Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தீவிரமடையும் ஹுலுடனான முரண்பாடு; அரசமைப்புப் பேரவையில் முறையிட ஆணைக்குழு முடிவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தீவிரமடையும் ஹுலுடனான முரண்பாடு; அரசமைப்புப் பேரவையில் முறையிட ஆணைக்குழு முடிவு

Election-Commissionors-2-300x170.jpgசுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான பேராசிரியர் ரட்ணஜீவன் ஹுலின் செயற்பாடுகளில் அதிருப்தி கொண்டிருக்கும் ஆணைக்குழு, அரசமைப்புச் பேரவைக்கு முறைப்பாடுகளை முன்வைக்கத் தீர்மானித்திருப்பதாகத தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

அண்மைக்காலமாகப் பேராசிரியர் ஹுலின் செயற்பாடுகள் ஆணைக்குழுவுக்குப் பெரும் நெருக்கடிகளை தோற்றுவிப்பதன் காரணமாகவே இவ்வாறானதொரு முடிவை எடுக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாக ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டார்.

“சுயாதீனத் தேர்தல் ஆணைக்குழுவில் மூன்று உறுப்பினர்கள் உள்ளனர். ஆணைக்குழுவின் தவிசாளராக நான் நியமிக்கப்பட்டுள்ள ஆரம்ப காலம் தொட்டே பேராசிரியர் ரட்னஜீவன் ஹுலின் செயற்பாடுகள் எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதனவாகவே காணப்பட்டன. ஆனால் ஆணைக்குழு எடுக்கும் தீர்மானங்களுக்கு அவரது குறுக்கீடுகள் தடையாக அமையவில்லை.

ஆணைக்குழு உறுப்பினர்களுக்குரிய கூட்டுப் பொறுப்பைக் கூட பல சந்தர்ப்பங்களில் அவர் மீறியுள்ளார். இதனை நான் பல தடவை அவரிடம் எடுத்துக் கூறி இருக்கின்றேன். ஆனால் பேராசிரியர் ஹுல் ஆணைக்குழு தீர்மானங்களுக்கு முரண்பட்டவராகவே எப்போதும் காணப்படுகின்றார். அவர் ஒரு தலைப்பட்சமாக கருத்துக்களை ஆணைக்குழுவிலும் வெளியேயும் தெரிவித்து வருகின்றார். இதனால் தேர்தல்கள் ஆணைக்குழு பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் நாட்டு மக்கள் தேர்தல் ஆணைக்குழு மீதான நம்பிக்கையை இழக்கும் நிலை உருவாகி வருகின்றது.

சுயாதீன தேர்தல் ஆணைக்குழு எடுக்கும் தீர்மானங்கள், முடிவுகள் ஏகமனதாக இருக்க வேண்டும். முடிவுகளில் எவரொரு உறுப்பினரும் முரண்பட முடியாது. இந்த நிலையில் பேராசிரியர் ஹுல் ஆணைக்குழுக் கூட்டங்களில் பங்கேற்று எடுக்கப்படும் முடிவுகள் ஆலோசனைகள் தொடர்பில் முரண்பாடான கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார். ஆனால் இறுதியில் அவருக்கு ஆதரவு அளித்துவிட்டு வெளியே விமர்சித்து வருகின்றார். இந்த விமர்சனங்களால் ஆணைக்குழு பெரும் சவாலுக்கு முகம்கொடுக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அவரது இவ்வாறான செயற்பாடுகள் தொடருமானால் அது பெரும் பிரச்சினைக்கு வழி வகுக்கலாம் என அச்சமடைகின்றேம். ஆணைக்குழுவின் செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடையும் அச்சம் கூட எம்மிடம் காணப்படுகின்றது. இது தொடர்பில் அரசமைப்புப் பேரவைக்கு தெளிவுபடுத்திக் கடிதம் எழுதத் தீர்மானித்துள்ளேன்.”

http://thinakkural.lk/article/43125

  • கருத்துக்கள உறவுகள்

Mahinda-Deshapriya.jpg

ரட்னஜீவன் ஹூலின் செயற்பாடுகளில் அதிருப்தி – ஆணைக்குழுவிற்குள் மோதல்!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான பேராசிரியர் ரட்னஜீவன் ஹூலின் செயற்பாடுகளில் அதிருப்தி கொண்டிருக்கும் ஆணைக்குழு, அரசமைப்புச் பேரவைக்கு முறைப்பாடுகளை முன்வைக்கத் தீர்மானித்திருப்பதாகத தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

அண்மைக்காலமாகப் பேராசிரியர் ரட்னஜீவன் ஹூலின் செயற்பாடுகள் ஆணைக்குழுவுக்குப் பெரும் நெருக்கடிகளை தோற்றுவிப்பதன் காரணமாகவே இவ்வாறானதொரு முடிவை எடுக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாக ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டார்.

இது குறித்து மேலும் தெரிவித்துள்ள மஹிந்த தேசப்பிரிய, “சுயாதீனத் தேர்தல் ஆணைக்குழுவில் மூன்று உறுப்பினர்கள் உள்ளனர். ஆணைக்குழுவின் தவிசாளராக நான் நியமிக்கப்பட்டுள்ள ஆரம்ப காலம் தொட்டே பேராசிரியர் ரட்னஜீவன் ஹுலின் செயற்பாடுகள் எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதனவாகவே காணப்பட்டன. ஆனால் ஆணைக்குழு எடுக்கும் தீர்மானங்களுக்கு அவரது குறுக்கீடுகள் தடையாக அமையவில்லை.

ஆணைக்குழு உறுப்பினர்களுக்குரிய கூட்டுப் பொறுப்பைக் கூட பல சந்தர்ப்பங்களில் அவர் மீறியுள்ளார். இதனை நான் பல தடவை அவரிடம் எடுத்துக் கூறி இருக்கின்றேன். ஆனால் பேராசிரியர் ஹுல் ஆணைக்குழு தீர்மானங்களுக்கு முரண்பட்டவராகவே எப்போதும் காணப்படுகின்றார்.

அவர் ஒரு தலைப்பட்சமாக கருத்துக்களை ஆணைக்குழுவிலும் வெளியேயும் தெரிவித்து வருகின்றார். இதனால் தேர்தல்கள் ஆணைக்குழு பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் நாட்டு மக்கள் தேர்தல் ஆணைக்குழு மீதான நம்பிக்கையை இழக்கும் நிலை உருவாகி வருகின்றது.

சுயாதீன தேர்தல் ஆணைக்குழு எடுக்கும் தீர்மானங்கள், முடிவுகள் ஏகமனதாக இருக்க வேண்டும். முடிவுகளில் எவரொரு உறுப்பினரும் முரண்பட முடியாது. இந்த நிலையில் பேராசிரியர் ஹுல் ஆணைக்குழுக் கூட்டங்களில் பங்கேற்று எடுக்கப்படும் முடிவுகள் ஆலோசனைகள் தொடர்பில் முரண்பாடான கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்.

ஆனால் இறுதியில் அவருக்கு ஆதரவு அளித்துவிட்டு வெளியே விமர்சித்து வருகின்றார். இந்த விமர்சனங்களால் ஆணைக்குழு பெரும் சவாலுக்கு முகம்கொடுக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

அவரது இவ்வாறான செயற்பாடுகள் தொடருமானால் அது பெரும் பிரச்சினைக்கு வழி வகுக்கலாம் என அச்சமடைகின்றேம். ஆணைக்குழுவின் செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடையும் அச்சம் கூட எம்மிடம் காணப்படுகின்றது. இது தொடர்பில் அரசமைப்புப் பேரவைக்கு தெளிவுபடுத்திக் கடிதம் எழுதத் தீர்மானித்துள்ளேன்” என கூறியுள்ளார்.

http://athavannews.com/ரட்னஜீவன்-ஹூலின்-செயற்பா/

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஹுல் பனை செமையா முறியுது போல ... தலைகீழா நின்று ததுங்கினத்தோம் ஆடினாலும் சிங்களவனுக்கு எப்போதுமே தமிழன் பற தெமளு தான் 

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, அக்னியஷ்த்ரா said:

என்ன ஹுல் பனை செமையா முறியுது போல ... தலைகீழா நின்று ததுங்கினத்தோம் ஆடினாலும் சிங்களவனுக்கு எப்போதுமே தமிழன் பற தெமளு தான் 

பாமர மக்களின் வரிப்பணத்தில்  கற்று வசதி வாய்ப்புகள்  பெருகியதும் பெரும்பான்மையினத்துக்கு தோள்கொடுப்பதென்பது  பொன்னம்பலம் இராமநாதன் காலம் முதல் தொடர்கதை. எனவே தொடர்கதைகள் தொடர்கின்றன. மானம் கெட்டாலும் விசுவாசத்தை விடமாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு பதிவில் எழுதிய பதில்.. இங்கும் பொருந்தும் என்பதால்..

Quote

 

எனி தேர்தல் ஆணைக்குழுவை விட்டே துரத்தப் போகிறார்கள். தேவையா இது. சிங்களவனோடு ஒட்டி உறவாடினால்.. தமது தகுதிக்கு தலையில் வைச்சுக் கொண்டாடுவாங்கள் என்ற பழைய கற்பிதத்தில் இன்னும் நம்மவர்கள் சிலர். சும்.. சம்... மற்றும் இவர் உள்ளடங்க.

ஆனால் சிங்களவன்.. இவர்களை எல்லாம் வைக்க வேண்டிய இடத்தில் வைக்க நன்கு கற்றுக்கொண்டு விட்டான். இவர்கள் தான் இன்னும் சிங்களவனை சரியாகப் படிக்கவில்லை

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 ரஜனி திரணகம அவர்களது முறிந்தபனையை வெளியிட ரெட்ண ஜீவன் கூல் அவர்கள் பெரும் முனைப்புடன் அவ்வேளையில் ஈடுபட்டதாக எங்கோ ஒரு சதர்ப்பத்தில் வாசித்திருக்கிறேன் சிலவேளை அது யாழ் களத்திலாகவும் இருக்கலாம். 

அவருக்கே இந்த நிலைமை 

மெலதிக செய்தியாக 

இந்திய இராணுவ ஆக்கிரமிப்பின்போது ஏறக்குறைய முடக்கநிலையிலிருந்த திரணகம் அப்புத்தகத்தை வெளியிடுவதைப் பின்போட்டதாகவும் சிலருக்கு அம்முடிவு பிடிக்காமைல் போனதும் அவரது கொலைக்குக் காரணமாக இருக்கலாம் எனவும் கதை அடிபட்டது. தவிர யாழ் பல்கலையில் மருத்துவபீடத்தை மீழவும் திறக்க முயற்சித்தது அல்லது முழுமையாக இயங்கவைக்க காரணம் எஙிறார்கள் 
 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Elugnajiru said:

 ரஜனி திரணகம அவர்களது முறிந்தபனையை வெளியிட ரெட்ண ஜீவன் கூல் அவர்கள் பெரும் முனைப்புடன் அவ்வேளையில் ஈடுபட்டதாக எங்கோ ஒரு சதர்ப்பத்தில் வாசித்திருக்கிறேன் சிலவேளை அது யாழ் களத்திலாகவும் இருக்கலாம். 

அவருக்கே இந்த நிலைமை 

மெலதிக செய்தியாக 

இந்திய இராணுவ ஆக்கிரமிப்பின்போது ஏறக்குறைய முடக்கநிலையிலிருந்த திரணகம் அப்புத்தகத்தை வெளியிடுவதைப் பின்போட்டதாகவும் சிலருக்கு அம்முடிவு பிடிக்காமைல் போனதும் அவரது கொலைக்குக் காரணமாக இருக்கலாம் எனவும் கதை அடிபட்டது. தவிர யாழ் பல்கலையில் மருத்துவபீடத்தை மீழவும் திறக்க முயற்சித்தது அல்லது முழுமையாக இயங்கவைக்க காரணம் எஙிறார்கள் 
 

முறிந்த பனைகளில் கூடிய பங்காற்றி இருந்தது இவருடைய சகோதரர் ராஜன் கூல். அவர் தான் பின்னர் யாழ் பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கான மனித உரிமைகள் அமைப்பு என்று சந்திரிக்கா அம்மையார் காலத்தில் விடுதலைப்புலிகளினதும்.. யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினதும் செயற்பாடுகளை வன்மையாக வெறுத்து வெறுப்பூட்டும் அறிக்கைகளை மனித உரிமைகள் அமைப்பு என்ற ரீதியில் வெளியிட்டு வந்தனர்.

சூரியக் கதிர் நடவடிக்கையின் போது சிங்களப் படைகள் மேற்கொண்ட அத்தனை மனித உரிமை மீறல்களையும் புலிகள் மீது சுமத்தி சந்திரிக்கா அம்மையாரை வெண்புறா சமாதானத் தேவதையாகக் காட்டியது இவர்களே. இதில் ராஜன் கூல்.. மற்றும் சிறீதரனின் பங்கு மிக அதிகமாக இருந்தது. 

ஆனாலும்.. செம்மணி புதைகுழிகள் விவகாரம்.. கிருசாந்தி குமாரசாமி மற்றும் குடும்பத்தினர் படுகொலை.. நாகர்கோவில் பள்ளிக்கூடம் மீதான குண்டுவீச்சும் படுகொலையும்... யாழ்ப்பாண இடம்பெயர்வு.. வன்னி இடம்பெயர்வு என்பன இவர்களின் உண்மை முகத்தை மக்களுக்கு இனங்காட்டியது. 2002 சமாதான உடன்படிக்கையோடு புலிகளின் யாழ் மீள் பிரவேசத்தோடு.. இவர்கள் அடங்கிவிட்டார்கள்..தங்கள் ஆட்டத்தை.

இப்போ மீண்டும் 2009 மே க்குப் பின் கூல் குடும்பம்.. தமிழர்கள் தலையில் மிளகாய் அரைக்க கிளம்பி இருக்குது. ஏன் தான் படித்தும் இதுகளுக்கு புத்தி மத்தி என்பது மட்டும் புரியவில்லை. ஒருவேளை.. ஏதாவது விருதுகளுக்கு ஆசைப்படுகிறார்களோ தெரியவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் எங்கோ தவறு விடுவதாகத் தோன்றுகிறது.🤔

ராஜன் ஹூல், நீலன் திருச் செல்வம், லக்ஸ்மன் கதிர்காமர், ரட்ணஜீவன் ஹூல், DBS மற்றும் இன்னோரன்ன இவர்களின் சகாக்களின் கல்வி, சாதி, சமயம், இவர்கள் முன்னிறுத்தும் அல்லது சார்ந்திருக்கும் ideology போன்றவற்றையும் முக்கியமாக இவர்களின் கடந்தகாலச் செயற்பாடுகளையும் நோக்கினால் இவர்கள் யார் என்பதையும் அவர்களின்  உண்மையான நோக்கத்தையும் அறிய முடியும் என நம்புகிறேன். 🙂

தேர்தல்கள் ஆணைக்குவுக்கு ஹூல் சாபக்கேடு -மகிந்த அணி கடும் தாக்கு

"பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குச் சாபக்கேடாகும். இவரின் அரசியல் நிகழ்ச்சி நிரல் செயற்பாடுகளினால் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குப் பெரும் அவமானம் ஏற்பட்டுள்ளது."

இவ்வாறு மஹிந்த அணி குற்றம்சாட்டியுள்ளது.

"தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் எதிரணியினரின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப செயற்படுகின்றார். இவர் ஐக்கிய தேசியக் கட்சியின் செல்லப்பிள்ளையாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முகவராகவும் செயற்பட்டு வருகின்றார்.

இவர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குச் சாபக்கேடாகும். இவரின் அரசியல் நிகழ்ச்சி நிரல் செயற்பாடுகளினால் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குப் பெரும் அவமானம் ஏற்பட்டுள்ளது.

எனவே, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராகக் ஹுலை நியமித்த அரசமைப்புப் பேரவை அவருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

https://www.ibctamil.com/srilanka/80/143941

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.