Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

த.தே.கூட்டமைப்பினர் மற்றவர்களைப் போல் அரசியல் சராணாகதி அடைந்தவர்கள் அல்லர்- சிவமோகன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Sivamohan-3.jpg

த.தே.கூட்டமைப்பினர் மற்றவர்களைப் போல் அரசியல் சராணாகதி அடைந்தவர்கள் அல்லர்- சிவமோகன்

தமிழ் தேசிய கூட்டமைப்பினர், மற்றவர்களைப் போல் அரசியல் சரணாகதி அடைந்தவர்கள் அல்லர்  என கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திகலாநிதி சிவமோகன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொடர்பாக அரசாங்கத்துடன் அண்மையில் சந்திப்பொன்றை தமிழ் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்டிருந்தது. அதனை சில அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்திருக்கும் நிலையில் அதற்கு பதிலளிக்கும் வகையில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுகுறித்த அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காலத்திற்கு காலம் தமிழ் மக்களின் ஏகோபித்த குரலாக ஒலித்து தனது சேவையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்து வருகிறது.

இன்று தமிழ் மக்களுக்காக அனைத்து பிரச்சினைகளையும் திரைமறைவு நாடகங்களையும் வெளிக்கொண்டு வருவதற்காக தற்போது செயற்பாட்டில் உள்ள அரசாங்கத்ததுடன் நியாய பூர்வமான கலந்துரையாட வேண்டிய கடமை தமிழ் மக்கள் சார்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடையதே.

அந்தக் கடமையை சரியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்படி இருக்கும் பொழுது அண்மையில் மஹிந்த ராஜபக்ஷவுடனான கொரோனா தொடர்பான அவர்களது சந்திப்பால் தங்களது அரசியல் அடிபட்டு விடுமோ என்ற பயத்தில் பிதற்றத் தொடங்கியிருக்கிறார்கள்.

தங்களது சொந்தமான அரசியலை முன்னகர்த்த முடியாத, தமிழ் மக்கள் விரோத வங்குரோத்து கட்சிகள் அனைத்தும் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பை புறணி சொல்லத் தொடங்கியிருக்கின்றன.

அவர்களின் கருத்துக்களில் இருந்தே தமிழ் மக்களின் ஏகோபித்த அமைப்பு மற்றும் பாதுகாப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்புத்தான் என்பது மக்களுக்குத் தெளிவாகத் தெரிகிறது.

ஆகவே இவ்வாறான போலி முகவர்களுக்கு தமிழ் மக்கள் சரியான பதிலடி கொடுப்பார்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/த-தே-கூட்டமைப்பினர்-மற்ற/

  • கருத்துக்கள உறவுகள்

யோவ் உங்களையெல்லாம் கரடியே காறிதுப்பின மூவ்மென்டுல இருக்கிறியள் இதுக்குள்ள இன்னமும் துப்பணுமா

  • கருத்துக்கள உறவுகள்

கோமா ஸ்ரேஜ் பீப்பிள்...அதாவது பூனை கண்ணை மூடிக்கொண்டு பால் குடிப்பது போல..

 

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தனும் போய்ச் சேர்ந்த பின்னர்தான் தெரியும் கூத்தமைப்பின் நிலை. அதுவரைக்கும் கூவுங்கோ. 😜

6 hours ago, தமிழ் சிறி said:

த.தே.கூட்டமைப்பினர் மற்றவர்களைப் போல் அரசியல் சராணாகதி அடைந்தவர்கள் அல்லர்- சிவமோகன்

தமிழ் மக்களை ஏமாத்தி பிழைப்பு நடத்தும் பலவித கோஷ்டிகளின் ஒரே ஸ்டைல் இப்ப இது தான். தாங்க எல்லா அக்கிரமங்களையும், சமூகவிரோத செயல்களையும், செய்து போட்டு, நல்லவன் வேஷம் போட்டு குதிக்கிறது. யாழ்ல மட்டுமில்ல வடகிழக்கு எல்லாப் பக்கமும் கஷ்டப்படுகிற மக்களை ஏமாத்துற கூத்தமைப்பு உட்பட பல சமூகவிரோத கோஷ்டிகள் நல்லவன் வேஷம் போட்டு திரியுது.

இலங்கை தமிழ் மக்கள் விழித்தெழும் வரைக்கும் உங்கள் காட்டில் மழைதான்। 

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தமிழ் சிறி said:

“காலத்திற்கு காலம் தமிழ் மக்களின் ஏகோபித்த குரலாக ஒலித்து தனது சேவையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்து வருகிறது.

அந்தச் சுலோகத்தை வைச்சே பல ஆண்டுகள் இந்த வண்டி ஓடியாச்சு.மக்களும் இதில் பயணிக்க முடியாமல் தடுமாறுகிறார்கள்.   இனி வண்டியை மாத்தும் காலம் வந்தாச்சு. வழி விட்டு விலகுங்கோ. 

On 9/5/2020 at 12:53, தமிழ் சிறி said:

தமிழ் தேசிய கூட்டமைப்பினர், மற்றவர்களைப் போல் அரசியல் சரணாகதி அடைந்தவர்கள் அல்லர்  என கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திகலாநிதி சிவமோகன் தெரிவித்துள்ளார்.

EXK2p1vXkAE_5PU?format=jpg%26name=medium&key=a97cc57151c8e668daa0423584a14c332e518ab37c0eca820f6647a3c92d2fb2

தமிழ் தேசிய கூட்டமைப்பு செய்வது சரணாகதி அரசியல் இல்லை.

தமிழ் தேசிய கூட்டமைப்பு செய்வது சிங்கள-பௌத்த அரச போர்க்குற்றவாளிகளிடம் தமிழ் மக்களின் உரிமைகளை அடகு வைத்து, அவர்களின் தமிழின அழிப்புக்கு துணை போய்க்கொண்டு அவர்களிடம் இரகசியமாக பெட்டி பெட்டியாக பணத்தைப் பெற்று தம்மை வளர்க்கும் அரசியல் என்கிறார் சிவமோகன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.