Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிக்கன் யாழ்ப்பாண மசாலா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

கோழிப்பிரியர்களுக்கு கொண்டாட்டமான குழம்பு........!  👍

  • கருத்துக்கள உறவுகள்

அட... இந்தக் கோழிக் கறிக்கு, தயிரும் போடுகிறார்.
இதை நம்பி, சமைக்கலாமா? :rolleyes:

ஆரும் செய்து பாத்திட்டு.... நல்லாய் 👍  இருக்கு எண்டு சொன்னால்தான்.... 
நாங்கள், கோழி வாங்கி..   சமைப்பம். :grin:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தமிழ் சிறி said:

அட... இந்தக் கோழிக் கறிக்கு, தயிரும் போடுகிறார்.
இதை நம்பி, சமைக்கலாமா? :rolleyes:

ஆரும் செய்து பாத்திட்டு.... நல்லாய் 👍  இருக்கு எண்டு சொன்னால்தான்.... 
நாங்கள், கோழி வாங்கி..   சமைப்பம். :grin:

இறைச்சியை தயிருடன் சேர்த்து மசாலாவில் ஊற விட்டு சமைப்பதால் இறைச்சியில் மசாலா நன்றாக ஊறி 😋:)இந்த கோழிக்கறி வித்தியாசமான சுவையாக இருக்கின்றது. நீங்கள் நிச்சயமாக சிக்கன் வாங்கி சமைத்து பாருங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, தமிழரசு said:

இறைச்சியை தயிருடன் சேர்த்து மசாலாவில் ஊற விட்டு சமைப்பதால் இறைச்சியில் மசாலா நன்றாக ஊறி 😋:)இந்த கோழிக்கறி வித்தியாசமான சுவையாக இருக்கின்றது. நீங்கள் நிச்சயமாக சிக்கன் வாங்கி சமைத்து பாருங்கள். 

ஐயா தமிழரசு,

நாம் தயிரினை சைவ சாப்பாட்டு வகையில் சேர்ப்பவர்கள். தயிர், பால், மோர் என்பன பூசையுடன் சேர்வதால், அதனை புனிதமாக கருதுவார்கள். மச்சத்துடன் நேரடியாக சேர்ப்பதில்லை. இலங்கையில் இஸ்லாமியர்கள் கூட பாவப்பதில்லை.

அதனால், மாமிசத்துடன் தயிர் சேர்த்து சமைக்கும் வழக்கம் யாழ்பாணத்திலோ, இலங்கையிலோ இல்லை.

ஆயினும் இது மொகலாயர் காலத்தில் இந்தியாவினும் நுழைந்தது. பிரியாணியுடன் தவழ்ந்து தெற்கே வந்தது.

தயிரில் உள்ள புளிப்புத்தன்மையினை, அதற்கு பதிலாக தேசிக்காய், விணாகிரி பயன் படுத்துவதன் மூலம், இலங்கையில் பெற்றுக் கொள்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Nathamuni said:

ஆயினும் இது மொகலாயர் காலத்தில் இந்தியாவினும் நுழைந்தது. பிரியாணியுடன் தவழ்ந்து தெற்கே வந்தது.

நாதமுனியர்.... இந்தியாவின் வடக்கே வந்த, 
மொகலாயரும், இஸ்லாமியரும்... வெவ்வேறு இனக் குழுமத்தை  சேர்ந்தவர்களா?
நான்... இருவரும் ஒரே இனத்தவர் என்று நினைத்துக் கொண்டு இருந்தேன்.  

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழரசு said:

இறைச்சியை தயிருடன் சேர்த்து மசாலாவில் ஊற விட்டு சமைப்பதால் இறைச்சியில் மசாலா நன்றாக ஊறி 😋:)இந்த கோழிக்கறி வித்தியாசமான சுவையாக இருக்கின்றது. நீங்கள் நிச்சயமாக சிக்கன் வாங்கி சமைத்து பாருங்கள். 

Werner Herzog Chickens GIF - Find & Share on GIPHY

தமிழரசு... இது, உங்களுக்கே நியாயமா?
உங்கள், பெயரில்... தமிழை வைத்துக் கொண்டு,
🐓கோழியை... சிக்கன் என்று ஆங்கிலத்தில் அழைப்பதை, 
மிக வன்மையாக.. கண்டிக்கின்றேன். :grin:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Nathamuni said:

ஐயா தமிழரசு,

நாம் தயிரினை சைவ சாப்பாட்டு வகையில் சேர்ப்பவர்கள். தயிர், பால், மோர் என்பன பூசையுடன் சேர்வதால், அதனை புனிதமாக கருதுவார்கள். மச்சத்துடன் நேரடியாக சேர்ப்பதில்லை. இலங்கையில் இஸ்லாமியர்கள் கூட பாவப்பதில்லை.

அதனால், மாமிசத்துடன் தயிர் சேர்த்து சமைக்கும் வழக்கம் யாழ்பாணத்திலோ, இலங்கையிலோ இல்லை.

ஆயினும் இது மொகலாயர் காலத்தில் இந்தியாவினும் நுழைந்தது. பிரியாணியுடன் தவழ்ந்து தெற்கே வந்தது.

தயிரில் உள்ள புளிப்புத்தன்மையினை, அதற்கு பதிலாக தேசிக்காய், விணாகிரி பயன் படுத்துவதன் மூலம், இலங்கையில் பெற்றுக் கொள்வார்கள்.

அந்நிய ஆக்கிரமிப்பின் உத்தியே உணவு பழக்க வழக்கங்களை மாற்றுதல் அந்த உத்தியில் தமிழரசும் சிக்கி சின்னா பின்னமாகிவிட்டார் ......😜 தயிருக்கு பதிலாக புளித்த கள்ளை பாவிக்கலாம் எனது கருத்து.😀
நாதமுனி உங்களின் கருத்தை நானும் ஏற்று கொள்கின்றேன். :)

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

நாதமுனியர்.... இந்தியாவின் வடக்கே வந்த, 
மொகலாயரும், இஸ்லாமியரும்... வெவ்வேறு இனக் குழுமத்தை  சேர்ந்தவர்களா?
நான்... இருவரும் ஒரே இனத்தவர் என்று நினைத்துக் கொண்டு இருந்தேன்.  

வெவேறு என்று நானும் சொல்லவில்லை.

இன்னும் சில ஆய்வாளரிடையே குழப்பம்.

மொகலாயர்கள் பாரசீகர்களா (ஈரானியர்கள் அல்லது துருக்கியர்கள்) அல்லது மொங்கோலியர்களா (சீனர்கள்) என்பதில். 

இல்லை, அவர்கள் துருக்கியர்கள் என்பர் சிலர். ஆனாலும், பார்பர் எனும் முதலாவது மொகலாய பேரரசர், மொங்கோலியர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், இது கலப்பு இனக்கூட்டம் தான் என்று சொல்லலாம்.

இந்த இத்தாலிய அம்மாவுக்கும், ராஜிவ் காந்திக்கும் பிறந்தவர் ராகுல் காந்தி. ராஜிவ் காந்தியின் அப்பா, பெரோஸ் காந்தி. பாரசீகர் (ஈரானியர் அல்லது துருக்கியர்).

இவர்கள் இந்தியாவை ஆள நாண்டு கொண்டு நிற்கிறார்கள். 

மொங்கோலிய மாவீரன் செங்கிஸ்கான், கஜகஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான், துர்க்மேஸ்கிஸ்தான், ஆப்கானிஸ்தான் என்று சுத்தி வந்து, அன்றைய வட பாரதத்தினை மிரட்டியவர். (இந்தியாவை அல்ல - அது பிரிட்டிஷ் காரர்கள் 18ம் நூறாண்டில் உருவாக்கியது)

சிலர் மொங்கோலியர்களும், பாரசீகர்களும் சேர்ந்தே படை சேர்த்து நுழைந்தார்கள் என்பர். வந்தவர்கள் ஆட்சியில் அமர்ந்து, மொகலாயர்கள் என்று தம்மை அழைத்துக் கொண்டார்கள்.

ஆனாலும், இந்த பலமிக்க மொகலாயர்கள் இஸ்லாமியர்களாகவே இருந்தார்கள். பிரிட்டிஷ்காரகர்களின் வருகையின் ஒரு நன்மை, இந்த மொகலாயர்கள் ஆட்சி தூக்கி வீசப்படதே ஆகும்.

உலக வரைபடத்தில் மொங்கோலியா..

https://www.google.co.uk/maps/place/Mongolia/@32.9303347,34.9432645,3z/data=!4m5!3m4!1s0x3627050669aa6d4b:0xe0dd213937e6e096!8m2!3d46.862496!4d103.846656?hl=en-GB&authuser=0

பலருக்கு தெரியாத ஒரு விடயம், பாகிஸ்தானின் தேசிய மொழி உருது. இது பாரசீகமும் (ஈரானிய), சமஸ்கிருதமும் கலந்து உருவாகிய மொழி. ஆனாலும் பாகிஸ்தானிய தேசிய கீதம் பாரசீக மொழியிலேயே உள்ளது.

உலக வரலாறு ஒரு பெரும் ஆச்சரியமானது.

ஓட்டோமான் பேரரசு கிறிஸ்தவ புனித தலமான ஜெருசலேமினை கட்டுப்பாடில் வைத்துக்கொண்டே, மத்திய தரைக்கடலை ஆதிக்கத்தில் வைத்துக் கொண்டே, பாரதத்தினுள் நுழைந்து மொகலாயர்களாக ஆட்சி செய்து கொண்டே, போர்த்துக்கல், ஸ்பெயின் போன்ற பல நாடுகளின் கரையோரப்பிரதேசங்களையும் பிடித்துக் கொண்டது.

கிறிஸ்தவ, இஸ்லாமிய யுத்தமானது சிலுவை யுத்தம் என்ற தீவிரமாகி, போர்த்துகேயர்கள், மறுவலமாக வந்து, தென் இந்தியாவினை அடைந்ததுடன் வேகமெடுத்து, முஸ்லிம்கள் இருபக்கமும் (கிழக்கிலும், மத்திய தரைக்கடல் பகுதியிலும்) ஒடுக்கப்படுவதில் முடிந்தது.

இன்றும், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மீது பெரும் வெறுப்புடன் இருப்பதன் அடிப்படைக் காரணமே இந்த தொடரும் சிலுவையுத்தம்தான்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

மொங்கோலியர்களின் வருகையைத் தடுக்கத்தான் சீனப்பெருஞ்சுவர் கட்டினார்கள் என்று படித்த ஞாபகம்.....! 

🤔

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
29 minutes ago, Nathamuni said:

வெவேறு என்று நானும் சொல்லவில்லை.

இன்னும் சில ஆய்வாளரிடையே குழப்பம்.

மொகலாயர்கள் பாரசீகர்களா (ஈரானியர்கள் அல்லது துருக்கியர்கள்) அல்லது மொங்கோலியர்களா (சீனர்கள்) என்பதில். 

இல்லை, அவர்கள் துருக்கியர்கள் என்பர் சிலர். ஆனாலும், பார்பர் எனும் முதலாவது மொகலாய பேரரசர், மொங்கோலியர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், இது கலப்பு இனக்கூட்டம் தான் என்று சொல்லலாம்.

இந்த இத்தாலிய அம்மாவுக்கும், ராஜிவ் காந்திக்கும் பிறந்தவர் ராகுல் காந்தி. ராஜிவ் காந்தியின் அப்பா, பெரோஸ் காந்தி. பாரசீகர் (ஈரானியர்).

இவர்கள் இந்தியாவை ஆள நாண்டு கொண்டு நிற்கிறார்கள். 

மொங்கோலிய மாவீரன் செங்கிஸ்கான், கஜகஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான், துர்க்மேஸ்கிஸ்தான், ஆப்கானிஸ்தான் என்று சுத்தி வந்து, அன்றைய வட பாரதத்தினை மிரட்டியவர். (இந்தியாவை அல்ல - அது பிரிட்டிஷ் காரர்கள் 18ம் நூறாண்டில் உருவாக்கியது)

சிலர் மொங்கோலியர்களும், பாரசீகர்களும் சேர்ந்தே படை சேர்த்து நுழைந்தார்கள் என்பர். வந்தவர்கள் ஆட்சியில் அமர்ந்து, மொகலாயர்கள் என்று தம்மை அழைத்துக் கொண்டார்கள்.

ஆனாலும், இந்த பலமிக்க மொகலாயர்கள் இஸ்லாமியர்களாகவே இருந்தார்கள். பிரிட்டிஷ்காரகர்களின் வருகையின் ஒரு நன்மை, இந்த மொகலாயர்கள் ஆட்சி தூக்கி வீசப்படதே ஆகும்.

உலக வரைபடத்தில் மொங்கோலியா..

https://www.google.co.uk/maps/place/Mongolia/@32.9303347,34.9432645,3z/data=!4m5!3m4!1s0x3627050669aa6d4b:0xe0dd213937e6e096!8m2!3d46.862496!4d103.846656?hl=en-GB&authuser=0

பலருக்கு தெரியாத ஒரு விடயம், பாகிஸ்தானின் தேசிய மொழி உருது. இது பாரசீகமும் (ஈரானிய), சமஸ்கிருதமும் கலந்து உருவாகிய மொழி. ஆனாலும் பாகிஸ்தானிய தேசிய கீதம் பாரசீக மொழியிலேயே உள்ளது.

சரி.....யாழ்ப்பாண மசாலாவுக்குள்ளை  ராஜீவ் காந்தியின்ரை வரலாறை கிண்ட வெளிக்கிட்டாச்சா...:grin:

Werner Herzog Chickens GIF - Find & Share on GIPHY

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, suvy said:

மொங்கோலியர்களின் வருகையைத் தடுக்கத்தான் சீனப்பெருஞ்சுவர் கட்டினார்கள் என்று படித்த ஞாபகம்.....! 

🤔

குளிர் நாடாக இருந்த மொங்கோலியாவின்,   மொங்கோலியர்களின் ஒரே தொழில் வேறு நாடுகளுக்கு போய், திருடிக்கொண்டு வந்து வாழ்க்கையினை ஓட்டுவது. இதன் காரணமாக உடலை, பார்ப்பவர்கள் பயப்படும்படியாக, பெரும் கட்டுக்கோப்புடன் வைத்திருந்தார்கள். படை கிளப்பாத காலங்களில், விளையாடி பொழுதினை போக்கினார்கள். விளையாடி முடித்ததும், ஆட்டு இறைச்சியினை உண்பதே வாடிக்கை.

இவர்கள் போலவே, அந்த காலத்தில் இன்றய ஸ்கேண்டிநாவியன் நாடுகளில் இருந்து கிளம்பி வந்து, பிரிட்டனில் தொடர்ந்துஆட்டையைனை போட்டுகொண்டு போனவர்கள் வைக்கிங்குகள். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

Werner Herzog Chickens GIF - Find & Share on GIPHY

தமிழரசு... இது, உங்களுக்கே நியாயமா?
உங்கள், பெயரில்... தமிழை வைத்துக் கொண்டு,
🐓கோழியை... சிக்கன் என்று ஆங்கிலத்தில் அழைப்பதை, 
மிக வன்மையாக.. கண்டிக்கின்றேன். :grin:

அந்நியனின் ஆக்கிரமிப்புக்குள் தமிழரசும் அகப்பட்டு விட்டான் அநியாயமாக ......🤔 இப்போது கொரன்டீன் என்பதால் இந்திய தமிழ் படங்கள் நிறைய பார்த்திருக்கின்றேன் அதன் தாக்கமாக இருக்கலாம்😅😀 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

கிறிஸ்தவ, இஸ்லாமிய யுத்தமானது சிலுவை யுத்தம் என்ற தீவிரமாகி, போர்த்துகேயர்கள், மறுவலமாக வந்து, தென் இந்தியாவினை அடைந்ததுடன் வேகமெடுத்து, முஸ்லிம்கள் இருபக்கமும் (கிழக்கிலும், மத்திய தரைக்கடல் பகுதியிலும்) ஒடுக்கப்படுவதில் முடிந்தது.

அருமையான.... மிக நீண்ட விளக்கத்திற்கு, நன்றி நாதமுனி. 🙂

இதுக்கு,  கட்டாயம் பச்சை குத்த வேணும்.  ஆனால் தற்போது... கைவசம் ஒரு பச்சையும் இல்லை. எல்லாவற்றையும், இன்று காலை குத்தி முடித்து விட்டேன்.

நாளை சனிக்கிழமை, உங்களுக்கு என்று ஒரு பச்சை இப்பவே... “ரிசேர்வ்” பண்ணி வைத்துள்ளேன். 🙂

  • கருத்துக்கள உறவுகள்
On ‎18‎-‎06‎-‎2020 at 21:18, Nathamuni said:

ஐயா தமிழரசு,

நாம் தயிரினை சைவ சாப்பாட்டு வகையில் சேர்ப்பவர்கள். தயிர், பால், மோர் என்பன பூசையுடன் சேர்வதால், அதனை புனிதமாக கருதுவார்கள். மச்சத்துடன் நேரடியாக சேர்ப்பதில்லை. இலங்கையில் இஸ்லாமியர்கள் கூட பாவப்பதில்லை.

அதனால், மாமிசத்துடன் தயிர் சேர்த்து சமைக்கும் வழக்கம் யாழ்பாணத்திலோ, இலங்கையிலோ இல்லை.

ஆயினும் இது மொகலாயர் காலத்தில் இந்தியாவினும் நுழைந்தது. பிரியாணியுடன் தவழ்ந்து தெற்கே வந்தது.

தயிரில் உள்ள புளிப்புத்தன்மையினை, அதற்கு பதிலாக தேசிக்காய், விணாகிரி பயன் படுத்துவதன் மூலம், இலங்கையில் பெற்றுக் கொள்வார்கள்.

அப்படிப் பார்த்தால் பசுப்பாலையும் மச்ச கறிக்குள்  விட கூடாது ...இங்க அதைத் தானே செய்யினம் 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

சரி.....யாழ்ப்பாண மசாலாவுக்குள்ளை  ராஜீவ் காந்தியின்ரை வரலாறை கிண்ட வெளிக்கிட்டாச்சா...:grin:

Werner Herzog Chickens GIF - Find & Share on GIPHY

குமாரசாமி அண்ணை... 
சில விடயங்களை...  வித்தியாசமான திரிகளில், பகிரும் போது....
அந்தக் கருத்துக்கள்... இன்னும் பலரை, சென்று  சேரும்.

சமையல் குறிப்பு பார்க்க... வந்த  ஒருவர்,
தனது, சுற்று வட்டாரத்தையே.... மாற்றலாம். என்ற நம்பிக்கை. :)

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ரதி said:

அப்படிப் பார்த்தால் பசுப்பாலையும் மச்ச கறிக்குள்  விட கூடாது ...இங்க அதைத் தானே செய்யினம் 

நோ, நோ....

நாம, உங்க சமயலே செய்யிறம்?

உதை இவர் யாழ்பாண சிக்கின் எண்டவர் எல்லோ...  அங்க மச்ச்துக்குள்ள, தயிரை போட்டா, அம்மம்மா சாப்பாட்டு கோப்பையை தூக்கி தலையில கொட்டி துளைஞ்சு போடுவா...

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

நோ, நோ....

நாம, உங்க சமயலே செய்யிறம்?

உதை இவர் யாழ்பாண சிக்கின் எண்டவர் எல்லோ...  அங்க மச்ச்துக்குள்ள, தயிரை போட்டா, அம்மம்மா சாப்பாட்டு கோப்பையை தூக்கி தலையில கொட்டி துளைஞ்சு போடுவா...

யாழ்ப்பாண சமையல் என்று தலைப்பு போட்டது பிழை தான் ..."வெளிநாட்டு கோழிக்கறி" என்று தலைப்பில் போட்டு இருக்கலாம்  

  • 3 weeks later...

சாப்பாட்டில் சுத்தம் சுகாதாரம், சுவை , ஊட்டச்சத்துக்கள் ஆகியவையே முக்கியமானது. புனிதம் என்ற எதுவும் இல்லை. வட இந்திய உணவுகளான “சிக்கின் ரிக்கா மசாலா”, “தண்டூரி சிக்கன்” என்பவை கோழி இறைச்சிக்குள் தயிர் விட்டு ஊறவைத்து செய்யப்படுபவை. மிகவும் சுவை மிகுந்தவை. 

ஆனால் சைவ உணவையே சாப்பிட்டு வந்தவர்களுக்கு மிகவும் சுவை  உடைய அசைவ உணவுகளும் அருவருப்பை தரும் என்பதை ஏற்றுக்கொள்ளுகிறேன். ஏனெனில் இலங்கையில் சைவ உணவு மட்டுமே சாப்பிடும் குடும்பத்தில்  இருந்து வந்தவன் நான்.  இலங்கையில் இருக்குமவரை சைவ உணவை தவிர அசைவம் வாயிலும் வைத்ததில்லை. ஐரோப்பா வர  எனது உணவுப்பழக்கமும் மாறிவிட்டது. உணவுப்பழக்கம் என்னை மற்ற நண்பர் களிடம் இருந்து  அன்னியப்படுத்தியதால்,  அதை மாற்றுவதற்காக நானாக விரும்பி அசைவ உணவை  சாப்பிட்டு பழகினேன். இருப்பினும் கடலுணவு வகைகள் இப்போதும் சிறிது அருவருப்பு தான். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, tulpen said:

சாப்பாட்டில் சுத்தம் சுகாதாரம், சுவை , ஊட்டச்சத்துக்கள் ஆகியவையே முக்கியமானது. புனிதம் என்ற எதுவும் இல்லை. வட இந்திய உணவுகளான “சிக்கின் ரிக்கா மசாலா”, “தண்டூரி சிக்கன்” என்பவை கோழி இறைச்சிக்குள் தயிர் விட்டு ஊறவைத்து செய்யப்படுபவை. மிகவும் சுவை மிகுந்தவை. 

ஆனால் சைவ உணவையே சாப்பிட்டு வந்தவர்களுக்கு மிகவும் சுவை  உடைய அசைவ உணவுகளும் அருவருப்பை தரும் என்பதை ஏற்றுக்கொள்ளுகிறேன். ஏனெனில் இலங்கையில் சைவ உணவு மட்டுமே சாப்பிடும் குடும்பத்தில்  இருந்து வந்தவன் நான்.  இலங்கையில் இருக்குமவரை சைவ உணவை தவிர அசைவம் வாயிலும் வைத்ததில்லை. ஐரோப்பா வர  எனது உணவுப்பழக்கமும் மாறிவிட்டது. உணவுப்பழக்கம் என்னை மற்ற நண்பர் களிடம் இருந்து  அன்னியப்படுத்தியதால்,  அதை மாற்றுவதற்காக நானாக விரும்பி அசைவ உணவை  சாப்பிட்டு பழகினேன். இருப்பினும் கடலுணவு வகைகள் இப்போதும் சிறிது அருவருப்பு தான். 

நீங்கள் ஐயர் குடும்பமாக இருந்து ஜெகோவாவிற்கு மாறிவிட்டீகள்.😎

8 minutes ago, குமாரசாமி said:

நீங்கள் ஐயர் குடும்பமாக இருந்து ஜெகோவாவிற்கு மாறிவிட்டீகள்.😎

அளவுக்கு அதிகமாக கடவுளையும் இந்து/ சைவ  மத  மூடப்பழங்களையும் நம்பும் மூடர்கள்தான் ஜெகோவோ போன்ற மூடத்தனங்களையும்  நம்பி போவார்கள். எனக்கு அது பொருந்தாது நண்பரே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, tulpen said:

அளவுக்கு அதிகமாக கடவுளையும் இந்து/ சைவ  மத  மூடப்பழங்களையும் நம்பும் மூடர்கள்தான் ஜெகோவோ போன்ற மூடத்தனங்களையும்  நம்பி போவார்கள். எனக்கு அது பொருந்தாது நண்பரே.

நீங்கள் ஊரில் இருக்கும் போது கோவில்களுக்கு போனீர்களா?
பாடசாலையில் காலையில் இறைவணக்கம் இருந்திருக்குமே? அப்போது வெளிநடப்பு செய்தீர்களா?

3 minutes ago, குமாரசாமி said:

நீங்கள் ஊரில் இருக்கும் போது கோவில்களுக்கு போனீர்களா?
பாடசாலையில் காலையில் இறைவணக்கம் இருந்திருக்குமே? அப்போது வெளிநடப்பு செய்தீர்களா?

பாடசாலையில் இறைவணக்கத்திற்கு வெளிநடப்பு செய்தால் அடிவாங்கவேண்டி வந்ததிருக்கும்.  பாடசாலைக்காலத்தில் நல்லூர் திருவிழாவின்போது  அடிக்கடி கோவிலுக்கு  போவதுண்டு. முருகன் தரிசனத்திற்காக அல்ல அம்மன் தரிசனத்திற்காக. 😀

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 minutes ago, tulpen said:

பாடசாலையில் இறைவணக்கத்திற்கு வெளிநடப்பு செய்தால் அடிவாங்கவேண்டி வந்ததிருக்கும்.  பாடசாலைக்காலத்தில் நல்லூர் திருவிழாவின்போது  அடிக்கடி கோவிலுக்கு  போவதுண்டு. முருகன் தரிசனத்திற்காக அல்ல அம்மன் தரிசனத்திற்காக. 😀

எதோ ஒருவழியில் எம்பெருமான் முருகன் தங்களுக்கும் உதவியிருக்கின்றார்......ஐ மீன் அம்மன் தரிசனத்திற்கு........:grin:

  • கருத்துக்கள உறவுகள்

spacer.pngspacer.png

On 17/6/2020 at 22:31, தமிழ் சிறி said:

அட... இந்தக் கோழிக் கறிக்கு, தயிரும் போடுகிறார்.
இதை நம்பி, சமைக்கலாமா? :rolleyes:

ஆரும் செய்து பாத்திட்டு.... நல்லாய் 👍  இருக்கு எண்டு சொன்னால்தான்.... 
நாங்கள், கோழி வாங்கி..   சமைப்பம். :grin:

தயிர் போட்டுத்தான் பிரியாணி செய்வது சிறி. சில கறிகள் செய்முறைகளுக்கு தயிர் போட்டு செய்யும்போது நல்ல ருசி. ஆனால் அவர்கள் சொன்ன  முறையின்படி செய்யவேண்டும். முந்தி பிந்தி தயிரை போட்டால் எல்லாம் பிழைத்துவிடும். நிச்சயம் சமைத்து பாருங்கள். இப்பதான் மகன் மாருக்கு சிக்கன் பிரியாணி செய்ய நிறைய தயிர் நானே செய்து எடுத்து வைத்திருக்கிறேன்  

Edited by nilmini

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.