Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“பேராசியர் ஹூலை சுதந்திரமாக செயற்பட வழிவிடுங்கள்” - ரிஷாட் பதியுதீன் கோரிக்கை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஊடகப்பிரிவு -

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசியர் ரத்னஜீவன் ஹூல் மீது, அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருவதை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும், சுயாதீன ஆணைக்குழு உறுப்பினர் மீதான இவ்வாறான செயற்பாடுகள் உடனடியாகக் கைவிடப்பட வேண்டுமெனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் ஹூலின் சுயாதீனத்தன்மையை கேள்விக்குறியாக்கும் வகையில் இவ்வாறு செயற்படுவது, ஜனநாயகத்தை கேலிக்குரியதாக்குகின்றதென அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பேராசிரியர் ஹூல் நேர்மையாகப் பணிபுரிபவர். அவரது நேர்மைத்தன்மையும் சுயாதீனச் செயற்பாடுகளும் பல்வேறு சந்தர்ப்பங்களில் நிரூபணமாக்கப்பட்டிருக்கின்றன. சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவருக்கு தேவையற்ற அழுத்தங்களையும், நிர்ப்பந்தங்களையும் பிரயோகிப்பது ஆரோக்கியமானதல்ல. எனினும், இவ்வாறான அழுத்தங்களுக்கு அவர் இதுவரையில் அடிபணியாமல், நேர்மையாக தமது கருத்துக்களை முன்வைப்பது வரவேற்கத்தக்கது.

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினரான ஹூல் மீது, வீணான அபாண்டங்களையும் பொய்யான, சோடிக்கப்பட்ட அவதூறுகளையும் பரப்பி வருவது, ஜனநாயக விழுமியங்களுக்கு ஏற்புடையதல்ல.

இதேவேளை, வெளிநாட்டிலிருந்து வந்த அவரது மகள், தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை பூர்த்தி செய்துள்ளதாக, சுகாதாரப் பணிப்பாளரும் இராணுவத் தளபதியும் சான்றிதழ் வழங்கியுள்ள நிலையிலும், அவரது தந்தையான ஹூலை 21 நாட்கள் தனிமைப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டனர்.

அதுமாத்திரமின்றி, “பேராசியர் ஹூல் பக்கச்சார்பாக செயற்படுகின்றார்” என்றும் குற்றஞ்சாட்டினர். இந்நிலையில், அவரை இலக்குவைத்து, தனிப்பட்ட ரீதியில் அழுத்தங்களை மேற்கொள்வது கைவிடப்பட வேண்டும்.

சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் ஒருவரை, சுதந்திரமாக இயங்க இடமளிக்குமாறு வேண்டுகோள் விடுப்பதாகவும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

http://www.importmirror.com/2020/06/blog-post_41.html

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஹூல் மீது, அழுத்தங்கள் பிரயோகிப்பதை வன்மையாகக் கண்டிப்பதாக ரிஷாட் தெரிவிப்பு

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசியர் ரட்ணஜீவன் ஹூல் மீது, அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருவதை வன்மையாகக் கண்டிப்பதாகவும், சுயாதீன ஆணைக்குழு உறுப்பினர் மீதான இவ்வாறான செயற்பாடுகள் உடனடியாகக் கைவிடப்பட வேண்டுமெனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

தேர்தல்கல் ஆணைக்குழுவின் உறுப்பினர் மீதான விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் அறிக்கை ஒன்றின் மூலம் கருத்து தெரிவித்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், பேராசிரியர் ஹூல் நேர்மையாகப் பணிபுரிபவர். அவரது நேர்மைத்தன்மையும் சுயாதீனச் செயற்பாடுகளும் பல்வேறு சந்தர்ப்பங்களில் நிஷரூபணமாக்கப்பட்டிருக்கின்றன.

சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவருக்கு தேவையற்ற அழுத்தங்களையும், நிர்ப்பந்தங்களையும் பிரயோகிப்பது ஆரோக்கியமானதல்ல.

எனினும், இவ்வாறான அழுத்தங்களுக்கு அவர் இதுவரையில் அடிபணியாமல், நேர்மையாக தமது கருத்துக்களை முன்வைப்பது வரவேற்கத்தக்கது. அவர் மீது, வீணான அபாண்டங்களையும் பொய்யான, சோடிக்கப்பட்ட அவதூறுகளையும் பரப்பி வருவது, ஜனநாயக விழுமியங்களுக்கு ஏற்புடையதல்ல.

இதேவேளை, வெளிநாட்டிலிருந்து வந்த அவரது மகள், தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை பூர்த்தி செய்துள்ளதாக, சுகாதாரப் பணிப்பாளரும் இராணுவத் தளபதியும் சான்றிதழ் வழங்கியுள்ள நிலையிலும், அவரது தந்தையான ஹூலை 21 நாட்கள் தனிமைப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டனர்.

அதுமாத்திரமின்றி, ‘பேராசியர் ஹூல் பக்கச்சார்பாக செயற்படுகின்றார்’ என்றும் குற்றஞ்சாட்டினர். அவரை இலக்குவைத்து, தனிப்பட்ட ரீதியில் அழுத்தங்களை மேற்கொள்வது கைவிடப்பட வேண்டும்.

சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் ஒருவரை, சுதந்திரமாக இயங்க இடமளிக்குமாறு வேண்டுகோள் விடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/ஹூல்-மீது-அழுத்தங்கள்-பி/

1 hour ago, nunavilan said:

ஹூல் மீது, அழுத்தங்கள் பிரயோகிப்பதை வன்மையாகக் கண்டிப்பதாக ரிஷாட் தெரிவிப்பு

ஒரு மெகா கொள்ளைக்காரன் ஹுலுக்கு ஆதரவா இறங்கியுள்ளது எதை காட்டுகிறது?

ஹூல் என்ற தமிழர், தமிழின ஆயுத போராட்டத்தை மௌனிக்கவைக்வும், தமிழின இனப்படுகொலைக்கும் சிங்கள இனவாதிகளுடன் இணைந்து துணைபோனவர். 

அதற்கான சன்மானமாக பதவியும் கிடைத்தது. இன்று, அதே இனவாத சிங்களம் அவரை தமிழர் என்று ஒடுக்குகின்றது. 

இவரை போலவே தமிழினத்தை விற்று வாழ அடுத்த தமிழ் கனவான்கள் ஆயத்தமாக உள்ளதுதான் சாபம். 
 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ampanai said:

ஹூல் என்ற தமிழர், தமிழின ஆயுத போராட்டத்தை மௌனிக்கவைக்வும், தமிழின இனப்படுகொலைக்கும் சிங்கள இனவாதிகளுடன் இணைந்து துணைபோனவர். 

அதற்கான சன்மானமாக பதவியும் கிடைத்தது. இன்று, அதே இனவாத சிங்களம் அவரை தமிழர் என்று ஒடுக்குகின்றது. 

இவரை போலவே தமிழினத்தை விற்று வாழ அடுத்த தமிழ் கனவான்கள் ஆயத்தமாக உள்ளதுதான் சாபம். 
 

தான் தமிழன் என்பதால் தன்னை எதிர்க்கிறார்கள் என்று கூல் சொல்லி இருக்கிறாராம்.கடைசி நேரத்தில் இதை உணர்ந்தது நல்லது தான்.

1 hour ago, uthayakumar said:

தான் தமிழன் என்பதால் தன்னை எதிர்க்கிறார்கள் என்று கூல் சொல்லி இருக்கிறாராம்.கடைசி நேரத்தில் இதை உணர்ந்தது நல்லது தான்.

ஹூல் அவர்கள் இரட்டை குடியுரிமை கொண்டுள்ளவர். அமெரிக்க நாடு சென்று சுகபோகமாக வாழ்ந்துவிடுவார்.
 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ampanai said:

ஹூல் அவர்கள் இரட்டை குடியுரிமை கொண்டுள்ளவர். அமெரிக்க நாடு சென்று சுகபோகமாக வாழ்ந்துவிடுவார்.
 

எங்கு வாழ்ந்தாலும் நாங்கள் எல்லோரும் இரண்டாம் தரப் பிரசைகள்தானே ☹️

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ampanai said:

ஹூல் என்ற தமிழர், தமிழின ஆயுத போராட்டத்தை மௌனிக்கவைக்வும், தமிழின இனப்படுகொலைக்கும் சிங்கள இனவாதிகளுடன் இணைந்து துணைபோனவர். 

அழித்தொழிப்பவனும், துரோகியும் தங்கள் வேலையை முடித்ததும்; அவர்களும்  அதே துரோகத்தால்   அழிக்கப்படுவார்கள். அவர்களை  அழிப்பவர்களும், அவர்களால் பயன் அடைந்தவர்களே. இதுதான் நிதர்சனம். இதை  உணர்ந்த  பின், இனம் மொழி என்கிற போர்வைக்குள் ஒளிந்து கொள்வார்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, satan said:

அழித்தொழிப்பவனும், துரோகியும் தங்கள் வேலையை முடித்ததும்; அவர்களும்  அதே துரோகத்தால்   அழிக்கப்படுவார்கள். அவர்களை  அழிப்பவர்களும், அவர்களால் பயன் அடைந்தவர்களே. இதுதான் நிதர்சனம். இதை  உணர்ந்த  பின், இனம் மொழி என்கிற போர்வைக்குள் ஒளிந்து கொள்வார்கள்.  

நிதர்சனம்.👍

எனது சகோதரன் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு ஏறக்குறைய ஐந்து வருடங்கள் உள்ளே இருந்து வந்தவர்.

அவர்,  இராணுவத்தால் கைது செய்யப்பட்ட பின்னர் இராணுவத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவோரை அவர்கள் நாய்கள் போன்றுதான் நடாத்துவார்களாம்.

காட்டிக் கொடுக்காத, ஒத்துழைக்காத தமிழரை எவ்வளவு சித்திரவதை செய்தாலும், கடுமையாகத் துன்புறுத்தினாலும் மிகுந்த மரியாதை தருவார்களாம்.

அதிலும் குறிப்பாக, அதிகாரிகள் மட்டத்திலிலுள்ளோர், இயக்கத்திலிருந்தவர்களுக்குத் தனி மரியாதை செலுத்துவார்கள் என்று கூறுவார். 

இது எனது அனுபவமும் கூட. 🙂

  • கருத்துக்கள உறவுகள்

அங்கால ஒருத்தர் ஹுல் சுதந்திரமாய் அரசியல் செய்ய முடியாமல் இருக்குது என்று கவலைப்படுறார் 

 

  • கருத்துக்கள உறவுகள்
On 4/6/2020 at 19:07, satan said:

அழித்தொழிப்பவனும், துரோகியும் தங்கள் வேலையை முடித்ததும்; அவர்களும்  அதே துரோகத்தால்   அழிக்கப்படுவார்கள். அவர்களை  அழிப்பவர்களும், அவர்களால் பயன் அடைந்தவர்களே. இதுதான் நிதர்சனம். இதை  உணர்ந்த  பின், இனம் மொழி என்கிற போர்வைக்குள் ஒளிந்து கொள்வார்கள்.  

இதுதான் சும்..சம்முக்கும் நடக்கும்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.