறிவு இல்லாது முழுக்க சமய நம்பிக்கையில் மூழ்கி கிடப்பவர்கள் தான் இவ்வாறான ஏமாற்று வித்தைக்கு பலியாகுபவர்கள். 

💯

  • கருத்துக்கள உறவுகள்

 நாட்டின் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு, இந்தப் பிரச்சனையை  கையாளும் தந்திரமே தவிர, மதமாற்றப்படுகிறார்கள் என்கிற வருத்தத்தாலோ, அன்றி தடுப்பதற்காகவோ அல்ல. அதை தூண்டியவர்கள், எங்களை அடிபட  வைத்தே சாதித்து வருகிறார்கள்.  வெளிநாட்டில் உள்ளவர்களது பிரச்சனை வேறு. இங்குள்ள  தேவை வேறு.  சொந்தச் சகோதரம் ஏழை என்கிற காரணம், படிப்பு இல்லை, வேறு சமூகத்தில், சமயத்தில்  திருமணம் செய்து விட்டார், என் அந்தஸ்துக்கு அவர் இல்லை, ஊனமாய் பிறந்து விட்டார் இன்ன பல காரணங்களை வைத்து ஒதுக்கி வைத்து. ஊரையே  கூட்டி நன்மை, தீமைகளை செய்யும் போது, நீ என் வாசற்படி மிதிக்காதே. என்ர  சாவு வீட்டுக்கு வராதே என்று  சட்டம் போடும்போது, நான் நீ செத்தால் வரமாட்டேன் என்று சவால் விடும் போது, என்னை நிஞாயப்படுத்த அவர் மேல் இல்லாத பழிகளை சுமத்தும்போது, உறவுகளால் ஒதுக்கப்பட்டு, ஊரால் ஓரங்கட்டப்பட்டு ஒடுங்கி இருந்தபோது. என்னைபார்க்க விரும்பாமல்  முகத்தை திருப்பியவர் மத்தியில்    அங்கே ஒருவர் வருகிறார். என்னைப்பார்த்து புன்னகைக்கிறார். என்பெயரை உச்சரிக்க தகுதியில்லாதவன் நீ என்று கூறும் உறவுகள் மத்தியில் என் பெயர் சொல்லி கூப்பிடுகிறார். ஏழை என்கிற காரணத்துக்காக விருந்தில் ஒதுக்கப்பட்ட  என்னைப் பார்த்து சொல்கிறார் நீ என் பந்தியில் என்னோடு சமமாய்  அமர் நான் உனக்கு பரிமாறுகிறேன் என்கிறார். ஏற்றத்தாழ்வு, வாட்டும் வறுமை.  உறவுகளால் கைவிடப்பட்டு  விழுந்த என்னை தூக்கி விடுகிறேன் என்று தன் கையை நீட்டுகிறார் நான் என்ன செய்வேன்? அந்தக் கையை பற்றிப்பிடித்து எழுந்து நிற்பதே என் தெரிவு. அதற்கு மற்றவர்கள் செய்யும் விமர்சனம் பற்றி எனக்கு கவலையில்லை. அவர்களால் ஒதுக்கப்பட்ட என்னை அவர்களுக்கு சவாலாய் ஆக்கி விட்டார்களே, என்கிற பதற்றத்தால் அவர்கள் மேல் வைக்கும் விமர்சனமா? நான் ஏமாற்றப்படுகிறேன் என்று வருந்துகிறார்களா?... இத்தனை மதம் இருக்கும்போது எனது மதந்தான் அரச அங்கீகார மதம் என தான் தோன்றித்தனம் காட்டுபவனின் தந்திரத்தை நம்பி உன்  சுயநலத்தை மறைத்து என்னை எள்ளி நகையாடுகிறாய். மனிதனாய் வாழ முயற்சி செய். மதத்தை போதிப்பதை விட்டு வாழ்ந்து காட்டி சாதி.  இல்லை, போதனை மட்டும் போதும். என்பாயானால், ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது. உன் மதத்தையும், உன் சூழ இருப்பவர்களையும்  மதமாற்றத்துக்கு பலி கொடுத்து விட்டு தனியே இருந்து புலம்ப வேண்டி வரும். 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, satan said:

நாட்டின் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு, இந்தப் பிரச்சனையை  கையாளும் தந்திரமே

பார்ரா நல்ல சிந்தனை சடான்  😁😁

இப்ப கலிகாலம்!

திருடர்கள், கொள்ளைக்காரர்கள் எல்லாம் நீங்க உங்க பொருளை கவனமா வைச்சுக்கொள்ளுங்கோ. இல்லை என்டா நாங்க திருடிப்போடுவம். இல்லை என்டா நாங்க கொள்ளை அடிப்பம். திருடுவதும் கொள்ளை அடிப்பதும் எங்க உரிமை, எங்க மதம் சொல்லித்தந்த உரிமை. பொருளை பறி கொடுத்திட்டு பிறகு கவலைப்படக் கூடாது என்ட ரேஞ்சுல சொல்ற அளவுக்கு மனிதத்துவம் படுகேவலமா போய்க்கொண்டிருக்கு.
எப்படிப்பட்ட ஒரு கேவலமான மதத்தால இப்பிடி கீழ்த்தரமான சிந்தனைகளை எல்லாம் தைரியமா சொல்ற அளவுக்கு என்டு யோசிக்க வேண்டியிருக்கு.

அதை தான் கலிகாலம் என்கிறாங்க. இந்த அயோக்கியத்தனங்கள் ஒரு முடிவுக்கு வரும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.