Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரூ. 21 கோடி மர்மம் என்ன...?" | கருத்தாடல் | விமலேஸ்வரி ஸ்ரீகாந்தரூபன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரூ. 21 கோடி மர்மம் என்ன...?" | கருத்தாடல் | விமலேஸ்வரி ஸ்ரீகாந்தரூபன்

 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நுணா! உதயனின் கம்பீரமான தமிழுக்காகவே இன்னொரு தடவை பார்க்கலாம்!

இந்தக் காணொளியில் facts அலசப் பட்டிருப்பதால் பலர் மௌனமாகக் கடந்து போய்விடுவர் என்று நினைக்கிறேன்!😎

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Justin said:

facts அலசப் பட்டிருப்பதால் பலர் மௌனமாகக் கடந்து போய்விடுவர் என்று நினைக்கிறேன்

உள்ளடங்கலாக நீங்களும் 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, பெருமாள் said:

உள்ளடங்கலாக நீங்களும் 

கேட்டீர்களா? தானே பார்க்காத உறுதி செய்யாத ஒன்றை எப்படி பத்திரிகை அறிக்கையாக்கியிருக்கிறார் என்று? 

இதில் சொல்ல என்ன இருக்கிறது? அவரது காவியக் கதாபாத்திரங்களை மட்டும் வைத்துக் கொன்டு பின்னியிருக்கும் கற்பனையே talks in volumes!

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Justin said:

கேட்டீர்களா? தானே பார்க்காத உறுதி செய்யாத ஒன்றை எப்படி பத்திரிகை அறிக்கையாக்கியிருக்கிறார் என்று? 

இதில் சொல்ல என்ன இருக்கிறது? அவரது காவியக் கதாபாத்திரங்களை மட்டும் வைத்துக் கொன்டு பின்னியிருக்கும் கற்பனையே talks in volumes!

பார்வைகள்  வித்தியாசப்படும் .

நெருப்பில்லாமல் புகையாது நீங்கள்  என்னடாவென்றால் ஒன்றுமே நடக்கவில்லை என  நிறுவமுற்படுவது பிழையான ஒன்று.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பெருமாள் said:

பார்வைகள்  வித்தியாசப்படும் .

நெருப்பில்லாமல் புகையாது நீங்கள்  என்னடாவென்றால் ஒன்றுமே நடக்கவில்லை என  நிறுவமுற்படுவது பிழையான ஒன்று.

அது சரி, புகை மட்டும் தான் கண்டோம், நெருப்பை இது வரை கண்டறிய முடியவில்லை என்ற நிலைக்காவது இறங்கி வந்திருக்கிறீர்கள்! 😎

இன்னொரு விடயத்தையும் இங்கே குறிப்பிடலாம்: ஒரு நிபுணத்துவம் கொண்ட ஊடகவியலாளர் எவ்வாறு ஒரு smokescreen ஐ அகற்றி தரவுகளைத் தேடும் வகையிலான கேள்விகளைக் கேட்கிறார் என்று கவனித்தீர்களா? இது தான் ஊடகங்கள் அரசியல் வாதிகளிடம் செய்ய வேண்டியது! இதை ஐ.பி.சி போன்ற ரொய்லற் ஊடகங்களில் பணி புரிவோர் பார்த்துப் பழக வேணும்! 

  • கருத்துக்கள உறவுகள்

இதில (குரலில்) என்ன கம்பீரம் உள்ளது என்று தெரியவில்லை. கம்பீரமான குரல்கள் பல உள்ளனவே!

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Nathamuni said:

இதில (குரலில்) என்ன கம்பீரம் உள்ளது என்று தெரியவில்லை. கம்பீரமான குரல்கள் பல உள்ளனவே!

ஓம் நாதம், கம்பீரக் குரல் என்பதற்கும் கம்பீரத் தமிழ் என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்! இந்த வித்தியாசத்தை வைத்து உங்களோடு உரோமம் புடுங்கிக் கொண்டிருக்கும் அளவுக்கு எனக்கு நேரமில்லை! நீங்கள் தனியே புடுங்க வேணும் என வேண்டுகிறேன்! 😇

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, Justin said:

ஓம் நாதம், கம்பீரக் குரல் என்பதற்கும் கம்பீரத் தமிழ் என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்! இந்த வித்தியாசத்தை வைத்து உங்களோடு உரோமம் புடுங்கிக் கொண்டிருக்கும் அளவுக்கு எனக்கு நேரமில்லை! நீங்கள் தனியே புடுங்க வேணும் என வேண்டுகிறேன்! 😇

உங்கள் எழுத்தும்... கருத்தும்..... படித்த பண்பாளருக்குரியதாக தெரியவில்லையே, ஏன் ?

எனது கருத்து உங்களுக்கான பதிலாக தரப்படவில்லை என்பதை கவனித்தீர்களா முதலில்.

கமபீரத்தமிழ், எழுத்தில் இல்லாதவிடத்தே, குரல் வளத்தின் கம்பீரத்துடனே வெளிப்படும் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம். உங்கள் பார்வையில் அவரது குரல் கம்பீரமாக தெரிவது, எனது பிரச்சணை அல்லவே.

எனது கருத்தினை பதிவு செய்யும் உரிமை எனக்கு உள்ளது என்பதில் உங்கள் பிரச்சணை தான் என்ன?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தா சம்பந்தம் இல்லாத இடத்திலை  கூட சுமத்திரனின் படித்த அறிவு குன்சுகளை   கோப படுத்துமளவுக்கு   ஐபிசி காரர்கள் என்ன எழுதியிருப்பார்கள் ?🤔

 

  • கருத்துக்கள உறவுகள்

இதே உதயன் சுமத்திரனைப் பேட்டி கண்ட பொழுது பல இடங்களில் சுமத்திரன் அவரை மிரட்டினார்.பேட்டியை இடைநடுவில் நிறுத்திவிடுவேன் என்றெல்லாம் மிரட்டினார்.

  • கருத்துக்கள உறவுகள்

திருமதி விமலேஸ்வரி  சிறீகாந்தரூபனவர்களது துணிச்சல் பாராட்டிற்குரியது. தமிழரசுக் கட்சியின் நீண்டகால உறுப்பினர்போல் தெரிகிறது. நியாயமான வினாக்களைத் தனது தலைமையை  நோக்கிவைத்துள்ளார். ஆனால் நியாயம் கிடைக்காதென்பதை தேசியப் பட்டியலில் அம்பிகா சற்குணநாதனின் பெயர் முதலிடத்தில்  இடம்பெற்றிருப்பதைவைத்தே பார்க்க முடியகிறது. அதேவேளை  நீதிக்கான குரல்களை தொடர்ந்தும் அடக்குவதில் அதிகாரவர்கங்கள் வெற்றி பெற்றேவருவதற்குச் சாட்சியாகக் கணடாவில் இருந்து முடிவுகொடுத்தவரே இருக்கிறார்.பெண்ணாக இருந்தால் நியாயத்தைக் கேட்கக் கூடாதா? இதுபோன்ற காடைத்தனமான கருத்தகளை ஊடகங்கள் கண்டிக்க வேண்டாமா?  

உதயனவர்கள் சுமந்திரனது நியாயங்களை தெளிவுபடுத்துவதுபோல் ஏன் விமலேஸ்வரி தரப்பு நியாயங்களை தெளிவுபடுத்த முனையவில்லை. ஊடகங்கள் நடுவுநிலைமையென்பதே பொய். உண்மையின் பக்கம் நிற்றலே மெய்நிலையாகும்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nochchi said:

திருமதி விமலேஸ்வரி  சிறீகாந்தரூபனவர்களது துணிச்சல் பாராட்டிற்குரியது. தமிழரசுக் கட்சியின் நீண்டகால உறுப்பினர்போல் தெரிகிறது. நியாயமான வினாக்களைத் தனது தலைமையை  நோக்கிவைத்துள்ளார்.

இந்த பேட்டியில்,  21 கோடி ரூபா பற்றிய தகவல் தனக்கு எப்படி கிடைத்தது என்று திருமதி விமலேஸ்வரி  சிறீகாந்தரூபன் விளக்கமாக கூறியிருக்கிறார். திருகோணமலையில் இடம் பெற்ற நிகழ்வு ஒன்றுக்கு போன இருவர் (அவர்களின் பெயர்களையும் கூறியுள்ளார்.) திரு குகதாசனின் கணணியில் அவர் காட்டிய தகவலை பின்னர் திருமதி விமலேஸ்வரி  சிறீகாந்தரூபனுக்கு தொலைபேசியில் கூறியுள்ளனர். அந்த தகவலின் படி 212 கோடி ரூபா என்றே பார்த்த இருவரும் கூறியுள்ளனர்.  பார்த்தவர்கள் 212 க்கு பின்னால் எத்தனை சைவர்கள் இருந்ததன என்பதை எண்ணவில்லை என்றும் கூறியிருப்பதாக திருமதி விமலேஸ்வரி  சிறீகாந்தரூபன் விளக்கி, அதனால் தானே 212 கோடியை 21 கோடியாக குறைத்ததாக சொன்னார். எப்போது இருந்து எப்போது வரை இந்த காசு வழங்கப்பட்டதாக இந்த கணக்கு காட்டி இருந்தது என்பதும் தெரியாது என்றே குறிப்பிட்டார். எவருக்கு எங்கே வைத்து கொடுக்கப்பட்டது என்ற தகவலும் கிடைக்கவில்லை. 

பின்னர் வடக்கில் நடந்த மத்தியகுழு கூட்டத்தில் கணக்காளர் இப்படி கனடா காசு பற்றி செய்திகள் வருகின்றன, யார் கனடாவில் காசு வாங்கியவர் என்று கேட்டபோது, சுமந்திரன் தான் வாங்கியதாகவும் மற்றவர்களும் வாங்கலாம் என்று சொன்னதாகவும் திருமதி விமலேஸ்வரி சிறீகாந்தரூபன் குறிப்பிட்டார். ஆகவே இந்த சுமந்திரன் வாங்கிய காசு அந்த குகதாசன் காட்டிய 212 கோடியாகத்தான் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்த திருமதி விமலேஸ்வரி  சிறீகாந்தரூபன், 212 கோடியை 21 கோடியாக குறைத்து (சைவர்களை எண்ணாத படியால்) , இவ்வளவையும் சுமந்திரன் களவெடுத்துவிட்டார் என்ற முடிவுக்கு வந்தார். இது நடந்து நாலு மாதங்களாக, குகதாசனை தொலைபேசி மூலம்   தொடர்பு கொண்டு 212 க்கு பின்னால் எத்தனை சைவர்கள் இருந்தன என்றோ, யாரிடம் இந்த 212 கோடியையும் அவர் கொடுத்தார் என்றோ, இந்த 212 கோடியும் தமிழரசு கட்சி தொடங்கிய காலத்தில் இருந்து சேர்த்த காசா, அல்லது கனடா பிரிவு தொடங்கிய காலத்தில் இருந்து சேர்த்த காசா, அல்லது வரும் தேர்தலுக்காக சேர்த்த காசா, அல்லது இவர் சொன்னது போல போரினால் பாதிக்கப்ட்ட மக்களுக்காக சேர்த்த காசா என்று விளக்கம் கேட்கவில்லை என்றும் திருமதி விமலேஸ்வரி  சிறீகாந்தரூபன் கூறினார். அப்படி தொலைபேசி மூலமோ, இணையம் மூலமோ தொடர்பு கொள்ளாததற்கு காரணம் கொரோணா வைரஸ் பரவி விடும் என்ற பயம் என்பதையும் தெளிவு படுத்தி, அதற்கு மாற்றீடாக ஊடகவியளாளரை அழைத்து நேரடியாகவே அவர்களை சந்தித்து, தனது குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக விளக்கினார்.

திருமதி விமலேஸ்வரி  சிறீகாந்தரூபன் இவ்வளவு புத்திசாலியாக இருப்பதால், சுமந்திரன் தொடர இருக்கும் மானநஷ்ட வழக்கையும் வெற்றிகரமாக எதிர்கொள்வார் என்று நம்பலாம்.

 

Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் பற்றி பல விமர்சனங்கள் இருந்தாலும்,பொது   வெளியில் தனது சொத்துக்களை பகிரங்கபடுத்திய ஓரே தமிழ் வேட்ப்பாளர் அவரேயாகும்.

https://www.tisrilanka.org/MPassets/

https://www.tisrilanka.org/wp-content/uploads/2019/07/Sumanthiran2019.pdf

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, கற்பகதரு said:

இந்த பேட்டியில்,  21 கோடி ரூபா பற்றிய தகவல் தனக்கு எப்படி கிடைத்தது என்று திருமதி விமலேஸ்வரி  சிறீகாந்தரூபன் விளக்கமாக கூறியிருக்கிறார். திருகோணமலையில் இடம் பெற்ற நிகழ்வு ஒன்றுக்கு போன இருவர் (அவர்களின் பெயர்களையும் கூறியுள்ளார்.) திரு குகதாசனின் கணணியில் அவர் காட்டிய தகவலை பின்னர் திருமதி விமலேஸ்வரி  சிறீகாந்தரூபனுக்கு தொலைபேசியில் கூறியுள்ளனர். அந்த தகவலின் படி 212 கோடி ரூபா என்றே பார்த்த இருவரும் கூறியுள்ளனர்.  பார்த்தவர்கள் 212 க்கு பின்னால் எத்தனை சைவர்கள் இருந்ததன என்பதை எண்ணவில்லை என்றும் கூறியிருப்பதாக திருமதி விமலேஸ்வரி  சிறீகாந்தரூபன் விளக்கி, அதனால் தானே 212 கோடியை 21 கோடியாக குறைத்ததாக சொன்னார். எப்போது இருந்து எப்போது வரை இந்த காசு வழங்கப்பட்டதாக இந்த கணக்கு காட்டி இருந்தது என்பதும் தெரியாது என்றே குறிப்பிட்டார். எவருக்கு எங்கே வைத்து கொடுக்கப்பட்டது என்ற தகவலும் கிடைக்கவில்லை. 

பின்னர் வடக்கில் நடந்த மத்தியகுழு கூட்டத்தில் கணக்காளர் இப்படி கனடா காசு பற்றி செய்திகள் வருகின்றன, யார் கனடாவில் காசு வாங்கியவர் என்று கேட்டபோது, சுமந்திரன் தான் வாங்கியதாகவும் மற்றவர்களும் வாங்கலாம் என்று சொன்னதாகவும் திருமதி விமலேஸ்வரி சிறீகாந்தரூபன் குறிப்பிட்டார். ஆகவே இந்த சுமந்திரன் வாங்கிய காசு அந்த குகதாசன் காட்டிய 212 கோடியாகத்தான் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்த திருமதி விமலேஸ்வரி  சிறீகாந்தரூபன், 212 கோடியை 21 கோடியாக குறைத்து (சைவர்களை எண்ணாத படியால்) , இவ்வளவையும் சுமந்திரன் களவெடுத்துவிட்டார் என்ற முடிவுக்கு வந்தார். இது நடந்து நாலு மாதங்களாக, குகதாசனை தொலைபேசி மூலம்   தொடர்பு கொண்டு 212 க்கு பின்னால் எத்தனை சைவர்கள் இருந்தன என்றோ, யாரிடம் இந்த 212 கோடியையும் அவர் கொடுத்தார் என்றோ, இந்த 212 கோடியும் தமிழரசு கட்சி தொடங்கிய காலத்தில் இருந்து சேர்த்த காசா, அல்லது கனடா பிரிவு தொடங்கிய காலத்தில் இருந்து சேர்த்த காசா, அல்லது வரும் தேர்தலுக்காக சேர்த்த காசா, அல்லது இவர் சொன்னது போல போரினால் பாதிக்கப்ட்ட மக்களுக்காக சேர்த்த காசா என்று விளக்கம் கேட்கவில்லை என்றும் திருமதி விமலேஸ்வரி  சிறீகாந்தரூபன் கூறினார். அப்படி தொலைபேசி மூலமோ, இணையம் மூலமோ தொடர்பு கொள்ளாததற்கு காரணம் கொரோணா வைரஸ் பரவி விடும் என்ற பயம் என்பதையும் தெளிவு படுத்தி, அதற்கு மாற்றீடாக ஊடகவியளாளரை அழைத்து நேரடியாகவே அவர்களை சந்தித்து, தனது குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக விளக்கினார்.

திருமதி விமலேஸ்வரி  சிறீகாந்தரூபன் இவ்வளவு புத்திசாலியாக இருப்பதால், சுமந்திரன் தொடர இருக்கும் மானநஷ்ட வழக்கையும் வெற்றிகரமாக எதிர்கொள்வார் என்று நம்பலாம்.

 

சுமந்திரன் நிச்சயமாக மான நட்ட வழக்கு திருமதி விமலேஸ்வரி காந்தரூபனுக்கெதிராகப் போடப்போவதில்லை. அவ்வாறு ஒரு நடவடிக்கையை சுமந்திரன் மேற்கொள்வாராயிருந்தால் அவரைபோன்று மகா முட்டாள் வேறு யாரும் இவ்வுலகில் இருக்கப் போவதில்லை.  அது ஏனென்று உங்கள் எல்லோருக்குமே தெரியும்.😀

பல்லைக் குத்தி மணக்கக் கொடுக்க யார்தான் விரும்புவார் 😂

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kapithan said:

சுமந்திரன் நிச்சயமாக மான நட்ட வழக்கு திருமதி விமலேஸ்வரி காந்தரூபனுக்கெதிராகப் போடப்போவதில்லை. அவ்வாறு ஒரு நடவடிக்கையை சுமந்திரன் மேற்கொள்வாராயிருந்தால் அவரைபோன்று மகா முட்டாள் வேறு யாரும் இவ்வுலகில் இருக்கப் போவதில்லை.  அது ஏனென்று உங்கள் எல்லோருக்குமே தெரியும்.😀

சுமந்திரன் தான் வழக்கு தொடர இருப்பதாக தெரிவித்த செய்தியை படித்திருந்தேன். சொன்னது போல செய்யாமல் விடவும் கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, கற்பகதரு said:

சுமந்திரன் தான் வழக்கு தொடர இருப்பதாக தெரிவித்த செய்தியை படித்திருந்தேன். சொன்னது போல செய்யாமல் விடவும் கூடும்.

சுமந்திரன் - காந்தரூபன் வழக்கு என்பது TNA யையல்லவா நாறடித்துவிடும். பிறகு முதலுக்கே மோசம் என்கின்ற நிலைதான். அரசியல்வாதிகளுக்கு நாமா சொல்லிக் கொடுப்பது 😂

  • கருத்துக்கள உறவுகள்
On 6/7/2020 at 02:13, கற்பகதரு said:

சுமந்திரன் தான் வழக்கு தொடர இருப்பதாக தெரிவித்த செய்தியை படித்திருந்தேன். சொன்னது போல செய்யாமல் விடவும் கூடும்.

உங்களுக்கே அவர் முன்னுக்கு பின் முரணாக பேசுபவர் என்று தெரிகிறது 😀

  • கருத்துக்கள உறவுகள்
On 6/7/2020 at 01:18, கற்பகதரு said:

இந்த பேட்டியில்,  21 கோடி ரூபா பற்றிய தகவல் தனக்கு எப்படி கிடைத்தது என்று திருமதி விமலேஸ்வரி  சிறீகாந்தரூபன் விளக்கமாக கூறியிருக்கிறார். திருகோணமலையில் இடம் பெற்ற நிகழ்வு ஒன்றுக்கு போன இருவர் (அவர்களின் பெயர்களையும் கூறியுள்ளார்.) திரு குகதாசனின் கணணியில் அவர் காட்டிய தகவலை பின்னர் திருமதி விமலேஸ்வரி  சிறீகாந்தரூபனுக்கு தொலைபேசியில் கூறியுள்ளனர். அந்த தகவலின் படி 212 கோடி ரூபா என்றே பார்த்த இருவரும் கூறியுள்ளனர்.  பார்த்தவர்கள் 212 க்கு பின்னால் எத்தனை சைவர்கள் இருந்ததன என்பதை எண்ணவில்லை என்றும் கூறியிருப்பதாக திருமதி விமலேஸ்வரி  சிறீகாந்தரூபன் விளக்கி, அதனால் தானே 212 கோடியை 21 கோடியாக குறைத்ததாக சொன்னார். எப்போது இருந்து எப்போது வரை இந்த காசு வழங்கப்பட்டதாக இந்த கணக்கு காட்டி இருந்தது என்பதும் தெரியாது என்றே குறிப்பிட்டார். எவருக்கு எங்கே வைத்து கொடுக்கப்பட்டது என்ற தகவலும் கிடைக்கவில்லை. 

சுமத்திரன் இந்த பணவிடயத்தில் அடக்கி வாசிக்கிறார் அதாவது கடந்த ஐந்து நாட்களில் 80 மேற்பட்ட சந்திப்புகளை நடத்தி  உள்ளார் அதில் ஒரு கூட்டத்தில் கூட இந்த பணம் சம்பந்தமாக சிங்கன் வாயை  திறக்கவே இல்லை ஏன் ?

அவர் திறக்க மாட்டார் காரணம் சுமத்திரன் கனடா மணி லோன்றிங் money laundering நடந்து இருக்கு அங்கிருப்பவர்களுக்கு money laundering தாக்கம் பெரிதாக தெரியவாய்ப்பில்லை அடிக்கடி சுமத்திரன் கனடா  பறந்து  போவதன் காரணமும்  அதுதான் . ஆனால் கனடா  இங்கிலாந்து போன்ற உளவுதுறைகளுக்கு சிறு   பொறி தட்டினாலும் காணும் money laundering விடயத்தில் எந்த சமரசமும் செய்ய இடமளிக்க மாட்டார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
On 6/7/2020 at 01:41, zuma said:

சுமந்திரன் பற்றி பல விமர்சனங்கள் இருந்தாலும்,பொது   வெளியில் தனது சொத்துக்களை பகிரங்கபடுத்திய ஓரே தமிழ் வேட்ப்பாளர் அவரேயாகும்.

https://www.tisrilanka.org/MPassets/

https://www.tisrilanka.org/wp-content/uploads/2019/07/Sumanthiran2019.pdf

அவர் முக்கியம் காட்டவேணும் ஏனென்றால் கனடிய  பணவிடயம் பின்னுக்கு பெரிதாகும் என்று அவருக்கு தெரியும் கைகளை  கழுவி வைத்திருக்கிறாரம் சுத்தமாய் நம்புங்க மக்கள் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.