Jump to content

கெர்சன்பழமே?எனிக்கிடைக்குமா எங்கள் பழம்..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று(25.06.20) எங்கள் வீட்டில் இருந்து (நெதர்லாந்து) 20 கிலோமீற்றர் தூரத்தில்அமைந்துள்ள கெர்சன்பழமரத்தோட்டம் (நெதர்லாந்து மொழியில்  Kers ஆங்கிலத்தில்Cherry) 

போய் நாங்களே புடுங்கி பழத்துக்கான பணம் கொடுத்து வந்தோம். வரும்போது  ஊரின் பழய நினைவுகள் வந்து என்னை வாட்டியது

 

 

கெர்சன்பழமே?எனிக்கிடைக்குமா எங்கள் பழம்..!

🍒

கைப்பான வேம்பதிலும் 

கனி மஞ்சல் 

பழம் இனிக்கும் 

வெய்யில் எரிகையிலும்

வேம்பேறிப் பழம் தின்ற..

அக்கால நினைவு வந்து

அழுகிறேன் இவ்வேளை.

 

கரும்பனையின் 

பனம் பழத்தை

காடியினில் 

குளைத் தெடுத்து

விரல் இடுக்கில் 

தேன் வடிய

விரும்பி உண்ட..

அக்கால நினைவு வந்து

அழுகிறேன் இவ்வேளை.

 

ஈச்சம் பழக் காலம் 

இனிப்பொழுக

எறும்பு மொய்க்கும்

கூசாமல் கை விட்டு 

கூரிய முற்கள் குத்தி

உதிரம் வடிந்தாலும் 

உணர்வினிக்க பழம் தின்ற..

அக்கால நினைவு வந்து

அழுகிறேன் இவ்வேளை.

 

இரும்பாக.. 

வளர்ந்து நிற்க்கும் 

பாலை மரம் கூட

பாலொட்ட தேனினிக்கும்.

கிளிநொச்சி பாதையிலே 

கிளை முறித்து பழம் தின்ற..

 அக்கால நினைவு வந்து

அழுகிறேன் இவ்வேளை.

 

நவராத்திரி விழாக்காலம்

நாவல் பழுத்துதிரும்

வன்னிமண்னில்

மரம் வளைத்து

வாயூற உண்ட பழம்..

அக்கால நினைவு வந்து

அழுகிறேன் இவ்வேளை.

 -பசுவூர்க்கோபி-

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பசுவூர்க்கோபி said:

நேற்று(25.06.20) எங்கள் வீட்டில் இருந்து (நெதர்லாந்து) 20 கிலோமீற்றர் தூரத்தில்அமைந்துள்ள கெர்சன்பழமரத்தோட்டம் (நெதர்லாந்து மொழியில்  Kers ஆங்கிலத்தில்Cherry) 

போய் நாங்களே புடுங்கி பழத்துக்கான பணம் கொடுத்து வந்தோம். வரும்போது  ஊரின் பழய நினைவுகள் வந்து என்னை வாட்டியது

 Kirschen plus Wasser = Durchfall und Bauchschmerzen ...

Kirschen - hofreiter - Beeren Selberpflücken München BeerenCafé ...

பசுவூர்  கோபி.... இந்த வெக்கைக்கு, "கெர்சன்பழ" தலைப்பில் ஆரம்பித்து...
ஊர் பழங்களையும், கொண்டு வந்து நினைவூட்டிய, உங்கள் கவிதையை மிக ரசித்தேன். :)

ஜேர்மனியிலும் ...  Kirschen பழங்கள், இப்போ பழுக்கின்ற நேரம்.
அந்த நேரம்.. எல்லா மரங்களும், ஒரேயடியாக பழங்களை தந்து விட்டு, 
அமைதியாக... மிகுதி கோடைக் காலத்துக்கு, 
நிழலை தரும், அழகிய மரமாக   இருக்கும். 

வீட்டில் எல்லோரும்... விரும்பி உண்ணும் பழம் என்பதால்...
இந்தக் கிழமை.... இரண்டு கிலோ பழம் கடையில் வாங்கி வந்தேன்.
இங்கு... ஒரு கிலோ, 4 ஐரோ விற்கிறார்கள்.
நெதர்லாந்தில்,  என்ன விலை விற்கிறார்கள்என அறிய ஆவலாக உள்ளது. 😄

டிஸ்கி: ஒறிஜினல் தமிழன்... விலையை விசாரிப்பதில், ஆர்வம் உள்ளவன் கண்டியளோ.... :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோடைகாலத்துக்குரிய பழம் . பழத்துடன் ஊர் நினைவைக்  மீட்டும்  கவிதை மிகமிக அழகு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தமிழ் சிறி said:

 Kirschen plus Wasser = Durchfall und Bauchschmerzen ...

Kirschen - hofreiter - Beeren Selberpflücken München BeerenCafé ...

பசுவூர்  கோபி.... இந்த வெக்கைக்கு, "கெர்சன்பழ" தலைப்பில் ஆரம்பித்து...
ஊர் பழங்களையும், கொண்டு வந்து நினைவூட்டிய, உங்கள் கவிதையை மிக ரசித்தேன். :)

ஜேர்மனியிலும் ...  Kirschen பழங்கள், இப்போ பழுக்கின்ற நேரம்.
அந்த நேரம்.. எல்லா மரங்களும், ஒரேயடியாக பழங்களை தந்து விட்டு, 
அமைதியாக... மிகுதி கோடைக் காலத்துக்கு, 
நிழலை தரும், அழகிய மரமாக   இருக்கும். 

வீட்டில் எல்லோரும்... விரும்பி உண்ணும் பழம் என்பதால்...
இந்தக் கிழமை.... இரண்டு கிலோ பழம் கடையில் வாங்கி வந்தேன்.
இங்கு... ஒரு கிலோ, 4 ஐரோ விற்கிறார்கள்.
நெதர்லாந்தில்,  என்ன விலை விற்கிறார்கள்என அறிய ஆவலாக உள்ளது. 😄

டிஸ்கி: ஒறிஜினல் தமிழன்... விலையை விசாரிப்பதில், ஆர்வம் உள்ளவன் கண்டியளோ.... :grin:

எனது கவிதை பார்த்து மிகரசித்தீர்கள் எனும்போது மகிழ்வுடன் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா

நெதர்லாந்து கடைகளில் கெர்சன் பழம் கிலோ 6ஐரோ புடுங்குமிடத்தில் நல்ல பழங்கள் சாப்பிடலாம் கொண்டுவரும் பழத்திற்கு 4ஐரோ (தற்போது) கவிதைக்குள் படங்கள் போடமுடியாதுள்ளது  விபரம் தருவீர்களா  உங்கள் ஆதரவுக்கு மீண்டும் நன்றிகள்  ஐயா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, நிலாமதி said:

கோடைகாலத்துக்குரிய பழம் . பழத்துடன் ஊர் நினைவைக்  மீட்டும்  கவிதை மிகமிக அழகு

எனது கவிதை பார்த்து ஊக்கம் தரும் போது மகிழ்சியடைகிறேன் கவியே எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.🍒

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பழைய நினைவுகளை கவிதை மூலம் மீட்டிவீட்டீர்கள், இனி எப்ப வருமோ அந்த காலம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பசுவூர்க்கோபி said:

எனது கவிதை பார்த்து மிகரசித்தீர்கள் எனும்போது மகிழ்வுடன் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா

நெதர்லாந்து கடைகளில் கெர்சன் பழம் கிலோ 6ஐரோ புடுங்குமிடத்தில் நல்ல பழங்கள் சாப்பிடலாம் கொண்டுவரும் பழத்திற்கு 4ஐரோ (தற்போது) கவிதைக்குள் படங்கள் போடமுடியாதுள்ளது  விபரம் தருவீர்களா  உங்கள் ஆதரவுக்கு மீண்டும் நன்றிகள்  ஐயா

பசுவூர்க்கோபி அவர்களே.... 
படங்களை இணைப்பது பற்றி... இன்னும் கொஞ்ச நேரத்தில், 
இங்கிலாந்தில் இருந்து... ஒராள் வந்து, அழகிய விளக்கம் கொடுப்பார்.
இப்படியான விடயங்களுக்கு, அவர் தான்.... மிகச் சிறந்த ஆள்.

அதுவரை.. அவர் பெயரை, உங்கள் ஊகத்திற்கு விட்டு விடுகின்றேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, பசுவூர்க்கோபி said:

நவராத்திரி விழாக்காலம்

நாவல் பழுத்துதிரும்

வன்னிமண்னில்

மரம் வளைத்து

வாயூற உண்ட பழம்..

அக்கால நினைவு வந்து

அழுகிறேன் இவ்வேளை.

எனக்கு இந்த பழத்தை பார்த்தால் ஊர் நாவல்பழம்தான் ஞாபகத்துக்கு வரும்.

15 hours ago, தமிழ் சிறி said:

 

பசுவூர்  கோபி.... இந்த வெக்கைக்கு, "கெர்சன்பழ" தலைப்பில் ஆரம்பித்து...
ஊர் பழங்களையும், கொண்டு வந்து நினைவூட்டிய, உங்கள் கவிதையை மிக ரசித்தேன். :)

ஜேர்மனியிலும் ...  Kirschen பழங்கள், இப்போ பழுக்கின்ற நேரம்.
அந்த நேரம்.. எல்லா மரங்களும், ஒரேயடியாக பழங்களை தந்து விட்டு, 
அமைதியாக... மிகுதி கோடைக் காலத்துக்கு, 
நிழலை தரும், அழகிய மரமாக   இருக்கும். 

வீட்டில் எல்லோரும்... விரும்பி உண்ணும் பழம் என்பதால்...
இந்தக் கிழமை.... இரண்டு கிலோ பழம் கடையில் வாங்கி வந்தேன்.
இங்கு... ஒரு கிலோ, 4 ஐரோ விற்கிறார்கள்.
நெதர்லாந்தில்,  என்ன விலை விற்கிறார்கள்என அறிய ஆவலாக உள்ளது. 😄

டிஸ்கி: ஒறிஜினல் தமிழன்... விலையை விசாரிப்பதில், ஆர்வம் உள்ளவன் கண்டியளோ.... :grin:

சிறித்தம்பி நான் ஜேர்மனிக்கு வந்த புதிசிலை கிர்சன் பழம் சம்பளத்துக்கு புடுங்கப்போறனான்.அவர்கள் தரும் கூடையை நிரப்பிக்குடுத்தால் 10 ஈரோ தருவார்கள்.புடுங்குற சாட்டிலை வாய்க்குள்லை போட்டதும் எக்கச்சக்கம்.😎
போன செவ்வாய்க்கிழமை ஏர்ப்சன் புடுங்க போனனான். 2ஈரோ குடுத்துட்டு ஒருசட்டி பழம். கெமிக்கல் இல்லாதது.

er.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பசுவூர்க்கோபி said:

கவிதைக்குள் படங்கள் போடமுடியாதுள்ளது  விபரம் தருவீர்களா 

கவிதை நன்றாக உள்ளது😀

—-

இணையத்தில் உள்ள படங்கள் என்றால் அவற்றைக் கொப்பி பண்ணிவிட்டு, கருத்து எழுதும் பெட்டியின் அடியில் உள்ள Insert other media ஐ கிளிக் பண்ணி Insert Image from URL ஐ கிளிக் பண்ணி, வரும் பெட்டியில் paste செய்தால் படத்தின் direct link இடப்படும். HTML என்பதால் படமாகவே காட்டும்.

சொந்தப்படம் என்றால் கருத்துக்களத்தின் மேலே உள்ள + ஐ கிளிக் செய்து Gallery Image ஐ தெரிவு செய்து ஒரு அல்பம் உருவாக்கலாம் அல்லது ஏற்கனவே உள்ள அல்பத்தைப் பாவிக்கலாம் அதில் வேண்டிய படங்களை தரவேற்றலாம்.

பின்னர் கருத்து எழுதும் பெட்டியில் Insert other media ஐ கிளிக் பண்ணி Insert existing attachment  ஐ கிளிக் பண்ணி படங்களை உள்ளிடலாம்.

—-
உதாரணத்திற்கு:

செர்ரி பழத்தை கூகிளில் தேடியபோது பல படங்கள் காட்டியது. நான் தெரிவு செய்தது

https://www.bbcgoodfood.com/howto/guide/health-benefits-cherries

ஸ்மார்ட்ஃபோன் என்றால் படத்தில் தொடர்ந்து அழுத்தினால் (3D touch) , copy என்ற தெரிவு வரும். அதை சொடுக்கினால் படத்தின் இணைப்பு clipboard இல் வரும்.

பின்னர் cursor ஐ படம் போடவேண்டிய இடத்திற்கு நகர்த்திவிட்டு, கருத்து எழுதும் பெட்டியின் அடியில் உள்ள Insert other media ஐ கிளிக் பண்ணி Insert Image from URL ஐ கிளிக் பண்ணி, வரும் பெட்டியில் paste செய்தால் படத்தின் direct link இடப்படும். HTML என்பதால் படமாகவே காட்டும்.

 

spacer.png

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, உடையார் said:

பழைய நினைவுகளை கவிதை மூலம் மீட்டிவீட்டீர்கள், இனி எப்ப வருமோ அந்த காலம் 

நன்றிகள் கவியே எங்கிருந்தாலும் ஊரின் நினைவே இனிக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

large.0-02-0a-0b7184562006c37203d5a3a9b720c26083379ef3528031df926109f432484c87_1c6d9da8abe9de.jpg.e3b046fdb708421fc92793beb990b61d.jpglarge.Large-Cherry-12x12_w1-1024x1024.jpg.afc7242cc4bb77dc88d40a17bb137b68.jpg

நேற்று(25.06.20) எங்கள் வீட்டில் இருந்து (நெதர்லாந்து) 20 கிலோமீற்றர் தூரத்தில்அமைந்துள்ள கெர்சன்பழமரத்தோட்டம் (நெதர்லாந்து மொழியில்  Kers ஆங்கிலத்தில்Cherry) 

போய் நாங்களே புடுங்கி பழத்துக்கான பணம் கொடுத்து வந்தோம். வரும்போது  ஊரின் பழய நினைவுகள் வந்து என்னை வாட்டியது

 

 

கெர்சன்பழமே?எனிக்கிடைக்குமா எங்கள் பழம்..!

🍒

கைப்பான வேம்பதிலும் 

கனி மஞ்சல் 

பழம் இனிக்கும் 

வெய்யில் எரிகையிலும்

வேம்பேறிப் பழம் தின்ற..

அக்கால நினைவு வந்து

அழுகிறேன் இவ்வேளை.

 

கரும்பனையின் 

பனம் பழத்தை

காடியினில் 

குளைத் தெடுத்து

விரல் இடுக்கில் 

தேன் வடிய

விரும்பி உண்ட..

அக்கால நினைவு வந்து

அழுகிறேன் இவ்வேளை.

 

ஈச்சம் பழக் காலம் 

இனிப்பொழுக

எறும்பு மொய்க்கும்

கூசாமல் கை விட்டு 

கூரிய முற்கள் குத்தி

உதிரம் வடிந்தாலும் 

உணர்வினிக்க பழம் தின்ற..

அக்கால நினைவு வந்து

அழுகிறேன் இவ்வேளை.

 

இரும்பாக.. 

வளர்ந்து நிற்க்கும் 

பாலை மரம் கூட

பாலொட்ட தேனினிக்கும்.

கிளிநொச்சி பாதையிலே 

கிளை முறித்து பழம் தின்ற..

 அக்கால நினைவு வந்து

அழுகிறேன் இவ்வேளை.

 

நவராத்திரி விழாக்காலம்

நாவல் பழுத்துதிரும்

வன்னிமண்னில்

மரம் வளைத்து

வாயூற உண்ட பழம்..

அக்கால நினைவு வந்து

அழுகிறேன் இவ்வேளை.

 -பசுவூர்க்கோபி-

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கெர்சன் பழத்துக்கு  ஒரு கெத்தான கவிதை கோபி ........!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு ஒன்றுதானே, ஏன் திருப்பி பதிந்தீர்கள்.. 🤔

படம்தான் புதுசாக இருக்கு. மேலுள்ள நான்கு பழங்களை நினைத்தாலே வாயுறுது இப்பவும் 

 

உங்கள் படமா? நன்றாக இருக்கு பழ மரத்துடன்

சுற்றுலா போகும் போது, நானும் இப்படிதான் சேட் போடுவது வழக்கம் 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, உடையார் said:

இரண்டு ஒன்றுதானே, ஏன் திருப்பி பதிந்தீர்கள்.. 🤔

படம்தான் புதுசாக இருக்கு. மேலுள்ள நான்கு பழங்களை நினைத்தாலே வாயுறுது இப்பவும் 

 

உங்கள் படமா? நன்றாக இருக்கு பழ மரத்துடன்

சுற்றுலா போகும் போது, நானும் இப்படிதான் சேட் போடுவது வழக்கம் 😎

நன்றிகள் கவியே இது எனது படம்தான்.இன்றுதான் படங்கள் போடமுயன்றேன் தெரியாமல் திரும்பவும் கவிதை பதிவாகிவிட்டது அழிப்பது சற்று கடினமாகவுள்ளது

30 minutes ago, suvy said:

கெர்சன் பழத்துக்கு  ஒரு கெத்தான கவிதை கோபி ........!   👍

உங்கள் வாழ்த்துக்கு உளமார்ந்த நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பசுவூர்க்கோபி said:

நன்றிகள் கவியே இது எனது படம்தான்.இன்றுதான் படங்கள் போடமுயன்றேன் தெரியாமல் திரும்பவும் கவிதை பதிவாகிவிட்டது அழிப்பது சற்று கடினமாகவுள்ளது

உங்கள் வாழ்த்துக்கு உளமார்ந்த நன்றிகள்.

மோகண்ணாவிற்கு பெரிய மனது, ஒன்றாக சேர்த்துவிட்டார் ; தொடர்ந்து பகிருங்கள் உங்கள் கவிதைகளை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, உடையார் said:

மோகண்ணாவிற்கு பெரிய மனது, ஒன்றாக சேர்த்துவிட்டார் ; தொடர்ந்து பகிருங்கள் உங்கள் கவிதைகளை. 

நன்றிகள். மோகன் அண்னாவுக்கும் உளமார்ந்த நன்றிகள்.தொடர்ந்து எழுதுவேன் உங்கள் அனைவரின் ஆதரவோடு... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பசுவூர்க்கோபி said:

நன்றிகள். மோகன் அண்னாவுக்கும் உளமார்ந்த நன்றிகள்.தொடர்ந்து எழுதுவேன் உங்கள் அனைவரின் ஆதரவோடு... 

கோபி, உங்களுக்கு யாழ் கள உறவுகளின் ஆதரவு என்றுமே உண்டு, தொடர்ந்து பகிருங்கள், பல வாசகர்கள் உங்கள் கவிதையின் அடிமைகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

உங்கள் பிள்ளையின் கண்களில் தெரியும் உணர்ச்சி வேற Level, சிறந்த எதிர் காலமுண்டு👍👍👍. மனதார பாரட்டுகின்றேன், நன்றாக வருவார் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/6/2020 at 12:39, கிருபன் said:

கவிதை நன்றாக உள்ளது😀

—-

இணையத்தில் உள்ள படங்கள் என்றால் அவற்றைக் கொப்பி பண்ணிவிட்டு, கருத்து எழுதும் பெட்டியின் அடியில் உள்ள Insert other media ஐ கிளிக் பண்ணி Insert Image from URL ஐ கிளிக் பண்ணி, வரும் பெட்டியில் paste செய்தால் படத்தின் direct link இடப்படும். HTML என்பதால் படமாகவே காட்டும்.

சொந்தப்படம் என்றால் கருத்துக்களத்தின் மேலே உள்ள + ஐ கிளிக் செய்து Gallery Image ஐ தெரிவு செய்து ஒரு அல்பம் உருவாக்கலாம் அல்லது ஏற்கனவே உள்ள அல்பத்தைப் பாவிக்கலாம் அதில் வேண்டிய படங்களை தரவேற்றலாம்.

பின்னர் கருத்து எழுதும் பெட்டியில் Insert other media ஐ கிளிக் பண்ணி Insert existing attachment  ஐ கிளிக் பண்ணி படங்களை உள்ளிடலாம்.

—-
உதாரணத்திற்கு:

செர்ரி பழத்தை கூகிளில் தேடியபோது பல படங்கள் காட்டியது. நான் தெரிவு செய்தது

https://www.bbcgoodfood.com/howto/guide/health-benefits-cherries

ஸ்மார்ட்ஃபோன் என்றால் படத்தில் தொடர்ந்து அழுத்தினால் (3D touch) , copy என்ற தெரிவு வரும். அதை சொடுக்கினால் படத்தின் இணைப்பு clipboard இல் வரும்.

பின்னர் cursor ஐ படம் போடவேண்டிய இடத்திற்கு நகர்த்திவிட்டு, கருத்து எழுதும் பெட்டியின் அடியில் உள்ள Insert other media ஐ கிளிக் பண்ணி Insert Image from URL ஐ கிளிக் பண்ணி, வரும் பெட்டியில் paste செய்தால் படத்தின் direct link இடப்படும். HTML என்பதால் படமாகவே காட்டும்.

 

spacer.png

 

 

எனக்கு தேவையான விபரங்களை தந்ததிற்கு மிக்க நன்றிகள் கவியே

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை சனாதிபதி தேர்தலுக்கும், இந்தியா தேர்தலுக்கும் வித்தியாசமிருக்கிறது. இந்தியா தேர்தலில் ஒருவருக்கே வாக்களிக்க முடியும். இலங்கை சனாதிபதி தேர்தலில் ஒருவருக்கு மட்டும் அல்லது 1,2,3 விருப்ப வாக்குகள் வாக்களிக்கலாம். 50% வித வாக்குக்கு மேல் ஒருவருக்கும் வாக்குகள் கிடைக்காத பட்சத்தில்  இறுதியாக வந்தவரை நீக்கிவிட்டு அவருக்கு வாக்களித்தவர்களின் 2 வது வாக்குகள்  சேர்க்கப்படும். 50% இன்னும் வராவிட்டால் இரூப்பவர்களில் கடைசியாக இருப்பரை நீக்கிவிட்டு அவருக்கு வாக்களித்தவர்களின் 2 வது வாக்குகளை சேர்த்து பார்ப்பார்கள். இப்படியே கடைசியாக மிஞ்சும் இருவரில் 50% க்கு மேல் வருபவர் தெரிவு செய்யப்படுவார். ஆனால் இதுவரை நடந்த தேர்தல்களில் முதலாவது வாக்குகலிலேயே வேட்பாளர் ஒருவர் 50%க்கு வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். இலங்கையில்  பலர் இம்முறையை கண்டு கொள்வதில்லை. சிவாஜிலிங்கத்துக்கு முதல் வாக்குகளையும் இரண்டாவது மூன்றாவது வாக்குகளில் பொன்சேகாவுக்கும் வாக்களித்திருக்கலாம். அவுஸ்திரேலியா தேர்தல்களிலும் 1,2,3,4 என்று வாக்களிக்கலாம். ஆனால் இங்கு பல தமிழர்கள் தொழில்கட்சிஅல்லது லிபரல் கட்சிக்கே முதலாவது வாக்காகவாக்களிக்கிறார்கள்.  ஆனால் நான் 2009 இல் எமக்காக அதிகளவு குரல் குடுத்த பசுமைக்கட்சிக்கே முதலாவது வாக்கை வழங்கி 2 வதாக பெரிய கட்சியான லிபரல் அல்லது தொழில்கட்சிக்கு வாக்களிப்பதுண்டு.
    • இதுவரை போட்டியில் கலந்துகொண்டவர்கள்  1) goshan_che 2)பாலபத்ர ஓணாண்டி 3)புரட்சிகர தமிழ்த்தேசியன் 4)சுவி 5)நிழலி 6)கிருபன் 7)ஈழப்பிரியன் 8)தமிழ்சிறி 9)கந்தையா57 10)வாத்தியார்
    • பிற்சேர்க்கை III வெஸ்டேர்ன் மெடிசின் Vs வெதமாத்தையா  அடுத்த பாகத்தை கொடுக்க பிந்தியமைக்கு மன்னிக்கவும். படங்களை போட்டது திரியை எழுத்தில் இருந்து படங்கள் நோக்கி திருப்பி விட்டது. ————— இலங்கை போவதில் ஒரு வசதி - கொஞ்சம் காசை செலவழித்து ஒரு புல் மெடிக்கல் செக்கப் செய்துகொண்டு வரலாம். அதுவும் நவலோக்க, டேர்டன்ஸ், ஆசிரி, லங்கா ஹொஸ்பிட்டல் போன்ற முதல் தர வைத்தியசாலைகளிலேயே £230 க்குள் ஒரு டோட்டல் மெடிக்கல் செக்கப்பை செய்துகொள்ளலாம்.. முன்னர் ஒரு காலம் இருந்தது யூகே NHS என்றால் உலகிற்கே முன்மாதிரி, ஆனால் இப்போ அப்படி இல்லை. எல்லாம் 14 வருட வலதுசாரி மகாராசாக்களின் ஆட்சி தந்த “முன்னேற்றம்”. இப்போதெல்லாம் ஜீ பி யிடம் அப்பாயின்மெண்ட் வாங்குவதை விட நோயில் சாகலாம் என்ற நிலை. அப்படியே ஜி பி யை சந்திக்க முடிந்தாலும், அவர் refer பண்ணி ஒரு ஸ்கான் எடுப்பதற்குள் சித்திரகுப்தன் சீட்டை கிழிக்க ரெடியாகி விடுவார். அத்தோடு இலவசம் என்பதால் கண்ட மாதிரி speculative டெஸ்டுகளும் எடுக்க refer பண்ண மாட்டார்கள். முதலில் தண்ணீர் குடியுங்கள், ரெஸ்ட் எடுங்கள் என்றே சொல்லி அனுப்புவார்கள். ஆகவே உடனடி கவனிப்பு தேவை எனில், ஒன்றில் கணிசமான அளவு பணத்தை கட்டி யூகேயில் தனியார் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்து வைக்க வேண்டும்.  அல்லது….இலங்கை அல்லது இந்தியா (பல்லு கட்ட போலந்து, துருக்கி) போன்ற நாடுகளுக்கு போய் இப்படி ஒரு செக்கப்பை செய்து வரலாம். இந்த ரிப்போர்ட்டுகள் எல்லாம் எடுக்க ஒரு நாள் செலவாகும். பின்னர் இதை வைத்து ஒரு கன்சல்டண்டுடன் உங்களுக்கு அப்பாயின்மெண்ட்டும் தருவார்கள். இதில் நன்மை என்னவென்றால் - இந்த டெஸ்டுகளில் ஏதாவது கோளாறாக கட்டினால் - அதை நேரடியாக இங்கே ஜி பி யிடம் காட்டும் போது - நோயின் தார்பரியம் அறிந்து வேலை கட…. கட…. என நடக்கும். எனக்கு தெரிந்த சிலர் முன்பே இவ்வாறு செய்திருந்தாலும், இதுவரை நான் செய்ததில்லை. இந்த முறை வயதும் 45 இன் அடுத்த பக்கத்துக்கு போய் விட்டதாலும், கடந்த 3 வருடத்தில் ஜி பி க்கள் தந்த அனுபவத்தினாலும் - ஒரு டெஸ்டை செய்ய முடிவு செய்தேன். இந்தியா போல் அல்லாது, இலங்கையில் health tourism த்தின் பெறுமதி இன்னும் வடிவாக அறியப்படவில்லை. விலைகளும் உள்ளூர் ஆட்களை குறிவைத்தே உள்ளன (வடை, கொத்து, சிகிரியா டிரிக்ஸ் இன்னும் இங்கே வரவில்லை).  ஒவ்வொரு ஆஸ்பத்திரியும், பல வகை வகையான packages வைத்திருக்கிறார்கள்.  ஒன்றிற்கு மூன்றாக தெரிந்த வைத்தியர்களிடம் கதைத்து - ஒரு package ஐ நானும் ஒரு முண்ணனி வைத்தியசாலையில் தெரிந்து கொண்டேன். டெஸ்ட் எடுக்கும் நாள் அதிக நிகழ்வுகள் இன்றி கழிந்தது. ஒவ்வொரு உடல் பகுதிக்குமுரிய இடத்துக்கு அந்த டெஸ்டுக்காக போகும் போது, அவை உள்ளூர் வாசிகளால் நிரம்பியே இருந்தது. எந்த நாட்டிலும், எந்த நிலையிலும் உணவுக்கு அடுத்து நல்ல பிஸினஸ் மருத்துவம் என்பது புரிந்தது. எல்லாம் முடிந்து கன்சல்டேசன் போனால் -கன்சல்டன் - எடுத்த எடுப்பிலேயே எந்த நாடு என்று கேட்டார் - டாக்டரிடம் பொய் சொல்ல கூடாதாமே? ஆகவே எனது “யாழ்பாணம்/மாடகளப்பு/வன்னி/இந்தியா” உத்தியை கைவிட்டு யூகே என உண்மையை சொன்னேன். கண்ணாடிக்கு மேலால் ஒரு பார்வை பார்த்து விட்டு, நான் அங்கேதான் மேற்படிப்பு படித்தேன், “இப்படி ஒரு முழுமையான டெஸ்டை அங்கே உன்னால் செய்யவே முடியாது அல்லவா”, என அவருக்கு ஏலவே தெரிந்த விடயத்தை என்னிடம் உறுதி செய்தார். என்ன இருந்தாலும் என் குஞ்சல்லவா? விட்டு கொடுக்க முடியாதே? ஆம், ஆனால் இங்கும் அரச வைத்தியசாலையில் இப்படி ஒரு முழுமையான டெஸ்டை செய்யமாட்டீர்கள்தானே என்றேன். உனக்கு வாயில் கொலஸ்டிரோல் கூட என்பதை போல் ஒரு பார்வை பார்த்து விட்டு, ரிப்போர்ட்டுக்கான வியாக்கியானத்தை ஆரம்பித்த வைத்தியர். 40 நிமிட கன்சல்டேசனின் பின், ஏலவே தெரிந்த விடயங்களை தவிர வேறு ஏதும் கோளாறு இல்லை என்பது நிம்மதியாக இருந்தாலும்…. இவ்வளவு செலவழித்துள்ளேனே…ஒன்றும் இல்லையா என இன்னொரு மனம் மொக்குத்தனமாய் ஒரு கணம் சிந்திக்கவும் செய்தது🤣. கடைசியாக…எனி அதர் குவெஸ்சன்ஸ் க்கு வைத்தியர் வர, என் நெடுநாள் உபாதையான சயாடிக்கா கால் வலியை பற்றி சொன்னேன். அக்கம் பக்கம் பார்த்த வைத்தியர், மெல்லிய குரலில் “இதுக்கு இங்கே உள்ள வெதமாத்தையாதான் சரி” என கூற, யாரையாவது ரெக்கெமெண்ட் பண்ண முடியுமா என நான் அவரை விட மெல்லிய குரலில் கேட்டேன். கன்சல்டேசன் அறையை விட்டு கிளம்பும் போது எனது போனில் ஒரு பிரபல வெதமாத்தையாவின் தொடர்பிலக்கமும், விலாசமும் சேமிக்கப்பட்டிருந்தது. ———————- ஆவலோடு காத்திருங்கள்! பிற்சேர்க்கை IV வெதமாத்தையாவும் ஆவா குரூப்பும்
    • 1994 இல் மயிலாப்பூர் சட்டமன்றத்துக்கும் இன்னுமொரு சட்டமன்றத்துக்கும் இடைக்கால தேர்தல் நடைபெற்றது.  யாராவது MLA காலமானால் அல்லது வேறு சில காரணங்களுக்காக இடைக்கால தேர்தல் நடைபெறும். தமிழகம் முழுவதும் தேர்தல் நடைபெறாமல் ஒன்று இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறுவதினால் முக்கிய தலைவர்களை இத்தொகுதிகளில் அடிக்கடி காணலாம். நான் அடையார் , Besant நகர் பகுதியில் எனக்கு தெரிந்தவர்கள் வீடுகளுக்கு செல்வதுண்டு. அப்பொழுது பல தலைவர்களை பார்த்திருக்கிறேன். பாட்டாளி மக்கள் தலைவர் இராமதாஸ் சென்ற வாகனத்தில் மன்சூர் அலிகானை வந்திருந்தார். ‘ பிரபாகரன் கிரேட், இராவணன் கிரேட்’ என்று அவர் உரையாற்றினார்.  வைகோவுடன் எஸ் எஸ் சந்திரன் வந்திருந்தார்.  நடிகர் எஸ் எஸ் சந்திரன் மதிமுகவில் அப்பொழுது இருந்தார் கலைஞ்சர் கருணாநிதிஐக்கண்டதும் பல ஆதரவாளர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பெயர் சூட்ட சொன்னார்கள். ஒரு பிள்ளைக்கு ‘ கனிமொழி’ என்று பெயர் சூட்டினார். இன்னுமொரு பிள்ளைக்கு ‘இளவரசன்’ என்று பெயர் சூட்ட, ‘இவர் பெண் குழந்தை’ என்று குழந்தையின் தகப்பனார் சொல்ல ‘இளவரசி’,என்று கலைஞர் பெயர் சூட்டினார்.  ‘அவர்கள் லட்டினுள் மோதிரம் வைத்து குடுக்கிறார்கள் ( அதிமுக கட்சி) . வாங்குங்கள் . ஆனால் வாக்குகளை எமக்கு அளியுங்கள்’ என்றார். பெசன்ட் நகர் பேருந்து நிலையத்தருகில் துவிச்சக்கரவண்டியில் வரும்போது காவல்துறையினர் என்னையும் சேர்ந்து பலரை மறித்து நிறுத்தினார்கள். சில நிமிடங்களில் ‘அதோ அந்த பறவை போல’  பாடலை Band குழு ஒன்று இசை அமைக்க வாகனம் ஒன்று வந்தது. பின்னால் வந்த இன்னுமொரு வாகனத்தில் ஜெயலலிதா அவர்கள் துப்பாக்கிகள் ஏந்திய பாதுகாப்பு படைகளுடன் வந்து உரையாற்றினார். காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர் வாழப்பாடி ராமமூர்த்தியின் வீட்டின் அருகே செல்லும் போது எப்போதும்கண்டும் காணாமல் மாதிரி செல்வார்.  ஆனால் தேர்தல் என்றதினால் கை குப்பி என்னை பார்த்து வணங்கினார். தமிழக பத்திரிகைகளில் தேர்தல் செய்திகள் வாசிப்பதுண்டு. இதனால் ஓரளவு ஆர்வம்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.